Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே…

Featured Replies

தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே…

இவ் விடயம் 09. 06. 2009, (வியாழன்), தமிழீழ நேரம் 5:17க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், விசேட செய்தி

உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது).

இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் இந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், பொய்யுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்… அது இந்த உலகறிந்த உண்மையும் கூட.

பயங்கரவாதமென்று பச்சைச் சாயம் பூசி, பாரெல்லாம் சென்று, தங்கள் பக்தாசலங்களிடம் படைவலுத் திரட்டி ஒரு தேசிய இனத்தையே பாழ்படுத்தி அழித்தொழித்த பெருமை இந்த அண்டப் பெருவெளியில் இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறொருவருக்குமில்லை.

தம் தாய் நிலத்தினை விழுங்கும் இராட்சத பூதத்திடமிருந்து தமிழ் ஈழத்தை விடுவிக்க அதன் விடுதலைக்காக, பெரும்பான்மையினரால் அடிமைப்படுத்தப்படும் ஒரு இனத்தின் சுதந்திரத்திற்க்காக, அவர்களின் அரசியல் விருப்பங்களை வென்றெடுப்பதற்க்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை அழிக்க அகிலத்தைத் திரட்டியது இலங்கை. அதில் வெற்றி பெற்றதாக இப்போ இறுமாப்பும் கொள்கிறது.

இலங்கை அரசின் இந்தப் போர்க் கச்சேரிக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்றவை ஆயுதங்களை வழங்கிய பக்க வாத்திய கர்த்தாக்கள்.

அத்தோடு அணிசேர் கலைஞர்களாக (தமிழக முதலமைச்சர் கலைஞர் உட்பட), ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் போன்றவையும் பங்கேற்றன. இவர்களுடன் மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகளும் மறைமுகமாகச் சுருதி சேர்த்து ஆதரவாக ஆலவட்டம் பாடின.

இதற்கெல்லாம் ஆதாரமாக பிரிட்டனின் பிரபல பத்திரிகையான த டைம்ஸ் பத்திரிகை அண்மையில் பல ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் சுமார் 13.6 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் மதிப்புள்ள இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது. ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்ச் செல்வன் மரணத்தின்போதே…

தங்களுக்கெதிரான யுத்தத்தை இலங்கை அரசு முன்னெடுக்க, அகிலமே திரண்டு நின்று இலங்கை அரசுக்கு முட்டுக் கொடுத்து உதவுகின்றது என்பதை, தமிழீழ விடுதலைப் புலிகளுகளும் அறிந்திருந்தனர். அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது அவர்களதைப் பூரணமாகப் புரிந்து கொண்டனர்.

அத்தோடு தங்களுக்கெதிராக குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், இந்தியாவின் செயற்பாடுகளையும் புலிகள் துல்லியமாகக் கணிப்பிட்டிருந்தனர். இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆயுத ஆளணி வழங்கல் சேவைகளை உலகுக்கு வெளிக் கொணரவும் தலைப்பட்டனர்.

அதன் வெளிப்பாடே 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வவுனியா வான்படை கட்டுப்பாட்டுத் தளத்தின் மீது வான்புலிகளும், கரும்புலிகளும் இணைந்து தாக்குதல் நடாத்தி, அங்கிருந்த கண்காணிப்பு ராடர் கருவிகளை அழித்தனர். அத்தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் காயமடைந்தனர். இந்தச் செய்திகள் மெல்ல மெல்ல வெளியே கசிந்தன.

இந்தியா தந்த ராடார் கருவி…

இந்தக் காலத்தில் இலங்கை மகா உத்தம அதிபர் எனப்போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச விடுத்த அறிக்கையொன்றில் “இந்தியா தந்த ராடர் கருவி, தாக்குதலுக்கு வந்த புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தியா சிறிலங்காவுக்குக் கொடுத்தது (2 Dimension) ராடர் கருவி. இந்தியத் தயாரிப்பான இந்த (2 Dimension) ராடர் கருவி புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது என்பதால், (3 Dimension) ராடர் கருவியை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து சிறிலங்காவுக்குக் கொடுத்ததும் நீங்களறிந்ததே.

இப்படி சர்வதேசத்து சக்திகளின் உற்ற துணையோடு இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த முன்னெடுப்பை விடுதலைப் புலிகளும் முழுமையாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்களும் தங்கள் யுத்த வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டார்களென்று படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலப் பரப்பினைப் பாதுகாப்பதை விட இலங்கை படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதிலேயே அவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர் என்றும் கூறுகின்றனர்.

கிளிநொச்சி்யில் இடம்பெற்ற தற்காப்புத் தாக்குதல்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 200 வரையான புலிகளை மட்டுமே பயன்படுத்தியிருந்த போதிலும், இலங்கைப் படையினருக்கு அதிகளவில் இழப்புகளைக் கொடுத்தனர். அத்தோடு ஆசிய சக்திகள், உலகின் பிறநாடுகளின் அணுசரணையோடு தம்மோடு மோதுவதைத் தனியான ஆயுத சக்தியால் மட்டும் எதிர்கொள்ள முனையவில்லை. இதனை அரசியல், இராஜதந்திர முறையில் அனுக, அதற்கு அழுத்தங்களை கொடுக்கும் பொறுப்பை புலம்பெயர் தமிழரிடம் விட்டிருந்தனரென்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றனர்.

கொல்லப்பட்டது 70000 தமிழர்கள்

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் 70000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் அடக்கம். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூட ஐ.நாவிலுள்ள ஐயாக்கள் சிலரும், கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் இலங்கைக்குச் சார்பாயிருந்து எண்ணிக்கையைக் குறைக்கவே முயற்சிக்கிறார்கள்.

பாதுகாப்பு வலயமென இலங்கைப் படையினர் விரித்த வலை பிணக் குவியலாலும், உடலுறுப்புகளை இழந்து வாழும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில், படுகொலை செய்யப்படும் தமிழர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட எவருமில்லை. பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை. மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை.

பதுங்கு குழிகளுக்குள் இருந்த அப்பாவி மக்களின், அடிப்படை மனித உரிமை குறித்து பேச முடியாவிட்டாலும் குறைந்தது அவர்களின் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இளகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!

அந்த இறுதி நாள்…

பாதுகாப்பு வலயமென்று இலங்கைப் படையினர் விரித்த வலையினுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. மே மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை தொடக்கம் மே மாதம் 18ஆம் நாள் திங்கட்கிழமை வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் சிறிய கால எல்லைக்குள் நடைபெற்றிருந்தன என்பது இப்போ தெரியவருகின்றன.

அதிகளவு மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான விழுப்புண்ணடைந்த அப்பாவி மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக, ஒரு மூன்றாம் தரப்பினுடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றன.

காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரணடைவதற்கு தமிழக, இந்திய, சர்வதேச அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்பது நீங்களறிந்த நிதர்சனம். இதற்கு ‘த டைம்ஸ்’ இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவர் சாட்சியாகவுள்ளார். அவர் தன் கட்டுரையிலும் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவே சூத்திரதாரி..

போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் நாள் சில மேற்குலக மேதாவிகள் ஐ.நாவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்தனர். 13 ஆசிய நாடுகள், 13 ஆப்பிரிக்க நாடுகள், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களால் முறியடித்துள்ளனர்.

குறிப்பாக இதற்கெல்லாம் சூத்தரதாரி எம் பக்கத்து நாடான தமிழினத் துரோக பாரதநாடு தான். இந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோ, ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் மௌனம் சாதித்தனர்.

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலக மேதாவிகளுக்கு எதிராகவும் ஆசிய, ஆபிரிக்கா, கியூபா போன்ற நாடுகளினதும் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை, தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கக் கயிறு இழுப்பில் மேற்குலக மேதாவிகளுக்கேற்பட்ட தோல்வியேதான். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரானது தமிழ் மக்களை விட மேற்குலக மேதாவிகளுக்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் படைத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவு.

பிரபாகரன்… சில முரண்பட்ட தகவல்கள்…

இதனிடையே விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பாக அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சிறிலங்கா இராணுத்தரப்பும் 17, 18, 19ஆம் நாட்களில் தங்கள் தகவல்களுக்கே முரண்பட்ட வகையிலே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டன. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், சர்வதேச புலனாய்வுகளுக்கான பொறுப்பாளர் அறிவரசன் ஆகிய இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் என்பது விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டம் பற்றியும் பூரணமாய் அறிந்தவர்கள் அறிவார்கள். இதில் பெரும்பான்மைத் தமிழருக்கு ஒரு ஐயம். எந்த தகவல் சரியானது, எது தவறானது என்பதானதொரு குழப்பம்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை.

புலிகள் சொல்ல விரும்பும் சேதி!

விடுதலைப் புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப் பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு நுணுக்கமான தகவலை கூற முயல்கிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது ஆய்வாளர்கள் முடிவு.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய மிகப் பெரும் கடமை ஒன்று அனைத்துத் தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன.

ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன!

பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக ‘கொல்லப்பட்ட’ தருணங்கள்!

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வீரச்சாவடைந்து’ விட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல என்பது தாங்களறியாததல்ல.

1984-09-05 ஆம் நாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று இலங்கை பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியானது. சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாக அச்செய்திகள் விபரித்தன.

தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழ்ந்த தமிழர்களிடையே பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. ஆனால் மறுநாள் காலை தமிழகத்தில் மதுரையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் வீட்டிற்கு தலைவர் பிரபாகரன் சிரித்த முகத்துடன் பிரசன்னமானாராம்.

புன்னகையுடன் உள்ளே சென்ற தலைவர் பிரபாகரன் அந்த ஆதரவாளரின் சிறுமியாயிருந்த மகளை தூக்கி வாரி அணைத்துக்கொண்டு “மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல” என நகைச்சுவையாகச் சொன்னாராம் அன்று.

25-07-1989 அன்று பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராசாவுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வன்னியிலிலுள்ள ஆனந்தப் பெரியகுளத்தருகே இருந்ததாகவும், இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் இலங்கை, இந்திய, தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

அன்றைய நாளில் வட-கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், இந்தச் செய்தியை அன்று உறுதி செய்தார். அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரென்பதும், யாரால் இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டாரென்பது ஆனால் இரண்டு நாட்களில் இச்செய்தியில் கொஞ்சம் கூட உண்மையில்லை, தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பதை நாமனைவரும் தெரிந்து கொண்டோம்.

பின்னர் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடந்த நிகழ்வொன்றில் எங்கள் முன் தோன்றினார் தலைவர்.

26-12-2004 அன்று அடித்த சுனாமியின் போது தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சுனாமி பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும

மாறி மாறி குழப்புங்கோ...

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பழைய செய்தி.

இது பழைய செய்தி.

நீங்க சொல்றதைப்பார்த்த இன்னும் நிறய குழப்புறதுக்கு இருக்கு போல? :lol:

சாத்திரி அண்ணா ஓடிவாங்கோ இஞ்வை இவரை பாருங்கோ வியாபாரிகளால் கொல்லப்பட்ட தலைவரை இவர் உயிரோடு இருக்கின்றார் என்கின்றார்.

இனிமேல் கரிகாலன் செத்தார்.

ஆகா இனி அடுத்த துரோகி கரிகாலனா?

குலத் தலைவன் உள்ளான்

குழப்பங்கள் தீருமொரு நாள்

எங்கே மிச்ச ஒப்பாரிக் காரர்களை காணவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா ஓடிவாங்கோ இஞ்வை இவரை பாருங்கோ வியாபாரிகளால் கொல்லப்பட்ட தலைவரை இவர் உயிரோடு இருக்கின்றார் என்கின்றார்.

இனிமேல் கரிகாலன் செத்தார்.

என்னா அறிவு!!!!! உதை மாதிரி நாலு இருந்தால் .... எமது இனத்துக்கு விடுதலை நிச்சயம்!!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .............. உதுகளை கொண்டே தொடர்ந்து வயித்தை நிரப்புங்கோ!!!! உங்களுக்கு தமிழ் மக்களின் பிரட்சனைகளை விட உங்கள் வாழ்வு புலத்தில் பாதிக்கப்படக்கூடாது!!!

ஒரு சந்தேகம் ........

தலைவன் இருக்கிறான் இல்லையா?????????? என்பதா, தமிழ் மக்களின் வாழ்வா? என்பதில் நாம் குழம்புகிறோம்!!!

ஆகா இனி அடுத்த துரோகி கரிகாலனா?

ம்ம்ம்ம்ம்ம்........... துப்புகிறீர்கள், நல்லாக காறித் துப்புங்கோ!!!!!! ஒன்றை மறக்காதீர்கள், நீங்கள் மல்லாந்து படுத்து,மேலே துப்புகிறீர்கள்!!! ............ விழப்போவது??????

விளக்கங்களுக்கு நன்றி! தற்போது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் இல்லை, யாராவது தெரிந்தால் கூறவும்!

இறுதி யுத்தம் என்றுதானே பணம் சேர்த்தார்கள்! மன்னாரில் தொடங்கி நந்திக்கடல் வரை பின்வாங்கவா இந்த நிதி சேகரிப்பு?

7 வருடகாலமாக திட்டமிடல், உளவறிதல், ஆட்சேர்ப்பு, படை திரட்டல், ஆயுதம் வாங்குதல் என பலவழிகளில் தம்மை தயார்ப்படுத்திய ஒரு இறுக்கமான கட்டமைப்பு கடந்த நாலுவாராகாலமாக கண்டவனும் அறிக்கைவிடும் கட்டமைப்பாக மாறிய காரணம் என்ன?

30வருடகால போராட்டத்தில் இராணுவரீதியாக பெற்ற வெற்றியின் அரசியல் வெற்றி முன்று லட்சம் மக்களை அகதிகளாக அநாதரவாக தடுப்பு முகாம்களில் வைக்கவா?

இது நான் கேட்கும் கேள்விகள் அல்ல, காரணம் உங்கள் பதில் நீ துரோகி என்ற முத்திரை குத்தும் என்பதற்காக பொய் சொல்ல வில்லை, அனால் பலர் என்னிடம் கேட்ட கேள்விகளே?

இந்தக் கேள்விகளால் எனக்குள் எழுந்த கேள்வி, 30வருடகால போராட்டத்தின் பலன் என்ன?

பதில் தெரிந்தால் தயவு செய்து கூறவும்!

நான் மல்லாந்தும் துப்பேல்லை கவுண்டும் துப்பேல்லை.. நான் சாதாரண ஆள்.. எனக்கு உந்த உள்குத்து எல்லாம் தெரியாது.. அது தெரிஞ்சவை துப்பிக் கொள்ளட்டும்..

7 வருடகாலமாக திட்டமிடல், உளவறிதல், ஆட்சேர்ப்பு, படை திரட்டல், ஆயுதம் வாங்குதல் என பலவழிகளில் தம்மை தயார்ப்படுத்திய ஒரு இறுக்கமான கட்டமைப்பு கடந்த நாலுவாராகாலமாக கண்டவனும் அறிக்கைவிடும் கட்டமைப்பாக மாறிய காரணம் என்ன?

அதேதான் பொன்ட் அண்ணை கண்டவன் நிண்டவன் எல்லாம் அறிக்கை விடுகினம்..

பத்மநாதன் விடுறார். ...கரிகாலன் விடுறார்.. வழுதி விடுறார்... தயாமோகன் விடுறார்...

இதில கொடுமை என்னவென்றால் சும்மா இங்கை திரிகிறவையும் எல்லோ அறிக்கை எழுதினம்.

போகிற போக்கைப் பார்த்தால் நானும் ஒரு அறிக்கை எழுதி விட்டாலும் விடுவன்.

... 30வருடகால போராட்டத்தின் பலன் என்ன?

பதில் தெரிந்தால் தயவு செய்து கூறவும்!

இதற்கு சரியான பதில் தெரியாது ஆனால் ஒவ்வொரு தமிழனிடமும் முன்னெப்போதுமில்லாத அளவு பொறுப்பு சுமத்தப் பட்டுள்ளது. இதை உணர்ந்து கடமையாற்றாமல் விட்டோமானால் கேள்வி கேட்க கூட மிஞ்சியிருக்க மாட்டம்.

தெற்கிற்கு போர் நகர்கிறது தலைவருக்கு எல்லாம் தெரியும் பெரிய படை பாய்ச்சலுக்கு தயாராக நிற்கிறது என்று சொல்லி வந்த பெருந்தகைகளிடம் இதற்கு பதில் இருக்கலாம்.

என்னா அறிவு!!!!! உதை மாதிரி நாலு இருந்தால் .... எமது இனத்துக்கு விடுதலை நிச்சயம்!!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .............. உதுகளை கொண்டே தொடர்ந்து வயித்தை நிரப்புங்கோ!!!! உங்களுக்கு தமிழ் மக்களின் பிரட்சனைகளை விட உங்கள் வாழ்வு புலத்தில் பாதிக்கப்படக்கூடாது!!!

ஒரு சந்தேகம் ........

தலைவன் இருக்கிறான் இல்லையா?????????? என்பதா, தமிழ் மக்களின் வாழ்வா? என்பதில் நாம் குழம்புகிறோம்!!!

ம்ம்ம்ம்ம்ம்........... துப்புகிறீர்கள், நல்லாக காறித் துப்புங்கோ!!!!!! ஒன்றை மறக்காதீர்கள், நீங்கள் மல்லாந்து படுத்து,மேலே துப்புகிறீர்கள்!!! ............ விழப்போவது??????

ஞானசூனியமே இங்கு சாத்திரி அண்ணாவின் சமீபத்திய தலைப்பில் ஒன்று வியாபாரிகளால் வீழ்தப்பட்டு என் தலைவன் அதில் தலைவர் கொல்லப்பட்டதாக காண்பிக்க வலுவாக கஸ்டப்பட்டிருந்தார். இந்த பதிவை பார்த்தால் அவர் சும்மா இருக்கமாட்டார். பலபெயரிலை வந்து ரவுண்டு கட்டப்போறார் கரிகாலனை :(:(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கங்களுக்கு நன்றி! தற்போது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் இல்லை, யாராவது தெரிந்தால் கூறவும்!

இறுதி யுத்தம் என்றுதானே பணம் சேர்த்தார்கள்! மன்னாரில் தொடங்கி நந்திக்கடல் வரை பின்வாங்கவா இந்த நிதி சேகரிப்பு?

7 வருடகாலமாக திட்டமிடல், உளவறிதல், ஆட்சேர்ப்பு, படை திரட்டல், ஆயுதம் வாங்குதல் என பலவழிகளில் தம்மை தயார்ப்படுத்திய ஒரு இறுக்கமான கட்டமைப்பு கடந்த நாலுவாராகாலமாக கண்டவனும் அறிக்கைவிடும் கட்டமைப்பாக மாறிய காரணம் என்ன?

30வருடகால போராட்டத்தில் இராணுவரீதியாக பெற்ற வெற்றியின் அரசியல் வெற்றி முன்று லட்சம் மக்களை அகதிகளாக அநாதரவாக தடுப்பு முகாம்களில் வைக்கவா?

இது நான் கேட்கும் கேள்விகள் அல்ல, காரணம் உங்கள் பதில் நீ துரோகி என்ற முத்திரை குத்தும் என்பதற்காக பொய் சொல்ல வில்லை, அனால் பலர் என்னிடம் கேட்ட கேள்விகளே?

இந்தக் கேள்விகளால் எனக்குள் எழுந்த கேள்வி, 30வருடகால போராட்டத்தின் பலன் என்ன?

பதில் தெரிந்தால் தயவு செய்து கூறவும்!

நீங்கள் பணம் கொடுத்ததற்க்கான ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

நான் மல்லாந்தும் துப்பேல்லை கவுண்டும் துப்பேல்லை.. நான் சாதாரண ஆள்.. எனக்கு உந்த உள்குத்து எல்லாம் தெரியாது.. அது தெரிஞ்சவை துப்பிக் கொள்ளட்டும்..

அதேதான் பொன்ட் அண்ணை கண்டவன் நிண்டவன் எல்லாம் அறிக்கை விடுகினம்..

பத்மநாதன் விடுறார். ...கரிகாலன் விடுறார்.. வழுதி விடுறார்... தயாமோகன் விடுறார்...

இதில கொடுமை என்னவென்றால் சும்மா இங்கை திரிகிறவையும் எல்லோ அறிக்கை எழுதினம்.

போகிற போக்கைப் பார்த்தால் நானும் ஒரு அறிக்கை எழுதி விட்டாலும் விடுவன்.

வசி,

அங்கு மிஞ்சி இருக்கிற ஆக்கள்தான் அறிக்கை விடலாம்!! மிஞ்சி இருக்கிறதென்றால் ஒன்று, இரண்டு தான்!!!! மிச்சமெல்லாம் .......????????!!!!!!!! தலைவர், நடேசர், புலித்தேவன், இலந்திரையன் ........ என அறிக்கைகள் விடும் எல்லோரையும் இழந்திட்டம்!!!!

இன்னும் சிலர் சிங்கள இராணுவத்திடம் சரண் அடைந்தவர்களும் அறிக்கை விடுகிறார்களாம்!!!!! அது சிங்களவன் விடச் சொல்ல விடுகினமோ, இல்லை சிங்களவனே இவர்கள் பேரில் விடுகிறானோ தெரியாது!!!! அண்மையில் விடுதலைப் புலிகளின் செயலாளர் என்று ஒருவர் அறிக்கை விட்டது தெரிந்திருக்கும். அவர் விட்டது வவுனியாவிலிருந்தாம்!!!! இப்போ அவர் அடித்துக் கதைத்த நமபரில் சிங்களவன் பதில் கூறுகிறானாம்!!!!!!!!

இப்போது புலத்திலிருந்து "இருக்கிறார்" என அறிக்கைகள் விடுகிறவருவைகளுக்கு களத்தொடர்பு எதுவும் இல்லையாம்!!!! ஆனால் அவர் விடாவதே கதிரையை தக்க வைத்துக் கொள்ள!!!!!!!!!!!

இதில கொடுமை என்னவென்றால் சும்மா இங்கை திரிகிறவையும் எல்லோ அறிக்கை எழுதினம்.

போகிற போக்கைப் பார்த்தால் நானும் ஒரு அறிக்கை எழுதி விட்டாலும் விடுவன்.

கட்டாயம் நாம் செய்யவேண்டும் நய்நா... :(

ஏனெண்டால் கனபேர் குளம்பியுள்ளார்கள்... குளப்பட்டுள்ளார்கள்... :)

நம் யாழிலும்...நாமும் சேர்ந்து குழப்புகிறோம். :(

காரணம் பல... நான் சொல்ல விரும்பேல்ல... :lol:

இறுதி யுத்தம் என்றுதானே பணம் சேர்த்தார்கள்! மன்னாரில் தொடங்கி நந்திக்கடல் வரை பின்வாங்கவா இந்த நிதி சேகரிப்பு?

பணத்தை கொடுத்து தமிழீழம் பெற முனைந்த பெரு மந்றும் சிறு முதலாளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் தான். புலிக்கொம்பனியை இழுத்து மூடிவிட்டார்கள். முதலுக்கு மோசமாகிவிட்டது. தமிழீழம் அமைக்க வேலை செய்த வேலைக்காரர்கள் நிறைய செத்துப்போய்டினம். மிச்சமுள்ளவர்கள் பத்தாயிரக்கணக்கில் நாள் தோறும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகினம். இருந்தாலும் ஒன்று இரண்டு பேர் இறுதியில் வெளியில் வரலாம். அவர்களிடம் கொடுத்த காசை திருப்பி கேட்கலாம் அல்லது அவர்கள் மீது மோசடி வழக்கு தொடரலாம். ஆனால் எப்ப சித்திரவதை முடிந்து தண்டனை முடிந்து வெளியில் வருவார்களோ தெரியாது. இயல்பு நிலை திரும்பினவுடன் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமிடங்களை காசுக்கு பதிலா பிரிச்சு எடுக்கலாம். இதில குத்துப்பாடு வரும் ஏனெனில் நிறையப்பேர் காசு போட்டிருக்கினம். எதிர்காலத்தில் இந்த காசுப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து யாழ் இணையத்தில் தனித் திரி போட்டு விவாதித்தால் நல்லது.

கடந்த சில நாட்களாக ஒரு சந்தேகம் மனதினில் வலுக்கிறது ............... "தமிழ் மக்களின் இற்று வரையிலான தேசிய விடுதலைப் போராட்டம், தனி மனிதனுக்காகவா, இனத்துக்காகவா?????????"" ........

அன்று இந்திய இராணுவ காலங்களில் தலைவன், இரு பெற்றோல் போத்தலுகளுடன் திரிந்தானாம். ஏன்????? "எனக்கு ஒன்று நேர்ந்து விட்டால், என் உடலை எரித்து விட்டு, போராட்டத்தை கொண்டு அடுத்த கட்டத்து செல்லுங்கள்" என்று கூறுவானாம்!!

ஆனால் இன்றோ....... அத்தலைவனின் வேண்டுதலைக் கூட மதிப்பளிக்காது, தாம் கட்டிப் பிடித்திருக்கும் பதவிகளுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் ............ ஒரு இனத்தின் எதிர்காலத்தையை சூனியமாக்குகின்றார்கள்!!!!!!!!!!!!

யார் துரோகிகள்!!!!!!!! வரலாறு மன்னிக்குமா????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'டீழனெ007' னயவநஸ்ரீ'துரn 11 2009இ 03:59 Pஆ' pழளவஸ்ரீ'522563'ஸ

விளக்கங்களுக்கு நன்றி! தற்போது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் இல்லைஇ யாராவது தெரிந்தால் கூறவும்!

இறுதி யுத்தம் என்றுதானே பணம் சேர்த்தார்கள்! மன்னாரில் தொடங்கி நந்திக்கடல் வரை பின்வாங்கவா இந்த நிதி சேகரிப்பு?

7 வருடகாலமாக திட்டமிடல்இ உளவறிதல்இ ஆட்சேர்ப்புஇ படை திரட்டல்இ ஆயுதம் வாங்குதல் என பலவழிகளில் தம்மை தயார்ப்படுத்திய ஒரு இறுக்கமான கட்டமைப்பு கடந்த நாலுவாராகாலமாக கண்டவனும் அறிக்கைவிடும் கட்டமைப்பாக மாறிய காரணம் என்ன?

30வருடகால போராட்டத்தில் இராணுவரீதியாக பெற்ற வெற்றியின் அரசியல் வெற்றி முன்று லட்சம் மக்களை அகதிகளாக அநாதரவாக தடுப்பு முகாம்களில் வைக்கவா?

இது நான் கேட்கும் கேள்விகள் அல்லஇ காரணம் உங்கள் பதில் நீ துரோகி என்ற முத்திரை குத்தும் என்பதற்காக பொய் சொல்ல வில்லைஇ அனால் பலர் என்னிடம் கேட்ட கேள்விகளே?

இந்தக் கேள்விகளால் எனக்குள் எழுந்த கேள்விஇ 30வருடகால போராட்டத்தின் பலன் என்ன?

பதில் தெரிந்தால் தயவு செய்து கூறவும்!

ஜஃஙரழவநஸ

நண்பரே கேள்விகள் கேட்பது எளிதுதான்...... இந்த கேள்விகளுக்கு நாம் தான் பதில் தேட வேண்டுமே தவிர அதை எனக்கும் உங்களுக்கும் தர வேண்டி அவசியம் யாருக்கும் இல்லை. யாராவது ஒருவருக்கு அது இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் ...... அவருக்கு உரிய அத்தனை கடமையும் உரிமையும் எனக்கும் உங்களுக்கும் இருனக்கின்றது. நாம் யார் என்பதிலும் பார்க்க எமது எதிரி யார்? என்பது முக்கியமானது. எமது போரைநாம் யாரோடு நடத்திகிறோம் என்பதே எமது போராட்ட வடிவங்களை வடிவமைக்கின்றது. புலிகள் ஆயுதங்களை 1987ம் ஆண்டே கைவிட்டார்கள் அதற்கு முதல் மாதமும் ஆயுதம் வாங்க என்று பொன் சேர்த்தார்கள் காரணம் போராட்டத்தை விடும் எண்ணம் அவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அப்போது போர்களம் எமக்கு ஒரு புதிய எதிரியை அறிமுகபடுத்தியது அதை புலிகள் வெல்ல வேண்டிய காரணத்தினாலேயே ஆயுதங்களை கைவிட்டார்கள். தற்பொழுதும் ஈழதமிழரின் எதிரிகளை நீங்கள் இனம் காணவில்லை அதுதான் உங்களிடம் பதில் இல்லாத கேள்விகள் இருக்கின்றன...... புலிகளால் அவ்வாறு இனம் காணது இருந்துவிட முடியாது

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை கொடுத்து தமிழீழம் பெற முனைந்த பெரு மந்றும் சிறு முதலாளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் தான். புலிக்கொம்பனியை இழுத்து மூடிவிட்டார்கள். முதலுக்கு மோசமாகிவிட்டது. தமிழீழம் அமைக்க வேலை செய்த வேலைக்காரர்கள் நிறைய செத்துப்போய்டினம். மிச்சமுள்ளவர்கள் பத்தாயிரக்கணக்கில் நாள் தோறும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகினம். இருந்தாலும் ஒன்று இரண்டு பேர் இறுதியில் வெளியில் வரலாம். அவர்களிடம் கொடுத்த காசை திருப்பி கேட்கலாம் அல்லது அவர்கள் மீது மோசடி வழக்கு தொடரலாம். ஆனால் எப்ப சித்திரவதை முடிந்து தண்டனை முடிந்து வெளியில் வருவார்களோ தெரியாது. இயல்பு நிலை திரும்பினவுடன் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமிடங்களை காசுக்கு பதிலா பிரிச்சு எடுக்கலாம். இதில குத்துப்பாடு வரும் ஏனெனில் நிறையப்பேர் காசு போட்டிருக்கினம். எதிர்காலத்தில் இந்த காசுப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து யாழ் இணையத்தில் தனித் திரி போட்டு விவாதித்தால் நல்லது.

சில விசர்களின் கதைகளை கேட்கும்போதும் எனக்கு இப்படி சொல்லத்தான் தோன்றும்..... ஆனால் அதுகளுக்கு இது எப்படி விழங்கும் என்ற சந்தேகமும் இருக்கும். ஆனால் நீங்கள் துணிந்து எழுதிவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30வருடகால போராட்டத்தின் பலன் என்ன?

நீங்கள் பிறந்ததின் பலன் என்ன?

மனித குலத்தின் பயன் என்ன?

திடீரென்று ஒரு நாளில் பூமியே அழிந்துவிட்டால்.. எத்தனை கோடானு கோடி பேரின் வாழ்க்கையின் பலன் என்ன?

எதுக்குமே விடைகள் இல்லை.

காலச் சக்கரத்தில் மனிதன் தன் கடமைகளைச் செய்துகொண்டு போகிறான். அதில் தவுறுகளும் இருக்கலாம். விளைவுகள் மோசமானதாக இருக்கலாம். ஆனால் நடந்து முடிந்தவற்றுக்கு இலாப நட்டக் கணக்குப் பார்ப்பது எதற்கும் உதவாது.எமது விடுதலைப் போராட்டத்துக்கும் அது பொருந்தும்.

ஏனெனில் நிறையப்பேர் காசு போட்டிருக்கினம். எதிர்காலத்தில் இந்த காசுப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து யாழ் இணையத்தில் தனித் திரி போட்டு விவாதித்தால் நல்லது.

இன்னும் நீங்கள் யதார்த உலகில் உள்ளது போல் இருந்து எழுதுகிறீர்கள் அவ்வுலகை என்னமாதிரியோ...!? :( யாவரும்... விரைவில் அறியத்தான்போறோம் :lol::(

நீங்கள் பணம் கொடுத்ததற்க்கான ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

காசு கொடுத்தவன் தேசியவாதி, கொடுக்காதவன் துரோகி!! ஆதரவாக பேசுகிறவன் தேசியவாதி, விமர்சனம் செய்பவன் துரோகி!!! ....... எங்களுக்கு வேன்டியவர்கள் தேசியவாதி!!!! பிடிக்காதவர்கள் துரோகிகள்!!!!! ............. தொடர்கதை ............

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.