Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைகளைக் கண்டித்து மட்டக்களப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மட்டு நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழ் ஆரம்பமாகியது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எட்வின் கிருஷ்ணராஜா, ஆர்.துரைரட்ணம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருப்பதாக எமது மட்டக்களப்புச் செய்தியாளர் அறியத்தருகிறார்.

மாலை வரை நடைபெறவிருக்கும் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிற்பகல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருக்கும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் சில சக்திகள் இவ்வாறான கொலைகளைத் தொடர்ந்து வருவதாக மட்டக்களப்பு மாநகரசபைத் தலைவர் சிவகீதா பிரபாகரன் கூறினார்.

படையினரே பொறுப்பு

“புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் விடிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி படுகொலைகளுக்குப் பொறுச்சொல்லவேண்டியவர்கள் பாதுகாப்புப் படையினரே என்பதை நாம் சுட்டிக்காட்டவிரும்புகிறோம

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கருணாவின் படுகொலைகளைக் கண்டித்து பிள்ளையான் குழு உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் தொடரும் கொலைகளைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

[வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2008, 01:25 பி.ப ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் ஆட்கொலைகளை கண்டிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகின்றது.

மாநகர சபை முதல்வர் கீதா பிரபாகரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் துணை இராணுவக் குழுவான கருணா குழு தரப்பு உள்ளுராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது என கருணா எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

துணை இராணுவக் குழுவான பிள்ளையான் தரப்பு உறுப்பினர்களே இந்த உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஈபிஆர்எல்எஃப் பத்மநாபா அணி தலைவர் இரா.துரைரட்ணமும் கலந்து கொண்டார்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தினையொட்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதிகள் பல மூடப்பட்டமைபியானல் மக்கள் பாதுகாப்புக் கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் இதனால் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் பாவனைக்கு படைத்தரப்பினர் மறுத்து விட்டதாக உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அரச படைகளாலும், இந்தக் கொலைக்குழுக்களாலும் கிழக்கில் அரங்கேறிவரும் படுகொலைகள் அண்மைய வாரங்களில் மிகவும் அதிகரித்து வருவதாகவே கிழக்கிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மட்டு - திருமலை ஆயரும் இந்தப் படுகொலைகளைக் கண்டித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இந்தத் துரோகிகளின் கதையை நம்பி இவர்களுடன் சேர்ந்த பல இளைஞர்கள் இவர்களின் முகமூடி கிழியத் தொடங்கியவுடன் தாமாகவே வெளியேறிவருவது இந்த இரு கொலைக்குழுக்கழுமே பெரிய தலையிடியாக இருப்பதால் தமது உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும், மற்றும் தமது கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையுமே இப்படிப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

இப்போது கிழக்கில் நடப்பது இந்த இரு வேட்டை நாய்களுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி. அதற்கு பலியிடப்படுபவர்கள் இந்த இரு கொலைக்குழுக்களிலும் இருந்து விலகியிருக்கும் தெந்தமிழீழ மக்கள். கிழக்கில் புலிகள் தமது நடவடிக்கைகளை விரிவாக்கத் தொடங்கியிருப்பதால் தமதி இருப்பைப் பற்றிய அச்சத்தில் வாழும் இந்தக் கொலைக்குழுக்கள் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்தக் கொலைகளை அரங்கேற்றி வருவதாகக் கூறப்படுகிறது. பேரினவாதத்தைப் பொறுத்தவரை தாம் செய்ய வேண்டியதை இந்தக் கொலைக் குழுக்களே செய்து வருவதால் அது எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறது !

இந்த (பு)குழுக்களின் தொல்லைகளுக்கு தமிழர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளே .......

நீங்கள் மாறி , மாறி சுட்டும் சாகாதேங்கோ .........................

உண்ணாவிரதம் இருந்தும் சாகதேங்கோ .........................

50 ஆண்டுகளுக்கு முன் உண்ணாவிரதம் பிடித்த தந்தை செல்வநாயகம் காலத்திற்கு போய்விட்டீர்களே ........

வெட்கமாயில்லை .....

மகிந்த சிந்தனையில் , தமிழரை அழிப்பது தான் ....

முக்கிய சிந்தனை .

அது கிழக்கோ , வடக்கோ , தெற்கோ , மேற்கோ , மலையகமோ காரியமில்லை .

கொஞ்சம் புத்தியையும் பாவியுங்கள் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இதே சிவகீதா கருணா பிரிந்த பொழுது ஒரு பேட்டி குடுத்திருந்தார் அதாவது கிழக்கில் சன நாயகம் பிறந்துவிட்டது இனி மட்டுவில் சுதந்திரம் பிறந்துவிட்டது . தன்ரை கணவருக்கும் பிரபாகரன்தான் பெயர் ஆனால் அதற்காக வெக்கப் படுறன் எண்டெல்லாம் சொன்னவர்.பிறகு இப்ப எதுக்கு போராட்டம். ?? இரா துரை ரட்டினம் எண்டவருக்கு ஏன் திடீர் அக்கறை?? :lol: :lol: :lol:

இரா துரை ரட்டினம் யாரைப்பற்றி அக்கறை கொள்கிறார். ? :lol:

மட்டக்களப்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

செய்தி சக்தி FM

அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்வதான் மூலம் புலிகளுக்கு அழுத்தினை எற்படுத்தி அவர்களினால் சிங்கள ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழர் தாயக பகுதியில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்துவதும் உத்தியை படையினர் பயன்படுத்துகிறார்கள். இது வட பகுதியில் ஈ.பி.டி.பி, புளெட் உதவியுடன் வெற்றிகரமாக செயற்படுத்தியது. இது புலிகளுக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியது இதனால் அவர்கள் இராணுவத்தினர் மீது பெருமளவான தாக்குதல்களை நிறுத்தினார்கள்.

இப்போது கிழக்கில் புலிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக மக்களை ஆயுதமாக பயன்படுத்துகிறது. வடக்கில் நிறைவேற்றிய அதே உத்தியை இப்ப கிழக்கில் நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டார்கள். வடக்கில் டக்கிளஸ் கொண்டு செய்ததை கிழக்கில் கருணா கொண்டு அரசாங்கம் செய்விக்கிறது. புலிகளுக்கும் தர்மசங்கடமான நிலை உருவாகி தாக்குதல்களை நிறுத்த வேண்டி நிலை எற்படலாம்.

சிங்களத்தின் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுகின்ற தமிழ் துரோகிகள் இருக்கும் வரை இது தொடரும். ஜானநாயக வாதிகள், நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயற்பாடும் மேத்த படித்தவார்கள் கைவிட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.