Jump to content

சுட்டுத்தள்ள வேண்டும்''


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg1.jpg

மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.

நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.

ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.

அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.

சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்க

Link to comment
Share on other sites

திமுகவினரை சுட்டுத் தள்ள சொன்னேனா - விஜய்காந்த்

புதன்கிழமை, ஜூலை 16, 2008

சென்னை: திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 13ம் தேதி தேமுதிக சார்பில் ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு வருவதைக் கண்டித்து மிக பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் ஒரு வார இதழ், நான் அங்கு பேசாததை பேசியதாக வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20ம் தேதி வெளியான அந்த பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன், ஆளும் திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகையின் உட் பகுதியில் வந்துள்ள செய்தியிலும், தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத ஆளும் திமுகவினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல, எங்குமே பேசக் கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பேசாத ஒன்றை ராமேசுவரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து வெளியிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

கடந்த 6ம் தேதியன்றும் இதே போன்று அட்டையில் என் புகைப் படத்தை போட்டு, தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த், என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்த பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளியிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்த பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால் பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றி தவறான கருத்தை பரப்ப முயலுவதும் தொழிலாகக் கொண்டுள்ளதால், அந்த பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடர்வதற்கு அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

வழக்கமாக இதுபோன்ற மறுப்பு அறிக்கைகள் எல்லாம் விட மாட்டார் விஜய்காந்த். முரட்டு பேச்சு பேசிய காடுவெட்டி குரு கைதாகியுள்ள நிலையில் இந்த அறிக்கை விஜய்காந்திடம் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

இன்னொரு அரசியல்வாதி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்னொரு அரசியல்வாதி..
என்று நிரூபிப்பது தவறா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு அரசியல்வாதி..

என்று நிரூபிப்பது தவறா?

இல்லையா என்பதல்ல பிரச்சினை....

இவர் இப்படி பேசலாமா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஈழத்தமிழனுக்கோர் நல் வாழ்வு கிட்டும் வரை எனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன்" சபதம் எடுத்த கப்ற்றன் எங்கே......?

"இலங்கை அரசுக்கு ஆயுதம் தருவதில் தவறேதும் கிடையாது" மத்திய அரசுக்கு மாரடிக்கும் அற்புதமான அரசியல்வாதி.

ஐயா கனவானே

இரண்டரை மணி நேர திரைப்படம் அல்ல எங்கள் வாழ்வு. ஓடி வந்து சுவர் ஏறி எகிறி எதிரியை வீழ்த்த உங்களை அழைக்கவில்லை. கூண்டோடு தமிழனை அழிக்க முனையும் சிங்கள அரசுக்கு உதவியதாக, ஒரு மதுரைத் தமிழனுக்கு பழி வந்திடாமல் நடந்து கொண்டாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஈழத்தமிழனுக்கோர் நல் வாழ்வு கிட்டும் வரை எனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன்" சபதம் எடுத்த கப்ற்றன் எங்கே......?

"இலங்கை அரசுக்கு ஆயுதம் தருவதில் தவறேதும் கிடையாது" மத்திய அரசுக்கு மாரடிக்கும் அற்புதமான அரசியல்வாதி.

கப்டனும் கட்சியும் தற்போதுதான் தவழத்தொடங்கியிருக்கிறது. இப்போதே விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் திறந்த ஆதரவு தெரிவித்தால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுவார்கள் மத்திய/மாநில உளவுத்துறையினரால்.

Link to comment
Share on other sites

கப்டனும் கட்சியும் தற்போதுதான் தவழத்தொடங்கியிருக்கிறது. இப்போதே விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் திறந்த ஆதரவு தெரிவித்தால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுவார்கள் மத்திய/மாநில உளவுத்துறையினரால்.

இருந்தாலும் இலங்கை அரசு சார்பா பேசாமல் இருந்திருக்கலாம் மதுரைக்காரர். அதோட அவர் மதிபப்பு போயிடுச்சு சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுத்தள்ள வேண்டும்

சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், `மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சாவே வராது' என்று முழங்கிய விஜயகாந்த், கடந்த பதின்மூன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,`ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று அதிரடியாக முழங்கி, தி.மு.க.வினரை அதிர வைத்திருக்கிறார்.

அவருடைய அந்தப் பேச்சை மாவட்ட உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்ததோடு, தங்களது செல்போன் மூலம் சென்னையில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அப்படியே `லைவ்' செய்தும் விட்டார்கள். சர்ச்சைக்குரிய விஜயகாந்தின் அந்தப் பேச்சு, அவரைக் கைது செய்யும் சூழலையும் உருவாக்கியிருப்பதாக ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது.

தவிர,மாவட்ட தி.மு.க.வினரும் கொந்தளித்துப் போய் தங்கள் தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி, விஜயகாந்தின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க அனுமதியும் கேட்டிருப்பது, நிலவரத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.

நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.

ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.

அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.

சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுத்தள்ள வேண்டும்

ஒரு மூதாட்டி விஷயகாந்தைப் பார்த்து, ``இப்போ எங்களைத் தேடி வர்ற நீங்க, முதலமைச்சரா ஆன பின்னாடி எங்கே பார்க்க வரப் போறீங்க? எங்களுக்கு எங்கே நல்லது செய்யப் போறீங்க? மத்த முதலமைச்சருங்க மாதிரி நீங்களும்தான் மாறிடுவீங்க'' என்று துணிச்சலாகக் கூற, திகைத்துப் போன விஷயகாந்த், ``எங்கிட்டே ஆட்சி, அதிகாரம் எதையும் கொடுக்காமலே இப்படி கேள்வி கேட்கலாமா? எனக்கு இன்னும் நீங்க எதுவும் செய்யலே. செய்துட்டு இந்தக் கேள்விகளை எங்கிட்டே கேளுங்க. அதுக்குப் பதில் சொல்றேன்'' என்றார்.

இப்படி நச்சென்று கேட்ட பிறகும் ஒரு உறுதி மொழி கொடுக்காமல் "பதவி கொடு..கொடு.." என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையுறதப் பாருங்கோவன்! உண்மையிலேயே "விஷய" காந்த் தான்!

Link to comment
Share on other sites

இந்திய அரசியல்ல எதுகும் நடக்கலாம்... உவரும் முதமைச்சராகலாம்... பாவம் சனங்கள்.

Link to comment
Share on other sites

பா.ம.க காடுவெட்டி குரு அவர் பேசிய பேச்சினால் கைது செய்யப்பட்டதைப் பார்த்துத் தான் இவரும் இப்படி பேசிப் பார்த்துள்ளார். இதன் மூலம் தன்னை அரசு கைது செய்தால் அதன் மூலம் தனக்கும் கட்சிக்கும் ஒரு பப்ளிசிட்டி கிடைத்து வோட்டு வங்கி அதிகரிக்கும் என எண்ணியிருப்பார். ஆனாலும் குத்தக்கரணம் அடித்து மறுப்பறிக்கை ஒன்றையும் பயம் காரணமாக உடனடியாக விட்டுவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜளணைநஸ்ரீ"5"ஸசுட்டுத்தள்ள வேண்டும்'' ஜஃளணைநஸஜஉழடழசஸ்ரீ"சூகுகு0000"ஸஜஃஉழடழசஸ

யாரை என்பதில்தான் சிக்கல்........

Link to comment
Share on other sites

vijayakanthmg2.png

கடந்த 13.7.2008 ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்து, மிகப் பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்குபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, நான் அங்கு பேசாததைப் பேசியதாக விஷமத்தனத்தோடு வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20.7.2008 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன் ``ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும்!'' என்று நான் பேசியதாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட்பகுதியில் வந்துள்ள செய்தியிலும் ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று நான் முழக்கமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல; எங்குமே பேசக்கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நான் பேசாத சிலவற்றை இராமேசுவரத்தில் பேசியதாகச் செய்தி வெளியிட்டிருப்பது, வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்து வெளியிட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதாகவும் நாட்டு மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. பத்திரிகை விற்க வேண்டும் என்கின்ற வெறும் வியாபார நோக்கில் மட்டும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக நான் கருதவில்லை.

கடந்த 6.7.2008 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் கூட இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தைப் போட்டு, ``தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த்!'' என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை, நடந்தது போல் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்தப் பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுக்கட்டி வெளியிட்டு, பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்தப் பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால், பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதையும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதையும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்ப முயலுவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதால், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்குத் தொடர்வதற்கு அந்தப் பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

-இப்படி கடந்த 16-ம்தேதியன்று எல்லா தினசரிகளுக்கும் `பத்திரிகைச் செய்தி' என்கிற தலைப்பில் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார் என்றாலும் ஓரிரு மாலை நாளிதழ் தவிர, வேறு எந்த நாளிதழும் இதைப் பிரசுரிக்கவில்லை.

திரு.விஜயகாந்த் தமது மறுப்பு அறிக்கையை இதுவரை நமக்கு நேரடியாக அனுப்பாவிட்டாலும், நம்மைப் பற்றியே எழுதியிருப்பதால்தான் அதற்கு நாம் இங்கே பதில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. அதில், முக்கியமாகச் சொல்வது, அவர் பேசாத ஒன்றை நாம் தலைப்புச் செய்தியாக்கிப் பிரசுரித்துள்ளோம் என்பது; அதனால் கலவரத்தைத் தூண்டி, பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலை நாம் செய்திருப்பதோடு, பத்திரிகை தர்மத்தையும் மீறிவிட்டோம் என்பது. மேலும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில்,கடந்த 13-ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. விஜயகாந்த் பேசாத ஒன்றைத்தான் நாம் பிரசுரித்திருக்கிறோமா? இதை வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திரு.விஜயகாந்த் அன்று பேசியவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம்:

``...நேத்தோ முந்தா நேத்தோ விண் டிவி பார்த்தேன். அதுல மீனவ சங்கத்தலைவர் போஸ் பேசுறாரு. `எல்லா முதலமைச்சரையும் பாத்தோம். யாரும் ஒண்ணும் செய்யலை'னு எங்க செய்வாங்க? எல்லாம் வாங்கிக்கிட்டே இருக்காங்க. யாருய்யா செய்யப் போறாங்க? பிடிக்கிற மீனுக்கு லஞ்சம் குடுக்குறீங்களா? சொல்லுங்க, குடுத்தீங்கன்னா உடனே கொண்டு வந்து போட்டுடுவாங்க மிலிட்டரிய... ஒரு மீனுக்கு ரெண்டு ரூபாலஞ்சம் குடுக்குறீங்களா?

...(இலவச) டி.வி.ய விக்கிறாங்க. உடனே அரசாங்கம் சட்டம் போடுது... கலெக்டரே `போலீஸே டி.வி.ய வித்தா புடிச்சு உள்ள போடு'ன்னு... அடுத்து அரிசி... அரிசிய ரெண்டு ரூபாக்கு குடுக்குறோம். உடனே அரிசியக் கடத்துறாங்க. அ.தி.மு.க.வுல லாரியில அரிசியக் கடத்துனாங்க. ஆனா இவங்க ரெயில்லயும் கப்பல்லயும் கடத்துறாங்க...

...அதுதான் சொல்றேன். சாது மிரண்டா காடு கொள்ளாது. ரொம்ப நோண்டாதீங்கடா, ரொம்ப நோண்டாதீங்க. இருபது போலீஸ வச்சு கேக்குறாங்களாம். நேரடி ஒலிபரப்பு பண்றாங்க போலீஸு. ஏதாவது தப்பா பேசுனா புடிச்சு ஜெயில்ல போட்டுடுவேன்னு சொல்றாரு. எதுலயாவது போடுங்கறேன். எதுக்காகப் போடப் போற... என் மக்களுக்காகப் பேசுனதுக்காகத்தானே. நீ புரியாம பேசுற... நடிகன்னா, மெரட்டுனா பயந்துடுவான்னு. ஆனா இந்த விஜயகாந்த் பயப்புட மாட்டான். இது அவருக்குப் புரிய மாட்டேங்குது. புரியாம மெரட்டிப் பாக்குறாங்க...

...விலைவாசி ஏறிப்போச்சுன்னு சொன்னா உடனே கலைஞர் சொல்றாரு, வாங்குற சக்திய அதிகமாக்கணும்னு. உங்களுக்கு வாங்குற சக்திய அதிகமாக்கியிருக்கு... (தணிந்த குரலில்) லஞ்சம் வாங்க. எங்களுக்கு தாங்குற சக்தி இல்லையே...

...நான் நிறையப் பேசணும்னு நெனைக்கிறேன். உளவுத்துறை டேப் பண்ணிக்கிட்டிருக்கு. வேற ஒண்ணும் கெடையாது. கோபம் வருது. சத்தியமா, மக்கள ஏமாத்துனா ரொம்பக் கோபம், வெறி வருது. சுட்டுக் கொல்லணும்... பூராபேத்தையும். (தணிந்த குரலில்) ஆட்சியில இருக்குறவங்கள..''

- இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார். அவர் அங்கே 43 நிமிடங்களும் 42 வினாடிகளும் பேசியிருக்கிறார். அப்படிப் பேசியபோது 33-வது நிமிடத்தில்தான் `சுட்டுக் கொல்லணும்......பூராத்தையும்' என்று உரத்த குரலிலும் `ஆட்சியில் இருக்குறவங்கள....' என்பதைத் தணிந்த குரலிலுமாகப் பேசியிருக்கிறார்.

ஆக, `சுட்டுக் கொல்லணும்' என்று அவர் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்-மெய்மறந்த நிலையில் பேசியிருந்தாலும் நாம் அதைப் புரிந்து கொண்டு, `கொல்லணும்' என்பதைத் `தள்ளணும்' என்று வேகத்தைக் குறைத்துத்தான் வெளியிட்டிருக்கிறோம். ஒருவர் தன்னை மறந்த நிலையில் வாய்தவறிப் பேசியதை அப்படியே பிரசுரிப்பது பத்திரிகை தர்மமாகாது என்பதால்தான் அதை நாம் மாற்றிப் பிரசுரித்திருக்கிறோம். சொல்லப் போனால் நாம் பிரசுரித்ததைவிட பிரசுரிக்காமல் விட்டதே அதிகம்.

எனினும், தாம் அன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதை உணர்ந்துதான் இப்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் என்பதை நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவில் அவரை நாம் மனமார பாராட்டுகிறோம். அதற்காக அவர் குமுதம் ரிப்போர்ட்டர் மீது பழிபோடுகிறாரே என்பதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதையே இப்படி மறுக்கிறாரே என்பதிலும் தான் நமக்கு வருத்தம். இப்படியிருந்தால், அவரது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதே நமது கவலை.

உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்பவன்தான் மனிதன். மறைப்பவன் திருடன். மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன். இதை திரு. விஜயகாந்த் புரிந்து கொண்டு, அவர் மிகச் சிறந்த தலைவராக வளர வேண்டும் என்பதே நமது ஆசை!

-ஆசிரியர்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.