Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: சோனியா உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசி இலங்கை இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் மூலம் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தி.க. தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். மோகன், பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், பி.பாஸ்கரன், ஏ.கே.ராஜன், எம்.எஸ்.ஜனார்த்தனம், கே.சாமித்துரை, பி.சண்முகம், பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் ஆகியோர் கொண்ட இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய வெளியுறவு அமைச்சர் ரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

அப்போது, இலங்கையில் நீடித்து வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை, அதன் விளைவாக தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தால் எழுந்துள்ள கொந்தளிப்பான சூழல்நிலை குறித்து சோனியாகாந்தியிடம் துரைமுருகன் விளக்கினார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண போர் நிறுத்தம் ஒன்றே சிறந்த வழி என்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் என்றும் சோனியாவிடம் பேரவை துணைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும், ஐ.நா. அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வரவேண்டும் ஆகிய முக்கியமான 3 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் சோனியா காந்தியிடம் பேரவை துணைக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

இச்சசந்திப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,

இலங்கை போரினால் பலியாகும் தமிழர்களை அந்த நாட்டு குடி மக்களாகப் பார்க்காமல் அழிக்கப்படும் தமிழ் இனத்தை பாதுகாக்கும் வகையில் இந்தியா உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சோனியா காந்தியிடம் வற்புறுத்தினோம்.

எங்களுடைய கோரிக்கைகளை, சோனியா காந்தி பொறுமையாக கேட்டுக்கொண்டதுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வலியுறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக்குழு உறுப்பினர் கனிமொழி எம்.பி., கூறுகையில், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள நாடுகளின் ஆதரவுடன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த உறுதி மொழி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறினார்.

தி.க.தலைவர் வீரமணி கூறுகையில், இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துயரங்களை துடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளதால், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மற்ற அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் தங்கள் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3725

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார்.

ஈழத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் குண்டு வீசிக் கொன்ற பின் , நிரந்தரதீர்வு என்ற அர்த்தத்தில் சோனியா சொன்னாவோ ......

  • கருத்துக்கள உறவுகள்

உபத்திரவம் செய்யாமல் விட்டாலே பெரிய உதவியாக இருக்கும்.

நான் சொல்வதை கேளுங்கள் சோனியா!

இதெல்லாத்துக்குப்பின்னும் ஈழம் இருக்கும், இலங்கை இருக்கும், உங்கள் இந்தியாவும் இருக்கும் ஆனால் உங்கள் கொள்கை மட்டும் காற்றில் பறக்கும் எதிகாலம் உங்களுக்கு வழங்கவிருக்கும் பெயர் என்ன? அதுக்கான விடை?

வரலாற்றில் பலர் தங்களை தலைவராக நினைத்தவர்கள் எல்லாம் கண்ட உணமியை நீங்களும் காணவில்லை..... தேர்தல் சனநயகத்தின் முடிவு இதுதான்.

சோனியா கைவிரித்து விட்டார் - பிரணாப் பதில் ஏமாற்றம்: போராட்டம் தொடரும் - ராமதாஸ்

டெல்லி: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது பதில் திருப்தி தரவில்லை. ஏமாற்றமளிக்கிறது. சோனியா காந்தியும் கைவிரித்து விட்டார். எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

டெல்லி சென்றிருந்த டாக்டர் ராமதாஸ் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசினார். அப்போது, இதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் பேசுங்கள் என்று சோனியா அறிவுறுத்தினார்.

இதையடுத்து நேற்று பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார் ராமதாஸ். முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், ராமதாஸை சந்தித்து இலங்கை குறித்து விளக்கினார்.

பிரணாப் முகர்ஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ், பிரணாப் பேச்சு தனக்கு திருப்தி தரவில்லை, பெரும் ஏமாற்றத்தையே அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் கைவிரித்து விட்டார் எனவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனையும் நான் சந்தித்து இலங்கை பிரச்சினை பற்றி பேசினேன். அவர்களுடைய பதில் சாதகமாக இருந்தது.

பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினேன். இலங்கையில் நடக்கும் போரை பற்றியும் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதையும் விளக்கி அவரிடம் 5 பக்க கோரிக்கை மனுவை கொடுத்தேன்.

எங்களை பொறுத்த வரை இலங்கையில் ராஜபக்சே அரசு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் உடனே போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அந்த போர்நிறுத்தத்துக்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பிரணாப் பதில் ஏமாற்றம்

ஆனால் இப்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்த வழியில்லை என்று பிரணாப்முகர்ஜி கூறினார். அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பா.ம.க. சார்பில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

கைவிரித்து விட்டார் சோனியா

இந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய டாக்டர் ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் ராணுவ ஆட்சி அமைக்க சதி நடக்கிறது என சோனியா காந்தியிடம் கூறியதற்கு அது அவர்கள் நாட்டின் உள்பிரச்சினை. இதில் எப்படி தலையிடுவது என கூறி கைவிரித்து விட்டார்கள்.

போராட்டம் தொடரும்

எனவே மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளோம். இன்று பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் பா.ம.க. எம்.பி.க்கள் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என்றார் ராமதாஸ்.

http://thatstamil.oneindia.in/news/2009/02...to-coninue.html

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் செய்வாங்கள், ஆனால் அவங்களின் முதல் வேலை புலிகளை அழிப்பதுதான், அதுவரை அமைதியாக இருங்கோ என்று மறைமுகமாக சொல்லியிருக்கின்றார்.

இதிலை ஒரு உண்மையை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதாவது எங்களை அதாவது எங்களது தேசியத்தின் தலைமையை தனிமைப்படுத்தும் வேலைகள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தீவிரமாக இடம்பெறுகின்றன, இதை எப்படி முறியடிக்கப்போகின்றோம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் குண்டு வீசிக் கொன்ற பின் , நிரந்தரதீர்வு என்ற அர்த்தத்தில் சோனியா சொன்னாவோ ......

தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்தால் சரிதானே. அதுதானே அவர்களின் தீர்வு முயற்சி. செய்யிறதையும் செய்து கொண்டு, அதாவது இந்தோ - சிங்கள அரசுகளின் கூட்டுப் படுகொலை, அதாவது இனப்படுகொலையை நடத்தியவாறு உறுதியெடுக்கிறாவாம்.

ஆட்சியின் பங்ககளிகள் அவர்களுக்குள் மனுக்கையளிப்பு நாடகம். பிறகு அறிக்கைப்பாட்டும் சுயதம்பட்டமும். உயிர் போய்க்கொண்டிருப்பவர் பற்றி மனிதர்களுக்கு மட்டுமே புரியக் கூடியது.

இன்னேரம் இலங்கைத்தீவிலே ஒரு தெலுங்கு தேச்தையோ, மாரட்டிய தேசத்தையோ கோரியிருப்பின் அது தனது 26வது சுதந்திர தினத்தை இவ்வாண்டில் கொண்டாடியிருக்கும்என்பதே நிதர்சனமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

போடி நாத்தலி...

"பிரணாப் பதில் ஏமாற்றம்

ஆனால் இப்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்த வழியில்லை என்று பிரணாப்முகர்ஜி கூறினார். அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது."

ராமதாஸ் இவ்வாறு ஏன் கூறஜனார்? பிரணாப்பின் கூற்று சரியானதே. சிறிலங்காவில் போர் நடைபெறுவதற்கு இந்தியா விருப்பப்பட்டாலும் தாங்கள் எதிர்பார்த்தது போல் போரின் போக்கு அமையவில்லை, என்றுதான் நான் கருதுகிறேன். இந்தியாவின் வெளிப்படையான தலையீட்டிற்கு போரின் போக்கு தடையாகிவிட்டது. எதிர்பாராதவிதமாக சிறிலங்கா இராணுவத்திற்கு வெற்றிகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றபடியால் இந்தியாவால் தலையிட முடியாத நிலையுள்ளதோ?

விடுதலைப்புலிகளின் கை போரில் ஓங்கியிருந்தால் அயல் நாட்டிற்கு உதவும் நோக்கத்தோடு, கோரிக்கைகளையும் உதவியையும் சிறிலங்கா அவசரமாகவிடுக்கும் என்று எதிர்பார்த்திருந்து ஏமாநந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.