Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா ஜ. நா தலைமைச் செயலகம் முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்

எம்முடைய எல்லோரது மனநிலையும் இன்று இவ்வாறுதான் உள்ளது

எல்லாவிதத்திலும் போராடியாகிவிட்டது

எல்லா அறவழியாலும் சொல்லியாகிவிட்டது

உயிர்கூட ஒன்றிருப்பதால்தான் நாம் அதை இன்னும் கொடுக்கவில்லை

பல இருந்தால் நாமும் எத்தனை தரமும் எரியத்தயாராகவே இருக்கிறோம்

இதில் எரிவது என்று நான் சொல்வது அதன் வலி எம்மை ஒன்றும் செய்யாது என்பதற்காகவும்

ஆனால் அதை பார்ப்பவர்

கேட்பவரை எம்முடைய தியாகத்தையும் வேண்டுகோளின் கடுமையையும் புரியவைக்கும் என்பதற்காகவே.

தயவு செய்து இதை ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிடாதீர்கள்

ஆனால் அவர்களது தியாகத்தை

அவர்கள் அறிவீலிகள் என்று சொல்லி கொச்சைப்படுத்தும் நிலையில் அவர்கள் இதைச்செய்யவில்லை

இவர் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்தவராம். ஆனால் ஒரு சிலர் இந்த உன்னத ஆத்மாவை கொச்சபை்படுத்துகின்றனர். உண்மையாகவே இந்த செய்தியை அறிந்ததும் கண்களிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

இந்த தியாகத்தை எவருமே (வெளிநாட்டவர்கள்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.

தமிழா நீ செத்து நாசமாக போய்விடு உனக்கு எது நடந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. :icon_idea::huh::lol::lol::o

  • கருத்துக்கள உறவுகள்

வேதனைகளை சாதனைகளாக மாற்றுவது எங்களின் கையில் தான் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி? என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் நுனவிலான். நாம் என்ன செய்யவில்லை? ஏன் இன்னும் இந்த உலகம் மௌனம் சாதிக்கின்றது?

விசுகு,

உண்மையில் அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. மாறாய் அந்த இளைஞனைப் போலவெ இயலாமையின் ஆற்றுப்படுத்துகையே!

  • கருத்துக்கள உறவுகள்
Veera_vanak_Col.jpg

என்னத்தச் சொல்ல? அங்க தான் கொத்துக் கொத்தாச் சாகுதுகள் எண்டா இங்கயும் அதே கதை, வாழுறதுக்காகத் தானே இந்தப் போராட்டமெல்லாம், இப்படி எதிரிக்கு மகிழ்ச்சி கொடுத்துச் சாக ஏன் தான் அங்க புலிகள் உயிரப் பணயம் வைச்சுப் போராட வேணும்?. ஐ.நா. முன்னாலயே நடந்திருக்குது, ஆனா பி.பி.சியிலயோ அல்லது எந்த ஊடகத்திலயோ வரவில்ல இன்னும். ஐ.நா கூட ஒரு அறிக்கை, வருத்தம் விடவில்ல. இது தான் தியாகிகள் தீக்குளிச்சு உலகத்திற்ற நியாயம் கேட்ட முதல் தடவையா? இல்ல, பர்மா புத்த துறவியள் சம்மணம் போட்டு அமர்ந்து, குளறாமல் எரிந்து நியாயம் கேட்டும் அந்த நாட்டில் எதுவும் மாறவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு, புலிகளுக்கு அதிக பட்ச, பிரசார, பொருளாதார உதவியள் செய்ய வேணும்.சமாதானம் நீதி கேட்டு ஒரு நாளும் யாரும் திரும்பிப் பார்த்ததாக எனக்குத் தெரியேல்ல.

BBC News

ஜெனிவா ஐ. நா அலுவலகத்துக்கு முன்பாக தமிழ் இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தான் தீக்குளிப்பதாக அவர் தன்னுடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் அவரது உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்து போய்விட்டதாகக் கூறுகின்ற சுவிஸ் பொலிஸார், அந்த இளைஞர் தனது பெயரை முருகதாசன் என்று எழுதி வைத்திருந்ததாகவும், தான் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து சுவிஸ் வந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது அவரை அடையாளம் காணுவதற்கான புலனாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவ

Edited by Thalaivan

இவர் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்தவராம். ஆனால் ஒரு சிலர் இந்த உன்னத ஆத்மாவை கொச்சபை்படுத்துகின்றனர். உண்மையாகவே இந்த செய்தியை அறிந்ததும் கண்களிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

இந்த தியாகத்தை எவருமே (வெளிநாட்டவர்கள்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.

தமிழா நீ செத்து நாசமாக போய்விடு உனக்கு எது நடந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. :icon_idea::huh::lol::lol::o

இந்தியாவில் மட்டுமல்ல மேலத் தேசங்களிலும் தீக்குளித்துள்ளார்கள்.

அது குறித்து மேலே இணைத்துள்ள தமிழோசை நிகழ்சியில் ஒரு ஆய்வே இடம்பெற்றுள்ளது.

கேளுங்கள்.

இருந்தாலும்

இப்படியான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அறிவு ஜீவிகளாக இருப்போரே இங்கே தீக்குளிக்கின்றனர்.

அவர்கள் உயிரோடு இருந்து போராட்டத்துக்கு பலம் சேர்க்கலாம்.

உலகெங்கும் கொடுமைகள் நடைபெறுகின்றன

தாயத்தின் நிலை கூட பெரும் கொடுமையாக தொடர்ந்து கொண்டே போகிறது

தொடர்ந்து செய்திகளாக கேட்கும் போது

நாம் மன அழுத்தத்துக்கே உள்ளாகிறோம்.

அந்த மன அழுத்தம் இப்படியான செயல்களில் இறங்க வைத்துவிடுகிறது.

தொடரும் கவனயீர்ப்பு போராட்டங்களில்

இப்படியான நிகழ்வுகள் புலத்தில் நடந்தால்

நமது கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு கூட தடை ஏற்படுத்திவிடுவார்கள்.

இதன் பாதிப்புகள் எங்கு கொண்டு போயும் முடியலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

BBC News

குறிப்பு :

பீபீசியில் இது குறித்து ஒரு ஆய்வே இடம்பெற்றுள்ளது.

தமிழோசையை ஒலி வழி கேட்கவும்

ஆமாம், இந்தச் செய்தி தமிழோசையில் வந்ததால் உலகம் முழுக்கப் பரவி எங்கள் வேதனையை வெளிக்கொண்டு வந்து விட்டது.தமிழன் பி.பி.சி தமிழோசை பார்த்தா தலைவன் தெரிந்து கொள்ள வேணும்? ஆங்கிலத்திலோ, எல்லோரும் பார்க்கும் இணையச் செய்தியிலோ வரவில்லை என்பதைச் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி? என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் நுனவிலான். நாம் என்ன செய்யவில்லை? ஏன் இன்னும் இந்த உலகம் மௌனம் சாதிக்கின்றது?

நாம் ஜனநாயக ரீதியாக புலம் பெயர்ந்தவர்களால் நடாத்தப்படுகிறது என்பது உண்மை. ஒரு சில மாற்றங்கள் ஊடகங்களில் ஏற்பட்டதை கண்கூடாக பார்க்கிறோம். இதனை நாம் தொடர்ந்து செய்யும் போது குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டுவரலாம்.

அடுத்த பக்கம் தமிழ் ஈழ மக்களின் காவலர்களாக விளங்கும் வி.புலிகளினை ஆயுத ரீதியாக பலப்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமைப்பாடும் உண்டு.இதனை பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. எமது ஆயுத பலம் தான் எம்மை பாதுகாக்கும். அரசு ஏவும் ஸெல்கள் போல் எம்மிடம் இருக்குமிடத்து இவ்வளவு மக்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.இது தான் வேதனைகளை சாதனைகளை ஆக்குவதன் சாராம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ் இளைஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.