Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் காதல் தேவதை....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் காதல் தேவதை

மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு

குருவிகளின் கொஞ்சல்களில்

கொஞ்சமாய் கண்விழித்து

ஜன்னலோரம் பார்க்கிறேன்.

பூ மரங்கள் மேல் பனித்துளியில்

தங்க நிற வளையங்களாய்

மினுங்கிடும் நீர்துளிகள்.

அரைத்தூக்கம் கண்களிலே

ஆசையாய் இருந்துவிட

அவசரமாய் ஜன்னல்

கதவுகளை திறக்கின்றேன்

பளீரென்று ஓர் வெளிச்சம்

என் பார்வையதை பறித்துவிட்டு

சில வினாடிகளில் மறைகிறது

மறுபடியும் பார்த்தால்

புரிந்தது என் புத்திக்கு

ஆம்! சூரியனின் விம்பம்

சோடி வளையல்களில் எதிரொலித்து

ஜன்னல்களின் இடைவெளியால்

என் கண்களை தாக்கியது

முகம் பார்ப்போம் என்றால்

முடியவில்லை பூமரத்தால்

அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை

மரம் வளக்கும் கொள்கைவிட்டு

மரம் தறிக்கும் கொள்கையது

அதன் பின்னர் நான்

கதவோரம் நான் ஓடிவர

அழைக்கிறது ஓர் குரல்

என்னையல்ல முன் சென்றவளை !

தனியார் கல்வி நிறுவனத்தில்

கல்விகற்கும் தோழிமார் இருவருமே !

அவளின் முகத்தையும் பார்த்துவிட்டேன்

பெயரையும் தெரிந்துகொண்டேன்

இதைத்தான் கண்டதும் காதலென்று

பெரியோர்கள் சொன்னார்களோ ?

இருவரும் தனியார் கல்வி நிறுவனத்தில்

அனால் வேறு வகுப்புகளில்

இன்று முதல் படிப்பதுடன் சேர்த்து

அவளின் பாதுகாவலன் வேலையையும்

நானாக எடுத்துக்கொண்டேன்.

அவளும் தெரிந்துகொண்டாள்

எனை ஆசையாய் பார்பதற்கு

சிரிக்கவும் பழகிக்கொண்டாள்

சில நாள் அலைச்சலின் பின்

பழகுவதி அவள் குழந்தை

பார்ப்பதிலே அவள் செம்பருத்தி

கோபத்தில் சிவந்துவிட்டால்

அவள் நிறமோ செவ்வாழை !

சும்மாவே சீண்டிவிட்டால்

அவள் குணமோ தீக்கோழி!

வீட்டில் மொக்கு பிள்ளையெனும்

பெயரெடுத்த எனைக்கூட

முதல் தரமாய் பரீட்சையிலே

தேற வைத்த தேவதைதான்.

காதலிலே வென்றோருமும் உண்டு

தோற்றோரும் உண்டு

வாழ்ந்தோரும் உண்டு

அழிந்தோரும் உண்டு

காதலித்துப் பாருங்கள்

கனவு உலகம் நம் கண்ணில் படும்

பட்டாம் பூச்சிகள்

நம் கண்களிலே பறந்தோடும்

பால் நிலவும் உன் கைகளிலே

பவளமாய் தவழ்ந்து வரும் !

சூரியனும் சமயத்தில் - உன்

குளிர் நிலவாய் மாறிவிடும்.

பனிக்காற்று வேளையிலும்

போர்வையின்றி படுப்பீர்கள்

பசியொன்றும் தெரியாது

உடலோ உறக்கமென்றும் உணராது

உடலெல்லாம் பூரிப்பு

உணர்வெல்லாம் பெரு மகிழ்ச்சி

காதலை நேசித்தால்

உன் பலத்தை நீ அறிவாய்

அறிந்ததுமே நீ உணர்வாய்

காதலின் பலம் அதனை.

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி ......

.கவி வரிகள் நன்றாக இருக்கிறது . பள்ளி வாழ்கை ஞாபகமோ ?

தொடருங்கள் .நிலாமதி அக்கா

இளங்கவி இனிய தமிழ்நடை..

(ஆங்கிலச்சொற்பிரயோகங்களை தவிர்த்தால் 100 வீதம் பிடித்திருக்கும்..இப்போ99 வீதம் :-))

அழகு தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதிக்கு

கருத்துக்கு நன்றி, பள்ளி வாழ்க்கை யாரால்தான் மறக்க முடியும். அந்த காலங்களில் ஏற்பட்ட சந்தோசங்கள் தானே மனிதரின் மீதி வாழ்க்கையை கொண்டு செல்ல உந்துசக்தியாக இருப்பது.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவியிற்கு

உங்கள் விருப்பப்படியே 100% தமிழ் கவிதையாகவே தந்துள்ளேன் மறுபடியும் பார்க்கவும். உங்கள் கருத்துக்கு நன்றி.

இளங்கவி

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் மொக்கு பிள்ளையெனும்

பெயரெடுத்த எனைக்கூட

முதல் தரமாய் பரீட்சையிலே

தேற வைத்த தேவதைதான்.

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

கல்வியை தொலைத்தேன்

கட்டா காலியாக அலைந்தேன்

கண்ணுக்கு எட்டா தூரத்தில்

கடமையாற்றுகிறேன்

இந்த காதலில் விழுந்து

.......நல்ல கவிதை இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

கல்வியை தொலைத்தேன்

கட்டா காலியாக அலைந்தேன்

கண்ணுக்கு எட்டா தூரத்தில்

கடமையாற்றுகிறேன்

இந்த காதலில் விழுந்து

.......நல்ல கவிதை இளங்கவி

எனக்கு இளங்கவியின் அந்த வரிகளை விட இதில அதிக யதார்த்தமிருப்பதாகத் தெரியுது. இருந்தாலும் இளங்கவியின் வரிகள் ரசிக்கக் கூடியவை. :rolleyes:

எனது பள்ளி அண்ணா ஒருவர் ஏல் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தாராம். அவர் அதனை வாங்கி கிழித்தெறிந்து போட்டுச் சொன்னாராம்.. எனக்கு காதலிக்க நேரமில்லை என்று. அந்த அண்ணாவுமோ.. அந்தப் பொண்ணு காதலிக்க நேரம் பார்த்திட்டே காலத்தை ஓட்டி இருக்கிறார். கடைசியில் பரீடசையில் பெயிலாகினார். அப்புறம் தான் முழிச்சுக்கொண்டார். இரண்டாம் தடவை எழுதினார். 4 ஏ எடுத்தார். இப்போ வைத்தியராக இருக்கிறார். அந்தப் பெண் விலாசமில்லாமல் யாரையோ கட்டி.. வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்கு இருவரையும் தெரியும்..! இது உண்மைக் கதை..! அது அந்த அண்ணா என்ற படியால்.. பெயில் விட்டதும்.. விழித்தெழுந்தார்.. ஆனால் விழித்தெழத் தவறிய பலர்.. திக்கற்றுப் போனதும்.. அவளவை.. (காதலிக்க வைச்சு ஏமாற்றிறவையை நான் மனிசரா ஏன் மிருகமாக் கூட மதிக்கிறதல்ல. அதுகள் உணர்வற்ற உயிரற்ற சடப்பொருட்கள்..!) வெளிநாட்டு மாப்பிள்ளையோடு விமானம் ஏறினதும் தான் அதிக வரலாறு..! :rolleyes::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இளங்கவியின் அந்த வரிகளை விட இதில அதிக யதார்த்தமிருப்பதாகத் தெரியுது. இருந்தாலும் இளங்கவியின் வரிகள் ரசிக்கக் கூடியவை. :D

எனது பள்ளி அண்ணா ஒருவர் ஏல் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தாராம். அவர் அதனை வாங்கி கிழித்தெறிந்து போட்டுச் சொன்னாராம்.. எனக்கு காதலிக்க நேரமில்லை என்று. அந்த அண்ணாவுமோ.. அந்தப் பொண்ணு காதலிக்க நேரம் பார்த்திட்டே காலத்தை ஓட்டி இருக்கிறார். கடைசியில் பரீடசையில் பெயிலாகினார். அப்புறம் தான் முழிச்சுக்கொண்டார். இரண்டாம் தடவை எழுதினார். 4 ஏ எடுத்தார். இப்போ வைத்தியராக இருக்கிறார். அந்தப் பெண் விலாசமில்லாமல் யாரையோ கட்டி.. வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்கு இருவரையும் தெரியும்..! இது உண்மைக் கதை..! அது அந்த அண்ணா என்ற படியால்.. பெயில் விட்டதும்.. விழித்தெழுந்தார்.. ஆனால் விழித்தெழத் தவறிய பலர்.. திக்கற்றுப் போனதும்.. அவளவை.. (காதலிக்க வைச்சு ஏமாற்றிறவையை நான் மனிசரா ஏன் மிருகமாக் கூட மதிக்கிறதல்ல. அதுகள் உணர்வற்ற உயிரற்ற சடப்பொருட்கள்..!) வெளிநாட்டு மாப்பிள்ளையோடு விமானம் ஏறினதும் தான் அதிக வரலாறு..! :D:D

உன்மை நெடுக்ஸ் காதலித்து படிப்பை தொலைத்து விட்டு அலைந்தவர்களே அதிகம் :)

இங்கு மொக்கு பிள்ளை முதல் தரத்தில் சித்தியடைந்திருக்கிறது வியப்பாய் இருக்கிறது :D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.