Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: இலங்கை உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவம் தொடர்ந்து அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இலங்கை அரசு உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

தினமலர்

Edited by Bctamilan

  • கருத்துக்கள உறவுகள்

துண்டிக்க வேணும்தான்.. ஆனால் உறவை அல்ல..! :lol::lol:

ஈ மெயில் இன்டர்நெட் என்டு உலகம் எங்கயோ போய் விட்டது...இந்த ஆள் இன்னமும் தந்தி அடிக்கிறதிலயே நிக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

உறவை துண்டிக்க வேணும்தான் - தமிழ் மக்கள் உன்னோட உறவை அடியோடு துண்டிக்கவேணும் .

அந்த ஆள் உயிருக்குதான் தந்தி அடிக்கனும் - தேர்தல்ல தோற்க்கனும் மவனே அவன் துடிச்சு துடிச்சு சாவனும்.

  • கருத்துக்கள உறவுகள்

துண்டிக்க வேணும்தான்.. ஆனால் உறவை அல்ல..! :lol::lol:

உறவை துண்டிக்க வேணும்தான் - தமிழ் மக்கள் உன்னோட உறவை அடியோடு துண்டிக்கவேணும் .

அந்த ஆள் உயிருக்குதான் தந்தி அடிக்கனும் - தேர்தல்ல தோற்க்கனும் மவனே அவன் துடிச்சு துடிச்சு சாவனும்.

NO COMMENT

தந்தியின் நாயகனே! கருணைக்கடலே!! என்றெல்லாம் போஸ்டர் அடிக்கலாம். அதைவிட வேறென்ன பயன்.

தமிழருக்கு தமிழர்களுள்ளம் பகைவர்கள் பலருள்ளனர் துரோகிகள் பலருள்ளனர். ஆனாலும் இவர்களெல்லோரையும் விட கருணாநிதி மிகக்கேவலமான தமிழனாக தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். தமிழர்களுள் மிக இழிவான தமிழனான 'இழிதமிழ்மகன்' கருணாநிதி என அழைப்பது பொருத்தமானது.

தந்தி....................???? :wub::lol:

நேரத்திற்கு தந்தி அடிச்சிருந்தால் கூட இவ்வுளவுக்குப் போயிருக்கும்.

இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயாவை, அம்மா தான் கவனிக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்தால் இராஜதந்திர உறவுகளை துண்டிக்க வேண்டும்-பிரதமர் மன்மோகனுக்கு கருணாநிதி தந்தி

வீரகேசரி நாளேடு 4/18/2009 8:20:55 AM - இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை தொடர்ந்தும் நிராகரிக்குமாக இருந்தால் இலங்கையுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடன் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க., இலங்கை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே முதலமைச்சர் கருணாநிதி மேற்படி அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு அவர் நேற்றிரவு தந்திகளை அனுப்பி வைத்துள்ளார்.

மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகரும் வகையில் மோதல் இடைநிறுத்தம் நீடிக்கப்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள கருத்தினை வரவேற்றுள்ள கருணாநிதி, இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வர வேண்டும் என்று இந்தியா விடுத்து வரும் வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மதிக்காது விடுமாகவிருந்தால் அல்லது அதனை நடைமுறைப்படுத்தத் தவறுமாயின் அந்நாட்டுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடன் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கருணாநிதி அவர்களே.. வேண்டுகோள்களையும் தந்திகளையும் தந்து கொண்டிருக்கிற அதேவேளை உங்களால் ஆன காரியங்களையும் ஆற்றலாமே.

சிறீலங்காவுடனான உறவைத் துண்டிக்கச் சொல்லி சோனியா காந்திக்கு தந்தி அனுப்புறீங்க. நல்ல விசயம். ஆனால் சென்னையில் சிறீலங்கா துணைத்தூதுவராலயத்தை ஏன் இன்னும் நடத்த அனுமதிக்கிறீங்க. 1980 களின் நடுவில் அத்தூதுவராலயத்தை மூடி ஜெயவர்த்தனா அரசுக்கு தமது கட்டணத்தை தமிழக மக்கள் தெரிவித்ததை ஏன் உங்களால் இப்ப செய்ய முடியல்ல...??!

அடிப்படையில் நீங்கள் செயற்படவில்லை. வெறும் அறிக்கைகளால்.. வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுகின்றீர்கள் என்று மக்கள் உங்களைத் திட்டுவதற்கு இதுதான் காரணம்..!

இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா'-சத்யராஜ்

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஞாபகங்கள். இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரிக்கிறார் விஜய்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. பாடல்களை கவிஞர் வாலி வெளியிட, வைரமுத்து பெற்றுக் கொண்டார். விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார்.

விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

இந்தப் பட நாயகன் விஜய்யைப் பார்க்கும் போதும், இந்த விழா நடைபெறும் இடத்தைக் கவனிக்கும்போதும் எனக்குள் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன.

நான் முதன்முதலாக சினிமா வாய்ப்பு கேட்டு நின்ற இடம் இந்த ஏவி.எம்.ஸ்டூடியோதான். முதன்முதலாக புரொடக்ஷன் மானேஜர் வேலை பார்த்ததும் இதே ஏவி.எம்.ஸ்டூடியோவில்தான். நான் நடித்த `வேதம் புதிது' படத்தை எம்.ஜி.ஆர். பார்த்தது, பாராட்டியதும் இதே ஏவி.எம்.ஸ்டூடியோவில்தான். இப்படி பல ஞாபகங்கள் என்னைக் கடந்து போகின்றன.

விஜய் என்ற பெயரை சொல்லும்போது, எனக்கு விஜயனன் என்ற பெயர் ஞாபகம் வருகிறது. யார் இந்த விஜயனன் தெரியுமா நண்பர்களே... ஒரிஸ்ஸாவில் இருந்து இலங்கைக்கு போய் குடியேறிய முதல் சிங்கள மன்னன்தான் இந்த விஜயனன். அதற்கு முன்பே தமிழர்கள் அங்கு குடியிருந்தார்கள். தமிழ் மன்னர்கள் பெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆணடார்கள். இதற்கு ஆதாரமாக சிங்கள அரசே விஜயனன் என்ற மன்னனின் தபால் தலையைக் கூட வெளியிட்டுள்ளது. ஆக, வரலாற்றுரீதியாக இலங்கை தமிழர்களின் பூமி.

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதுபோல் இன்று சிங்கள அரசு நம் தமிழர்களை விரட்டுகிறது. இலங்கை மண்ணுக்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தமிழர்கள்தான்.

ஐயா...நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க... உண்மையைப் பேசுறேன்... சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன்.

இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

அனைத்து தலைவர்களும், கலைர்களும் ஒன்று சேர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். அதில், அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும்கூட கலந்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

http://thatstamil.oneindia.in/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா.....

தங்களைப்போல் சிலராவது தமிழகத்தில் இருப்பதால்தான் நாம் சோர்வுறாதிருக்கிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.