Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி

Featured Replies

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி

பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை மட்டும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது என வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு இது தொடர்பாக அவர் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உளவுக் கட்டமைப்பு அதிபர் ஒபமாவினால் துடைத்தழிக்கப் பட்டுள்ளது. கியூபாவில் அமைந்துள்ள 'கொண்டனாமாவே' முகாம் மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு வசதியாக புஷ் அரசாங்கத்தினால் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உலகம் எங்கும் சி.ஐ.ஏ. நடத்தி வந்த இரகசிய சிறைகளும் ஒபமாவினால் தடை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, முக்கியமாக செப்டெம்பர் 11 2001ற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட வழங்கறிஞர்களின் வாதங்களையும், சட்ட ஆணைகளையும், விசாரணைக் கருத்துக்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.

இது ஒரு சடுதியான வரலாற்று திருப்பம். அமெரிக்க வரலாற்றில் ஒபமாவின் முடிவு ஒரு சடுதியான மாற்றம் எனக் கூறப்படுகின்றது. அதேவேளை, அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்கள் வைத்திருந்த அபகீர்த்தி ஒபமாவின் இந்த முடிவின் மூலம் களையப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, ஒபமா அதிபராகப் பதவியேற்ற போது சிறிலங்கா அறிவித்த வாழ்த்துச் செய்தியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒபமாவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிறிலங்காவிற்கு பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.sankathi.com/

பயங்கரவாததுக்கும் சுதந்திர போருக்கும் ஒபம்மா அவர்கள் ஒரு வரையறையை தெரிவிப்பாராக இருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்....

  • தொடங்கியவர்

இந்த முடிவு விடுதலைப்போரினை இனங்காணும். ஏற்கெனவேயிருந்த பயங்கரவாதத்திற்கெதிரான செயற்பாடு என்பது மாற்று வடிவத்தில் செயற்படத்தான் போகின்றது. ஆனாலும் சில விடயங்கள் தெளிவானதாகத் தெரிவிக்கப்படின் நீங்கள் கெருதுவதுபொல் நம்மைகள் ஏற்படும்.

ம்ம்... முக்கிறமாக தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கையும் அமெரிக்காவும் ஒரேமாதிரியான கொள்கைதான் எண்டு, ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பின மகிந்தவுக்கு நல்ல பதிலை சொல்லியிருக்கிறார். தமிழர்கள் விடையத்தில் ஏதாவது நல்ல முடிவு எடுப்பாரா ? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனக் கூறிக்கொண்டு ஓரு இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் மகிந்த போன்ற அரசாங்கங்களுக்கு முகத்தில் விழுந்த முதல் அறை இது...

இனி எங்கள் தற்போதைய உச்சத்தில் இருக்கும் இனப்படுகொலையை தடுக்க நாங்கள் இவரின் அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்...

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முடிவு வரும் என் நாம் நம்புவோம்

எதுக்கெடுத்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாத்ம் எண்டு காட்டுக்கத்து கத்தினதுக்கு இது ஒரு நல்ல மாற்றம்தான்.......

ஆனாலும் இதிலிருந்து இன்னும் நிறையத்தூரம் போகவேண்டும்.

எங்கள் பக்கத்து நாடு எமக்கு எதிரியாக மாரியுள்ளது.. அதனால் இலங்கைக்கு உதவியாக அமெரிக்காவிற்கு சாத்தான் வேதம் ஓதலாம்.. விழிப்பாக இருந்தால் சரி..அல்லது உலகத்தமிழ்மக்கள் விழிப்புணர்வை முன்னாடியே ஏற்படுத்தி உசார் நிலையை ஏற்படுத்த வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பக்கத்து நாடு எமக்கு எதிரியாக மாரியுள்ளது.. அதனால் இலங்கைக்கு உதவியாக அமெரிக்காவிற்கு சாத்தான் வேதம் ஓதலாம்.. விழிப்பாக இருந்தால் சரி..அல்லது உலகத்தமிழ்மக்கள் விழிப்புணர்வை முன்னாடியே ஏற்படுத்தி உசார் நிலையை ஏற்படுத்த வேண்டும்..

எதிரியானவன் மிக விழிப்பாக இருந்து எம்மை அழித்தவாறு அனைத்துச் சர்வதேச நிறுவனங்களையும் தன்னகப்படுத்தியவாறு, (இறுதியாக ஐநாவும் இணைந்துள்ளது வேறுகதை. )தனது இனஅழிப்பு நடவடிக்கையில் எந்தத் தாமதமோ தடையோ இன்றித் தொடர்கிறான். இந்த அவலம் அழிவின் பின்னரும், வியாக்கியானமும், விண்ணாணமும் கதைக்கிறவியின்ர தொகை மட்டும் குறையேல்லை என்பதே கேவலமானது. தானாடா விட்டாலும் தசையாடுமெண்டு சொல்லுறவை. காட்சியளப் பார்த்தா கொடுமையளைச் சொல்ல வார்த்தையள் இல்லை. இப்பவேனும் சிந்திக்காவிடின் இனி எப்போது.!!!!!

மனிதனென்பவன் ஒரு பகுத்தறிவோடு கூடிய விலங்கென்பது அறிவியல் உண்மை. பகுத்தறிவைத் தொலைத்துவிட்டவிட்டவர்களாக இருக்கிறோமா என்ற ஐயம் தோன்றுவது இயல்பானதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூகோளரீதியாகவும்,இன்றைய பொருளாதாரரீதியாகவும் இந்தியாவை எதிர்த்து எங்கடை பக்கம் எவனும் தலைவைச்சு படுக்கமாட்டான் போலைகிடக்கு. :o

எமக்கு எதிரி அமெரிக்க இல்லை ****யர்கள் மட்டும் தான்.

புலிகள் அவர்கள், கை கூலியாக செயற்படவில்லை என்று ஆரபிந்த யுத்தம் 87 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று புலிகளை அழிக்கும் வரர தொடர்கிறது ஆனால் புலிகளிம் தமிழகா பலமும் பலவினனமும் தமிழகம் தான்.......

இந்த செய்தியை பார்த்து விட்டு மகிழ்வதோடு மாத்திரம் நின்று விடாது எமது போராட்டத்தை அங்கீகரிக்கும் வரை தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

பிராந்திய ரீதியில் இந்தியா தனது செயற்பாடுகளை செய்து கொண்டேயிருக்கும். ஆனாலும் உலகில் பொதுவான மாற்றங்கள் ஏற்படும்போது அதற்கு ஏற்ப இந்தியாவும் மாறித்தானாக வேண்டும். விடுதலைப்புலிகள் என்ற சொல்லுக்குள் நின்றுகொண்டு தமிழரின் அரசியல் அபிலாசைகளை அடக்க முற்படும் சிங்கள அரசோடு எவ்வளவு காலத்திற்குச் சேர்ந்து செயற்பட முடியும்.

அழித்துவிட்டோம் பிடித்துவிட்டோம் இன்னும் ஒரு வீதமேயுள்ளது என்பதை எவ்வளவு கால்த்திற்கு சிறிலங்கா சொல்ல முடியும். அந்த ஒரு வீதமும் முடியும்போது தமிழருக்குரிய தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயம் சிறிலங்காவிற்கு ஏற்படும். ஆகவே முல்லைத்தீவைக் கைப்பற்றுதல் என்ற நிலையில் தாமதப் போக்கை சிறிலங்கா கடைப்பிடிக்கும். என்றுதான் நான் கருதுகிறேன்.

ஒபாமாவின் அறிவிப்பு இந்த நிகழ்வுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.