Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐ.நா பாதுகாப்புச் சபை கோரிக்கை!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நியூயோர்க்கில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிற்பாடு பாதுகாப்பு சபையின் தலைவர் குளூட் கெலர் (Claude Heller) இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் உதவவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வை ஆரம்பித்து இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பகுதியில் மக்களை விடுவிக்காது வைத்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதேநேரம் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் சென்றடைவதை அனுமதிக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபையின் தலைவர் குளூட் கெலர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : பதிவு

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா கழிவை திங்கும் அய்னா!

உறவுகளே இனியும் இந்த சர்வ தேசத்தை நம்பி பயனில்லை....

அய்னாவையே உள்ளே விட மாட்டேன்கிறான் அவனுக்கு இவன் வக்காலத்து! வேலிக்கு ஓணான் சாட்சியாம்.

  • கருத்துக்கள உறவுகள்

iநா வுக்கென்ன விசரா

iநா பொய்நாவாக சைனாதான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா கழிவை திங்கும் அய்னா!

  • தொடங்கியவர்

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தனக்கு கவலை அளிப்பதாக ஐ.நா.சபை செயலாளர் பான் கி மூன் தெரிவித்து உள்ளார்.

போர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கண்காணிக்க ஐ.நா. சபை குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குழு போர் நடக்கும் பாதுகாப்பு பகுதிக்குள்ளேயே சென்று கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இப்ப யார் யாருக்கு கையூட்டு தருகின்றனர்?

ஏண்டா நீங்கள்ளாம் ஓடி ஒளிந்து விளையாடும் களமா எங்கள் வன்னி நிலம்?

நீங்களாக முடிவு எடுக்காமல் புலம் பெயர்ந்த தமிழரிடம் ஆலோசனை கேளுங்கள் எங்களுக்கும் உரிமை தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் எத்தனைபேர் என்று கணக்கு வெளியிடும் இந்த ஐ.நா எங்காவது ஓரிடத்திலாவது அதற்குக் காரணம் சிறிலங்கா அரசின் தாக்குதல் தான் என்பதை இதுவரை தனது அறிக்கைகளில் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. நீங்கள் வாழும் நாடுகளில் எங்காவது பத்திரிகைகளிலோ அல்லது வேறு அறிக்கைகளிலோ பொதுமக்கள் பலியாவதும் காயமடைவதும் சிறிலங்கா இராணுவத்தின் கொடுர கொத்தணிக்குண்டுகளின் தாக்குதலால்தான் என்று வெளியாகியிருந்தால் அச் செய்தியின் தமிழாக்கத்தை இங்கே தயவுசெய்து இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல ஐ.நா யார்? எங்கள் வேதனைகளில் பங்கு கொண்டவர்களா? புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்களா? தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படும் பொழுது ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொன்னார்களா? ஆழிப் பேரலை நிதியை சிறிலங்கா கபளீகரம் செய்த பொழுது வாய்திறந்து பேசினார்களா? கொழும்பு வரை வந்த ஐ நா செயலர் ஆழிப் பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத் தீவுக்கு வந்தாரா?அல்லது மாமனா? மச்சானா?புலிகள் தமிழர்களின் தேசிய இராணுவம் அவர்களை யாரும் கட்டுப் படுத்த முடியாது.அமெரிக்க இந்திய சீன பிரித்தானிய ரஸ்ய மற்றய நாடுகளின் இராணுவத்தையோ பாதுகாப்பு படைகளையோ எப்படி அயுதங்களைக் கீழே போடு என்று சொல்ல முடியாதோ அதே விதி தமிழீழத்திற்கும் பொருந்தும்.

  • தொடங்கியவர்

ஐநாவையே உள்ளே விடமாட்டேன்கறான் மகிந்த இவன் அவனுக்கு வக்காலத்து வாங்கறான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தோல்வி அடைய செய்வதில் ஐ நாவுக்கும் பங்குண்டு. ஐ.நா வேறு யாருமல்ல வெள்ளைகளின் கூட்டு.

தமிழராகிய நாம் இப்போதாவது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் இந்தத் உலகத்தில் எந்தச் சபையும் எந்த நிறுவனமும் நடுநிலைமையானவை அல்ல, ஒவ்வொன்றும் அவர் சார்ந்தவர்க்கு உதவுவதற்காவவே நடுநிலைமை எனும் போர்வையை போர்த்திக்கொண்டு பல இனங்களை பல நாடுகளை ஏமாற்றுகின்றன. அதில் எமது இனம் உச்சக்கட்ட பாதிப்பை அடைந்திருக்கின்றது. சீன இராணுவ வல்லுனர்களின் கோட்பாடுகளில் ஒன்றான 'எந்த ஒரு ஆயுதப் போராட்டமோ உரிமைப் போராட்டமோ ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு சமாதானம் பேச்சுவார்தை என்ற அடிப்படையில்காலத்தைக் கடத்தினால் போதும் அந்தப் போராட்டம்தானாகவே அழிந்துவிடும்" என்ற கோட்பாட்டை சர்வதேச மத்தியஸ்தம் என்ற போர்வையில் எம்மீது திணித்தது இந்த சர்வதேசம். ஆனால் அந்தக் கோட்பாடு அவர்களுக்கு வெற்றிகொடுக்கவில்லை என்றதும,; அதை தமிழர்கள் குறைந்தபட்ச சேதாரத்துடன் வெற்றிகரமாக கடந்துவிட்டார்கள் என்றதும் அதை தாங்கிக்கொள்ள முடியாத இந்த ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துமே எம்மக்கள்மீது சீற்றம்கொண்டதன் வெளிப்பாடுதான் தற்போதைய போரும் அவர்களின் பகாகச்சார்பான அறிக்கைகளும்..

  • தொடங்கியவர்

தமிழர்களின் மிகவும் இக்கட்டான சூழலிலும் சீனா இலங்கைக்கு ஆதரவாக இன்று நடந்து கொண்டது வேதனையளிக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.