Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன?: முதல்வர் கருணாநிதி விளக்கம்

Featured Replies

ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன?: முதல்வர் கருணாநிதி விளக்கம்

[செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 11:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே?

பதில்: தி.மு.க. தொடக்கம் முதல் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாமென்று நினைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் முக்கியமாக இந்தப் போராட்டத்திற்கு அழைக்க வேண்டுமென்று நினைத்து அழைத்திருக்கலாம். அதனால் என்ன? இலங்கைத் தமிழர்கள் நன்றாக விடயம் தெரிந்தவர்கள்.

அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார்? போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களை தமிழகத் தலைநகரில் பேரணி நடத்திக்காட்டி, அவர்களுக்காகப் போராடிய கட்சி தி.மு.க. என்பதையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே பதவி விலகிய கட்சி தி.மு.க. என்பதையும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பிரச்சினையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்பது பற்றி சட்டப்பேரவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன். எப்படியோ உண்ணாநிலை பந்தலில் அனைத்து கட்சித் தலைவர்கள் கூடும் போது 23.04.08 அன்று சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று அதில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

புதினம்

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி நீங்க உண்மையிலை வாழ்த்தினீங்களா? அல்லது திட்.........?

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்தவர் கருணாநிதிதான்-நெடுமாறன்

சென்னை: காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.

அதற்கு நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996ம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983ம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

http://thatstamil.oneindia.in/news/2008/08...-nedumaran.html

எதற்காக இப்போது இந்தப் புலம்பல். மற்றவர் செயல் கண்ட அச்சமா அல்லது அரசு அடுத்த ஆட்சியில் பறிபோய்விடும் என்ற பயமா?

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்கு தி.மு.க செய்தது.

அகதிகளை தீவிரவாதி என்று கைது செய்தோம்.

அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தோம்.

அவர்கள் சொத்து வாங்க கூடது என்று உத்தரவிட்டோம்.

தமிழனை கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தோம்.

அவனை சரியாக காட்டி கொடுக்க ராடர் கொடுத்தோம்.

அவனுக்காக குரல் கொடுப்பவரை சிறையில் தள்ளுவோம் என்றோம்.

உண்ணாவிரதம் இருந்த நெடுமாறனை ஏமாற்றினோம்.

ஒட்டு குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.

தமிழன் செத்து கொண்டிருக்கும் போது நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டிருந்தோம்.

எல்லா கட்சியும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் போது அதையும் அரசியலாக்க முயன்றோம்.

அவர்களுக்கு நாங்கள் செய்ததை பட்டியலிட்டோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழ தமிழரை முட்டாள் என்று நினைத்தோம்.

அதனால் தான் "ஈழ தமிழர் புத்திசாலிகள்" என்று புகழ்சி செய்தோம்.

எங்கள் பணி இன்னும் தொட

சூறாவளி நீங்க உண்மையிலை வாழ்த்தினீங்களா? அல்லது திட்.........?

வாழ்த்துவதும் வாத்துவது போல் தூற்றுவதும் தமிழ்னின் தனித்துவமில்லையா?...

ஆனாலும் நான் சொல்வதெல்லாம்:

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

முதலமைச்சர் அண்ணல் கருணாநிதி வாழ்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக இப்போது இந்தப் புலம்பல். மற்றவர் செயல் கண்ட அச்சமா அல்லது அரசு அடுத்த ஆட்சியில் பறிபோய்விடும் என்ற பயமா?

ஜானா

இரண்டுமே தான்...

  • கருத்துக்கள உறவுகள்

:o அவர் ஒருமுறை சூடு கண்டவர். 1991 இல் ராஜீவ் கொல்லப்பட்டதை அடுத்து பலாத்காரமாக ஆட்சியைப் பறிகொடுத்தவர். மீதமிருக்கும் தனது செல்வாக்கையும், அரசியலுக்குள் இருக்கக் கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பையும் ஒரேயடியில் இன்னொரு ஆட்சிப் பறிப்புக்கு இரையாக்கிவிட விருப்பமில்லாமல் இருக்கலாம். அவர் வாயைத் திறந்தால் மத்தியில் உள்ளவர்களும் அவரின் எதிரிகளும் "புலிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்" என்று கூவத் தொடங்கி விடுவார்கள். தமிழ்ச் செல்வன் அண்ணாவின் மறைவுக்கு அவர் எழுதிய இரங்கள் உரையை வைத்தே அவருக்கு ஆப்படிக்க எத்தனை பேர் காத்திருந்தனர்? இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவு தருகிறோம் என்று சொல்லுபவர்களும் அந்த இரங்கல்க் கவிதைக்கு தீவிரவாத முலாம் பூசியவர்கள்தானே?

அதேபோல அவர் வாயே திறக்காமல் இருந்தாலும் உடனேயே அவரை வீழ்த்துவதற்கு எத்தனை பேர் "ஈழ மக்களுக்கு ஆதரவு தருகிறோம்" என்ற போர்வைக்குள் சதிகள் பின்னியிருப்பார்கள் ?

சொந்த அரசியல் நலனில் மட்டுமே அக்கறை உள்ள தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒன்றையொன்று வீழ்த்துவதற்காகவே ஈழத் தமிழர் பிரச்சனையை கைய்யில் எடுத்திருக்கின்றன. உண்மையாகவே எம்மீது அக்கறை உள்ள கட்சிகளும், கழகங்களும் எந்த அதிகாரங்களும் இன்றியே இருக்கின்றன. அதுதான் எமது சாபக்கேடு. ஐய்யா நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைக்கோ, திருமா போன்ற உண்மையான ஈழப் போராளிகளுக்கு அரசியல் பலம் போதாது என்பது எம்மைப் பொறுத்தவரை மிகவும் கவலைக்குரிய விடயந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு தி.மு.க செய்தது.

அகதிகளை தீவிரவாதி என்று கைது செய்தோம்.

அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தோம்.

அவர்கள் சொத்து வாங்க கூடது என்று உத்தரவிட்டோம்.

தமிழனை கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தோம்.

அவனை சரியாக காட்டி கொடுக்க ராடர் கொடுத்தோம்.

அவனுக்காக குரல் கொடுப்பவரை சிறையில் தள்ளுவோம் என்றோம்.

உண்ணாவிரதம் இருந்த நெடுமாறனை ஏமாற்றினோம்.

ஒட்டு குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.

தமிழன் செத்து கொண்டிருக்கும் போது நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டிருந்தோம்.

எல்லா கட்சியும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் போது அதையும் அரசியலாக்க முயன்றோம்.

அவர்களுக்கு நாங்கள் செய்ததை பட்டியலிட்டோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழ தமிழரை முட்டாள் என்று நினைத்தோம்.

அதனால் தான் "ஈழ தமிழர் புத்திசாலிகள்" என்று புகழ்சி செய்தோம்.

எங்கள் பணி இன்னும் தொட

இன்னும் ..........இன்னும்.................

எமக்குத்தெரியாமல்................

நாமறியாமல்...................

கலைஞர் காப்பார் நம்பிச்சென்ற அகதித்தமிழன் முதல் போராளிவரை....................????

இருந்தாலும் இப்போவாவது ஒரு கை.......................????

கலைஞர் காப்பார் என்று

நம்பிச்சென்ற அகதித்தமிழன் முதல் போராளிவரை....................????

இருந்தாலும் இப்போவாவது ஒரு கை.......................????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.