Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி முன்னெடுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு

Featured Replies

இதுவரை 'தமிழ்', 'தமிழன்;' என்று தமிழன் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும்பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி இந்தத் தள்ளாத வயதிலாவது தமது கடைசிக் காலத்திலாவது ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது.

ஈழத்தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்திவிட்டது.

ஆனால் பயன் தான் ஒன்றும் விளையவில்லை.

இவ்விடயத்;தில் தமிழகத்தை வழிப்படுத்தி, ஈழத்தமிழருக்காக ஆக்கபூர்வமான ஏதேனும் செய்யதாக வேண்டிய, தமிழக முதல்வர் அதற்குப் பதிலாகக் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமாச் செய்வார் என்ற மிரட்டல் அறிவிப்பை முன்னெடுத்தவர் இந்த கருணாநிதிதான். புதுடில்லிக்கு இரண்டு வார காலக் கெடுவைக் கொடுத்து, அதனடிப்படையில் தமிழக எம்.பிக்களின் இராஜினாமாக் கடிதங்களை வாங்கித் தனது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு காலத்தை இழுத்தடித்த கருணாநிதி, பின்னர் தமது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பதவி விலகல் எச்சரிக்கைத் தந்திரத்தில் இருந்து தாமே 'பல்டி' அடித்தார்.

அந்தப் பதிவி விலகல் காலக் கெடு கடந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.

திரும்பவும் அனைத்துக் கட்சி கூட்டம், புதுடில்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கை விரைவு என்ற அறிவிப்பு என நாடகங்களை அவர் அரங்கேற்றினார். பலன் ஒன்றுமில்லை.

வெளிவிவாகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் எனத் தமிழக முதல்வா அறிவித்தும் ஒன்றரை மாதங்களாகிவிட்டன. அதுவும் நடக்கவில்லை.

இப்போது சென்னை வந்த மன்மோகன் சிங், தமது வெளிவிவாகார அமைச்சரை விரைவில் கொழும்புக்கு அனுப்புவார் எனத் திரும்பவும் உறுதி மொழி அளித்தார் என்று மீண்டும் உலகத்தமிழர்களின் காதில் பூச்சுற்றப்படுகின்றது.

அடுத்த பெப்ரவரி மாதம், 'சார்க்' அமைப்பை ஒட்டிய ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பு வரவுள்ளார். அதுவரை விடயங்களை இழுத்தடித்துவிட்டு 'சார்க்' மாநாட்டு அமர்வுக்காகக் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்தை, தமது வற்புறுத்தலின் பேரில் ஈழத்தமிழர் விடயத்தை ஒட்டிப் பேசுவதற்காக மேற்கொள்ளப்படும் விஜயமாகக் காட்டமுனைவார் கருணாநிதி. அப்படித் திரும்பவும் பூச்சுற்றப்படும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த வியாழன் அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் மன்மோகன் சிங். அந்த நிகழ்வில் கருணாநிதியும் கலந்து கொண்டார்.

மன்மோகன் சிங்கை வைத்துக் கொண்டு அங்கு உரை நிகழ்த்திய கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரம் குறித்து வாயே திறக்கவில்லை. அவர் அப்படி என்றால், இந்தியப் பிரதமர் இன்னும் ஒரு படி மேலே போனார்.

பக்கத்து நாட்டில் அயலில் இலங்கைப் படைகளின் படையெடுப்பால் ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படும் பேரவலம் குறித்து ஒரு வார்ததை பேசாத மன்மோகன் சிங், காஸாவில் இஸ்ரேலிய அக்கிரமிப்பால் ஈழத்தமிழர்களைப் போன்று யுத்த பேரவலத்தில் சொல்லொணக் கஷ்;டங்களை அனுபவிக்கும் பலஸ்தீன மக்கள் குறித்து அங்கு நீலிக் கண்ணீர் வடித்தார்.

பிரதமரை வைத்துக் கொண்டு ஈழத்தமிழர் விவகாரத்தைப் பகிரங்கமாக எழுப்புவதற்குத் திராணியற்ற கருணாநிதி - ஈழத்தமிர்களுக்காக கொதித்தெழுந்துள்ள தமிழகத்தின் உணர்ச்சிப் பிரவாகத்தை தமது தந்திர நடவடிக்கைகள் மூலம் மழுங்கடிக்கச் செய்து வரும் கருணாநிதி -

ஈழத்தமிழர் விவகாரத்தில் எதுவுமே செய்ய இயலாத தமது கையாலாகத் தனம் குறித்து தமிழகத்தில் எழுந்துள்ள சீற்றத்தைத் திசை திருப்புவதற்காக அந்த இயலாமைக்காகத் தானும் கவலைப்படுகின்றவர் போல 'இதன் பிறகும் இந்த அரசு(தமிழக அரசு) இருக்கத்தான் வேண்டுமா?' என்று அப்பாவி போல பொதுக்கூட்டம் ஒன்றில் வினா எழுப்பியிருக்கின்றார்.

இந்தப் பின்னணிகளைப் பார்க்கும் போது இவ்விடயத்தை ஒட்டி 'ஆனந்த விகடன்' தனது ஆசிரிய தலையங்கத்தில் எழுப்பிய சந்தேகம் தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும்தமிழர்கள் அனைவருக்கும எழுந்திருக்கின்றது.

'புலிகளை நாங்கள் முழுவதும் ஒடுக்கி விடுகிறோம். அதுவர உங்கள் தேசத்து மக்களை திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்தி அரசுடன் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருக்கின்றதோ ஸ்ரீலங்கா அரசு என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.

நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்ளுகின்ற தமிழ அரசு, இந்த விடயத்தில் எள்முனையளவு கூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் மனவேதனையளிக்கும் நிதர்சனமாகும்.

இப்படி ஆனந்தவிகடன் எழுப்பும் சந்தேகமே உலகத்தமிழினத்தின் சந்தேகமுமாகும்.

இந்தப் பின்புலத்தில் கருணாநிதி தமது அரசு குறித்து எழுப்பிய அதே கேள்வியை மீண்டும் அரசிடம் உலகத்தமிழினம் சார்பில் கேட்க விரும்புகிறோம்.

'இதன் பிறகும் உங்கள் அரசு இருக்கத்தான் வேண்டுமா, கலைஞரே'...?

கையாலாகாத் தனத்தோடு பதவிக்கதிரைக்கு சூடேற்றிக் கொண்டு தள்ளாத வயதிலும் அதிகாரத்;தில் தொடர அவாக் கொள்வது அபத்தம்....!. இல்லையில்லை.... பேரபத்தம்....!

நன்றி : உதயன் ஆசிரியா தலையங்கம்.

அது தானே நாங்கள் பொங்கி தமிழராய் உரு ஏறி கண்ணி வெடி வைத்து விளையாடும் போது உவர் சும்மா தமிழன், தமிழன் தலைவர் என்று நாடகம் எல்லா ஆடினார். அப்ப உவருக்கு தெரியாம போச்சுது சிங்களம் பெரிய திட்டத்தோட இருக்கு என்றும், எம்மில் உள்ள குரல் தரக் கூடிய தமிழ் பிரதிநிதி ரவிராஜ் போன்றவர்களை அழித்தொழித்து வெற்றிடத்தை உருவாக்க போறார்கள் என்றும். நாங்கள் பெரிய புத்திசாலிகள்தான் OK..BUT...இவற்றை தமிழின தலைவர் நீங்கள் தான் கண்டு பிடித்து எமக்கு சொல்லி இருக்க வேண்டும்... ஏனென்றால் இனி வரும் யுத்தம் வடக்கு கிழக்குக்கு வெளியே தான் நடைபெறும் என்று கனவு கண்டு இருந்தோம் ..

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகத் தவறு, கருணாநிதி தமிழர்களுக்காகவே உயிர் சுமக்கும் ஒரு பெருந்தலைவர். அவரைப் பற்றி இப்படி எல்லாம் எழுதக் கூடாது. (இப்படி எழுதினால் வெட்ட மாட்டார்கள் இங்கே!) :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தின நாளைக்கு வெளியாட்க்களை குறைசொல்றது... சர்வதேசம் இன்று நேற்றல்ல. ஆரம்பத்திலிருந்தே துரோகங்களையும் துன்பங்களையும் தான் எமக்கு தந்துள்ளது. அதனை மீட்டு பயனில்லை. காரணம் இன்னும் வலியும் ஓர்மமும் அதிகரிக்கும். அன்றி வேறல்லவே...

இது மிகத் தவறு, கருணாநிதி தமிழர்களுக்காகவே உயிர் சுமக்கும் ஒரு பெருந்தலைவர். அவரைப் பற்றி இப்படி எல்லாம் எழுதக் கூடாது. (இப்படி எழுதினால் வெட்ட மாட்டார்கள் இங்கே!) :blink:

அவர் ஏன் ஈழத்தமிழருக்காய் உயிர் சுமக்க வேண்டும்...? .. நாங்கள் புலத்தில் இருந்து எம் கடமையை செய்யாமல் துப்பெறியும் நாவல்கள் படித்து கொண்டு இருக்கும் போது அவராவது எமக்காக, தினம் தினம் இறக்கும் எம்மவர்களுக்காக உயிர் சுமக்க கூடாதா?

இன்னும் எத்தின நாளைக்கு வெளியாட்க்களை குறைசொல்றது... சர்வதேசம் இன்று நேற்றல்ல. ஆரம்பத்திலிருந்தே துரோகங்களையும் துன்பங்களையும் தான் எமக்கு தந்துள்ளது. அதனை மீட்டு பயனில்லை. காரணம் இன்னும் வலியும் ஓர்மமும் அதிகரிக்கும். அன்றி வேறல்லவே...

மிகச் சரியான கருத்துக்கள்,,,,,, நன்றி

கலைஞரின் 50 வருட அரசியல் வரலாற்றில் இன்னமும் கொஞ்சம் கூட மாறாத அரசியல் சித்தாந்தம் எதையும் கலைஞர் வைத்து இருக்கிறாரா என்று கேட்டால் அது அவரின் "அளவுகடந்த அரசியல் சுயநலம்" மட்டுமே!

ஆனால் இன்றைய தமிழக அரசியல் சூழலில் கலைஞரை முழுவதும் விலக்கி வைத்து விட்டு அல்லது எதிர்த்து கொண்டு ஈழ ஆதரவு போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய, தமிழகம் முழுவதும் பரவலாக மக்கள் ஆதரவு பெற்ற (எம்.ஜி.ஆர் போன்ற) ஒரு தலைமை தமிழகத்தில் இல்லை. ஆகவே தான் ஈழ ஆதரவாளர்கள் கலைஞரை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் சாதிக்க போவது ஒன்றும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்க வேண்டி உள்ளது

தனித்து நின்றே தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் 200 ஐ வெல்லக்கூடிய நிலையில் இருந்த தி.மு.க என்னும் ஒரு இயக்கத்தை தனது சுயநலத்தினால்

1972 ல் இரண்டாக உடைந்து போக செய்து அ.தி.மு.க என்ற ஒரு கட்சியை தோற்றுவித்த புண்ணியமும் கலைஞரையே சேரும்.

கலைஞரின் அரசியல் நரித்தனத்தால் தான் திரு. திருநாவுக்கரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. கலைஞர் அன்று செய்த அரசியல் தவறே ஜெயலலிதா அ.தி.மு.க வை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவியது.

இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க ஈழத்தமிழர் எதிர்ப்பு கொள்கையுடன் இருப்பதால் தான் காங்கிரஸ் இத்தனை துள்ளல் துள்ளுகிறது. ஏனென்றால் தேர்தல் கூட்டுக்கு தி.மு.க போனால் ஜெயலலிதாவை வளைத்து விடலாம் என்று காங்கிரசுக்கு தெரியும்.

அது ஒன்றை வைத்தே கலைஞரை கிட்டத்தட்ட ஒரு தலையாட்டி பொம்மை ஆக்கிவிட்டது காங்கிரஸ்.

தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஒரு அரசியல் சக்தி இரண்டாக சிதைவடைந்து அதிலும் ஜெயலலிதா தலைமையில் கிட்டத்தட்ட சிங்கள ஆதரவு கட்சியாகவே அ.தி.மு.க மாறி விட்டது. இதனால் பலவீனம் அடைந்து போன தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் சக்தியும், இயற்கையாகவே கலைஞரின் இரத்ததில் கலந்து விட்ட பதவி மோகமும், தமிழக அரசை ஒரு கோமாளி அரசு போலவே மத்திய காங்கிரஸ் ஆட்சி நினைத்து ஆட்டி வைக்க உதவிக் கொண்டுள்ளது. அவ்வளவு தான்!

ஒரு தனி மனிதரின் அளவுகடந்த அரசியல் சுயநலம் எப்படி ஒரு இனத்தையே அரசியல் பிச்சைக்காரர்களாக அலைய விடும் என்பதற்கு

திருவாளர் முத்துவேல் கருணாநிதியின் 50 வருட அரசியல் வாழ்வும் ஏமாந்த சோனகிரிகளாகிவிட்ட 7 கோடி தமிழர்களுமே சாட்சியம்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஏன் ஈழத்தமிழருக்காய் உயிர் சுமக்க வேண்டும்...? .. நாங்கள் புலத்தில் இருந்து எம் கடமையை செய்யாமல் துப்பெறியும் நாவல்கள் படித்து கொண்டு இருக்கும் போது அவராவது எமக்காக, தினம் தினம் இறக்கும் எம்மவர்களுக்காக உயிர் சுமக்க கூடாதா?

நிழலி, நீங்கள் உங்களைப் போலவே எல்லோரையும் நினைப்பதால் புலத் தமிழர் எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்போரைக் குறை சொல்வோர் மட்டுமே என்ற கருத்துடன் உள்ளீர்கள் (இப்ப கோபம் வருகுதா? நான் செய்வதை ஏன் மற்றவனுக்குச் சொல்ல வேண்டும்? என்ற கேள்வி வருகுதா?) எனது அபிப்பிராயம் யாரும் எங்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டுமென்பதில்லை. உரத்துக் குரல் எழும்பும் போது எங்கே எங்கள் அடி மடியில் உள்ளதுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து குரல் எழுப்புவது மாதிரி நடித்து இறுதியில் உண்மையான குரலையும் வலுவிழக்கச் செய்யும் நரி வேலை செய்வோரை சிலர் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது தான் எரிச்சல் தருகிறது. இவர்கள் உயிர் சுமக்கட்டும் நாற்காலி சுமக்கட்டும். எங்கள் இரத்தத்தின் மீது சுமப்பது தான் தவறு-உங்களுக்குப் புரியாத தவறு.

ஓ FYI நான் துப்பறியும் கதை மட்டும் வாசிப்பதில்லை, மத்திய ஐரோப்பிய வரலாறு , வாழ்க்கைச் சரிதை இவையும் வாசிப்பேன். அடுத்த முறை தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் போது உங்களுக்கு இது உதவக் கூடும் என நினைத்தேன்.. :blink:

நிழலி, நீங்கள் உங்களைப் போலவே எல்லோரையும் நினைப்பதால் புலத் தமிழர் எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்போரைக் குறை சொல்வோர் மட்டுமே என்ற கருத்துடன் உள்ளீர்கள் (இப்ப கோபம் வருகுதா? நான் செய்வதை ஏன் மற்றவனுக்குச் சொல்ல வேண்டும்? என்ற கேள்வி வருகுதா?) எனது அபிப்பிராயம் யாரும் எங்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டுமென்பதில்லை. உரத்துக் குரல் எழும்பும் போது எங்கே எங்கள் அடி மடியில் உள்ளதுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து குரல் எழுப்புவது மாதிரி நடித்து இறுதியில் உண்மையான குரலையும் வலுவிழக்கச் செய்யும் நரி வேலை செய்வோரை சிலர் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது தான் எரிச்சல் தருகிறது. இவர்கள் உயிர் சுமக்கட்டும் நாற்காலி சுமக்கட்டும். எங்கள் இரத்தத்தின் மீது சுமப்பது தான் தவறு-உங்களுக்குப் புரியாத தவறு.

ஓ FYI நான் துப்பறியும் கதை மட்டும் வாசிப்பதில்லை, மத்திய ஐரோப்பிய வரலாறு , வாழ்க்கைச் சரிதை இவையும் வாசிப்பேன். அடுத்த முறை தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் போது உங்களுக்கு இது உதவக் கூடும் என நினைத்தேன்.. :blink:

முதலாவது, நான் தனி மனித தாக்குதல் செய்வதாக நீங்கள் நினைத்தால்....என்னுடைய பதில்களுக்காக மன்னிப்பு கேட்கின்றேன். சிரம் தாழ்த்தி காலைப் பிடித்து மன்னிப்பு கேட்கின்றேன்.

இனி, மற்ற விடயம்

நாம் ஏன் நரி வேலை செய்பவரை பற்றி கவலைப் பட வேண்டும்? அவர்களை குறை சொல்லும் நாம் எமது கடமையை சரியாக செய்தோமா? ஆகக் குறைந்தது ஒரு வாரத்தில் 1 மணித்தியாலம் ஆவது கொல்லப்பட்டு கொண்டு இருக்கும் எம் சமூகம் பற்றி சிந்தித்தோமா? நாம் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் செய்யாமல் இருக்கும் போது தமிழக தலைவர்களில் குற்றம் சாட்டுவது எவ்வளவு தூரம் சரி?

முதலில் எமக்கான கடமைகளை நாம் செய்து முடிப்போம்.... பின் மற்றவர் செய்யாது விட்ட விடயங்களை பற்றி கதைப்போம். எம் சமூகத்தில், எம் ஈழ மக்களின் சமூகத்தில் கலைஞர் போன்று அல்லது அவரை விட 1000 மடங்கு மோசமானவர்கள் இருக்கும் போது எப்படி அவரை மட்டும், தமிழகத்தை மட்டும் குறை காண்பது? நாம் வாழ்வு பயின்ற அதே பிரதேசங்களில் வாழ்ந்த எம்மவர்களே ஒன்றும் செய்யாது இருக்கும் போது நாம் கலைஞரை குற்றம் சொல்வது ஏன்? நாம் எமது தவறுகளில் இருந்து தப்பிக்க முயல்கின்றோம், பிறரை குற்றம் கூறி வரலாற்று தவறில் இருந்து நழுவ முயல்கின்றோம்

இது சரியா?

மீண்டும்... தனிமனித தாக்குதல் போன்று இருந்த என் கருத்துக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

துப்பறியும் கதை வாசிப்பு தனி மனித தாக்குதல் தான் என நம்புகிறேன். ஆனால் மன்னிப்புக்கு நன்றி ஏற்றுக் கொள்கிறேன். நேரமின்மையால் இரு விடயங்கள் சுருக்கமாக:

1. புலத்தமிழர் செய்ய வேண்டியது நிறைய உண்டு என்று ஏற்றுக் கொள்கிறேன். பலர் செய்யாமலிருப்பதும் சிலர் கொஞ்சம் செய்து நிறையச் செய்வதாய் கணக்குக் கேட்பதும் எங்கள் குறை பாடு. இதை யார் மறுத்தார்கள் களத்தில்?

2. ஆனால் ஒருவர் தமிழ் நாட்டவரின் ஈழ ஆதரவை ஆதரவுப் போக்கிலேயே சென்று தன்ணீரூற்றி அணைத்தது இதனால் ஒரு பெரிய தவறில்லை என்று எப்படி ஆகும்? இது ஒரு தடவை தான் நடந்ததா? இல்லை-பல தடவைகள் நடந்து விட்டது. நான் சொல்வது. இது பற்றிய எங்கள் கண்டனம் பதிவு செய்யப் படுவதில் ஒரு தவறும் இல்லை. அப்படிக் கண்டனம், ஏமாற்றம் பதியப் படும் போது வந்து "அய்யோ, அவர் கோவிச்சுக் கொண்டு உதவாம விடப் போறேர், அப்படிச் சொல்லாதேங்கோ.." என்பது தான் எங்களை இன்னும் மற்றவர் தயவிலுள்ள இனமாகக் காட்டுகிறது. நான் சொல்வது; பாராட்டும் வேண்டாம், இகழ்தலும் வேணாம்- விட்டுத் தள்ளுவோம் என்பதே.

அது தானே நாங்கள் பொங்கி தமிழராய் உரு ஏறி கண்ணி வெடி வைத்து விளையாடும் போது உவர் சும்மா தமிழன், தமிழன் தலைவர் என்று நாடகம் எல்லா ஆடினார். அப்ப உவருக்கு தெரியாம போச்சுது சிங்களம் பெரிய திட்டத்தோட இருக்கு என்றும், எம்மில் உள்ள குரல் தரக் கூடிய தமிழ் பிரதிநிதி ரவிராஜ் போன்றவர்களை அழித்தொழித்து வெற்றிடத்தை உருவாக்க போறார்கள் என்றும். நாங்கள் பெரிய புத்திசாலிகள்தான் OK..BUT...இவற்றை தமிழின தலைவர் நீங்கள் தான் கண்டு பிடித்து எமக்கு சொல்லி இருக்க வேண்டும்... ஏனென்றால் இனி வரும் யுத்தம் வடக்கு கிழக்குக்கு வெளியே தான் நடைபெறும் என்று கனவு கண்டு இருந்தோம் ..

:blink::wub::wub:

என்ன நிழலி சொல்லுறிர் ??? நீர் செய்தி வாசிக்கையில்லையோ ? அம்பாந்தோட்டையில இரந்து பல லட்சம் மக்கள் தொடாந்தும் இடம் பெயர்வு அனுராதபுரம் முழு புலிகளின் கட்டுப்பாட்டில்.

:blink::wub::wub:

என்ன நிழலி சொல்லுறிர் ??? நீர் செய்தி வாசிக்கையில்லையோ ? அம்பாந்தோட்டையில இரந்து பல லட்சம் மக்கள் தொடாந்தும் இடம் பெயர்வு அனுராதபுரம் முழு புலிகளின் கட்டுப்பாட்டில்.

:lol: இந்த நக்கல் தானே வேண்டாம் என்கிறது. :lol:

அடுத்தவன் என்ன செய்தான் என்று கேள்வி கேட்பதைவிட நாம் என்ன செய்கின்றோம் என்று நாம் கேள்வி கேட்கலாமே. புலிகள் வெற்றிமேல் வெற்றிகள் குவித்தபோது அதுபற்றி புலநாய்வுகள் செய்தவர்களும் யாழிலேயே பல வாழ்த்துக்களை பாடி அப்படி செய்வதன் மூலம் விடுதலை போராட்டத்துக்கு புலம்பெயர் நாடுகளில் தாங்கள்தான் முன்னெடுப்பவர்களைப்போல் காண்பித்து தங்களை வளர்த்துக்கோண்டவர்களும் பலர்.

விடுதலை போராட்டத்தை பலரும் தங்கள் தேவைகளுக்குத்தான் பயன்படுத்தி கொண்டனர். இங்குள்ள ஊடகங்களும் அப்படித்தான் நடந்து கொண்டன. புலிப்பாட்டு பாடினால்தான் இங்கு தங்கள் வியாபாரத்தை செய்ய முடியும் என்பதனால் அதை கையிலெடுத்துக்கொண்டனர். இதில் தமிழக தலைவர்களும் அடக்கம். இதில் அவர்களை மட்டும் குறை சொல்வதில் பிரயோசனம் இல்லை. உண்மையான விடுதலை நோக்கில் செயல்படுகின்றவர்கள் மிகவும் குறைவு.

இப்போது களத்தில் பாருங்கள் இதுவரையும் பம்மிக்கொண்டிருந்த பலர் தங்கள் பணியை ஆரம்பித்துவிட்டனர்.

அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. இங்கு ஒவ்வொரு அடம்பன் கொடியும் தங்களை வளர்த்துக்கொள்வதில் தக்க கவனம் எடுத்துக்கொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பறியும் கதை வாசிப்பு தனி மனித தாக்குதல் தான் என நம்புகிறேன். ஆனால் மன்னிப்புக்கு நன்றி ஏற்றுக் கொள்கிறேன். நேரமின்மையால் இரு விடயங்கள் சுருக்கமாக:

1. புலத்தமிழர் செய்ய வேண்டியது நிறைய உண்டு என்று ஏற்றுக் கொள்கிறேன். பலர் செய்யாமலிருப்பதும் சிலர் கொஞ்சம் செய்து நிறையச் செய்வதாய் கணக்குக் கேட்பதும் எங்கள் குறை பாடு. இதை யார் மறுத்தார்கள் களத்தில்?

2. ஆனால் ஒருவர் தமிழ் நாட்டவரின் ஈழ ஆதரவை ஆதரவுப் போக்கிலேயே சென்று தன்ணீரூற்றி அணைத்தது இதனால் ஒரு பெரிய தவறில்லை என்று எப்படி ஆகும்? இது ஒரு தடவை தான் நடந்ததா? இல்லை-பல தடவைகள் நடந்து விட்டது. நான் சொல்வது. இது பற்றிய எங்கள் கண்டனம் பதிவு செய்யப் படுவதில் ஒரு தவறும் இல்லை. அப்படிக் கண்டனம், ஏமாற்றம் பதியப் படும் போது வந்து "அய்யோ, அவர் கோவிச்சுக் கொண்டு உதவாம விடப் போறேர், அப்படிச் சொல்லாதேங்கோ.." என்பது தான் எங்களை இன்னும் மற்றவர் தயவிலுள்ள இனமாகக் காட்டுகிறது. நான் சொல்வது; பாராட்டும் வேண்டாம், இகழ்தலும் வேணாம்- விட்டுத் தள்ளுவோம் என்பதே.

நான் சொல்வது; பாராட்டும் வேண்டாம்இ இகழ்தலும் வேணாம்- விட்டுத் தள்ளுவோம் என்பதே.

இல்லை அப்படிச்சொல்லமுடியாது

ஏனெனில் ஒன்றும் செய்யவில்லை என்பதையும்

ஏன் nஐயலலிதா போல் பகையாய் இருப்பதைக்கூட மறந்து விடலாம் பேசாதிருந்து விடலாம்

ஆனால் செய்வதுபோல் நடித்து......

செய்வதுபோல் எம்மை ஏமாற்றி........

செய்வதுபோல் தலைமைதாங்கி ........

எல்லாமே.........

ஏமாற்றுவேலை என்று தெரிந்தபின்................

பேசாதிரு என்பது.............????

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போ செய்துகொண்டிருப்பதற்கும்

ராயீவ்காந்தி செய்ததற்கும்

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை

பச்சைத்துரோகம் என்பது.........

அல்லது

முதுகில் குத்துதல் என்பது........

அல்லது

கோடரிக்காம்பு என்பது.......

இதைத்தான்

இவரைவிட வேறு உதாரணம் தேவையில்லை

காக்கை வன்னியன் அதுஇது என்று இவரே கிறுக்கியவைகளை இப்போது அவரே படித்து செயற்படுத்துகிறார்போலும்

உலகத்தில் அதுதான் சிறந்தவழி என்று இந்த வயதில் தேர்வுசெய்திருக்கிறார் போலும்............????

Edited by விசுகு

கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாளா

கண்ணில் விரலைவிட்டாய் கண்ணாளா

கண்ணீரும் வரவில்லை கண்ணாளா

என் முதுகில் குத்தி நின்றாய் கண்ணாளா

நான் முழுதாய் உதிர்ந்துவிட்டேன் கண்ணாளா

நிழலி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் உங்களின் ஆதங்கம் புரிகிறது.

தமிழர்களின் பிரதிநிதியாகத்தான் தமிழக முதல்வர் இருக்கிறார்.

அவரிடம்தான் அதிகாரமிருக்கிறது அவரே போராட்டம் நடத்துகிறார் என்றால் எதற்கு முதல்வர் பதவி போரை நிறுத்தச்சோல்லி எத்தனை காலம்? செவிசாய்த்ததா இந்திய அரசு . திரும்பத் திரும்ப கோரிக்கை விடுவதில் என்ன பயன். அழிந்து போகிறநிலையில் தமிழர்கள் இருக்கும்போது தமிழர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல் என்பது தமிழக அரசியல், ஈழ அரசியல், மலேசிய அரசியல், தென்னாபிரிக்க அரசியல் என்று பாகுபடுத்தப்படும் வரை எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இழவுச்செய்திதான் கேட்கும். ஏதோ காலம் கடந்து இப்போதாவது உலகமெங்கும் ஈழத்தமிழர் அவலங்களுக்காக குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தானைத் தமிழர் திரு. மு.க. அவர்களின் செயல்கள் சந்தேகத்தை மூட்டுகின்றன. தமிழர் என்கிற ஒற்றைப் புள்ளியிலிருந்து நோக்கும்போது இத்தகைய விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதது. இதற்குத் தானைத் தலைவரும் தயாராகத் தானே இருக்க்க வேண்டும்? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருடைய குமுறல்களையும் பார்க்கும்போது கருனாநிதி ஜயாவை நம்பித்தான் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தமாதிரியல்லோ இருக்கு.

இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையோ அல்லது அவர்களின் அரசியலையோ விமர்சிக்கும் நேரமில்லை.

நாம் எமது மக்களுக்கும், மக்களுக்காக தங்களை அர்ப்பனித்துக் கொண்டிருக்கும் போராளிகளுக்காகவும் என்ன செய்யவேண்டும் என்பதிலையே கவனம் செலுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.