Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது.

Featured Replies

தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது.

முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய் நாட்டிற்கு ஆபத்து என்றவுடன் ஓடி வரும் உங்கள் கடமை உணர்ச்சியை காட்டுவதன் மூலம் என்றும் மதிப்பளிக்கப்படுவீர்கள்.

அன்புக்குரியவர்களே

நீங்கள் விடுதலை அமைப்பிலிருந்து விலகி இன்று திருமண பந்தத்தில் இணைந்து உங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கையில் இணைந்திருக்கின்றீர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிரி சீர் குலைக்க விழைகின்றான். எங்களது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள சிப்பாய் குடும்பங்களையும் குழந்தைகழையும் பிரிந்து வந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியுமானால் விடுதலைக்காக போராடும் எங்களால் மட்டும் ஏன் முடியாது. எங்களால் முடியும் இந்த மனவுறுதி உங்களிடம் உண்டு எனவே அன்புக்குரிய முன்னாள் போர் வீரர்களே இந்த அவசரமும் அவசியமானதுமான வேண்டுகோளை நீங்கள் ஏற்று விடுதலை அமைப்பில் உங்களை உடனடியாக இணைத்து கொள்வீர்கள் என நம்புகின்றோம் எமது மண்ணில் எதிரியால் நிகழ்த்தப்பட்ட எத்தனையோ படை நடவடிக்கைகளை வல்வளைப்புகளை முறியடித்து சாதனை படைத்த வீரர்கள் நீங்கள் உங்களிடம் குறைவில்லாத போர் அனுபவமும் ஆற்றலும் நிறம்பி கிடக்கின்றது. நீங்கள் இன்று பெரும் படையாக எழும்பி நிற்கும் புதிய படை வீரர்களுடன் இணைவதன் மூலம் எதிரியின் இந்த வல்வளைப்பு முயற்சியை முறியடித்து எமது மக்கள் விரும்பும் விடுதலையை அவர்களுக்கு பரிசாக வழங்க முடியும் ஆகவே இந்த அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோளை உங்களிடம் உரிமையுடன் முன்வைக்கின்றோம் எனவும் தமிழீழ அரசியல்துறை தெரிவித்துள்ளது.

நன்றி புலிகளின் குரல்

Edited by THEEPAN0007

இதைப்பாத்திட்டு புலிகள் பலவீனப்பட்டுப்போனார்களெண்ட

  • தொடங்கியவர்

அகற்றி விடவா?

அகற்றி விடவா?

அப்ப நீங்கதான் அவரா?

  • தொடங்கியவர்

நானே தான் அதில் உங்களுக்கு ஏதும் சந்தேகமா?

நானே தான் அதில் உங்களுக்கு ஏதும் சந்தேகமா?

இனிச்சந்தேகம் இல்லை தாராளமா நீக்கி விடவும்... உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னதான் நடக்குது வன்னியில் ? புலிகள் தம்முடன் வந்து இணையுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் துறை பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்ததாக இதுக்குமுன் நான் அறியவில்லை. இவ்வளவு நாட்களும் நடந்த மோதல்களில் நாம் உண்மையாகவே கணிசமான அளவு இழப்புக்களைச் சந்தித்திருக்கிறோமா ? புலிகளுக்கு இந்த முன்னகர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கூட ஆட்பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா? அல்லது இது ஒரு தந்திர அறிவிப்பா? இந்த அறிவிப்பின் பின்னால் ஏதேனும் ஒரு செய்தியை புலிகள் சொல்ல வருகிறார்களா?

ஒரே குழப்பமாக இருக்கு !

:lol: என்னதான் நடக்குது வன்னியில் ? புலிகள் தம்முடன் வந்து இணையுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் துறை பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்ததாக இதுக்குமுன் நான் அறியவில்லை. இவ்வளவு நாட்களும் நடந்த மோதல்களில் நாம் உண்மையாகவே கணிசமான அளவு இழப்புக்களைச் சந்தித்திருக்கிறோமா ? புலிகளுக்கு இந்த முன்னகர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கூட ஆட்பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா? அல்லது இது ஒரு தந்திர அறிவிப்பா? இந்த அறிவிப்பின் பின்னால் ஏதேனும் ஒரு செய்தியை புலிகள் சொல்ல வருகிறார்களா?

ஒரே குழப்பமாக இருக்கு !

இராணுவம் தப்பி ஓடிய இராணுவத்துக்கு பொது மன்னிப்பு கொடுத்து திரும்பவும் இணையுமாறு கால அவகாசம் கொடுக்கிறது... மகிந்த வரைக்கும் அதுக்கான வேண்டு கோளை விடுகிறார்...!!! அப்ப இலங்கை படைகள் பலவீனப்பட்டு போட்டுது எண்டே சொல்லுவீங்கள்....???

  • தொடங்கியவர்

இதில் புலிகளே பதில் சொல்லியும் உள்ளார்கள்.புதியவர்களுக்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்கும் என்று பிறகு என்ன குழப்பம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் குரலில் ஊடாக மக்களு;ககு வெளியிட்டதை இங்கே பிரசுரித்தது தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இன்னும் ஒரு முன்னோக்கிய தாக்குதலை நடத்தாவிடத்து அவர்களால் இயலாது என்ற எடுகோள் முற்றிலும் தவறானது. ஆனையிறவு தள தாக்குதலில் பல மக்கள் ஆயுதங்களை வாகனங்களில் ஏற்றியதை பலரும் பார்த்தது கண்கூடு. மேலும் மக்களை பங்காளர்களாக இணைப்பதில் என்ன பிழை.? இது ஒரு அறைகூவல் தானே.போர்குணம் மிக வன்னி மக்களை நேரில் பார்த்தவன் என்ற வகையில் கூறுகிறேன் யாராலும் அவர்களை வெல்ல முடியாது. தகுந்த நேரத்தில் இவ் அறை கூவலை புலிகள் விட்டிருக்கிறார்கள் போல தோன்றுகிறது.மகிந்தவின் கொட்டத்தை அடக்கும் நாட்களாக கூட கொள்ளலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தயா, நுணாஸ்,

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் எனக்குள் தோன்றிய கேள்விகளைத்தான் நான் கேட்டேன். இதற்கான காரணம் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதிய கேள்விகள் தான் அவை.

புலிகள் பற்றிய நம்பிக்கையீனத்தால் இவை எழுதப்படவில்லை, மாறாக அவர்கள் உறுதியோடுதான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள எழுதப்பட்ட கேள்விகள்.

:lol: தயா, ராணுவம் தப்பியோடிய தமது ஆக்களை மீண்டும் வருமாறு அழைப்பது வன்னியில் அவர்கள் வல்வளைப்புச் செய்யும் போது ஏற்படும் ஓட்டைகளை அடைக்கத்தான் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன். இது அவர்களுக்குக் களத்தில் ஏற்படும் இழப்புகளாக இருக்கட்டும் அல்லது புதிய இடங்களைப் பிடிக்கும் போது அவற்றை பாதுகாப்பதற்கான ஆள்த் தேவையாகக் கூட இருக்கட்டும்.....அவை அவர்களுக்கு உள்ள பிரச்சனையால்த்தான் ஆட்களை மீண்டும் இணையுமாறு கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னதான் நடக்குது வன்னியில் ?

ஒரே குழப்பமாக இருக்கு !

ஒரு குழப்பமும் வேண்டாம். தலைவர் அவர்கள் கடந்த பல இக்கட்டான காலத்தில் , பலர் எதிர்ப்பாக்காத முடிவுகளை எடுத்து உலகமே வியக்கச் செய்தார். விரைவில் உலகமே அதிசயக்கக் கூடிய நிகழ்வுகள் களமுனையில் நடைபெறப் போகிறது. அதுவரை சற்றுப் பொறுமையுடன் இருந்து உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

நானும் அதைத்தான் நினைக்கிறேன். காத்திருப்போம் அந்த நாளுக்காக!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் மிரளும் அளவுக்கு அங்கு பயங்கரமான நிலமை இல்லை என்றே நினைக்கின்றேன். எதிர்வரும் வாரத்தில் முல்லைத்தீவில் தூரத்து உறவுப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்க உள்ளதாக எனக்கு சம்பிர்தாய அறிவித்தல் தந்திருக்கின்றார்கள்.

எதிரியின் தடையை உடைக்க அனைவரும் தலைவரின் கையைப் பலப்படுத்துவோம். இது தான் அவசியமானதாகும்.

ஏன் பலம் பலவீனம் எண்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறீர்கள் தேசத்திற்கான அவசர Nலை என்று யொசியுங்கள் முன்னாள் பொராளிகள் என்ற அடை மானம் நீங்கி அனைத்து தமிழ் மக்களும் என்ற உணர்வடன் செய்ய வேண்டியதை செய்யலாம் களத்தில் தான் நிற்காவிட்டாலும் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் ஓரு வகையில தேசத்திற்கான உதவியை செய்யும் வாய்ப்பு அல்லது பாக்கியம் கொடுத்தவர்கள் தயவுவெய்து அந்த பாக்கியத்தை வீணாக்கிவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் மனம் சலித்து போய் உள்ளவர்களையும் இணைத்து செய்யுங்கள் நிச்சமாக வெல்லது நாமாகத் தான் மாறப் போகின்றோம் தயவு செய்து தேவையற்ற கற்பனைகளை அடி மனதில் இருந்து நீக்கிவிடுங்கள் .

அத்துடன் வன்னியில் மக்கள் படும் துன்பங்களை உங்களால் முடிந்நதவரை உங்களுடன் இணைந்து படிக்கும் வேலை புரியும் நண்பர்களுடன் பகிருங்கள் வன்னியின் துன்பத்தை சொல்லுங்கள் நிட்சயமாக மாற்றம் வரும்

அத்துடன் எல்லா வேலைகளையும் புலிகள் தான் பார்க்க வேண்டும் அல்லது மன்னாள் போராளிகள் தான் பாhக்க வேணடும் என்ற நிலையை கடந்து செயற்படுங்கள் நிச்சயமாக வெல்லப் போவது நாம் தான்.

  • தொடங்கியவர்

இன்றும் நாளையும் கோட்ட அரசியல் துறை பணிமனையில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்திருக்கின்றார்கள் புலிகள்.

:rolleyes: தயா, ராணுவம் தப்பியோடிய தமது ஆக்களை மீண்டும் வருமாறு அழைப்பது வன்னியில் அவர்கள் வல்வளைப்புச் செய்யும் போது ஏற்படும் ஓட்டைகளை அடைக்கத்தான் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன். இது அவர்களுக்குக் களத்தில் ஏற்படும் இழப்புகளாக இருக்கட்டும் அல்லது புதிய இடங்களைப் பிடிக்கும் போது அவற்றை பாதுகாப்பதற்கான ஆள்த் தேவையாகக் கூட இருக்கட்டும்.....அவை அவர்களுக்கு உள்ள பிரச்சனையால்த்தான் ஆட்களை மீண்டும் இணையுமாறு கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தப்பி ஒடிய இராணுவத்தவனை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து சிறப்பு அணிகளில் பயன் படுத்துவதால் முன்னர் இருப்பவனுக்கும் பிரச்சினையைதான் கொடுக்கும்...

ஆனாலும் பிடித்த இடங்களை பாதுகாக்கும் பணிக்காக எண்று அழைக்க படுகிறார்கள்... அதன் முக்கிய நோக்கம் இராணுவத்தின் ஒருமைப்பாடு சம்பந்தமானது... ஓடாமல் ஏற்கனவே இருக்கும் இராணுவ வீரனிடம் போய் ஓடிய 12000பேரில் 100 00 பேர் மீண்டும் இணைந்து விட்டார்கள் எனும் செய்தி போகும் போது அவர்களின் மனோபலம் கூடும்.... இலங்கை சிங்கள மக்களின் பல பேர் இராணுவத்தில் இருந்தால் அவர்களின் குடும்பங்களும் தேசத்தின் போரின் பின்னால் இருக்கிறது, கடன் ஆற்றுகிறது என்பது அர்த்தம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.