Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் திருமணம்..!

Featured Replies

மிகவும் இருமையான கவிதை. பாராட்டுக்கள் நெடுக்காலபோவான். :lol::wub:

மனதிலை இருக்கிறதுதான் கவிதையாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதிலையிருந்தே தெரியுது, உங்களுக்கும் திருமண விருப்பங்கள் மனதிலை உள்ளது என்று. என்னதான் பூசி மெழுகினாலும் உள்ளேயிருந்த ஆசையை வெளிக்காட்டிவிட்டீர்களே!!! :lol::D:o

மீசையிலை மண் படேல்லை என்று வாதிடப் போகிறீர்கள். நான் எஸ்கேப் <_<

  • Replies 133
  • Views 14.3k
  • Created
  • Last Reply

நெடுக்ஸ் காதலித்து பார் காதலித்து பார்

உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப் படும்

இராத்திரியின் நீளம் விழங்கும்

கை எழுத்து அழாகாகும்

தாபால் காரன் தெய்வம் ஆவான்!

பூக்களில் மோதி மோதியே உடைந்து போவாய்!.

உன் விம்பம் பட்டு கண்ணாடி உடையும்.

காதலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார் காதலித்து பார்

உன்னை சுற்றி பைத்திக்கார வட்டம் தோன்றும்

உலகம் அர்த்தமற்றதாகும்

நித்திரையின்றி இராத்திரியில் கூட புலம்புவது விளங்கும்

கை எழுத முடியாது நடுங்கும்

தபால் காரன் வரவு உபத்திரபமாகும்..!

பூக்களை கிள்ளி கிள்ளி பிய்த்துப் போடுவாய்

உன் விம்பம் பட்ட கண்ணாடி தூசி பிடித்திருக்கும்..!

காதலித்து பார். :lol:

மிகவும் அருமையான கவிதை. பாராட்டுக்கள் நெடுக்காலபோவான். :(:(

மனதிலை இருக்கிறதுதான் கவிதையாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதிலையிருந்தே தெரியுது, உங்களுக்கும் திருமண விருப்பங்கள் மனதிலை உள்ளது என்று. என்னதான் பூசி மெழுகினாலும் உள்ளேயிருந்த ஆசையை வெளிக்காட்டிவிட்டீர்களே!!! :D:o:lol:

மீசையிலை மண் படேல்லை என்று வாதிடப் போகிறீர்கள். நான் எஸ்கேப் <_<

பாராட்டுக்கு நன்றிகள்.

கனவில சிநேகாவும் தான் வாறா.. திரிசாவும் தான் வாறா.. பாவனாவும் தான் வாறா.. ஜமனும் தான் வாறான்.. அதற்காக.. அந்த 3 பெண்களையும் கலியாணம் கட்டி வாழ்ந்து செத்தும் விட்டன் என்று அர்த்தமா..??! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்குவும் பொன்னியும் மேளச்சமா மாதிரி தொடங்கீட்டியள் :lol: கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

+ காதலிப்பவர்களுக்கு!

பலர் அறிந்த இந்த உண்மைச்சம்பவத்தை மீண்டும் நினைவுறுத்துகிறேன்,

இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் பிரான்சு நாட்டில் இரு காதலர்கள் காதலோ காதல் என்று காதலித்தார்கள் வழமை போல் அங்கேயும் ஒரு வில்லன்!

அவங்கள் இரண்டுபேரிண்ட தகப்பன் மார் எண்டு நினைக்காதேங்கோ, நாடுதான்! காதலனைப்பிடிச்சு கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்பி போட்டார்கள்.பிரியமனமில்லாமல

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்

ஜந்து அடியில் அமிர்தம் இருந்தாலும் பட்டினி கிடப்பாய்

தப்பு எல்லாம் கடிதம் ஆகும்

தவறு எல்லாம் புனிதம் ஆகும்.

காதலித்து பார்.

  • கருத்துக்கள உறவுகள்

கை எழுத முடியாது நடுங்கும்

எப்படி அண்ணே எழுதுவது போத்தலும் கையுமாக அலைந்தால் கை எழுத்து காக்கை கிளித்தால் போல்

போய் விடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

ஐந்து அடியில் அமிர்தம் இருந்தாலும் நஞ்சாய் உணர்வாய்

தப்பு எல்லாம் குரல்வளை நெரிக்கும்

தவறு எல்லாம் உன்னை அழிக்கும்.

காதலித்து பார். <_<

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் கண்களை மூடு

இரு புருவத்தின் மத்தியில் காதிலினியின் உருவத்தை நிறுத்து

நெத்தியில் காதல் தீயை கொழுத்து

கலைந்து போது, கரைந்து போது, காணாமல் போ

நீ ஒளியாவாய், நீ மொழியாவாய்.

சூரியன் உன் போச்சை கேட்கும்

காற்று உனக்கு கை கட்டி செவை செய்யும்.

காதலை தொழுது, கவிதை எழுது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி கண்களை மூடு

இரு புருவத்தின் மத்தியில் காதலியின் உருவத்தை நிறுத்து

பேயைக் காண்பாய்..

நெத்தியில் கற்பூரச் சூடேற்றி அதைக் கொழுத்து

காதல் பேய்

கலைந்து போய், கரைந்து போய், கடைசியில்

அடுத்தவனோடு தொற்றிக் கொண்டு காணாமல் போய்விடும்.

அப்போ...

நீ ஒளியாவாய், நீ மொழியாவாய்.

சூரியன் உன் போச்சை கேட்கும்

காற்று உனக்கு கை கட்டி சேவை செய்யும்.

காதலை வெறு,

பெற்றெடுத்த அன்னையை வாழ்த்தி கவிதை எழுது...

அன்பு மகனாய் சிறப்புடன் வாழ்வாய். <_<

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்,

உனக்கும் கவிதை வரும்

மூன்று முறை பல் விளக்குவாய்

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்ல

உருண்டை ஒன்று உருளும்.

இதயம் அடிக்கடி இடமாறி துடிக்கும்

நெடுக்ஸ் காதலித்து பார்.

Edited by பொன்னி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்,

உனக்கும் கவலை வரும்

மூன்று முறை பல் விளக்கிய நீ

ஒரு முறையும் விளக்க தெம்பின்றி தவிப்பாய்..

வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில்

அமிலம் பெருகும்.. குடற்புண் வரும்.

இதயம் அடிக்கடி வேதனையில் துடிக்கும்

இறுதில் மாரடைப்பால் மடிவாய்.

பொன்னி காதலித்து பார். :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் காதலித்து பார் காதலித்து பார்

இந்த வானம், இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்

காதலை கவரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்

நிசப்பத அலைவரிசையில் உனது குரல் மட்டும் ஒழி பரப்பாகும்.

நெடுக்ஸ் காதலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார் காதலித்து பார்

இந்த வானம், இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்

காதலால் மாசடைந்திருப்பதைக் காண்பாய்.

நிசப்பத அலைவரிசையில் உனது குரல் மட்டும்

தனித்து அணுங்கிக் கொண்டிருக்கும்.. வேதனையால்..!

பொன்னி காதலித்து பார். :lol:

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்

காக்கை கூட உன்னைக்க கவனிக்காது, ஆனால்

இந்த உலகமே உன்னையே கவனிப்பாதாக உணர்வாய்

உன் நரம்மே நாணேற்றி உனக்குள்ளே அம்பு விடும்

நெடுக்ஸ் காதலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

காக்கை கூட உன்னைக் கேலி பண்ணும், ஆனால்

இந்த உலகமே உன்னையே கவனிப்பாதாக கனவு காண்பாய்.

வீணாப் போவாய்.

உன் நரம்பே தளர்ச்சியாகி உன்னைப் பலவீனப்படுத்தி விடும்

பொன்னி காதலித்து பார். :lol:

சபாஷ்....! சரியான போட்டி... :(

புலவர்களே உங்களுக்குள் போட்டி இருக்கலாம்... ஆனால், காதலர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்.

ஏனெனில் உங்களின் போட்டியின் முடிவில் தான் காதலர்கள் தமது காதலை தொடர்வதும், பாழாய்ப்போன இந்த காதலே வேண்டாம் என்று முடிவெடுப்பதும் தங்கியுள்ளது... :)

நெடுக்ஸ் காதலித்து பார்,

அகிம்சையின் இம்சையை அறிந்து உண்டா?

அழுகையின் சுகம் அறிந்தது உண்டா?

காதலித்து பார்.

Edited by பொன்னி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்,

காதலின் இம்சையை அறிந்தது உண்டா?

அறிவாய்.

அழுகையின் கனம் அறிந்தது உண்டா?

அறிவாய்.

காதலித்து பார். :lol:

Edited by nedukkalapoovan

நல்ல போட்டி.. :lol:

நெடுக்ஸ் காதலித்து பார்

கார்மோன்கள் நயில் நதியாக பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும் சாகார வாகும்

உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

சின்ன சின்ன பரிசில்களில் சிலிர்த்து போக தெரியுமா?

காதலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்

காத்திருந்து காத்திருந்தே..

கார்மோன் நதிகள் வற்றி உலர்வதை காண்பாய்..

உதடுகள் சகாராவாக

வார்தைகள் கூட உலர்ந்து உதிர்ந்துவிடும்.

உன்னையே உனக்குள் புதைக்க இதயம் பிளந்து

கல்லறை வெட்டி இருக்கும்.

சின்ன சின்ன பரிசில்களில் சிலிர்த்த நீ

கடைசியில் நினைவுகள் மட்டும் பரிசாக

தனிமையில் துடிப்பாய்..!

காதலித்து பார்.

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் காதலித்து பார்.

உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

காதலித்துபார்

புலன்களை வருத்தி புதுப்பிக்க முடியோமே

காதலித்துபார்

சொர்க்கம் நரகம் இங்கெயே நிச்சயம்

காதலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்.

உன்னையே நீ புதைகுழிக்குள் புதைக்க விருப்பமா?

காதலித்துபார்

புலன்களை வருத்தி துடிதுடிக்க விருப்பமா?

காதலித்துபார்

சொர்க்கம் கனவாக.. நரகம் இங்கேயே நிச்சயம்.

காதலித்து பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nedukkalapoovan

நிஜமென்று நினைத்து ஆர்வமாய் படித்திருக்க அதை அகர வரிசையில் கனவாக்கிய விதம் மிக நன்று. வாழ்த்துக்கள்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.