Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணே உனக்கே உனக்காய்

Featured Replies

பெண்ணே உனக்கே உனக்காய்

அடங்கி அடங்கி

ஆண்டாண்டு காலமாய்

அடுப்பங்கரையே உன் உலகமென்று

முடங்கிக் கிடந்தது போதும்.

புதுமைகள் அறிந்து

பழமைகள் களைந்து

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

சாதனை படைக்க - பெண்ணே

துணிந்து நீயும் எழுந்து வா

நதியென்றும் மலரென்றும்

நிலவென்றும் அமுதென்றும்

போகம் தரும் காதற் பொருளாய்

கவிஞர் உன்னைக் கண்டது போதும்

சரித்திரம் படைக்கும் புயலாய்

அறியாமை களையும் தீயாய்

அகிலம் உனைக்காண

அடங்காத வேகத்துடன் - பெண்ணே

துணிந்து நீயும் எழுந்து வா

பின் தூங்கி முன்னெழுந்து

தலை கோதி அடி வருடி

அருகிருந்து தூங்க வைத்து

தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்

துணைவியாய் மட்டும் நீ வாழ்ந்தது போதும்

அடக்கு முறைகளை உடைத்து எறிந்து

அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து

அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்

உலகம் உனைக்காண - பெண்ணே

துணிந்து நீயும் எழுந்து வா

Edited by nige

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தினக் கவிதை நல்லாயிருக்கிறது.

பின் தூங்கி முன்னெழுந்து

தலை கோதி அடி வருடி

அருகிருந்து தூங்க வைத்து

தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்

துணைவியாய் மட்டும் நீ

ஆனால்

இந்த வரிகள் உண்மையானவைதானா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்தில் .........போராளிபென்களை.........சாதனை படைக்கும் பெண்ண்களை ....... உலகம் கண்டு கொள்வது எப்போது .........

  • தொடங்கியவர்

நன்றி theeya

நன்றி நிலாமதி

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பல இடங்களில் பேசப்பட்டாலும்

இன்னும் பல இடங்களில் பெண்களுக்கான வன்முறைகளும் அடக்குமுறைகளும்

நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதைத்தான் இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன் .

t

heeya Posted Yesterday, 09:32 AM

மகளிர் தினக் கவிதை நல்லாயிருக்கிறது.

QUOTE

பின் தூங்கி முன்னெழுந்து

தலை கோதி அடி வருடி

அருகிருந்து தூங்க வைத்து

தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்

துணைவியாய் மட்டும் நீ

ஆனால்

இந்த வரிகள் உண்மையானவைதானா?

நிலாமதி அக்கா உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புவோமாக ...

நிலாமதி Posted Yesterday, 09:43 AM

தமிழ் ஈழத்தில் .........போராளிபென்களை.........சாதனை படைக்கும் பெண்ண்களை ....... உலகம் கண்டு கொள்வது எப்போது

:wub::o:(:D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எங்கையோ போட்டினம்.. நீங்கள் தான் இல்லாத அடுப்பங்கரையில் அவையை வைச்சுப் பார்க்கிறீங்க. முடியல்ல.. உங்கள் கற்பனை.. நல்ல பழமை..! :wub::(

நன்றி theeya

நன்றி நிலாமதி

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பல இடங்களில் பேசப்பட்டாலும்

இன்னும் பல இடங்களில் பெண்களுக்கான வன்முறைகளும் அடக்குமுறைகளும்

நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதைத்தான் இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன் .

இப்ப எல்லாம் ஆண்கள் தான் அதிகமாக பெண்களால் உள உபாதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அடியைத் தாங்கலாம். ஆனால் மனிதனின் நிம்மதியைக் கலைக்கிறது மோசமான குற்றம். அதைத்தான் பெண்கள் ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள்..! அதனால் தான் ஆண்களின் ஆயுட்காலமும் குறைவடைந்து வருகிறது..! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கவிதை நல்லாய்த்தான் இருக்கு.எழுத்துநடைக்கும் உவமைகளுக்கும் பாராட்டுக்கள் :o

அதுசரி நீங்கள் இப்ப எந்த உலகத்திலை இருக்கிறியள்?

இப்பவும் பழையபஞ்சாங்கத்தையே படிச்சுக்கொண்டு! அடச்சீ வெட்கமாயில்லை :wub:

அனைத்து மகளிர் அமைப்புகளிற்கும்,மற்றும் உலக மகளிர்க்கும் உலக ஆண்களின் சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்.........

  • தொடங்கியவர்

நன்றி nedukkalapoovan குமாரசாமி SivanSaami

உங்கள் கருத்துக்கு

n

edukkalapoovan Posted Today, 04:27 AM

பெண்கள் எங்கையோ போட்டினம்.. நீங்கள் தான் இல்லாத அடுப்பங்கரையில் அவையை வைச்சுப் பார்க்கிறீங்க. முடியல்ல.. உங்கள் கற்பனை.. நல்ல பழமை..! laugh.gif biggrin.gif

QUOTE (nige @ Mar 8 2009, 05:44 PM) *

நன்றி theeya

நன்றி நிலாமதி

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பல இடங்களில் பேசப்பட்டாலும்

இன்னும் பல இடங்களில் பெண்களுக்கான வன்முறைகளும் அடக்குமுறைகளும்

நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதைத்தான் இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன் .

இப்ப எல்லாம் ஆண்கள் தான் அதிகமாக பெண்களால் உள உபாதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அடியைத் தாங்கலாம். ஆனால் மனிதனின் நிம்மதியைக் கலைக்கிறது மோசமான குற்றம். அதைத்தான் பெண்கள் ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள்..! அதனால் தான் ஆண்களின் ஆயுட்காலமும் குறைவடைந்து வருகிறது..! smile.gif

நீங்கள் மேலைத்தேசநிலையை பார்த்து பேசுகிறீர்கள் .ஆனால் கீழைத்தேச நாடுகளில் இன்னும் பெண்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுகின்றது .

திருமணத்துக்கு பின்பு பெண்களின் சுதந்திரம் குடும்ப வட்டத்துக்குள்

அடக்கப்படுகிறது.சில பெண்கள் சுதந்திரமாக வேலைக்கு சென்று வந்தாலும்

குடும்ப வேலைகள் அனைத்தையும் வீட்டிலும் அவளே செய்ய வேண்டி

உள்ளது .

இது தவிர பெண் சிசுக்கொலை, விதவைப்பெண்களை ஒதுக்குதல், குழந்தை இல்லாத பெண்களை நல்ல நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கி வைத்தல் போன்ற கொடுமைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

பெண்கள் ஆண்களை கொடுமை படுத்துகிறார்கள் என்பதை என்னால்

ஏற்றுகொள்ளமுடியவில்லை

குமாரசாமி Posted Today, 04:46 AM

உங்கடை கவிதை நல்லாய்த்தான் இருக்கு.எழுத்துநடைக்கும் உவமைகளுக்கும் பாராட்டுக்கள் smile.gif

அதுசரி நீங்கள் இப்ப எந்த உலகத்திலை இருக்கிறியள்?

இப்பவும் பழையபஞ்சாங்கத்தையே படிச்சுக்கொண்டு! அடச்சீ வெட்கமாயில்லை laugh.gif

இது பழையபஞ்சாங்கம் இல்லை. இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கின்றது.

உண்மையை சொல்ல எதற்கு வெட்கம்......

நன்றி உங்கள் கருத்திற்கு :lol::unsure::o

அடக்கு முறைகளை உடைத்து எறிந்து

அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து

அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்

உலகம் உனைக்காண - பெண்ணே

துணிந்து நீயும் எழுந்து வா

பெணடிமை விலங்கொடித்து பெண்ணினம் சிறக்கட்டும்,

நிகே எதுக்கும் கூட்டணிக்கு நிலா எண்டு ஒராள் வாறா அவாவையும் சேர்த்துக் கொள்ளுங்கோ ஏனெண்டா அவாவும் உப்பிடித்தான் பெண்ணடிமை உடைப்போம் எண்டுதான் பேசுவா...

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஆண்களை கொடுமை படுத்துகிறார்கள் என்பதை என்னால்

ஏற்றுகொள்ளமுடியவில்லை

நான் இந்தக் கட்டுரையைப் படித்து அறிந்து கொண்டதை நீங்களும் அறியுங்கள். அப்போதாவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதை பார்க்கலாம்..!

http://kuruvikal.blogspot.com/2009/02/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தினக் கவிதை நல்லாயிருக்கிறது.

ஆனால்

இந்த வரிகள் உண்மையானவைதானா?

தீயா தீயாயினியிட்டைத்தான் கேக்க வேணும் உண்மையெதுவென்பதை :D

பெணடிமை விலங்கொடித்து பெண்ணினம் சிறக்கட்டும்,

நிகே எதுக்கும் கூட்டணிக்கு நிலா எண்டு ஒராள் வாறா அவாவையும் சேர்த்துக் கொள்ளுங்கோ ஏனெண்டா அவாவும் உப்பிடித்தான் பெண்ணடிமை உடைப்போம் எண்டுதான் பேசுவா...

நிலா வானத்திலிருந்து இன்னும் பூமிக்கு இறங்காமல் இருப்பது நிலவனுக்குப் பயந்துதானோ ? <_<

உடைப்பதற்கு என்ன நிலா அவ்வளவு இறுக்கமான உலோகத்தையா அணிந்திருக்கிறா ? :lol:

அதுசரி நீங்கள் இப்ப எந்த உலகத்திலை இருக்கிறியள்?

இப்பவும் பழையபஞ்சாங்கத்தையே படிச்சுக்கொண்டு! அடச்சீ வெட்கமாயில்லை :lol:

கொற்பிளேட் கிறைண்டர் வோசிங்மெசின் வேகத்துக்கு ஏற்ப வாகன வசதி இவையெல்லாம் இருக்க அடுப்பு அது இதுவென நிகே அப்புவைக் கடுப்பேத்தியுள்ளீர்கள். :lol:

அனைத்து மகளிர் அமைப்புகளிற்கும்,மற்றும் உலக மகளிர்க்கும் உலக ஆண்களின் சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்.........

அட பெண்கள் தினமும் திபாவழி பொங்கல் புத்தாண்டு மாதிரி வாழ்த்துத் தெரிவிக்கும் தினமாகிவிட்டதா சிவன்சாமி ?

வாழ்த்துக்களை விடவும் துணையுடன் தனக்கான கடமைகளை பங்கிடுவதும் புரிந்துணர்வுடன் சமானத்தை உணர்தல் உணர்த்துதல் எல்லா ஆண் பெண்களுக்கும் சுதந்திரமாகும்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே உனக்கே உனக்காய்

அடங்கி அடங்கி

ஆண்டாண்டு காலமாய்

அடுப்பங்கரையே உன் உலகமென்று

முடங்கிக் கிடந்தது போதும்.

புதுமைகள் அறிந்து

பழமைகள் களைந்து

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

சாதனை படைக்க - பெண்ணே

துணிந்து நீயும் எழுந்து வா

ஓடியோடிக் கொட்பிளேற்றுடனும்

ஒரு நிமிட இடைவெளியில்

கிüறைண்டரில் சம்பலும்

இடியப்ப ருசிக்குச் சூடான

கொற்பிளேட் ஆறமுதல்

சுடச்சுடச் சுடைமீன் சொதியும்

ஐரோப்பா வந்தபின் கிடைத்த

இயந்திர வசதிகள் காணாமல்

இன்னும் பெண் விடுதலையோ ?

நீகே இப்பிடி நீங்கள் எழுதியிருந்தால் கைதட்டல்கள் வாங்கியிருக்கலாம். கண்டனங்கள் வராது. <_<

(உங்கள் கருத்தை அஞ்சாமல் சொல்லுங்கள் நிகே. அதற்கடுத்துத்தான் விமர்சனம்)

இன்னும் பெண்கள் பற்றியதான கருத்துக்கள் என்கின்ற போது ஆண்கள் சார்பாக மாற்றங்கள் அவ்வளவாக இல்லையென்பதை இக்களத்தில் பெண்கள் தொடர்பான ஆக்கங்களுக்கு வருவதிலிருந்து அறிய முடிகிறது.

  • தொடங்கியவர்

நன்றி யாழ்நிலவன் உங்கள் கருத்துக்கு

நிலாவைத்தான் அறிமுகத்துக்கு பிறகு காணவே இல்லையே ......

நான் எப்படி அவவை தேடி பிடிப்பது....

உங்கள் கருத்துக்கு பயந்துதான் ஒளித்துவிட்டாவோ....

வந்தால் இணைத்து கொள்ள நான் தயார்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தானே .............

யாழ்நிலவன் Posted Mar 9 2009, 06:07 PM 


பெணடிமை விலங்கொடித்து பெண்ணினம் சிறக்கட்டும், 


நிகே எதுக்கும் கூட்டணிக்கு நிலா எண்டு ஒராள் வாறா அவாவையும் சேர்த்துக் கொள்ளுங்கோ ஏனெண்டா அவாவும் உப்பிடித்தான் பெண்ணடிமை உடைப்போம் எண்டுதான் பேசுவா...

  • தொடங்கியவர்

நன்றி nedukkalapoovan' உங்கள் கருத்துக்கு

நீங்கள் கூறிய அந்த கட்டுரை பார்த்தேன் .ஆச்சரியமாக இருந்தது .

இப்படியும் பெண்கள் செய்கிறார்களா என் வியப்பாகவ்ம் இருந்தது .....

அந்த வகையில் ஆண்கள் பாவம்தான் .அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் .

ஆனால் கிராமத்து பெண்கள் இன்னும் அடிமைகள் போல்தான் நடத்தப்படுகிறார்களே .....

தாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும்

nedukkalapoovan Posted Mar 9 2009, 07:43 PM 

  QUOTE (nige @ Mar 9 2009, 10:12 AM) 

பெண்கள் ஆண்களை கொடுமை படுத்துகிறார்கள் என்பதை என்னால் 

ஏற்றுகொள்ளமுடியவில்லை



நான் இந்தக் கட்டுரையைப் படித்து அறிந்து கொண்டதை நீங்களும் அறியுங்கள். அப்போதாவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதை பார்க்கலாம்..!


http://kuruvikal.blogspot.com/2009/02/blog-post_10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.