Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் படையினர் மீது மீண்டும் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும்!

Featured Replies

சிறீலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.கடந்த 30 ஆண்டுகால யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வரும் இந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தக் கூடும் என இந்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் வல்லமையை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆய்வாளர் பேராசிரியர் சூரிய நாரயணன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilseythi.com/srilanka/tamil-...2009-01-22.html

இப்பவும் புலிகள் தாக்குவார்கள் எண்டு கட்டுரைகள் தேவையா...??? புலிகள் சிறிய பாம்பை இலங்கை படைகள் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும் எனும் அடிப்படையில் தாக்குதல் பிரச்சாரம் செய்தார்கள்... இப்போது அதுக்கான அவசியம் இருப்பது போல இல்லை... காரணம் விடுதலை புலிகளின் கடை சி பிரதேசம் எனவே பெரிய பொல்லால்தான் இராணுவம் தாக்கும்...

இண்றைக்கு தேவையானவை என்ன எண்று பிடித்து செய்யுங்கோ...

இப்பவும் புலிகள் தாக்குவார்கள் எண்டு கட்டுரைகள் தேவையா...??? புலிகள் சிறிய பாம்பை இலங்கை படைகள் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும் எனும் அடிப்படையில் தாக்குதல் பிரச்சாரம் செய்தார்கள்... இப்போது அதுக்கான அவசியம் இருப்பது போல இல்லை... காரணம் விடுதலை புலிகளின் கடை சி பிரதேசம் எனவே பெரிய பொல்லால்தான் இராணுவம் தாக்கும்...

இண்றைக்கு தேவையானவை என்ன எண்று பிடித்து செய்யுங்கோ...

தயா..தயவு செய்து நம்பிக்கையை இழக்காதீர்கள்.. சிங்களம் தனது பிரச்சார பீரங்கிகள் மூலம் ஓரளவுக்கு தான் நினைத்தை செய்துவிட்டது..(மக்களையும் புலிகளையும் பிரிக்கும் உத்தி) புலிகளின் அளவுக்கு மீறிய அமைதியும் இவற்றிற்கு காரணம்... நிச்சயமாக நம்புங்கள்.. நாம் தோற்கவில்லை..வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்..( நிச்சயமாக தற்போது உங்களுக்கு மிக கோபம் வரும் என நினைக்கிறேன்..) என்ன செய்வது புலிகளின் திட்டம் அப்படி...செய்திகள் வெளிவரும்போது அறிவீர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி சொல்லி சொல்லி சிறிலங்கா ராணுவத்தை மிகவும் உசார் நிலையில் வைக்கப்பார்க்கினம் இந்தியா ஆய்வாளர்கள் ஆனால் புலிகளின் நிச்சயம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்வார்கள் ஆனால் எப்பொழுது, எப்படி, எங்கு, எந்த நேரத்தில் என்று சிந்தித்துக்கொண்டு இருங்கள் அவர்கள் தொடங்கியபின் அறிந்துகொள்ளலாம் தானே. :unsure:

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி சொல்லி சொல்லி சிறிலங்கா ராணுவத்தை மிகவும் உசார் நிலையில் வைக்கப்பார்க்கினம் இந்தியா ஆய்வாளர்கள் ஆனால் புலிகளின் நிச்சயம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்வார்கள் ஆனால் எப்பொழுது, எப்படி, எங்கு, எந்த நேரத்தில் என்று சிந்தித்துக்கொண்டு இருங்கள் அவர்கள் தொடங்கியபின் அறிந்துகொள்ளலாம் தானே. :o

இப்படித்தான் யாழ் கோட்டை மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருப்பதை.. அவர்களின் வழமைக்கு மாறான வாகன நடமாட்டத்தை அவதானித்துவிட்டு யாழ் குடாவில் உறங்கு நிலையில் இருந்த எதிரியின் கூலிகள்.. படையினருக்கு தகவல் வழங்க.. அன்றைய தாக்குதல் தோல்வியில் முடிந்தது..!

இன்று அன்றைய போன்ற சூழல் அல்ல இன்னும் சிக்கலானது. பன்னாட்டு உளவுச் செய்மதிகளும்.. வன்னியைச் சுற்றி நோட்டம் இடுகின்றன. உளவு விமானங்கள் இடைவிடாது.. பறப்பில் ஈடுபடுகின்றன. கடற்படை நவீன ரடார்களை வைத்துக் கண்காணிக்கிறது. இராணுவம் நவீன ரடார்களை வைத்து.. புலிகளின் பீரங்கிகளின் நகர்வுகளைக் கண்காணிக்கிறது. விமானப்படைக்கு நவீன ரடார்கள் தரப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வாளர்கள் மக்களோடு மக்களாக வன்னிக்குள் இருக்கின்றனர். ஆழ ஊடுருவும் அணி இருக்கிறது. இவற்றையெல்லாம் உச்சி புலிகள் ஒரு தாக்குதலுக்கு தயாரானாலும் கூட அரசை உசார்ப்படுத்த எம்மவர் அரசியல் ஆய்வாளர்கள் வேறு இருக்கிறார்கள்..! அப்போ எப்படி.. தாக்குதலை திட்டமிடுறது.. நடத்திறது. புலிகள் என்ன மரபு வழி இராணுவத்தையா கொண்டுள்ளனர்.. சொல்லிட்டு அடிக்க..! இல்லையே. அவர்கள் கரந்தடி.. மரபுவழி இண்டையும்.. தேவைக்கு ஏற்ப கலந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.. ரகசிகப் காப்பில் பெரிதும் தங்கி இருக்கின்றன..! :unsure:

Edited by nedukkalapoovan

கடலில் அலிமோதும் போது மின்பிடிக்க் கஸ்டம்.... அலை ஓய்ந்தா பிறகு தான் அலைவீசவேணும்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வாளர் என்கிற சாஸ்த்திரிகளுக்கு முதலில் சங்கூதவேண்டும் :unsure::o

இப்படியான ஆய்வுகளை கட்டுரைகளை யாழ் களத்தில் இணைக்காமல் அதற்கு முக்கியத்துவம் வழங்காமல் இருத்தலே சாலச் சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாராயணன் பேர்வழிகளின் கதையே வேண்டாம் ,இவர்கள் தாங்கள் இருப்பதை காட்டவே காலத்திற்கு காலம் கதைகள் விடுவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாராயணன், மேனன் இத்தகைய பேர்வழிகளை பற்றி விகடனில் வந்த ஓரிரு வார்த்தைகள், சூரியநாராயனும் இவ்வகையே

ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் என மத்திய அரசின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேலாதிக்கம் செலுத்தி வருவதும்; முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக நலன்களுக்கு எதிராக கேரளா செயல்பட்டு வருவதும் இந்த சந்தேகத்தை அதிகரிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கையை இழக்காதீர்! திருமாவின் உண்ணா நோன்பின் போது கவி காசி ஆனந்தன் சொன்ன செய்தியொன்று, விகடனில் இருந்து, உங்கள் மனங்களை ஆறுதல்

படுத்தும்.

கவிஞர் கோபம்!

உண்ணாவிரத மேடையில் புதுத் தகவல் ஒன்றை சொல்லிக் கூட்டத்தைக் கொந்தளிக்க வைத்தார் கவிஞர் காசி ஆனந்தன். ''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல... யோணன் அந்த விருதையே புறக்கணித்தார்!'' என்று காசி ஆனந்தன் சொல்லவும், திருமா ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.