Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?

Featured Replies

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது..

)

நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,

அழகாய்க் கூவும் குயிலும்,

தோகை விரிக்கும் மயிலும்,

காதல் பேசும்கண்களும்,

தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,

தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,

பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,

அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,

கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்

--

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன், இதை வாசிக்க வேண்டியவர்கள் எப்போதோ தமிழ் மறந்திருப்பார்கள். அதனால் ஆங்கிலத்திலோ அல்லது பிரெஞ்சிலோ எழுதி அவர்கள் அடிக்கடி சென்று வரும் இணையத்தளங்களில் ஏற்றி விட்டால் தான் இது அவர்களைச் சென்றடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள் நாட்டு அகதி மாதிரி தெரியல்ல.

ரொம்ப படித்த வெளிநாட்டு அகதி போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாட்டு அகதி எழுதின் என்ன! உணர்வின் பகிர்வாய் சிலர் உள்ளத்தை அப்படியே சொல்லியிருக்கிறார் படைப்பாளி! கனடாவில் நடைபெற்ற கிரிக்கற் போட்களின் போது ஒரு பக்கம் இளைஞர்கள் போராட்டம் செய்ய மறுபக்கம் கிரிக்கற் பார்க்க சென்ற பரதேசிகளும் நமக்குள் இருக்கத் தானே செய்தார்கள்.!

இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணா!

உள் நாட்டு அகதி மாதிரி தெரியல்ல.

ரொம்ப படித்த வெளிநாட்டு அகதி போல் உள்ளது.

யார் எழுதியிருந்தால் என்ன? தேவையானவற்றை எழுதியிருக்கின்றார்கள்.

இதற்கு எம்மவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்று ஒரு கற்பளை.

நாம் நலமாக இருக்கின்றோம். இங்குதான் இப்போது தாராளமாக எல்லாமே கிடைக்கின்றதே. உங்கு வாழ்ந்தபோதுதான் நாம் கரட் பீற்றூட் கோவா என்று உணவுப் பொருட்களை தேடினோம். இங்கு நாம் இப்போது முருங்கைக்காய் .முருங்கை இலை. வல்லாரை தேடிப்போகின்றோம். எம்மவர்கள் கொடுக்கும் ஆதரவில் எல்லாமே தாராளமாக கிடைக்கின்றது.

முன்பெல்லாம் அப்பிள்களை படங்களில் பார்த்து மகிழ்ந்த நாம் இலங்கையிலிருந்து வருகின்ற பழங்களைதான் உண்கின்றோம்.

யானை கம்பனி குளிர்பானங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவில் தாராளமாக இங்கு வந்து சேர்கின்றன. ரஜனிகாந்த் படங்களை முதல்நாளே முதல் காட்சியில் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோசம்தான் என்ன?

இதில் ஒரு குறை அவர்களின் கட்அவுட்களை வைத்து பால் அபிஷேகம் செய்ய முடியவில்லை. அதற்கும் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். எப்போதாவது சிறிது நேரம் கிடைத்தால் இலங்கையில் சண்டை நடக்குதாமே அதைப்பற்றி சிந்திப்போம். பெரும்பாலும் நேரம்கிடைப்பதில்லை. இங்கு தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள் பார்ப்பதற்கு நேரம் போதாமல் இருக்கின்றது.

ஐயோ இந்தக்கடிதம் எழுத இருந்த நேரத்தில் மானாட மயிலாட முடிந்து போய்விட்டது. மன்னிக்கவும் இதை இத்துடன் முடித்து கொள்கின்றேன். ஏனென்றால் அசத்தப்போவது யாரு அதையாவது பார்க்கவேணும்.

கவலைப்படவேண்டாம் எப்போதாவது நேரம் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு கடிதம் எழுத முயற்சிக்கின்றேன்.

பிற்குறிப்பு

எந்திரன் படம் எப்ப வெளிவருமென்று தெரிந்தால் நீங்கள் அடுத்த கடிதம் எழுதும்போது மறக்காமல் குறிப்பிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யார் எழுதியிருந்தால் என்ன? தேவையானவற்றை எழுதியிருக்கின்றார்கள்.

இதற்கு எம்மவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்று ஒரு கற்பளை.

நாம் நலமாக இருக்கின்றோம். இங்குதான் இப்போது தாராளமாக எல்லாமே கிடைக்கின்றதே. உங்கு வாழ்ந்தபோதுதான் நாம் கரட் பீற்றூட் கோவா என்று உணவுப் பொருட்களை தேடினோம். இங்கு நாம் இப்போது முருங்கைக்காய் .முருங்கை இலை. வல்லாரை தேடிப்போகின்றோம். எம்மவர்கள் கொடுக்கும் ஆதரவில் எல்லாமே தாராளமாக கிடைக்கின்றது.

முன்பெல்லாம் அப்பிள்களை படங்களில் பார்த்து மகிழ்ந்த நாம் இலங்கையிலிருந்து வருகின்ற பழங்களைதான் உண்கின்றோம்.

யானை கம்பனி குளிர்பானங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவில் தாராளமாக இங்கு வந்து சேர்கின்றன. ரஜனிகாந்த் படங்களை முதல்நாளே முதல் காட்சியில் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோசம்தான் என்ன?

இதில் ஒரு குறை அவர்களின் கட்அவுட்களை வைத்து பால் அபிஷேகம் செய்ய முடியவில்லை. அதற்கும் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். எப்போதாவது சிறிது நேரம் கிடைத்தால் இலங்கையில் சண்டை நடக்குதாமே அதைப்பற்றி சிந்திப்போம். பெரும்பாலும் நேரம்கிடைப்பதில்லை. இங்கு தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள் பார்ப்பதற்கு நேரம் போதாமல் இருக்கின்றது.

ஐயோ இந்தக்கடிதம் எழுத இருந்த நேரத்தில் மானாட மயிலாட முடிந்து போய்விட்டது. மன்னிக்கவும் இதை இத்துடன் முடித்து கொள்கின்றேன். ஏனென்றால் அசத்தப்போவது யாரு அதையாவது பார்க்கவேணும்.

கவலைப்படவேண்டாம் எப்போதாவது நேரம் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு கடிதம் எழுத முயற்சிக்கின்றேன்.

பிற்குறிப்பு

எந்திரன் படம் எப்ப வெளிவருமென்று தெரிந்தால் நீங்கள் அடுத்த கடிதம் எழுதும்போது மறக்காமல் குறிப்பிடுங்கள்

.....................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.