Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது – கொழும்பு ஊடகம்

Featured Replies

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த தாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

வதந்தி பரப்பிறதெண்டே கச்சை கட்டி ஒரு கூட்டம் அலையுது போல?

ஏன்டா..... இப்பிடிச்சொன்னா என்ன? புலிகளின் நீர்மூழ்கிக்கப்பலொன்றை உழவியந்திரத்தில கட்டி யிழுத்து வந்து தாக்கினார்களென்டு?

இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பொது மக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டதேயன்றி நாம் பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை என சர்வதேசத்திற்கு அறியத்தருகின்றோம். :unsure:

டிபன்ஸ் வயரின் செய்தி திரிவுபடுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

புலிகளின் விமானம் குண்டு வீச்சியதாகவோ சண்டை நடைபெற்ற பகுதிக்கு மேலாகப் பறந்ததோ என்று எதுவுமே அதில் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக படையினரின் முன்னரங்கிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் விமானம் தரையிறங்கியதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. விமானம் எங்கிருந்து கிளம்பியது. தரையிறங்க முதல் தாக்குதலில் ஈடுபட்டதா என்பது தொடர்பான எந்தத் தகவலும் அதில் தெரிவிக்கப்படவில்லை.

முல்லைத்தீவில் நந்திக்கடல் ஏரியூடாக நுழைந்த விடுதலைப் புலிகளின் 30பேர் கொண்ட அணியின் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டதாகவும் இரு டாங்கிகள், உழுபொறி மற்றும் பேரூந்து என்பன சேதமடைந்தாகவே டிபன்ஸ் வயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதாகவோ கடற்புலிகள் பங்களிப்புப் பற்றியோ அதில் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த தாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

நீர் செமயா வாங்கிக் கட்டப் போறீர்

அதுதான் இருந்த ஓடுபாதை எல்லாத்தையும் பிடிச்சு படம் போட்டு காட்டியாச்சுது இல்ல.... பறகு எங்க இருந்து?

புதுக்குடியிருப்பு ஊடறுப்புத் தாக்குதலின் போது புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது: கொழும்பு ஊடகம்

[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2009, 08:31.35 AM GMT +05:30 ]

புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற ஊடறுப்புத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சுமார் 30 பேர் கொண்ட தாக்குதல் அணி ஒன்று புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்றவேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவ 58வது படைப்பிரிவினால் புலிகளின் விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த டாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

எனினும் வான் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகளின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்ல

  • கருத்துக்கள உறவுகள்

தங்களால் மக்கள்மீது நடாத்தும் பயங்கரவாத தாக்குதலை நியாயப் படுத்தவதிற்காக ஸ்ரீலங்கா அரச பயங்கர வாதிகளினால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று.

ஆகவே எங்களது பதில் கருத்துக்களில் நிதானம் தேவை.

புலிகளின் இறுதியும் ஏழாவதுமான விமான ஓடுபாதையை இன்று இராணுவத்தினர் கைப்பற்றினர்

58வது படையணியால் புதுக்குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட இதன் நீளம் 2கீ.மீ. அகலம் 50மீ.

அததெரண.

7 விமான ஓடுதளமா?.......

என்னெண்டு இப்பிடி இவங்களால ஏலுது?... வன்னியில் இருக்கிறற நாலஞ்சு றோட்டுக்களை விட மிச்சமெல்லாம் விமான ஓடுப்பாதையாத்தான் இருக்கும் போல. இப்பவே நான் போய் விக்கிப்பீடியாவில் போடப்போறன் உலகத்திலே அதுக விமான ஓடுபாதைகளைக்கொண்ட ஒரு சிறு பிரதேசம் வன்னிதானெண்டு. ஆதாரம் சிறிலங்கா பாதுக்காப்பமைச்சு.

கோமத வடே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.