Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.

Featured Replies

சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில..

எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா?

ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..?

உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி பேய் முழி முழிச்சிருக்கீங்க தானேப்பா?

வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தாலும் ரிங்கே வராது. அப்புறமென்ன... போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு ரொம்ப லேட்டாதான் போகணும். சரிதானே சார்?

ஒரு முக்கியமான ஆள், உங்க ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தரை மென்ஷன் பன்ணி, 'அவன்கூட சேராதே!'னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் தலையாட்டியிருப்பீங்க. மறுநாளே, அவனோட சுத்துறதை முக்கியமானவங்க பார்த்து தொலைச்சுருவாங்க... கரெக்ட்டா..?

ஒரு மேஜிக்கோ, வித்தையோ வித்தியாசமா எதையாவது சின்ஸியரா கத்துட்டு வந்திருப்பீங்க.ஒரு ஆளை அசத்திரணும்னு டார்கெட் வெச்சு, அவங்ககிட்டே செய்து காட்டும்போதுதான், மேட்டர் சொதப்பிடும். அவங்க போனதும் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க. கரெக்டா வரும்... நொந்து நூடுல்ஸாகி இருக்கீங்களா... இல்லையா?

நன்றி ஆனந்தவிகடன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் வசம்பு , எனக்கும் இது அடிக்கடி நடக்கிறது . :)

இண்டைக்கு மழை பெய்யாது என்று குடையை கொண்டுபோகாமல் போனால் மழை கொட்டொ ... கொட்டென்று கொட்டும் .

இண்டைக்கு மழை வரும் என்று விட்டு , குடையை கொண்டு போனால் அதன் தேவையே வராது , அதோடை குடையையும் துலைச்சுப் போட்டு வாறது . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் வசப்பண்ணே இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு

இண்டைக்கு மழை வரும் என்று விட்டு , குடையை கொண்டு போனால் அதன் தேவையே வராது , அதோடை குடையையும் துலைச்சுப் போட்டு வாறது
.

ஆனால் தமிழ்சிறி நாங்கள் குடையை அவக்கிட்ட கொடுத்துற்று வந்து அடுத்தநாள் போய் அந்த குடையை

வாங்கிக் கொள்வோம் :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை வசம்பு எனக்கு அடிக்கடி நடக்கிற விடயம் ஒன்றை சொல்லுறன்.அந்த நேரம் நல்ல கோவம்தான் வரும்.

கார் ஓடிக்கொண்டிருக்கும் பொது டிராபிக் ல மாட்டுப்பட்டால் நான் இருக்கிற ரக் மட்டும் கொஞ்சமும் அசையாது அடுத்த ரக் அசையுதே என்று அடுத்த ரக்குக்கு மாறினால் அப்ப நான் மாறின ரக் அசையாது ஆனால் நான் முதல் இருந்த ரக் அப்பத்தான் அசையும். எப்படி இருக்கு? என்னத்தை செய்ய இதுதான் ஒவ்வொருனாளும் நடக்குது :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் வசப்பண்ணே இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு

.

ஆனால் தமிழ்சிறி நாங்கள் குடையை அவக்கிட்ட கொடுத்துற்று வந்து அடுத்தநாள் போய் அந்த குடையை

வாங்கிக் கொள்வோம் :lol::o

ஓம் முனிவர் , அதுகும் குடையை திருப்பி வாங்க பொழுது பட்டால் பிறகு தானே போறது . என்ன சில வேளை நாய் தான் கடிக்கப்பாக்கும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குது என்றுதான் இதுவரை புளுங்கிக் கொண்டிருந்தேன். இப்ப கொஞ்சம் ஆறுதலாய்க் கிடக்கு. போற போக்கைப் பார்த்தால் இன்னும் நிறையப்பேர் வரிசையாய் வருவினம் போலவும் கிடக்கு! எதுக்கும் எல்லாரும் முன்னுக்கு நில்லுங்கோ, எப்படியும் இடிச்சுத் தள்ளிக் கொண்டு போய்ப் பின்னுக்குத்தான் விடப் போகினம். இதுவும் எனக்கு அப்பப்ப நடக்கிறதுதான்!!!

வசம்பு! இது மட்டும் 100 /110வீதம் நிசம். :):lol:

உண்மை தான் வசம்பு , எனக்கும் இது அடிக்கடி நடக்கிறது . :lol:

இண்டைக்கு மழை பெய்யாது என்று குடையை கொண்டுபோகாமல் போனால் மழை கொட்டொ ... கொட்டென்று கொட்டும் .

இண்டைக்கு மழை வரும் என்று விட்டு , குடையை கொண்டு போனால் அதன் தேவையே வராது , அதோடை குடையையும் துலைச்சுப் போட்டு வாறது . :o

அடடா, இது எனக்கும் நடக்கிறது தான்... :)

ஆனால், இதில ஒரு விஷயம்... மழை பெய்திருந்தால் குடையை தொலைக்க வேண்டிய நிலை வந்திராது... மழை பெய்யாத நேரத்தில் தான் நாங்கள் அதை அனேகம் தொலைத்திருப்போம்... :o

  • தொடங்கியவர்

தமிழ் சிறி, முனிவர், சுப்பண்ணை, சுவி, மல்லிகை வாசம் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றிகள். மேலே நான் இணைத்த விடயங்களில் பல என் வாழ்வில் கூட அதிகம் நடந்திருக்கு. சுப்பண்ணை சொன்ன டிராபிக்ல மாட்டுப்பட்ட விடயங்கள் பலதடவை நானும் அனுபவித்திருக்கின்றேன். தமிழ்சிறி குடை விடயம் சொல்ல நான் சமீபத்தில் பார்த்த ஒரு SMS ஜோக் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

அது:

ஒருவருக்கு அவரது பெண் நண்பி SMS அனுப்பியிருந்தா. அதில் "மழை பெய்யும் போதும், வெய்யிலடிக்கும் போதும் எனக்கு உன் ஞாபகம் தான் வந்து எனை வாட்டுகின்றது" என எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் தன் நண்பி இவ்வளவு பாசம் தன்னில் வைத்திருக்கின்றாவா என்று அவர் நினைக்க, அதே நண்பியிடமிருந்து அடுத்த SMS வந்தது. அதில் "அட பாவி ! நீ சென்ற வாரம் என்னிடம் வாங்கிச் சென்ற எனது குடையை சீக்கிரம் திருப்பிக் கொடடா" என்றிருந்தது.

சத்தியமாய் இது எனக்கு வந்த SMS இல்லை என்பதை இத்தால் சகலருக்கும் :D (எவரும் என்னை கேள்வி கேட்கும் முன்) :D அறிவித்துக் கொள்கின்றேன்.

ஓ..அப்படியோ வசபண்ணா..!!

எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விசயம் என்னவெண்டா..பொண்ணுகளின்ட மனசும் உதுகுள்ள அடங்கும் எப்படி சொல்லுறன் எண்டா..டா..!! :D

ஒரு "பிகரை" இன்னைக்கு மடக்கலாம் எண்டு போனா மடக்க ஏலா..சும்மா போனா அன்னைக்கு எண்டு பார்த்து அங்கால சொல்லவா வேண்டும் வசபண்ணா..ணா.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா நடக்கிறது எல்லாம் நினைக்கவும் முடியா நினைக்கிறதெல்லாம் நடக்கவும் முடியா" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் முனிவர் , அதுகும் குடையை திருப்பி வாங்க பொழுது பட்டால் பிறகு தானே போறது . என்ன சில வேளை நாய் தான் கடிக்கப்பாக்கும் . :icon_mrgreen:

தமிழ்சிறி நாய்குட்டிகளை நாங்கள் மடக்கி வைத்திருப்போம் அதனால எங்களுக்கு கடியாது :lol::lol: வசம்பண்ணே வெள்ளம் வரும் முன் அணை கட்டி விட்டு விட்டீர்கள் இருந்தாலும் உங்கள் அனுபவம்

நல்லாத்தான் இருக்கு சரி நிறைய குடை வைத்திருப்பையல் போல எங்கே கொடுங்கோவன் ஒரு ஜந்து குடைகள் :unsure::unsure::o

  • தொடங்கியவர்

தமிழ்சிறி நாய்குட்டிகளை நாங்கள் மடக்கி வைத்திருப்போம் அதனால எங்களுக்கு கடியாது :lol::lol: வசம்பண்ணே வெள்ளம் வரும் முன் அணை கட்டி விட்டு விட்டீர்கள் இருந்தாலும் உங்கள் அனுபவம்

நல்லாத்தான் இருக்கு சரி நிறைய குடை வைத்திருப்பையல் போல எங்கே கொடுங்கோவன் ஒரு ஜந்து குடைகள் :unsure::unsure::o

:(ஏன் ஆச்சிரமத்து பெண் பிள்ளைகளுக்கு குடையைக் கொடுத்து விட்டு பிறகு SMS அனுப்பவோ?? அதற்கு 5 குடை தேவையா?? என்றாலும் உங்களுக்கு ரொம்பத் தான் போராசை. சிலவேளை அடி வாங்கும் போது 5 குடையாலும் வாங்க வேண்டிவரும் கவனம். :icon_mrgreen::(

  • தொடங்கியவர்

ஓ..அப்படியோ வசபண்ணா..!!

எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விசயம் என்னவெண்டா..பொண்ணுகளின்ட மனசும் உதுகுள்ள அடங்கும் எப்படி சொல்லுறன் எண்டா..டா..!! :unsure:

ஒரு "பிகரை" இன்னைக்கு மடக்கலாம் எண்டு போனா மடக்க ஏலா..சும்மா போனா அன்னைக்கு எண்டு பார்த்து அங்கால சொல்லவா வேண்டும் வசபண்ணா..ணா.. :lol:

ஜம்மு

:icon_mrgreen: நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. அதிலும் சும்மா போனாவில்ல ஏதாவது வேறு முக்கிய அலுவலா அவசரமாகப் போகும் போது தான் இப்படி நடக்கும். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.