Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!!

Featured Replies

திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!!

காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பதன் காரணத்தால் அவரை அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு அன்பாக கேட்டுக்கொள்ள வேண்டும். இறுதியாக குமுதத்தில் திருமாவளவனின் நேர்காணலை பாhத்தேன் கூட்டணியை விட்டு வெளியேறினால் தனக்கு பாராளுமன்றில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார் அதற்காக தி மு க வை ஆதரிப்பதன் மூலம் காங்கிரசை ஆதரிக்க முன்வந்துள்ளார். இதைவிட அவர் தமிழர்களுக்காக பாராளுமன்றம் போகாமல் இருப்பதே மேலானது.

உலகத்தமிழர்கள் தருமாவளவனை அன்போடு கண்டிக்க முன்வாருங்கள்;.

அவருடன் தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் - thirumaa@hotmail.com

-----------------------------------------------------

செ.அறிவமுதன்

மாநிலச்செயலாளர்-ஊடகப்பிரிவு.

பொறுப்பாசிரியர் றறற.எஉம.in

அலைப்பேசி எண் - 97101 95787

--------------------------------------------------------

தொல்.திருமாவளவன்

தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எ4எ. நு¡றடி சாலை. அசோகர் நகர்

சென்னை-600083

தமிழ்நாடு. இந்தியா

-------------------------------------------------------

Edited by suryaa

வீண் வேலை. பதிவிக்காக எதையும் செய்யக் கூடிய இழக்கக்கூடியவர்கள். நாளை ஈழததமிழரா யார் அவர்கள் என்று கேட்டாலும் கேட்கக் கூடியவர்கள்.

ஜனா

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உறவுகள் தமது கருத்தை மின்னஞசலூடாக எழுத வேண்டும். தற்போது வெளியேறினால் கூட அது பயனுடையதே. காங்கிரசுக்கு மட்டுமல்ல தமிழினத்தை அழிக்க நினைப்போருக்கும் ஒரு பாடமாக அமையும். முயன்று பார்ப்பதில் தவறில்லைத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சொல்வதை விட தலையை முட்டி சாவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் இக்கட்டான இத்தருணத்தில் எதிர்க்க வேண்டியதில்லை. எமக்கு மேலும் மேலும் நண்பர்களை உருவாக்க வேண்டும் . 30 வருட போராட்டத்தில் நாம் விட்ட மிக பெரிய பிழை நண்பர்களை உருவாக்கவில்லை. நாங்கள் தனிப்பெரும் இனம் என பெருமை பேசியது தான் மிச்சம். எம்மில் ஏற்பட்ட பிரிவினைகளால் தான் நாம் இன்னும் பலம் இளக்கிறோம். ஆகவே திருமாவாவன் போன்ற சிறிய கட்சிகள் யாரோடாவது இணைந்து தான் சில வெற்றிகளை பெறக்கூடியதாக சனநாயக அரசியல் உள்ளது. திருமாவளவன் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்.ஆகவே அவரை உதாசீனப்படுத்தாமல் இருப்பது எமக்கு தான் நல்லது. எமக்கு பல காலமாக அரசியல் எதிரியாக இருந்த செயலலிதாவோடு இருந்த வை.கோ எமக்கு எப்படி ஆதரவாளரோ அதே போல திருமாவளவன் ஏன் இருக்க கூடாது?

மிக தந்திரசாலியான ராமதாஸ் பற்றி யாரும் பேசாதது அதிசயத்திலும் அதிசயம் தான்.? இவரை G.L.பீரிசுடன் தான் என்னால் ஒப்பிட முடியும்.

தயவு செய்து யாரும் திருமாவை இங்கே திட்ட வேண்டாம்....திட்டுவதற்கு உங்களுக்கும் எனக்கும் எந்த அருகதையும் இல்லை...அவர் ஒன்றும் உங்களது வேலைக்காரன் அல்ல நீங்கள் நினைத்தபடி செயற்பட.......தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று இவ்வளவு அக்கறை இருந்தால் நீ ஏன் நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினாய்? என்று அவர் எங்களை திரும்ப கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது??

வீண் வேலை. பதிவிக்காக எதையும் செய்யக் கூடிய இழக்கக்கூடியவர்கள். நாளை ஈழததமிழரா யார் அவர்கள் என்று கேட்டாலும் கேட்கக் கூடியவர்கள்.

ஜனா

உங்களை போன்றவர்களுக்கு ஆதரவாக இருந்தது தான் திருமா செய்த ஒரே தவறு

ஒரு நாள் வரும்... திருமாவையும் திமுக வையும் போற்றவும், ஜெயாவை மீண்டும் திட்டவும்.... ஆனால் தமிழக மக்களின் உணர்வினை பரிசீலிக்கும் தேர்தலின் முடிவில், இந்தியா ஈழத் தமிழர்களின் முற்றிலுமான எதிரியா இல்லையா என்பதை தீர்மானிக்க எமக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்

திமுக வெற்றி பெற்றால்.: முழு இந்தியாவும் எம் எதிரி

இல்லையெனில்: தமிழகம் எம் தொப்புள் கொடி உறவுகள்

விடுதலைப் போரிற்குத் தான் 50,000 பேர் தேவை....ஒரு நாட்டை அழிக்க அவ்வளவு தேவை இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமா அண்ணன் மீதான ஈழத்து மக்களின் அன்பு அவரது போக்கை மாற்றலாம்.

அன்பான வேண்டுகோள் விடுத்துபார்பதில் தப்பில்லையே,

மாற்றங்கள் தானே வாழ்க்கை.

திருமா அண்ணா...ஒரு இனமே உன்னை அழைக்குது..செவிசாய்க்க மாட்டாயா?

  • கருத்துக்கள உறவுகள்

திருமா அண்ணன் மீதான ஈழத்து மக்களின் அன்பு அவரது போக்கை மாற்றலாம்.

அன்பான வேண்டுகோள் விடுத்துபார்பதில் தப்பில்லையே,

மாற்றங்கள் தானே வாழ்க்கை.

திருமா அண்ணா...ஒரு இனமே உன்னை அழைக்குது..செவிசாய்க்க மாட்டாயா?

முயற்சிப்பது ஒன்றே இன்றைய முயற்சியாகும். முடியாமலா போகும்..............

ம்ம்ம்ம்ம்ம்.... திருமாமாமாமாமா........... கக்கக்கப்போ! ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பிப் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா, இன்று ஈழம் அமைத்துத் தருவேன் என்கிறார். நம்பிக்கை வைக்க வேண்டிய இடம் அதுவல்ல. தமிழ்நாட்டுத் தமிழரிடம் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.

நாம் என்ன செய்ய முடியும். அவரே தன் தலைமேல் மண்வாரி கொட்டுகிறார். அவர் தான் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிவோம் என்றார். இன்று அவர்களுடன் நீண்டகால உறவு இருக்கின்றது. இவர் மறந்தாலும் காங்கிரஸார் இணைந்து பணியாற்றுவர்களோ தெரியாது.

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.