Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில்அடங்காப்பற்று

Featured Replies

கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே.......

மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில்

http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தமிழர்களை நம்பி மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. போராடி களைத்து விட்ட கனேடிய தமிழினம் - போராட்டம் பற்றி நினைவே இன்றி செயற்ப்படும் வானொலிகள்.

மக்களின் உணர்வுகளை கொச்சபை;படுத்துவதும் மக்களின் மனதில் கவனயீர்ப்பு போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கின்றது. மக்கள் இங்கு கவனயீர்ப்புக்கு வரவேண்டும். ஊடகங்கள், சில அமைப்புக்களுககாகவோ அல்ல! வன்னியில் தினம் செத்து மடியும் எம் உறவுகளுக்காக.! வாருங்கள்.!

வீதி மறியலுக்கு தந்த ஆதரவைப் போல இந்நிகழ்வையும் குழப்பாமல் இருக்க ஆதரவு தாருங்கள்! குறிப்பிட்ட 5000 -7000 வரையான மக்களையே மீண்டும் மீண்டும் காண முடிந்தது.- மிகுதிப் பேருக்கு என்னாச்சு?

யூனிவர்சிட்டி அவெனியூவில் அமெரிக்க துணைத்தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த நிலையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை இன்னோர் கவனயீர்ப்பு வைக்கிறீனமோ? நல்லது. எங்களுக்கு பிரச்சனை இல்லை. நிச்சயம் கலந்துகொள்வோம். ஆனால்... தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வரவேண்டும். மாபெரும் கவனயீர்ப்பு என்று சொல்லிவிட்டு சிலநூறுபேர் தெரு ஓரமாக நின்று சிரித்துக்கொண்டு இருக்க ஏலாது. ஏற்கனவே பல இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளே போட்டுவிட்டார்கள். நிகழ்வை ஒழுங்கமைப்பவர்கள் குறுகிய காலநோக்கில் சிந்திக்காமல் நீண்டகால நோக்கில் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்படுங்கள். துடிப்பும், உணர்வும் மிக்க இளைஞர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு உள்ளே போனால்.. இறுதியில் கிழடுகள் மட்டும் தெருவில் நின்று சுருட்டு பத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகளால் முடியாத......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணவர்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு அவர்களை சிக்கலில் மாட்டி விடக்கூடாது. நாங்கள் அமைதியான முறையில் போராடினால் யாரையும் கைது செய்ய முடியாது. மாணவர்களே சிந்தித்து செயல்படுங்கள். தூண்டுதல்களுக்கு ஆளாகாதீர்கள்....

உங்களுடைய உழைப்பு எம் மண்ணுக்கு இனிமேல் தான் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தமிழர்களை நம்பி மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. போராடி களைத்து விட்ட கனேடிய தமிழினம் - போராட்டம் பற்றி நினைவே இன்றி செயற்ப்படும் வானொலிகள்.

- எந்த வானோலி என்று கூறினால் இனம் கண்டுகோள்ள வசதியாக இருக்கும்

கவனயீர்ப்புக்களை திட்டமிட்டு குழப்புவதற்காக வரும் சில புல்லுருவிகள் பற்றி மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். மாணவர்களின் உணர்வுகளை தூண்டி வேடிக்கைபார்க்கும் குள்ளநரிகள் பற்றி மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

கவனயீர்ப்புக்கு வரும் சிலர் மதுபோதையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எங்களுக்கு உள்ள உரிமைகள், எங்கள் உரிமைகளின் எல்லைகள் - LIMITATIONS இவைகள் பற்றி நாம் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும்.

எமக்காக கத்துகின்றார் அல்லது எங்கள் தேசியக்கொடியை வைத்து இருக்கின்றார் என்பதற்காக அவரை நாங்கள் நம்பக்கூடாது.

எங்கள், எங்கள் நடவடிக்கைகளுக்கு நாங்களே பொறுப்பு. மோட்டுத்தனமாக ஏதாவது செய்துவிட்டு பின்னர் மனம் வருந்தி பிரயோசனம் இல்லை.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காக நாங்கள் எதையும் செய்யலாம் அல்லது சட்டத்தை உடைக்கலாம் என்று செயற்படக்கூடாது. உணர்வுகளை தூண்டுபவர்கள், பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றி விழிப்பு அடைந்து கொள்ளவேண்டியது முக்கியம்.

கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர்களும் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டன். அன்றைய கைதுகளுக்கு எம்முடைய மக்களே காரணம். இளைஞர்கள் வீதியை மறிக்கத் தொடங்கியவுடன் எல்லா மக்களும் அவர்களுடன் சேர்ந்திருந்தால் காவற்துறை அவர்களைக் கைது செய்திருக்காது. 100 பேர் மறிக்க 500 பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள

எந்த கருத்து வேறுமையும் இல்லாது அனைவரும் வாருங்கள் வானொலிகள் குழப்பினால் என்ன குழப்பாவிட்டால் என்ன!

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியுடன் இடம்பெற வாழ்த்துக்கள்!

Edited by Valvai Mainthan

பிற் போடப்பட்டுள்ளதாக தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அடங்காப்பற்று நாளை (ஐந்தாம் திகதி ) நடை பேறமாடாது என தமிழ் வன் இல அறிவிக்க பட்டது இது உண்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாத காரணத்தால் பின்போடப்பட்டதாக இணைய வானொலி ஒன்று கூறுகிறது. உறுதிப்படுத்துங்கள். :rolleyes:

சில கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு கால அவகாசம் குடுத்து தள்ளி போடப்பட்டுள்ளது என அறிந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கு மக்கள் மேலே சவாரி இது வரை இல்லாத கால அவகாசம் இனியா?

நம்பும படியாக கதை விடுவது நல்லது!

அடுத்த தடவை சில நூறுபேரையும் எதிபார்க்க முடியாது.

எனக்கு தெரிந்த பலர் (வேலைக்கு விடுமுறை பெற்றோர்) இச்செயலால் கடுப்பாக உள்ளனர்.

யார் தலை யார் வால் என்ற பிரச்சனை இங்கும் தோன்றியுள்ளது போன்றும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.