Jump to content

ஜெனிவா ஜ. நா தலைமைச் செயலகம் முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை

http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

Link to comment
Share on other sites

இலங்கை அரசினால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழின அழிப்பை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தக் கோரி சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பணிமனை முன்னால் ஈழத் தமிழர் ஒருவர் இன்று மாலை(12.02.2009) தீக்குளித்துள்ளார்.

தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இது சுவிற்சலாந்து வாழ் தமிழ் மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகள் விரைவில்.....

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Link to comment
Share on other sites

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளாஇனியும் ஜ நா கைகட்டிக்கொண்டிருக்கமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலநின்றி உயிர்இழந்துள்ளதாக வைத்தியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இவரைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என சுவிசில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் இவருக்கு வயது 38 தொடக்கம் 40 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்இ 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நன்றி:- "புதினம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் கேட்க்கும் ஓவ்வொரு செய்திகளும் வேதனை ஊட்டுகின்றன :)

Link to comment
Share on other sites

அவ் இளைஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள். உயிரை ஐ. நாவின் முன் துறந்தும் உலகின் கண் திறக்குமா? இல்லை பத்தோடு பதினொன்றாக போய்விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ் இளைஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள். உயிரை ஐ. நாவின் முன் துறந்தும் உலகின் கண் திறக்குமா? இல்லை பத்தோடு பதினொன்றாக போய்விடுமா?

<<<<

இதே கவலைதான் நுணா அண்ணா எனக்கும்!!....

உலகே உனக்கு கண் இல்லையா? எங்கள்

தமிழீழ மண் என்ன மண் இல்லையா?

Link to comment
Share on other sites

பாங்கிமூன் இலங்கை தொடர்பாக கொடுத்த செய்திதான் நினைவிக்கு வருகிறது... இலங்கை தொடர்பான செய்திகள் மிகக்குறைவாகத்தானாம் வருகிறதாம். இதைவிட கூடுதலாக யாராலையும் வழங்க முடியாது.

உயிர் ஈந்த உறவுக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாங்கிமூன் இலங்கை தொடர்பாக கொடுத்த செய்திதான் நினைவிக்கு வருகிறது... இலங்கை தொடர்பான செய்திகள் மிகக்குறைவாகத்தானாம் வருகிறதாம். இதைவிட கூடுதலாக யாராலையும் வழங்க முடியாது.

உயிர் ஈந்த உறவுக்கு அஞ்சலிகள்.

உண்மைதான்

ஊர்வலம் போகும் அனைவரும் எரிந்தால் .............

கண் திறப்பாரா?

தயாராவே இருக்கின்றோம்

இது ஆரம்பம்தான்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு எம் அஞ்சலிகள்!!!

Link to comment
Share on other sites

தமிழன் செத்துச்சொன்னால்தான் சிங்களவனன் செயல் உலகமிறியுமா..அல்லது இதுவும் மறக்கடிக்க..மறைக்கக்கப்படுமா

...

முருகதாஸ் அவர்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார் நாங்கள் தீக்குளிக்காவிட்டாலும் முழுமூச்சாய் குரல்குடுப்பது இறுதிக்கட்டதேவையாகிவிட்டது

Link to comment
Share on other sites

இப்படி செய்ய வேண்டாம் என்று பலரும் கேட்டுக்கொண்டும் இவ்வாறான தீக்குளிப்புகள் தொடர்வது வேதனையளிக்கிறது.

ஐநாவின் கவனத்தை திருப்ப தன்னையே அழித்துக்கொண்ட முருகதாசன் என்ற இந்த இளைஞனுக்கு ஐநா என்ன பதில் சொல்லப்போகிறது..?

Link to comment
Share on other sites

முருகதாஸ் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்..!

இச்செய்தி சுவிஸ் ஊடகங்களிலாவது வந்ததா?? :)

Link to comment
Share on other sites

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

இது GTV செய்தியில் உறுதி செய்யப்பட்டது

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...8&Itemid=68

Link to comment
Share on other sites

தற்சமயம் ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றையதினம் முருகதாசன் தீக்குளித்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மேலதிக விபரம் அறிந்தவர்கள் அங்குள்ள நிலமையை எடுத்துவாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமானால் அவரின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.அதுக்கு நாம் எல்லோரும் தொடர்நது உளைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார்

காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலநின்றி உயிர்இழந்துள்ளதாக வைத்தியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.முருகதாச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்

ஊர்வலம் போகும் அனைவரும் எரிந்தால் .............

கண் திறப்பாரா?

தயாராவே இருக்கின்றோம்

இது ஆரம்பம்தான்...............

இப்பிடி ஊர்வலம் போய் எரிய தயாராய் இருக்கிறவர்கள் தயவு செய்து தாயகத்தில போய் போராடி உயிரை விடுங்க அதை விட்டிட்டு தீக்குளிச்சு ஒன்றும் ஆகப் போறதில்லை.

தீக்குளித்த அந்த இளைஞனின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் இப்பிடியே வன்னியிலும் செத்து வெளியிலையும் தமிழன் செத்துக்கொண்டிருக்க உலகம் கண்ணை கட்டி வேடிக்கை பார்க்கும்.

தமிழன் செத்துக்கொண்டிருப்பான் ஒரு கட்டத்தில தமிழன் இல்லை என்ற நிலை வந்த பின்னர் தான் இந்த உலகம் கண்ணை மூடிட்டு இப்பிடியும் ஓர் இனம் இருந்தது என்று வரலாறு எழுதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எங்களின்ர ஆயுத போருக்கு கொடுக்கிற ஆதரவும், அதன் வெற்றியும் மட்டுமே இந்த நிலையை மாற்றும். அமைதி வழியில் என்ன செய்தாலும் இந்த உலகம் கண்டு கொள்ள போவதில்லை. நாம் நடாத்தும் அமைதி வழிப்போராட்டங்களால் என்ன நடந்தது?

கொஞ்சம் சிந்திப்போம்...! நாங்கள் வன்முறையாளர்களாகவே இருந்து விட்டு போவம், பயங்கர வாதிகளாகவே இருப்பம், ஆனால் போரில தமிழீழ விடுதலை புலிகளில் இந்த உலகத்துக்கு தங்களின் உண்மையான பலத்தை காட்டும் வரையில் எங்கள் இனம் அழியும் அழிந்த படி தான் இருக்கும்,

எங்கட வீடுகளில் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கும், அந்த அழுகைகளுக்கு மத்தியில் இந்தியாவும், ஏனைய உலக நாடுகளும் கோலிக்கை களியாட்டம் ஆடும்.

தயவு செய்து....

தயவு செய்து தீக்குளிக்கும் இவ்வாறான முடிவை தமிழர்களே கை விடுங்கள்! மன அழுத்தத்தை குறையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தச் சொல்ல? அங்க தான் கொத்துக் கொத்தாச் சாகுதுகள் எண்டா இங்கயும் அதே கதை, வாழுறதுக்காகத் தானே இந்தப் போராட்டமெல்லாம், இப்படி எதிரிக்கு மகிழ்ச்சி கொடுத்துச் சாக ஏன் தான் அங்க புலிகள் உயிரப் பணயம் வைச்சுப் போராட வேணும்?. ஐ.நா. முன்னாலயே நடந்திருக்குது, ஆனா பி.பி.சியிலயோ அல்லது எந்த ஊடகத்திலயோ வரவில்ல இன்னும். ஐ.நா கூட ஒரு அறிக்கை, வருத்தம் விடவில்ல. இது தான் தியாகிகள் தீக்குளிச்சு உலகத்திற்ற நியாயம் கேட்ட முதல் தடவையா? இல்ல, பர்மா புத்த துறவியள் சம்மணம் போட்டு அமர்ந்து, குளறாமல் எரிந்து நியாயம் கேட்டும் அந்த நாட்டில் எதுவும் மாறவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு, புலிகளுக்கு அதிக பட்ச, பிரசார, பொருளாதார உதவியள் செய்ய வேணும்.சமாதானம் நீதி கேட்டு ஒரு நாளும் யாரும் திரும்பிப் பார்த்ததாக எனக்குத் தெரியேல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂
    • இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.