Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதிகளுடன் சேர்ந்து தமிழகம் வந்த சிங்கள காதல் ஜோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது.

இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிக்கவும் முயன்றுள்ளனர். இதையடுத்து தமிழர்கள் வசிக்கும் வவுனியா பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். கிட்டத்தட்ட 7 மாதங்கள் அங்கு வசித்துள்ளனர்.

ஆனால் அங்கு ராணுவ கெடுபிடி ஜாஸ்தியாக இருந்ததால், தமிழகத்திற்கு அகதிகளாக செல்லும் தமிழர்களோடு இணைந்து தாங்களும் தமிழகம் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி 19 தமிழர்களுடன் இணைந்து தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் தமிழ் அகதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதால் இவர்களை அகதிகளாக போலீஸார் பதிவு செய்யவில்லை. மாறாக,இருவரும் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் வந்துள்ளதால் அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

தமிழ் அகதிகளுடன் இணைந்து சிங்கள காதல் ஜோடி ஒன்று அகதிகளாக வந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

21122008002003wj2.jpg

தமிழ் நாடு . கொம்

சிங்கள புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும் இந்த காதல் ஜோடி!!!

  • கருத்துக்கள உறவுகள்

படபிடிப்புக்கு வந்திருப்பினமோ

அவங்களைப்பார்த்தா அகதிகள்மாதிரியே இல்லையே?.....

Edited by Sooravali

என்னமோ நடக்குது..

ம்ம்ம் கஸ்டமான வியாதி .ஆனால் இவர்கள் காதல் உண்மையாக இருந்தால் பாவம் வாழட்டும் ...வேறேதும் திட்டம் போல தெரியேல்லை ஏனென்டால் கப்பல் பயணத்தில் உயிரைவிடவும் துணின்சு வந்திருக்கினம்...பெண்ணோட ஆட்கள் தப்பியோடிவந்த ஆமிக்காரரைக்கொண்டு கொலை செய்வோம் எண்டு வெருட்டியிருப்பாங்கள் போலகிடக்கு..

அதென்ன காதலெண்டா மட்டும் சிங்களவரும் தமிழரும் ஆளுக்காள் நல்ல உதவி.. :-)

ஏனென்டா எண்பதுகளில எங்கட அப்பாவை நம்பி அவரின் சிங்கள நண்பர் தனது காதலியுடன் யாழ் ஓடி வந்து இருந்தவை எங்கட வீட்டில . பிறகு ஒருமாதிரி அவர்களுக்கு பதிவு திருமணம் செய்து வைத்து தலைமறைவாக அனுராதபுரத்திf;F போனவை..

Edited by UK_podiyan

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன காதலெண்டா மட்டும் சிங்களவரும் தமிழரும் ஆளுக்காள் நல்ல உதவி.. :-)

அதுதான் அந்த காதலின் வேலை :wub::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் கரை சேர்ந்த சிங்கள காதல் உண்மை என்ன ????? ஓர் ஆய்வு கட்டுரை ஓன்று எழுதனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிங்கள புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும் இந்த காதல் ஜோடி!!!
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காதலிக்கும் ஒரு காதல் ஜோடிக்கு தமிழகம் செல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் வராது. இவர்கள் நிச்சயமாக இலங்கையின் புலனாய்வை சேர்ந்தவர்களாகத்தான்னிருப்

மருதங்கேணி..

சிறீலங்கா புலநாய்களுக்கு அப்பிடி அறிய என்ன கிடக்கு அகதிகள் எப்படி போயினம் எதால போயினம் எண்டு.. லங்கா கடற்படைக்குதான் இதெல்லாம் தெரியுமே முதலிலேயே.. அதைவிட இந்தியாவில் இருக்கிற தேசதுரோகிகளோடு டச்சப்புக்கு தானே லங்கா தூதரகம் இருக்கு அங்கை..

நான் நினைக்கேல்லை இவை வேற அலுவலா போனவை எண்டு...

சிலவேளை வெளிநாட்டுக்கு போறதுக்காண்டி முயற்சி எடுத்திருக்கலாம்... அண்ணாச்சி ஓடி ஒளிக்கேலாம நாட்டைவிட்டு இந்தியா வந்தது இவர் ஆமியிலயிருந்து ஓடினவரா இருக்கலாம்... அவைக்கு தான் இப்ப சரியான பிரச்சினை தெற்கிலை.. பொலிசு இப்ப புலியை விட அதிகமா தேடுறது ஓடிப்போன ஆமிக்காரih

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் உண்மையாகவே காதலர்களாக இருக்கலாம், அல்லது சிங்கள புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். எதையுமே ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது, அதுவே எமக்கு ஆபத்தாக அமையலாம்!

:icon_mrgreen::lol: புலி-பிளேட்...

சென்றில நல்ல விழிப்பாய்த்தான் இருக்கிறியள்

தங்கள் கருத்து ஏற்கத்தக்கது நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து இராமேஸ்வரம் வந்த சிங்கள காதல் ஜோடி சிறையில் அடைப்பு

[23 - December - 2008]

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு தப்பி வந்த சிங்கள காதல் ஜோடியை பொலிஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சகட்டப் போர் காரணமாக அங்குள்ளவர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை 21 அகதிகள் இலங்கையில் இருந்த இராமேஸ்வரம் வந்தனர். இதில் காதல் திருமணம் செய்து கொண்ட சாருகாதில்கானி (வயது 16) என்ற சிங்கள பெண்ணும் துஷ்ராசந்தனா (வயது 30) என்ற வாலிபரும் வந்தனர். சந்தேகத்தின் பேரில் கியூ பிரிவு பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சிங்கள காதல் ஜோடி கடவுச்சீட்டு விசா உட்பட எந்த ஆவணங்களும் இல்லாமல் இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாருகாதில்கானி மைனர் என்பதால் இராமேஸ்வரம் பொலிஸ் துணை அத்தியட்சர் கமலாபாய் உத்தரவின் பேரில் கோவில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

பின்னர் இராமேஸ்வரம் நீதிமன்றில் சிங்கள காதல் ஜோடியை பொலிஸார் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி விஜயகுமார், காதல் ஜோடியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சாருகாதில்கானி மதுரை மைனர் ஜெயிலிலும், துஷ்ராசந்தனா மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரது முழு விபரத்தையும் அறிய இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தூதரக அதிகாரிகள் காதல் ஜோடிகள் கொடுத்த தகவலின்படி இலங்கைக்கு தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.