Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் யார்??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார்??

நான் யார்?? என்ற மைய கேள்வியுடன் நான் எங்கிருந்து வந்தேன்?நான் எதற்காக இங்கு வந்தேன்?என்ற புதிய புதிரான வினாக்களும் எழுப்பபட்டன.

இந்த வினாக்களும் அவற்றிற்கு அளிக்கபட்ட விளக்கங்களும்,அதனால் எழுந்த கருத்துவ பொய்மைகளும்,உண்மையான மனிதனை இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்நியமாக்கியது.மனித உலகதிற்கும் மனித வாழ்விற்கும் விசித்திரமான வியாக்கியானங்கள் கொடுக்கபட்டன.

இந்த விசித்திரமான பார்வையில் இவ் பூவுலகம் ஒரு மாயலோகம். ஒரு மானசீக தோற்றபாடு எமகுள்ளே இருந்து கொண்டு எல்லாம் தெரிந்ததாக எண்ணி கொள்ளும் எமது மனம் பொய்களை கொண்டு உருவகிக்கும் ஒரு போலியான உலகம்.சத்தியத்தின் இருப்பிடமாக இன்னொரு உலகம் இருக்கிறதாம்.அந்த ஆத்ம உலகில் இருந்து நாம் இங்கு வந்து வாழ்ந்து விட்டு போகின்றோம்.

விதி என்ற முடிவில்லா பெரும்கதையில் நாம் எல்லாம் சிறு,நாடக பாத்திரங்கள் வந்து வந்து நடித்து விட்டு போகிறோம் எம்மை சாவு தீண்டுவதில்லை உடல்களை உடையாக அணிந்து பின் உரித்து விட்டு செல்கிறோம் இந்த பூமி ஒரு தற்காலிக தங்குமிடம்.பாவங்களை சுமப்பதிற்கும் ஆசைகளை தீர்பதிற்கும்,கர்மவினை கழிப்பதிற்கும் நாம் இங்கு வந்து தங்கி செல்கிறோம்.பிறப்பு,இறப்பு என்ற சூட்சுக சக்கரத்தில் முடிவில்லாத ஒரு சங்கிலி தொடர்பில் பிணைபட்டு இழுபட்டு நசிபட்டு எமது வாழ்வு நகர்கிறது இந்த பொய்யான பூளோகமாயையில் இருந்து விடுபடும் வரை எமக்கு விடிவில்லை.இந்த உலகத்தை துறந்து உறவுகளை துறந்து உணர்வுகளை துறந்து சாதாரண வாழ்வில் சகலவற்றையும் துறந்து பரிபூரண துறவறத்தில் விமோசனதிற்கு வழி இருக்கிறது.உள்ளே உள்ள உள் ஒளியின் தரிசனத்தில் அந்த மெஞ்ஞான விழிபுணர்வில் "நான்" என்ற பொய் பொருள் செத்து விட மெய்பொருள் புலனாகும்.அந்த ஞானோதயத்தில் விதியின் விலங்குகள் உடைந்து விழும்.பிறப்பு,இறப்பு,மறுபிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரியவில்லை. நான் என்பதற்கு இறப்பு இல்லை என்கின்றாரா? அப்படியிருப்பின், என் என்னால் முந்திய பிற்திய வாழ்வு பற்றி உணரமுடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார்?

நான் என்பது யார்?

என் பெயரா?

பெயரெனில்

பெய‌ர் மாற்ற‌ம்செய்த‌வ‌ர்க‌ள்

அவ‌ர்க‌ள் இல்லையா?

பெய‌ர்என‌து அடையாள‌மில்லை..

என்த‌ந்தையின் விருப்ப‌ம்.

என் உட‌லா?

உட‌லெனில்

நான் இற‌ந்த‌ பிற‌கு

நான்நானில்லையா?

உட‌ல்

ம‌றைந்த‌ பின்னும்

பெரியார்

பெரியார் தான்..

ஆக‌

உட‌லுமில்லை..

ம‌ன‌மா?

இதைப் ப‌ற்றி

நான்

அதிக‌ம் அறிய‌வில்லை..

தெரியாத‌ ஒன்று

நானாக‌ இருப்ப‌தில்

விருப்ப‌மில்லை..

பின்...

நான் யார்?

ப‌தில் தெரியும் வ‌ரை

நான் நான்தான்..

நீ நீதான்...

  • கருத்துக்கள உறவுகள்

டியர் புத்தன்

நீங்கள் நான் என்பதை இடம், பொருள், காலம், என்னும் மூன்றோடும் தொடர்பு படுத்தி நோக்குவதாலேயே இந்தக் குழப்பத்திற்கு ஆளாகிறீர்கள் என எண்ணுகிறேன்.

நீங்கள் கூறும் சத்தியத்தின் இருப்பிடமான ஆத்மலோகமோ, பிரசாந்திலோகமோ, தர்மலோகமோ வேறோர் இடத்தில் இல்லை. அது வேறோர் காலத்திலும் இல்லை. அது வேறோர் வடிவத்திலும் இல்லை. நீங்களாக உங்கள் வடிவத்தில், இந்தக் கணத்தில், உங்களிடத்திலுள்ளது.

அந்த உலகத்தில் சென்று சஞ்சரிப்பதற்கு நீங்கள் உங்களை உள்முகமாக நோக்குதல் வேண்டும். உங்களுக்கு உள்ளேயுள்ள சத்திய லோகமும், தர்மலோகமும், உபசாந்தி லோகமும் உங்களுக்குத் தரிசனமாகும்போது நீங்கள் யார்? உங்கள் உண்மையுருவென்ன? என்ற விடயங்கள் பிரத்தியடசமாய்த் தெரியும் என்று கண்டுணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மாயாவாதம் என்னும் ஒரு தனித்த கோட்பாட்டையே இங்கு மேற்கோளாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். மாயாவாதம் தெளிவற்ற விதத்தில் இந்த உலகம் மாயை என்று மட்டும் கூறவில்லை. அதற்கும் மேலாய் மிகத் தெளிவாக சத்திய தர்ம சாந்தி லோகங்கள் எமக்குள்ளே உள்ளனவென்பதையும் கூறி நிற்கின்றது.

இதைவிட ஞானியர் சொன்ன துவைதம், வசிஷ்டாத்துவைதம், அத்வைதம் என்ற மூன்று கோட்பாடுகளும் உள்ளன. அவற்றையும் நோக்க வேண்டும்.

பதி, பசு, பாசம், அந்தப் பசுவைச் சுற்றி நிற்கும் ஆணவம், கன்மம், மாயை என்கின்ற தளைகளினின்றும் நீங்கி ஆத்ம தரிசனம் பெறுதல், அதன் மூலம் உயிர் வாழும்போதே அடையப் பெறும் ஜீவன் முக்தி என்றெல்லாம் ஞானியர் அடித்தடித்துச் சொன்னது நாம் ஒவ்வொருவரும் அந்த உன்னத நிலையை அடைந்து நல்லவர்களாய் வல்லவர்களாய் சத்திய தர்ம சீலர்களாய் சாந்தியோடும் அமைதியோடும் வாழ்ந்து மடியவேண்டுமென்பதை வற்புறுத்தவேயாகும். வேறொருலகத்திற்குச் செல்லவேண்டுமென்றல்ல.

இந்த உலகத்தில் இந்த மனிதப்பிறப்பில் இக்கணத்திலேயே அவ்வாழ்க்கையுண்டு என்பதையே எல்லோரும் எடுத்துக் கூறியுள்ளார்கள்

பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய திரித்துவக் கொள்கையும் இதையே வலியுறுத்தி நிற்கின்றது.

ஆக: நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு. நம்பாதவர்களுக்கோ ஆண்டவனே காப்பு.

நான்..யார்..??..(நிசமா நேக்கு தெரியா) :lol: ...எனியும் தெரிந்து கொள்ளுற யோசனை எனகில்ல..இதை எல்லாம் தெரிந்து கொள்ள போனா வாழுற காலம் நரகமாகிடும் பாருங்கோ... :)

ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறன் எண்டா...மாமோய்..!!

நீங்க யார் எண்டு கட்டாயம் அறிய வேண்டும் எண்டா..பேசாம உங்களின்ட வீட்டு கண்ணாடியில போய் பார்த்தியள் எண்டா பேஷா எல்லாம் விளங்கும் சரியோ :lol: ..இதுக்கு மிஞ்சி என்னத்த நான் சொல்ல...பார்க்க போனா எல்லாமே பொய் தான் அதையும் விட..ஒன்னையும் யோசிக்காம இருந்தா எல்லாமே மெய்..(உது எப்படி இருக்கு??).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையே ஒரு பொய் இதில் நாமேல்லாம்..மெய்யை தேடி தான் என்ன.." :lol:

அப்ப நான் வரட்டா!!

யார் எண்டு கட்டாயம் அறிய வேண்டும் எண்டா..பேசாம உங்களின்ட வீட்டு கண்ணாடியில போய் பார்த்தியள் எண்டா பேஷா எல்லாம் விளங்கும் சரியோ

ஏன் இந்த விபரீத ஆசை ஜம்மு? :o:lol::wub:

ஏன் இந்த விபரீத ஆசை ஜம்மு? :D:lol::)

ம்ம்..என் அழகை கண்டு கண்ணாடிக்கே எரிச்சல் வரலாம்..எண்டு சொல்ல வாறியள் என்ன தம்பி.. :lol: என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :D

என்னை நானே தேடுறன்..எண்டா பார்த்து கொள்ளுங்கோவன்... :D (செல்லதிற்கு எப்படி).. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :wub:

இப்ப தான் விளங்குது ஜம்முவுக்கு இவ்வளவு நாளும் ஏன் கொன்னை தட்டினது என்டு :)

ம்ம்..என் அழகை கண்டு கண்ணாடிக்கே எரிச்சல் வரலாம்..எண்டு சொல்ல வாறியள் என்ன தம்பி.. :wub: என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :lol:

என்னை நானே தேடுறன்..எண்டா பார்த்து கொள்ளுங்கோவன்... :D (செல்லதிற்கு எப்படி).. :)

அப்ப நான் வரட்டா!!

ஆகா...ஜம்மு கனவில இப்ப பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குது போல.... (யாரவ எனக்கு மட்டும் சொல்லுங்க. :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய் போக .. எதை ?? ஏன் ?? ஜயோ நான் யார்?? யார்?? யார்?? நான்தான் புத்தன் புத்தன் தான் சாத்திரி சாத்திரிதான் ஜம்மு.ஜம்முதான் தெரியேல்லை??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில ஜம்மு/வானவில் எண்டு அலட்டினாங்கள்.. இப்ப என்னடாண்டா ஜம்மு/கொக்குவிலான்..! சப்பா.. அலப்பறை தாங்கலை..! :huh::wub:

ஒரு பெக்கடிச்சுப் பார்த்தால் நான் யார் என்று தெரியும்

நான் யார்??

நீங்கள்தான் :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய் போக .. எதை ?? ஏன் ?? ஜயோ நான் யார்?? யார்?? யார்?? நான்தான் புத்தன் புத்தன் தான் சாத்திரி சாத்திரிதான் ஜம்மு.ஜம்முதான் தெரியேல்லை??

அது தானே :D:huh:

ஒரு பெக்கடிச்சுப் பார்த்தால் நான் யார் என்று தெரியும்

பெக் அடித்தா பக்கத்து வீட்டுகாரன் நான் மாதிரி தெரியுது :(

நீங்கள்தான் :D

இதுவும் நன்னா தான் இருக்கு. :D

இப்ப தான் விளங்குது ஜம்முவுக்கு இவ்வளவு நாளும் ஏன் கொன்னை தட்டினது என்டு

ம்ம்..என்னை வருடிய ரோஜாவின்..ன் கொன்னரை..(அண்ணாவை)..பார்த்ததில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.