Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது.

இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது.

இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது. ஆனால் அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை,.

இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு கரமும் சேர்ந்தால்தான் ஒலி எழுப்ப முடியும்.

உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும் என்றார் சிதம்பரம்.

நன்றி தற்ஸ் தமிழ்

இது இந்தியாவின் கோரிக்கையாக இருக்காது..சிதம்பரம் அவர்களின் தனிப்பட்ட கோரிக்கையாகவே இருக்கும்...இன்றே இந்திய அரசு சார்பில் இருந்து இன்னொரு விதமான அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் கோரிக்கையாக இருக்காது..சிதம்பரம் அவர்களின் தனிப்பட்ட கோரிக்கையாகவே இருக்கும்...இன்றே இந்திய அரசு சார்பில் இருந்து இன்னொரு விதமான அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை...

இது இந்தியாவின் கோரிக்கையாக இருக்காது..

சிதம்பரம் அவர்களின் தனிப்பட்ட கோரிக்கையாகவே இருக்கும்...

என்னைப்பொறுத்தவரை

சிதம்பரம் அவர்களின் தனிப்பட்ட கோரிக்கை

இந்தியாவின் கோரிக்கையை விட அபாயகரமானது

ஏனெனில் இந்தியா றும் என்றாலும் விடாது தடுப்பவர்கள் இவர்கள்தான்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் ஊரிலை சிதம்பர ரகசியம் எண்டு சொல்லுறவையோ? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடிக்கினமோ ஒருக்கா ஒருமாதிரி கதைக்கிறது இவையலுக்க பழகிப்போச்;சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் ஊரிலை சிதம்பர ரகசியம் எண்டு சொல்லுறவையோ? :)

அதுதானே ..... குமாரசாமியண்ணை ,

3000 இந்திய இராணுவ வீரரையும் அனுப்பி , இராணுவ தளபாடங்களும் கொடுத்து , விமானிகளுக்கு போர்ப்பயிற்சியும் அளித்துக் கொண்டு .........

போர்நிற்த்தத்தை பற்றி கதைக்க , காந்தி தேசத்தால் மட்டும் தான் முடியும் .

தேர்தல் வருகிறது இதுகூடவா உங்களுக்கு புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா எப்போதும் தமிழினத்தை அழிப்பதில் தெளிவாகவே இருக்கிறது. விநோதமாக இருப்பது இந்தியாவின் அறிக்கைதான்.

48 மணி நேர தாக்குதல் ஓய்வு குறித்து விடுதலைப்புலிகளோடு எவரும் கலந்து பேசவில்லை. தாக்குதல் ஓய்வும் மக்களை சொந்த இடங்களை விட்டு வெளியேறி சிங்கள கொலை வெறி இராணுவத்திடம் சரணடையவே வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் கலந்தாலோசிக்காத விடயத்தில் எல்லாம் அவர்கள் பதில் அளிக்க வேண்டியது ஒன்றும் அவசியமில்லை..!

------------

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி.

பெங்களூர்: சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெங்களூர் அருகே உள்ள எலஹங்கா விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை விமானப்படை வீரர்கள் எட்டு பேருக்கு தாம்பரம் விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக இருந்தது. இதற்காக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். சேலையூர் காவல் நிலையத்தி்ல் விசா பதிவுக்காக அவர்கள் வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய பாதுகாப்புத்துறையுடன் தொடர்பு கொண்டு சிங்கள வீரர்களை திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியிருந்தார்.

ஆனால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்பட்ட இலங்கை வீரர்கள் தற்போது பெங்களூரில் ஜாம் ஜாமென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எலஹங்கா விமான தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்த பெங்களூர் வாழ் தமிழர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

தட்ஸ்ரமிழ்.கொம்

-----------

இவைதான் விநோதமாக இருக்கின்றன. பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டிற இந்த நரி விளையாட்டை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கைவிட்டால் சிறீலங்கா அடம் பிடிக்கவே மாட்டுது..! :)

Edited by nedukkalapoovan

இவர் ஏதோ அதிமேதாவித்தனமா பந்தை புலிகளின் பக்கத்துக்கு அடிக்கிறமாதிரிக்கதைக்கிறார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.