Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் .தாக்குதல்

Featured Replies

ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏராளமான விசைப் படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க சென்றன.

நேற்று பிற்பகல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் தாக்கினர்.

மீன்பிடி வலைகளை வெட்டி, படகிலிருந்த ஐஸ்பெட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது எனவும் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் நடுக்கடலில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில், மீனவர்கள் பலர் மீன்பிடிக்காமல் மாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் காயமடைந்த மீனவர் நம்பு(45) கூறுகையில், "நேற்று பகல் 11 மணிக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கத் துவங்கினோம். அப்போது படகில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகளை அருகில் அழைத்தனர். இதில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. படகில் ஏறிய கடற்படையினர் எங்கள் கைகளை மேலே தூக்கச் சொல்லி துப்பாக்கி, இரும்புத் தடி, கயிறு கொண்டு தாக்கினர்.

மீன்பிடி வலைகளை வெட்டி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். சில மீனவர்களை கடலில் குதித்து நீண்டநேரம் கடலில் நீந்தும்படி உத்தரவிட்டனர். நீண்ட நேரத்துக்குப் பின் இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது என எச்சரித்து சென்றனர். கடற்படையினர் சென்றதும் உயிர் தப்பினால் போதும் என்று கரை திரும்பினோம்' என்றார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

திருப்பி அடிக்காதவரை அடிவாங்கத்தான் வேண்டும். திருப்பியடித்தால்தான் இந்திய கரையோரக் காவல் படை துணைக்க வரும். ஒரு முடிவும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: இந்தியக் கரையோரக் காவல்ப்படை யாரின் துணைக்கு வரும் ??
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: இந்தியக் கரையோரக் காவல்ப்படை யாரின் துணைக்கு வரும் ??

இந்தியக் கரையோரக் காவல்படை பொறியியலாளர்கள் ராடாரோட வருவினம். பிறெகென்ன.. தமிழக மீனவர்களை உள்ள வரவிட்டு சங்குதான்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் காங்கிரஸ் அரசுக்கு வாக்களித்த தமிழ் நாட்டு மீனவர்களுக்கு சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி::நேற்றுதான் அண்ணாவுக்கு விழா எடுத்தேன் சற்று களைப்பாக உள்ளது எந்த செய்தியாக இருந்தாலும் பிரகு வந்து சொல்லும்

ஸ்டாலின்:;

...................ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்களாம் அப்பா

கருணாநிதி::::என்ன மீனவர்களை தாக்கி விட்டார்களா எடு பேனாவை ஒரு கடிதம் மத்திய அரசுக்கு அனுப்புவோம்

....................அடேய் ஸ்ராலின் பேனாவில் மை இல்லையடா

ஸ்ராலின் :ஏதாவது உழி தரவா ஜயா

கருணாநிதி: அங்க வேற குண்டு வெடித்து குழப்பமாக இருக்கு கடிதம் அனுப்புவமா வேண்டாமா சரி எழுதிவைப்போம் யாராவது கேட்டால் அனுப்பிவிட்டேன் என்று சொல்வோம்

செய்தியாளார்::ஜயா இலங்கை படையால் நமது தமிழ் நாட்டு மீனவர்கள் தாக்க பட்டிருக்கிறார்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?

கருணாநிதி:;சற்று முன் தான் ஒரு தொலை நகல் அனுப்பியுள்ளேன் மத்திய அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும் இதோ அதன் பிரதி என்று எடுத்து காட்டுகிரார்

.................மீனவர்களின் வாழ்கை????????

இந்திய மீனவர்கள் திருப்பித் தாக்கினால்தான் அதன் விபரீதம் புரியும். அதுவரை இலங்கைக்கோ, தமிழ்நாட்டிற்கோ, அல்லது இந்தியாவிற்கோ இதன் விபரீதம் புரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கடலில தூக்கி போட்டால் கட்டுமரமா மிதப்பவரையும் மீன்பிடிக்கப்போகும் போது கூட்டி போங்கப்பா சிறிலங்கா கடற்படை உங்களின் படகைத் உடைத்தால் உடனே அவரை தூக்கி கடலில போட்டு நீங்கள் கரை சேரலாம் அதுதான் ஒரே ஒரு வழி

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

ஜ செவ்வாய்க்கிழமைஇ 16 செப்ரெம்பர் 2008இ 04:45.31 யுஆ புஆவு +05:30 ஸ

தமிழக மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி உட்பிரவேசிக்க முயற்சித்த காரணத்தினால் இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 50 க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படைப் படகுகள் தாக்குலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கச்சதீவிற்கு அருகாமையில் மீன்பிடி நடவடிக்கையினைத் தொடர முயற்சித்தபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் காரணமாக மீனவப் படகுகள் சேதமடைந்துள்ளன.

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதி பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழ் வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் கரையோரக் காவல்படை பொறியியலாளர்கள் ராடாரோட வருவினம். பிறெகென்ன.. தமிழக மீனவர்களை உள்ள வரவிட்டு சங்குதான்..! :icon_mrgreen:

எத்தனை தடவை அடித்தாலும் வடிவேலு போல வலியாத மாதிரிவர பழகிகொள்ளவேண்டும், அல்லாவிடில் ஆண்டனி சொல்வார், சிங்களப்படை அடிக்கவில்லை தடவிட்டார்கள் என்று, முத்தமிழ் காவலர் கவிதை எழுதி தொலைப்பார், அடி வலியோடு அதை வேறு அவர்கள் வாசித்து தொலைக்க வேண்டும். :o

  • தொடங்கியவர்

அந்த கடலில தூக்கி போட்டால் கட்டுமரமா மிதப்பவரையும் மீன்பிடிக்கப்போகும் போது கூட்டி போங்கப்பா சிறிலங்கா கடற்படை உங்களின் படகைத் உடைத்தால் உடனே அவரை தூக்கி கடலில போட்டு நீங்கள் கரை சேரலாம் அதுதான் ஒரே ஒரு வழி

தமிழ்நாட்டு உறவுகளே உறங்கியது போதும் விழித்தெளுங்கள்

தமிழனெண்டு சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

அரசியலையும் அரசியல்வாதிகளையும் அடியோடு மாற்றுங்கள்

எத்தனை தடவை அடித்தாலும் வடிவேலு போல வலியாத மாதிரிவர பழகிகொள்ளவேண்டும், அல்லாவிடில் ஆண்டனி சொல்வார், சிங்களப்படை அடிக்கவில்லை தடவிட்டார்கள் என்று, முத்தமிழ் காவலர் கவிதை எழுதி தொலைப்பார், அடி வலியோடு அதை வேறு அவர்கள் வாசித்து தொலைக்க வேண்டும். :D

இந்தியர்களின் பழக்கத்தையே வடிவேலு பிரதிபலிக்கின்றார்.... அதனாலதான் என்னவோ அது நகச்சுவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.