Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி

Featured Replies

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மதுரையைச் ேசர்ந்த மீனவர் உயிரிழந்தார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தாக்கி காயப்படுத்துவதும் படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு விடிவே கிடையாதா என்ற ஏக்கத்திலும் சோகத்திலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தனது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியைச் ேசர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படை வந்தது.

தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்த கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் முதுகில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/09...tcha-teevu.html

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழக மீனவரை சுட்டு கொன்றாலும் , மாநில அரசோ , மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காது என்ற தெம்பு சிங்கள கடற்படையினருக்கு ஏற்பட்டுவிட்டது .

இனிமேல் என்ன , ராணுவத்தினரும் , கற்படையினரும் தங்கள் இஷ்டத்துக்கு ஈழத்தமிழர்களையும் , தமிழக தமிழர்களையும் சுட்டுக்கொல்லட்டும் .

தன்னுடைய நாட்டு மக்களை காக்க நாதி இல்லை , இதுக்குள்ளை வல்லரசு எண்டு சொல்லிக்கொண்டு பெருமை வேறை . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன் ஸ்ரீலங்கா கடற்படை தமிழக மீனவர்கள் மீதுதான் பயிற்ச்சி எடுக்குது என்று :)

மத்திய காங்கிரஸ் ஆட்சியின் மறைமுக ஆசீர்வாதம் இல்லாமல் சிறீலங்கா கடற்படைக்கு தமிழக மீனவர்களை இப்படி சகட்டு மேனிக்கு தினமும் சுட்டுத்தள்ளும் தைரியம் வர சாத்தியமில்லை!

கடலில் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள தேவையேற்பட்டால் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்காதீர்கள்! என்று இனவாத சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு இரகசிய சைகை காட்டி விட்டது என்றே நினைக்கிறேன்!

இப்படி அப்பாவி தமிழ் மீனவர்களின் படுகொலைகளுக்கு மறைமுக பங்காளியாக இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு முண்டு கொடுப்பவர் ......

உலகத்தமிழின .... ஓ..!

அவர்கள் பற்றி எழுதினால் தேவையில்லாமல் எதற்கு எப்போதும் நம்மவர்களையே வம்புக்கு இழுக்கிறீர்கள்?!

அடுக்குமா இந்த அநியாயம்?!

தமிழக மீனவருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?!!!

என்றெல்லாம் இங்கு சிலர் அழுது புரண்டுவிடுவார்கள்!

ஆமாம் கட்டுமரத்திற்கும் பட்டுத்தொட்டிலுக்கும் என்ன சம்பந்தம் கோபாலா?!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

_______________________

_______________________

_______________________ :):)

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்தப் படுகொலைகள் தமிழ்நாட்டில் ஓரளவுக்குச் சல்சலப்பை ஏற்படுத்தியிருக்கு. ஜெயா கூட கண்டனம் தெரிவித்திருக்கிறா !

ஆனால் ஒரு ஆள் மட்டும் எதுக்கும் அஞ்சாது, அதுதான் பனங்காட்டு நரியாச்சே?! இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது !

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவத்தை அரசியல் பார்வையூடு மட்டும் பார்ப்பதை ஈழத்தமிழர்கள் தவிர்ப்பது நல்லது. உண்மையில் இது எமது தமிழகச் சகோதர்களுக்கு சிங்கள பேரினவாத அரசால் விடப்படும் சவாலாகவே கணிக்கப்பட வேண்டிய ஒன்று. எமது தமிழக சகோதரர்களின் கடற் பாதுகாப்பு என்பது ஈழத்தில் ஈழத்தமிழரின் விடிவோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

எமது சகோதரர்களின் துயர் மிகு இவ்வேளையில் சிரிப்பது அழகும் அல்ல. மனிதப் பண்பும் அல்ல..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் எத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன தமிழக முதலைமைச்சர் ஏதாவது செய்திருக்கார???

/

/

[ஒரு கடிதம் மாத்திரமே] :)

இதே போல் எத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன தமிழக முதலைமைச்சர் ஏதாவது செய்திருக்கார???

/

/

[ஒரு கடிதம் மாத்திரமே] :)

ஒரே ஒரு கடிதமே போதும்... ஆனால் அதை எழதத்தான் யாருமில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.