Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு :

Featured Replies

புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு :

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலகுரக விமானமொன்று நேற்றைய தினம் வவுனியா வான் பரப்பில் சஞ்சரித்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் பிரிவினரின் ராடர் கட்டமைப்பில் குறித்த விமானத்தின் சஞ்சரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3.30 அளவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த விமானம் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் விமானம் விண்ணுக்கு ஏவப்பட்டிருப்பதனை ராடார் மூலம் அறிந்து கொண்ட சில நிமிடங்களில் மன்னார், வெலிஓயா மற்றும் அனுராதபுர பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த விமானம் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் விடுவிக்கப்படாத பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராடார்களில் பதிவாவதனைத் தவிர்ப்பதற்காக குறித்த விமானம் மிகவும் தாழப் பறந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கொக்கு பறந்தாலும் ராடர் காட்டுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பட்டம் ஏற்றி விளையாடி இருப்பார்கள் , அது ராடருக்குள்ளை விழுந்திட்டுது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது..... என்ன செய்யிறது.

என்ன பறந்தாலும் பயம்....நடந்தாலும் பயம்....படுத்தாலும் பயம்.... நிண்டாலும் பயம்....

என்னென்ன நடக்கப் போகுதோ கடவுளுக்குத்தான் தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

எனினும், குறித்த விமானம் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் விடுவிக்கப்படாத பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

செய்தி எங்கிருந்து எடுத்தீர்கள்? அதென்ன விடுவிக்கப்படாத பிரதேசம்? இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள அது போனதோ?

செய்தி எங்கிருந்து எடுத்தீர்கள்? அதென்ன விடுவிக்கப்படாத பிரதேசம்? இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள அது போனதோ?

தூயவன் எம்மவர்களிற்கு இதற்குரிய சரியான பொருள் தெரியவில்லை எண்டு நினைக்கிறன்.

வவுனியா வான்பரப்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பறப்பதாகக் கிடைத்த ரேடர் தகவலையடுத்து வவுனியாவின் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இரணைமடுப் பகுதியிலிருந்து புறப்பட்ட விடுதலைப் புலிகளின் விமானங்கள் வவுனியாவிற்கு 2 கிலோ மீற்றர் தொலைவில் வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்ததை ரேடர் கருவி காண்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மன்னார், அநுராதபுரம் மற்றும் மணலாறு இராணுவத் தலைமையகங்கள் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், வவுனியாவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரம்வரை வந்த விமானங்கள் திடீரென ரேடார் கருவிகளிலிருந்து மறைந்ததாகத் தெரியவருகிறது. பாதுகாப்புத் தரப்பினர் எதிர்த்தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்தபோதும் அதன் பின்னர் அந்த விமானம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லையென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரின் ரேடர் கருவிகளில் தென்பட்டதை அறிந்துகொண்ட விடுதலைப் புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக பாதுகாப்புத் தரப்பில் நம்பப்படுகிறது.

www.lankaewatch.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீண்டும் வான்பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எம்மவர்களிற்கு இதற்குரிய சரியான பொருள் தெரியவில்லை எண்டு நினைக்கிறன்.

தனிநாடு பெற வேண்டும் என்ற எண்ணமிருந்தால், அப்படியான வார்த்தைகளே வரக்கூடாது. தமிழர்களால் விடுவிக்கப்படாத பிரதேசம் என்றால் சிங்கள அரசுப் பிரதேசமே ஆகும். செய்தியைப் பிரதி பண்ணிப் போட்டாலும் கூடச் சிங்கள அரசு புலிகளைப் பயங்கரவாதிகள் என்றே எல்லாச் சந்தர்ப்பத்திலும் பாவிக்கின்றது. அப்படியான எண்ணத்தை ஏற்படுத்தவே முயல்கின்றது. அதைச் சந்திரிக்கா அம்மையார் ஆரம்பித்தபோது பெரிதாகப் பாதிப்பிருக்கவில்லை. ஆனால் அதை மற்றய பயங்கரவாதங்களோடு இணைத்து, இணைத்து கடைசியில் அப்படியே ஆக்கப்பட்டுள்ளது.

அரச பயங்கரவாதம் என்பது உலகிற்குப் புதிது. அதை அறிமுகப்படுத்துவதில் நாம் தயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

என்ன சோகம் என்றால் தமிழர் செய்தித் தளங்கள் எனக் கூறப்படுபவையும் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் என்ற பதத்தையே உபயோகம் செய்கின்றன. அங்கே அது சொல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.

முதலில் நாங்களவே அதை மாற்றிக் கொள்ள வேண்டும். தனிநாடு பற்றிய சிந்தனையை வளர்க்க வேண்டும். செய்வோமா?

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழி ஞாபகம் வரவில்லயோ .?......".அருண்டவன் கண்ணுக்கு i இருண்டதேலாம் பேய் "

காண்பதெல்லாம் வி ...........மானமாக தான் இருக்கும்

கோவில் குருக்கள் அல்லது தந்தைத பெரியார் சொல்லி இருந்தால் மக்கள் மனதில் உடனே போய் சேரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று போட்டால் இந்தப் பொருள் மயக்கம் வராது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி அண்டங்காக்கா பறந்ததாகவும் அதையே ராடர் காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. விமானம் பறந்தால் காட்டாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.