Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு இங்குள்ளவர்களிடம் உயிராபத்து

Featured Replies

தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவவில் சந்திரிகா குமாரணதுங்கவின் 63 ஆவது பிறந்த தினமான 29 ஜூன் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஏற்கனவே தான் இந்த நாட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், விரைவிலேயே தாம் அந்த சேவைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையும் இந்த நாட்டில் உள்ள சிலர் குழப்ப முயல்வதாகவும், எனினும் மக்களுக்கு உதவிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க எவராலும் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமக்கான பாதுகாப்பினை குறைத்து பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி பாதுகாப்பு தரப்பட்டதையும், தமது அலுவலகம் வேண்டும் என்றே மூடப்பட்டதையும் அவர் அங்கு நினைவு படுத்தி பேசியிருந்தார்.

http://www.pathivu.com/?p=1555

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

ஐயையோ... பரிதாபம்! உங்களுக்கா இந்த நிலமை? எப்படி இருந்தனிங்க, இப்ப எப்பிடி ஆகிட்டீங்க?

  • தொடங்கியவர்

இந்தப்படத்தை மகிந்த மாமா படிக்கமாட்டனெண்டு அடம்பிடிக்கிறார்...

முன்னமொருக்க சந்திரிக்கா நேரமெண்டு சொன்னதுக்கு பெற்றாவில பொலுசுக்காரன் துரத்தி துரத்தி அடிக்கவந்தவன்... அந்தளவுக்கு ஆடினிங்கள்.

ஸிங்க் இந்த ரெயின்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/?p=1555

63 வயசில நீங்கள் போனால் தான் என்ன குறையப்போகுது. காலத்தைப்பாருங்கோ" இப்ப என்னை கொல்லப்போகிறது பிரபாகரன் இல்லை எங்கட ஆக்கள் தான்" என்று சொல்ல வைத்திருக்குது. போட்டுவாங்கோ. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடைபெறும் பிரச்சினைகளுக்கு நீங்களும் ஒரு முக்கியகாரணம் என்பதனை மறக்க வேண்டாம்.

எல்லோரும் பதவியில் இருக்கும் போது அதனை சிந்திப்பதில்லை.....

வீட்டிற்கு வந்தவுடன் பிரச்சினை ஞாபகமும் வருகின்றது ,

என்ன செய்வது இனி புலம்பி என்ன ஆகப்போகுது.

தலைப்பை பார்த் உடன் பயந்துட்டன்.... Sooravali யார் மிரட்டி இருப்பாங்க எண்டு

தலைப்பை பார்த் உடன் பயந்துட்டன்.... Sooravali யார் மிரட்டி இருப்பாங்க எண்டு

என் அவதார் கோரமாய் இருக்கு எண்று சொன்ன சூறாவளியை நான் போடலாம் எண்றுதான் இருக்கிறன்.

  • தொடங்கியவர்

அட நீங்கள் சொல்லேக்குள்ளதான் நானும் பாத்தன்...

எனக்கு யாழ்களத்தில உயிராபத்தா?... :wub::wub::(

என் அவதார் கோரமாய் இருக்கு எண்று சொன்ன சூறாவளியை நான் போடலாம் எண்றுதான் இருக்கிறன்.

உங்கட படத்தை பாக்குபோது கொஞ்சம் பயமாத்தானிருக்கு...

:D:D:D

(சும்மா விளையாட்டுக்கு)

கவனம் பொய்கை சூறாவளி சுழட்டி அடிச்சுப் போடுவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் மாமா அவவுக்கு பாதுகாப்பு குடுக்கமாட்டார் எண்டு நினைக்கிறியள் ??????? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிகிகிக... அய்யோ அய்யோ தாங்கமுடியல என்னால

நீங்க கதிரையில இருகும் போது எத்தனை பேருக்கு ஆபத்தா இருந்திங்க,,,,,,,,,,,,,,,,,

பழைய ஞாபகம் எல்லாம் வருகுது போல கவனம்,,,,,,,,,,,,,,,,,,,,

தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆமா இங்குள்ளவர்கள் என்றால் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டீங்கன்னா நல்லம். ஏன்னா எல்லா கொலைகாரங்களும் அங்கதான் இருக்கிறாங்க,அதுல நீங்க யாரை சொல்ரீங்க?????

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

அகதியா இருக்கிற எங்களுக்கே உயிராபத்து தான் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதியா இருக்கிற எங்களுக்கே உயிராபத்து தான் :huh:

எங்களுக்கே நக்கல் <_<

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா வன்னிக்கு போய் அசில் அடிச்சு இருந்தா அவ உயிருக்கு பயமில்லை.

இனி இராப்பகலா பயத்திலைதான் வாழணும்.

அட அதுக்குள்ள அவாவுக்கு 63 வயதாயிட்டதா, பாத்தா தெரியலையே.

கதிர்காமு செத்த கவலையிலை மனுசி இளைச்சுபோயிடுச்சு.

அதென்ன

அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும்

அர்த்தம் புரியலையே.

நேற்று பார்தன் குமரியாயிருந்தா இன்று பார்த்தால் கிழவியாயிட்டா ? ?

என்ன கொடுமையப்பா ? ? கிட்லருக்கே பயமா ? சப்பா. .. . இப்பவே கண்ணை கட்டுதே . .

  • தொடங்கியவர்

அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும்

அர்த்தம் புரியலையே.

அர்த்தம் நான் சொல்லுவன் ஆனா நிர்வாகம் விடாது.. ஏற்கனவே நான் அவாவை பத்தி சொன்ன ஒன்றை தூக்கிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
02_07_2008_007_001.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.