Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின்மீது மீண்டும் அ.தி.மு.க கரிசனை எடுப்பது மகிழ்ச்சி திருகின்றது பா.நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க அணியினர் ஈழத்தமிழர்கள் மேல் அதிக கரிசனை காட்டுவதும், அவர்களின் விடியலுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எமக்கும், எமது மக்களுக்கும் நம்பிக்கையினையும், மகிழ்ச்சியையும் தருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

"ஹெட் லைன்ஸ் ருடே" என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.நடேசன், ஈழத்திழர்களின் பால் இன உணர்வாலும், பாசத்தாலும் தமிழக மக்கள் ஒன்றியே நிற்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க வின் நிறுவுனரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கான விடிவுக்காக சகல வழிகளிலும், வெளியப்படையாக முழு உதவிகளையும் வழங்கியிருந்தார்.

அதேபோல அண்மையில் தற்போதைய அந்தக்கட்சியின் தலைவி செல்வி. ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரமே தீர்வாக அமையும் என தெரிவித்திருந்தார். அத்தோடு தற்போது வன்னியில் இடம்பெறும் பேரவலங்கள், மனிதப்பேரழிவுகள் கண்டு, தமது அனுதாபங்களையும், இந்திய மற்றும் சிறி லங்கா அரசுகளுக்கு கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இவற்றின் மூலம் செல்வி.ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் தற்போது ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான நிலையில் உள்ளார் என்பது புரிகின்றது.

அத்தோடு தற்போது ஈழத்தமிழர்களின் தமிழக பாதுகாவல் தூண்களான ம.தி.முக. செயலாளர் வைகோ அவர்களும், பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அந்த அணியிலேயே இருப்பது, அ.தி.மு.க அணியினரின் ஈழத்தமிழர் விவகாரத்தை பெரிய அளவில் முன்னெடுக்கும். இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் பால் பாராமுகம் காட்டிவரும் இந்திய காங்கிரஸ் அரசின் செயல் தவறு என எதிர்வரும் தேர்தல்கள் இந்திய அரசுக்கு உணர்த்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அ.தி.முக. அணியினரின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும், தமிழக மக்களின் ஈழத்தமிழர்கள், அவர்களது போராட்டத்திற்கான பேராதரவும், எமக்கும் எம் மக்களுக்கும் மகிழ்ச்சியைத்தருவதாக நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமேயாயின் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலிய தமிழர்கள் யாவரும் ஜெயலலிதாவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமேயாயின் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலிய தமிழர்கள் யாவரும் ஜெயலலிதாவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

ஒம் தாத்தா :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமேயாயின் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலிய தமிழர்கள் யாவரும் ஜெயலலிதாவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

நான் இப்பவே வழிபட தொடங்கிவிட்டன்......

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை, பொறுமை, பொறுமை.....

மறுபடியும் ஏமாறப்போகின்றொம்.

ஜானா

நீங்கள் எல்லோரும் கருத்தை வைக்குமுன் நடேசன் அண்ணை இதை கூறினாறா என்று உறுதிப்படுத்த வேண்டும். அப்படி அவர் கூறியிருந்தால் அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். நீங்கள் உங்கள் கருத்துகளை வைக்குமுன் தயவுசெய்து at least இரண்டுதரமாவது யோசித்துவிட்டு வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியப் படைவீரர் என்ற கணக்கில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் எல்லாவகை அடக்குமுறை அதிகாரங்களையும் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீரில் இன்று எங்கும் இராணுவ முகாம்கள்தான் முளைத்திருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். இதுதான் நிலைமை என்றால் காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாக தீவிரவாதிகளின் பயங்கரவாதம் ஏன் தோன்றாது?

இதுதான் இந்தியா இவர்களிடம் இருந்து நாம் எதை எதிர்பார்க்கலாம்

இது விடுதலைப்புலிகள் மறைமுகமாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது போல் உள்ளது ??? அதிமுக கூட்டணிக்கு வாக்கு போடுமாறு சமிக்கை காட்டப்படுகின்றது ??

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமேயாயின் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலிய தமிழர்கள் யாவரும் ஜெயலலிதாவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

குமாரசாமி அண்ணா , புரட்சிதலைவி ஜெயலலிதாவின் படம் என்னிடம் இல்லையே ........ :lol::):mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

!!....தலைவரைத்தவிர யாரையுமே நம்பத்தோன்றவில்லை. நோர்வே செய்த சதியின் பின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை கூட அடுத்தவர்கள் மீது வைக்க பயமாக இருக்கிறது.

எங்கள் எல்லா நம்பிக்கைகளுக்கும் துரோகங்களே பரிசாகி இருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.