Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தாக்குதலை ஆராய வவுனியா வரவுள்ள இந்திய இராணுவ நிபுணர் குழு

Featured Replies

வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகள் இன்று அதிகாலை நடத்திய ஆட்லறி மற்றும் வான் தாக்குதல்களினாலான மரபு வழி தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா ராடர் அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவை சேதமடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர் குழு ஓன்று கொழும்புக்கு வரவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிறிலங்கா வான்படைக்கு புதிய ராடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இக்குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

வவுனியா படைத் தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் இராணுவ முகாமின் ராடர் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இரண்டு இந்திய வான்படையின் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்தமை குறித்தும் இக்குழு விபரங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இக்குழு வவுனியாவுக்குச் சென்று சம்பவ இடத்தை பார்வையிடுவதுடன் தாக்குதல் இடம்பெற்றவேளை கடமையிலிருந்த உயர் அதிகாரிகளை சந்தித்து நிலைமையை அறிந்து கொள்ளும் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோ இக்குழுவின் கொழும்பு வருகை தொடர்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தமிழர் தாயமான வடக்கு - கிழக்கு உட்பட சிறிலங்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 265 இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றுவதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதினம்

தமிழர் தாயமான வடக்கு - கிழக்கு உட்பட சிறிலங்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 265 இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றுவதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணக்கம். இந்திய உறவுகளே

உங்கள் பதிலென்ன நீங்கள் என்னசெய்யப்போகிறீர்கள்? தமிழகத்தில் மீனவர்களையும் தமிழீழத்தில் தமிழர்களையும் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறி அரசாங்கத்திற்கு நீங்கள் தெரிவுசெய்த உங்கள் நாட்டு அரசு நவீனஆயுதங்கள்,கடற்படைக்கப்ப

சாத்வீக இந்தியா துரோக இந்தியாவாக எதிர்காலத்தில் திகழப்போகிறதா?...

இனி இந்தியாவின் நடுநிலை கொள்கைதான் எடுபடுமா?....

சாத்வீக இந்தியா துரோக இந்தியாவாக எதிர்காலத்தில் திகழப்போகிறதா?...

இனி இந்தியாவின் நடுநிலை கொள்கைதான் எடுபடுமா?....

இந்திய அரசியலில் சாத்வீகம் செத்து கிட்டத்தட்ட 60 வருடமாகிறது!

இந்தியாவிடம் நடுநிலை கொள்கை என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. இருந்திருந்தால் ஈழப்பிரச்சினை எப்போதோ தீர்ந்து இருக்கும்.

இந்தியாவிடம் நம்பவைத்து கழுத்தறுக்கும் கொள்கைகள் வேண்டுமென்றால் நிறையவே உண்டு!

அந்த கொள்கைகள் தான் நட்பு நாடாக இருந்த நேபாளத்தையும் சீன சார்பு மாவோயிஸ்டுகளுக்கு தாரைவார்க்க உதவியது!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்வி. ஆனால் பதில் தரும் நிலையில் தமிழ் நாட்டுத் தமிழர்களோ மற்றைய இந்தியர்களோ இல்லை என்றே நினைக்கிறேன். சரியான பதில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டுமே தரப்பட முடியும். வரும் நாள் பார்த்துப் பொழிய வேண்டியது தான். தவற விட்ட இரண்டு கூலிகளுக்குப் பதிலாக பல கூலிகளைப் பலியெடுக்கலாம். இது நடக்க வேண்டுமென்பதே என் தனிப்பட்ட பிரார்த்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அதை மறைப்பதற்கும் இதுபற்றிய சர்ச்சயைத் திசை திருப்புவதற்கும் நடவடிக்கைகள் இருதரப்பினாலும் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்திய படைகூலிகள் என்ஜினியர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொண்டர்படை, வியாபாரிகள் என்று பெயரிடப்பட்டு சிங்கள அரச படைகளுடன் களமுனைக்கும் தளங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுவது எதுவிதத்திலும் சர்வதேச மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படப்போவதில்லை. இதையேதான் அமெரிக்கா, இரசியா, சீனா, பாகிஸ்த்தான், ஆகிய நாடுகளும் பின்பற்றுகின்றன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வந்து எலங்கை அரசாங்கம் ஏதாவது தரும் ...........................போங்கோ

அதாவது எந்த வழுஅரசாக இருந்தாலும் சரி புழுஅரசாக இருந்தாலும் சரி விடுதலை புலிகளுக்கு

கீழ்தான்டா சும்மா வல்லரசு என்ற பெயர் மட்டும் எடுத்தால் போதுமா எந்த நாடும் உதவி செய்யாத போது

முப்படையும் வைத்திருக்கும் நாங்கள் எங்கே நீங்கள் எங்கே தூ..................பு

சீனா வைக்கிறான் ஆப்பு

பாகிஸ்தான் வைக்கிறான் ஆப்பு

ஏன் அங்கே சில.......................... வைக்கிறான் ஆப்பு அதை புடிக்க வக்கில்ல இங்க வந்து என்னத்த புடுங்க போறயல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரட்டும் வந்து இந்திரவிண்ட மிச்சம் மீதியை பொறுக்கிக்கொண்டு போகட்டும் அப்புறம் என்ன புதுசா கொண்டுவந்து

பூட்டுவாங்கள் :lol::rolleyes: ? சோனியாவா அல்லது ஜெயலலிதாவா

வரட்டும் வந்து இந்திரவிண்ட மிச்சம் மீதியை பொறுக்கிக்கொண்டு போகட்டும் அப்புறம் என்ன புதுசா கொண்டுவந்து

பூட்டுவாங்கள் :lol::rolleyes: ? சோனியாவா அல்லது ஜெயலலிதாவா

சுப்பர்...

இன்னுமொரு சொல்லை விட்டுட்டியல்.. அதாவது பொறுக்கிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பர்...

இன்னுமொரு சொல்லை விட்டுட்டியல்.. அதாவது பொறுக்கிகள்

சரி சரி அதையும் சேர்த்துக்கொள்ளுங்கோ :lol: . நான் ஏன் சொல்லல என்றால் சொல்லாட்டியும் எல்லாருக்கும் தெரியும்தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.