Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?

uk_20090418001.jpg

பனியுறை தேசத்துப்

பாராளுமன்ற வாசலுக்குள்

பரமேஸ்வரன்...!

சாவோடு தினம்

குருதிச் சேற்றோடு

சாகும் இனத்தைச்

சாக்கொண்டு போகாமல்

சாகும் வரை விரதமுடன்....

சத்தியனே பரமேஸ்வன்

செத்துவிடலாம் போலிருக்கிறது.

உனையும் திலீபன் போல

இழந்து போவோமோ ?

பயம் நெஞ்சுகளில்

நெருப்பின் கனதியோடு.....

சொகுசுக் கதிரைகளுக்குள்

சொர்க்கத்தைக் காண்கின்ற

சொக்கன்கள் இங்கும்

அதிகம் தோழனே....!

இவர்கள் வைத்த வினை

ஈழத்தமிழர்களின் இத்தனை விதிக்குமாய்

இட்ட வினை.

இதையறுத்து எமக்காய்

ஒளிதருவர் என்ற நம்பிக்கையின்

கடைசித் துருப்பாய்

உன்னையுருக்கி உணவுறுத்து

உணர்வோடு இன்னும்

அனைத்துலகம் மீதான

நம்பிக்கையொடு காத்திருக்கும் நண்ப....,

அழிவையெமக்கு ஆயுளாய்த்

தந்தவரின் வாசலிலே

இழியாத் தமிழனாய்

"சாவைத் தடு இல்லையேல் - என்

வாழ்வை எடு"

என்று சாகும் வரை நோன்புற்ற

சத்திய ஒளி நீ.

எங்கள் சந்ததியின் விதி நீ.

தமிழன் அழிந்திடுவான்

தமிழரின் தானையின்

தலைவன் முடிந்திடுவான்

விட்டது தொல்லை

பழையபடி உல்லாசம் ஏற்றுமதி இறக்குமதி

எல்லாமும் உண்டென்ற

நம்பிக்கைகளோடிருக்கும்

உலகின் முகத்தில் உன் நோன்பு

உறுத்தல்தான் இன்று.

பொறுத்திருப்போம் ஓர்

பொன்னினிய பொழுதுண்டென்று

பொறுமை காக்க முடியாமல்

பொழுதொரு நிலமையாய் நீ

பொலிவிழந்து போகிறாய்.

இன்னும் பொறுத்திருந்து

எதைப் பெறுவோம் ?

புரியவில்லைப் பரமேஸ்வரா புரியவில்லை....!

வேண்டாம் எழுந்துவாவென்று

அழைத்துன்னைப் போய்விடத்தான்

அன்னையின் உணர்வோடு

ஆன்மா துடிக்கிறது.

ஆயினும் அடையும் வரை எல்லையை

அசையேன் என்ற உன்னுரம்

அதையும் தடுக்கிறது.

நாளை புலரும் நாளிலாவது

ஐக்கிய இராச்சியம் தன்

ஆணவம் தொலைத்து உன்

ஆயுளை நீட்டுமா ?

எம் அன்னை மண் அழுகையை நிறுத்துமா ?

19.04.09 (இரவு 00.22)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருடாக்கப்பட்ட மனிதர்களும். செவிடாக்கப்பட்ட உலகத்தில் வாழும் நாம் இனியும், இன்னும் இவர்களின் அனுதாபத்துக்காய் காத்திருப்பதும். நண்பர் பரமேஸ்வரன் அவர்களின் உண்ணா நோன்பும் நாளைய சரித்திரதை தாமதாக்குமேயன்றி நிச்சயம் எதையும் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லை.

வன்னியில் புலியே உன் ஆயுதத்தை கீழே போடு என்கின்றார்கள், புலத்தின் தமிழினமே புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு பேசு என்கின்றனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடில்லை,!

இப்படிப்பட்டவர்கள் எமக்காய் பேசுவார்களா? எமக்காய் குரல் தருவார்களா? குற்றுயிராய் கிடக்கும் இந்த பரமேஸ்வரன் மீது இரக்கம் தான் காட்டுவாரா? அகிம்சை போதித்த புத்தனும் காந்தியும் இருந்த மண்னே அன்று திலீபனை கைவிட்ட போது அரைக்கிலோ இரக்கம் என்ன விலை என்று கேட்க்கும் இந்த பிரித்தானியாவில் இவை எடுபடுமா?

இவை என் அதங்கம்! எதுகுமே செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?

uk_20090418001.jpg

-------

-------

பொறுத்திருப்போம் ஓர்

பொன்னினிய பொழுதுண்டென்று

பொறுமை காக்க முடியாமல்

பொழுதொரு நிலமையாய் நீ

பொலிவிழந்து போகிறாய்.

இன்னும் பொறுத்திருந்து

எதைப் பெறுவோம் ?

புரியவில்லைப் பரமேஸ்வரா புரியவில்லை....!

-------

நாளை புலரும் நாளிலாவது

ஐக்கிய இராச்சியம் தன்

ஆணவம் தொலைத்து உன்

ஆயுளை நீட்டுமா ?

எம் அன்னை மண் அழுகையை நிறுத்துமா ?

19.04.09 (இரவு 00.22)

நிச்சயம் பரமேஸ்வரன் பாதுகாக்கப் படவேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருடாக்கப்பட்ட மனிதர்களும். செவிடாக்கப்பட்ட உலகத்தில் வாழும் நாம் இனியும், இன்னும் இவர்களின் அனுதாபத்துக்காய் காத்திருப்பதும். நண்பர் பரமேஸ்வரன் அவர்களின் உண்ணா நோன்பும் நாளைய சரித்திரதை தாமதாக்குமேயன்றி நிச்சயம் எதையும் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லை.

வன்னியில் புலியே உன் ஆயுதத்தை கீழே போடு என்கின்றார்கள், புலத்தின் தமிழினமே புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு பேசு என்கின்றனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடில்லை,!

இப்படிப்பட்டவர்கள் எமக்காய் பேசுவார்களா? எமக்காய் குரல் தருவார்களா? குற்றுயிராய் கிடக்கும் இந்த பரமேஸ்வரன் மீது இரக்கம் தான் காட்டுவாரா? அகிம்சை போதித்த புத்தனும் காந்தியும் இருந்த மண்னே அன்று திலீபனை கைவிட்ட போது அரைக்கிலோ இரக்கம் என்ன விலை என்று கேட்க்கும் இந்த பிரித்தானியாவில் இவை எடுபடுமா?

இவை என் அதங்கம்! எதுகுமே செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றம்!

எங்களுக்காக இந்த நாடுகள் எதையும் செய்யுமென்ற நம்பிக்கையில்லை. ஆயினும் இந்த நாடுகள் ஏதாவெதொரு தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையில் பரமேஸ்வரன் போன்ற இளையோரை வருத்துகிறோம். தமிழனின் 50ஆண்டுகால அகிம்சைக்கு உலகம் தந்தது இதுவரை ஏதென்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

எல்லாருக்கும் நிதர்சன் உங்கள் போல் ஆதங்கப்படத்தான் முடிகிறது. அகிம்சையைத் தூக்கியெறிந்துவிட்டு எங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்துவது சிறந்தது.

இன்னும் எங்களுக்கிடையே இருக்கிற தலைமைக் கிழங்கள் (புலத்தில்) திருந்தாமல் எல்லாம் தங்கள் மடிக்குள்ளிருந்துதான் எல்லாம் நடக்க வேணும். இந்தக் கிழங்களை மீறி தனித்தனியாய் தன்னின உணர்வோடு எடுக்கப்படுகின்ற கவன ஈர்ப்புகளை தடுக்கிறதில் முனைப்போடு குழப்பும் குழப்பவாதிகள் முதலில் தள்ளி நின்றாலே பாதிக்கண்டம் தாண்டலாம்.

பரமேஸ்வரன் போன்ற இளைஞர்களின் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டைகள் இன்னும் குறையாமல் இருப்பதை மாற்றவும் உரியவர்கள் முயற்சியெடுக்க வேண்டும்.

Edited by shanthy

தன் இளமை காலம் அதை தன் மனம் போன போக்கில் வாழ்ந்து தன் வாழ்க்கையை

சந்தோசமாக வாழ்ந்து முடிக்க வேண்டிய வயதில் இப்படி வீர மனம் கொண்டு பிறந்தால்

சாவு ஒரு நாள் வந்தே தீரும் அதை நான் என் தொப்புள் கொடி உறவுகளின் வடிவிற்காய்

தியாகம் செய்கிறேன் என்ற உயர்;ந்த உள்ளத்தோடும் தெளிந்த சிந்தனையுடனும் சிரித்த

முகத்துடனும் தன் வெற்றிப் பயணத்தை தொடரும் பத்தரை மாதத்துத் தங்கம் எங்கள்

பரமேஷ்வரன் நிச்சயம் இன்னும் பற்பல ஆண்டு சுகத்தோடு வாழ்வான். இவனைப் போல்

ஏனைய நாடுகளிலும் உண்ணா நோன்பு இருக்கும் அத்தனை உறவுகளையும் எங்கள் இதயங்களில்

சுமந்து நிற்கிறோம்

தமிழ் சிறி உங்கள் கவிதை அற்புதம்

இதை கட்டாயமாக பரமேஷ்வரன்

அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது புதுமை உலகம். அகிம்சை போராட்டங்கள் யாராலும் கணக்கில் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. ஆயுதங்கள் தான் பேசுகின்றன. அதற்காக பரமேஸ்வரனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை. நிலைமை இப்படி உள்ளது . இது எனது தனிப்பட்ட கருத்து. மனிதாபிமானற்ற உலகில் வாழ்வதை எண்ணி வெட்கப்பட தான் முடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக இந்த தைரியத்தமிழன் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டும் அது தான் எனது விருப்பம்

அண்ணாவின் நிலை மிகவும் கவலையளிக்கின்றது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்த தைரியத்தமிழன் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டும் அது தான் எனது விருப்பம்

மெளனம் பேசிக்கொள்கிறது சர்வதேசம். :icon_idea:

அகிம்சையை வேண்டிய தமிழினத்தின் முடிவின் நிலமையை கொல்கிறது சர்வதேசம்.

மனிதாபிமானற்ற உலகில் வாழ்வதை எண்ணி வெட்கப்பட தான் முடிகிறது.

மானிடராய்ப் பிறந்தற்காக வெட்கப்பட வேண்டிய தருணமிது. மனிதம் பேசும் நாடுகளும் மனிதவுரிமை பேசும் நமது மாணிக்கங்களும் துளித்தளியாய் தமிழினத்தை உலகெங்கிலுமிருந்தும் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சர்வதேசம் வெறும் பேச்சுக்குத்தான் மனிதாபிமானம் பற்றிக்கதைக்கிறது வேற ஒண்டுமே இல்லை யார் செத்தா என்ன கிடந்தால் என்ன என்டு இருக்கிறானுகள்

இவ்வளவு தொலைவிலிருந்து எம்மக்கள் அவலங்கள் கேட்டு ஆத்திரமடைகிறேம், லண்டனில் இத்தனை ஆயிரம் மக்களுக்கமுன்னால் பரமேஸ்வரன் தனது உயிரைத் தினமும் மெழுகாய் உருக்கிக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்ல? அவரின் முதலாவது கோரிக்கையாவது நிறைவேற்றி பரமேஸ்வரனின் உயிர் பாதுகாக்கமாட்டுதா இந்த பிரித்தானிய அரசாங்கம் என்ற ஆதங்கத்துடன் தினமும் சென்று ஓங்கிக் குரல் கொடுக்கும் ஆதரவாழர்களில் நானும் ஒருவன்.

அங்கு தினமும் வருகைதரும் ஆதரவாழர்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள், ஆதரவு தருவதற்காக அங்கே கூடிய ஒவ்வேரு துளி நேரத்தையும் ஓரமாகவும், பின்புறமாகவும் கூடி நின்று சிரித்துக் கதைத்து வீண்ணாக்காமல் முன் பக்கமாக வந்து உங்கள் குரல்களை ஓங்கி உரக்க மற்ற சமுதாயத்தினருக்கு வெளிப்படுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.