Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் புதுடில்லி பயனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மத்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் புது டில்லி சென்றுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய போர் நிலவரம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, அப்பாவித் தமிழமக்களைக்களைக் காப்பது உள்ளிட்டவை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தமை அறிந்ததே.

மத்திய அரசின் சார்பில், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் அவர்களால் விடப்பட்ட இந்த அழைப்பை, ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. இதில் பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தபோதும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்க் கூட்டமைப்பு டஎம்.பி.க்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைகலநாதன், இரா.சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்களும் இன்று புறப்ட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இன்றிரவு புதுடில்லியை அடையும் அவர்கள் நாளை வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு

போய் கார பக்கோடாவும், சிக்கன் டிக்காவும் சாப்பிட்டுட்டு வரட்டும். முடிந்தால் சோனியாவின் முந்தானையில் ஒரு துண்டும், கலைஞரின் கோவணத்தில் இன்னொரு துண்டும் எடுத்து கொண்டு வந்தால் முகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் தமிழ் மக்கள் முன்னிலையில் கோத்தாபாய நடாத்த இருக்கும் வடக்கு உள்ளூராட்ச்சித் தேர்தலில் பங்கு கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பேசி பேசியே தமிழர்களின் காலம் போகிறது .........கொத்துக்குண்டுகளால் உயிர் போய் கொண்டு இருக்கிறது

........பேசி ஏதாவது செயல் வடிவம் ..........வந்தால் அது உலக அதிசயம். .

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் கூத்தமைப்பு நாராயணனுடன் பேசியதாகவும் நாளை கூத்தமைப்பு சிவசங்கர மேனனுடன் பேச இருப்பதாகவும் தெரிகிறது.

அரசியல்ல இததெல்லாம் சகயமப்பா... :unsure:

இந்த சந்திப்பால அரசியல் ரீதியாக சில நன்மைகள் இருக்க கூடும் நம்மவர்கள் இன்னும் சின்னப்பிள்ளைகளட அல்ல..

தமிழ் மக்களை இந்தக்கூட்டணிக்கு எதிராக திருப்ப பலசக்திகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையி நாமும் அவர்களின் வலையில் விழுவதை தவிர்ப்போம்.. இப்படியான வீண்பழிகளை சுமத்துவதை தயவுசெய்து தவிருங்கள்.

Edited by மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வேதனையில் இருப்பதால் கொட்டி தீர்கிறோம்..... ஆனால் அவர்களின் நிலைமையும் கருத்தில் கொள்ளபடவேண்டும். அநியாயங்களை செய்வதென்று ஒரு அரக்க இந்திய அரசு புறப்பட்ட பின்பு அரக்கனின் அடித்தளம் பற்றி அறியவாவது பேச வேண்டாமா? எனக்கென்னமோ பேசிபார்க்கலாம் என்பதே சரியென படுகின்றது. பேசாது இருந்தாலும் இவர்கள் நாலுபேராலும் வன்னியின் நிலையை மாற்ற முடியாது என்பதே உண்மை. ஆகவே பேச போனால் ஆகக்குறைந்தது யார் இதில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சில தமிழர்களாகவாவது இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்தேசிய அமைப்புக்கே உந்தகொதிகொதிக்கிறனிங்கள் எங்கடை ஆசை டக்கு , கருணா, சங்கரி போயிருந்தால் உஃ உஃ உஃ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய அமைப்புக்கே உந்தகொதிகொதிக்கிறனிங்கள் எங்கடை ஆசை டக்கு , கருணா, சங்கரி போயிருந்தால் உஃ உஃ உஃ :lol:

அங்க போயும் எனக்கு வடக்கு வேண்டும் ,எனக்கு கிழக்கு வேண்டும் சண்டை பிடித்திருப்பாங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்தியாவும் அதையும் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் எட்டப்பர் கூட்டத்திற்கு என்றும் நட்பு நாடு எந்தியா :unsure::blink:

நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.
-சிதம்பரம் http://www.alaikal.com/news/?p=14962

புலிகளின் பலமும்..எங்களுக்கெண்டு ஒரு கூட்டணியும் இல்லாட்டால்..டக்கரும் கருப்பும் தேவையை ஏற்படுத்தலாம்.

இந்திய அரசே உன் படையையும் பரிவாரங்களையும் எம் தாயக மண்ணிலிருந்து உடனடியாக விலக்கிக்கோ ....உன் போர்க்கப்பல்களையும் எம் ஈழக் கடற்பரப்பில் இருந்து உடனடியாக திருப்பு........ஈழத்தை உடனடியாக ஆதரி அங்கீகரி.... இல்லாவிட்டால் எம் விடுத்லை நெருப்பில் தமிழ்புரட்சியில் நிலைகுலைந்து தடுமருவாய் ........ இந்தியாவின் தலைஎழுத்தை தீர்மானிப்பவர்கள் தமிழர்களே... புரிந்து கொள் பாரதமே....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.