Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலை சிங்கள மாணவன் சுட்டுக்கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து 3 ஆண்டுகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குருநாகலைச் சேர்ந்த சிங்கள மாணவன் இனந்தெரியாத நபர்களால் வந்தாறுமூலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தமிழ் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாவும் ராக்கிங் என்ற பெயரில் சிங்கள மாணவர்கள் இனவாதப் பகிடிவதை செய்து வருவதாகச் சொல்லி அதற்கு எதிராக பிள்ளையான் குழு கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இச்சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த ராக்கிங் விவவாகரம் சிறிய விடயமென்றும்.. பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ளோர் அதை பெருப்பிப்பதாகவும் பல்கலைக்கழக மாணவ சங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி 2007/08 கல்வியாண்டுக்கு என 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

அண்மையில் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிங்கள மாணவர்களும் பெற்றோரும் தம் பிள்ளைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வடக்குக் கிழக்கு அனுப்புவதை ஆட்சேபித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதான செய்தி:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26719

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தில் இது எல்லாம் சகயம் அப்பா.....ஜனநாயக மாகாணத்தில் சிங்கள மாணவரை சுட்டுக்கொண்றதை வன்மையாக கண்டிக்கபடவேண்டிய ஒரு விடயம்.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பல்கலைக்கழக சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாறு ழூலை பல்கழையில் தான் அன்மையில் சிங்கள மாணவர்களால் ஒரு தமிழ் மாணவி பகிடிவதைக்கி ஆளாகி மனநோயாளி ஆக்கப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து சர்சைகள் இருக்கின்றன. உண்மையில் சிங்கள மாணவர்களுக்கு தென்னிலங்கை கல்வி நிறுவனங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாகவா வடக்கு கிழக்குக்கு அனுப்பப்படுகின்றனர் என்பது மிகவும் சந்தேகத்துக்குரிய ஒன்று.

வடக்கு கிழக்கு மாணவர்கள் தமது பிராந்திய பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பில்லாத பாடப்பரப்புகளுக்காகவே அதிகம் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அது தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்வது.

ஆனால் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் படிக்க போதிய இடவசதிகள் இருந்தும்... தேசிய இன ஒற்றுமை என்ற சிங்கள மயப்படுத்தலின் நவீன வடிவத்தின் கீழ் இவர்கள் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு திட்டமிட்டு அனுப்பப்படுகின்றனர். இது முழு இலங்கையையும் சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஓரங்கம்.

இருப்பினும்.. மாணவர்களை சுட்டுக் கொல்வது என்பது ஏற்கப்பட முடியாதது. மாணவர்களுக்கு நிலைமையை விளக்கி எச்சரிச்சு வெளியேறக் கோரலாம்.. அல்லது வெளியேற்றலாம். சுட்டுக் கொல்வது என்பது அது எவராக இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாததே. சிங்களமோ தமிழோ முஸ்லிமோ மாணவ சமூகத்தவன் என்ற ரீதியில் இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதே..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து சர்சைகள் இருக்கின்றன. உண்மையில் சிங்கள மாணவர்களுக்கு தென்னிலங்கை கல்வி நிறுவனங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாகவா வடக்கு கிழக்குக்கு அனுப்பப்படுகின்றனர் என்பது மிகவும் சந்தேகத்துக்குரிய ஒன்று.

என்றால் யார் வடக்கு, கிழக்கு பல்கலைகழகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்? சாதாரண சிங்கள மக்களை வற்புறுத்தி வடக்கு ,கிழக்குக்கு அனுப்ப முடியாது. ஆகவே யார் இந்த மாணவர்கள்?

ஆனால் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் படிக்க போதிய இடவசதிகள் இருந்தும்... தேசிய இன ஒற்றுமை என்ற சிங்கள மயப்படுத்தலின் நவீன வடிவத்தின் கீழ் இவர்கள் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு திட்டமிட்டு அனுப்பப்படுகின்றனர். இது முழு இலங்கையையும் சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஓரங்கம்.

நெடுக்ஸ் யாரையும் பலோத்காரமாக குறிப்பிட்ட பல்கலைகழகத்துக்கு போகொம் படி சொல்வதில்லை. 3 தெரிவுகள் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதுண்டு.

இருப்பினும்.. மாணவர்களை சுட்டுக் கொல்வது என்பது ஏற்கப்பட முடியாதது. மாணவர்களுக்கு நிலைமையை விளக்கி எச்சரிச்சு வெளியேறக் கோரலாம்.. அல்லது வெளியேற்றலாம். சுட்டுக் கொல்வது என்பது அது எவராக இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாததே. சிங்களமோ தமிழோ முஸ்லிமோ மாணவ சமூகத்தவன் என்ற ரீதியில் இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதே..!

அட உண்மையாகவோ நெடுக்ஸ்.புல்லரிக்குது. வட , கிழக்கில் போர் சூழ்நிலை உள்ள நிலையில் எந்த சிங்கள மகன்/ள் வட /கிழக்குக்கு வர எண்ணுவார்கள்.?

உ+ ம்:அண்மையில் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிங்கள மாணவர்களும் பெற்றோரும் தம் பிள்ளைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வடக்குக் கிழக்கு அனுப்புவதை ஆட்சேபித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவாக தமிழ் மகனின் உயிர் இலங்கையில் எவ்வளவுக்கு உத்தரவாதமில்லையோ அதே உத்தரவாதம் சிங்கள ,முஸ்லிம்??? மக்களின் உயிரிற்கு இணையாகுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சிங்கள மாணவன் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளூர் சிறீலங்கா படைத்துறை அதிகாரிகளும் கலந்தாலோசித்த பின்னர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கிழக்குப் பல்கலையில் படித்து வந்த 180 க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அதன் துணைவேந்தர் அறிவித்துள்ளார்..!

இதற்கிடையே நேற்றைய சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவன் உட்பட 4 பேர் விசாரணைக்காக சிறீலங்காப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். <_<

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26722

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பி வைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

bbc/tamil

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

"எவ்வளவு காலம்தான் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மட்டும்தான் போட்டுக் கொண்டிருப்பது.. மூவினமும் வாழும் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களையும் போட்டால்தான் நாம் கிழக்கின் உண்மையான பிரதிநிதிகள் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்று சொல்லியிருப்பாரோ! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.