Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிர்ப்பக்கம்

Featured Replies

பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள்.

அங்கிருந்த கடைக்காரன்,

''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?''

என்று கேட்டான்.

அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள்.

ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று?

:?: :?:

  • Replies 305
  • Views 31.5k
  • Created
  • Last Reply

உங்கள் முதல் புதிருக்கு விடை நான் சொல்கின்றேன்.

இரண:டாவதாக வந்த பெண் 5ரூபா இரண்டு 2ரூபா 1ரூபா நாணயங்களாக 10ரூபா கொடுத்திருப்பா. கடைக்காரனும் நம்மைப் போல் புத்திசாலியாக இருந்திருப்பான். உடன் புரிந்து கொண்டு வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்திருப்பான்.

விடை சரியா வசிக்கண்ணா??

:roll: :lol:

சரியாத்தான் இருக்கும் வசி அடுத்த புதிர போடுங்க

  • தொடங்கியவர்

சரியான விடை வசம்பு அண்ணா..

  • தொடங்கியவர்

ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர்.

அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான்.

அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான்.

ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?

:?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நான் இல்லாத கழிவகம் வாடகைக்குண்டு."

இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா?

(உதவி சொல்லை ஆங்கில மயப்படுத்திப் பாருங்கள். புரியும்)

-வழுதி

  • தொடங்கியவர்

உங்கள் பதில் புரியவில்லை வழுதி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர்.

அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான்.

அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான்.

ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?

:?: :?:

வசி எப்பவுமே இப்படித்தான் என்று சொல்லியிருப்பானோ??

  • தொடங்கியவர்

ஆஆ விஸ்ணு லொள்ளா? :evil: :evil:

சரி ஒரு துப்பு தாறன்.. 8)

இந்தக் கேள்விக்குள்ளேயே பதிலும் இருக்கு.. :wink:

அந்த சிங்கம் உயிருடன் இல்லை என்று சொல்லி இருப்பான் :roll: :roll: :?:

  • தொடங்கியவர்

இல்லை வெண்ணிலா.. தவறான பதில்..

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

அவன் ..தான் புத்திசாலி என்று சொல்லியிருப்பானோ.. :roll: :lol:

  • தொடங்கியவர்

அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான்.

அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான்.

மீண்டும் முயற்சி செய்யுங்கள் அனிதா. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் மெளனமாய் இருந்தான். :wink: :roll:

  • தொடங்கியவர்

இல்லை தமிழ்.. பிழையான விடை..

என்ன வேற ஒருத்தரும் இந்தப் பக்கம் வரவில்லை?

என்ன ஆச்சு? :lol:

விடை தெரியலை அது தான் முழிச்சுகொண்டு வரலை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதாவது ஒன்றை சொல்லி... அந்த உண்மை பொய்யாக இருக்கும் என்று சொல்லி இருப்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை தமிழ்.. பிழையான விடை..

என்ன வேற ஒருத்தரும் இந்தப் பக்கம் வரவில்லை?

அட நானும் யோசிக்கிறன்..வசி இன்னும் ஒரு துப்பு தாங்கோவன்...

அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான்.

அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான்.

மீண்டும் முயற்சி செய்யுங்கள் அனிதா. :lol:

ஒரு புத்திசாலியும் இங்கே இல்லை போல. புத்திசாலி சொன்னதை யாருமே சொல்ல முடியல்லையே :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்

சரி விடையை சொல்லிவிடுகிறேன்..

ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?

விடை:

அவன் சொன்ன விஷயம்..

'நான் சிங்கத்தினால் சாப்பிடப்படப்போகிறேன்'.

அவன் சொல்வது உண்மையானால், அவன் மலையில் இருந்து

தள்ளி விடப்பட்டுக் கொல்லப்படுவான். அது நடந்தால்,

அவன் சொன்ன விஷயம் பொய்யாகிவிடும். அதனால் அரசருக்கு

அவனை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!

அடுத்த புதிர் சிறிது நேரத்தில்...

நீங்களும் புதிர்கள் போடலாமே?

சரி விடையை சொல்லிவிடுகிறேன்..

விடை:

அவன் சொன்ன விஷயம்..

'நான் சிங்கத்தினால் சாப்பிடப்படப்போகிறேன்'.

அவன் சொல்வது உண்மையானால், அவன் மலையில் இருந்து

தள்ளி விடப்பட்டுக் கொல்லப்படுவான். அது நடந்தால்,

அவன் சொன்ன விஷயம் பொய்யாகிவிடும். அதனால் அரசருக்கு

அவனை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!

அடுத்த புதிர் சிறிது நேரத்தில்...

நீங்களும் புதிர்கள் போடலாமே?

ஆஅ நான் அதைதான் நினைச்சன் டைப் பண்ணுறதுக்குள்ள ஆன்சர் போட்டுடீங்கள் ? :lol:

சரி வசியண்ணா அடுத்த புதிரை போடுங்கோ.

நன்றி வசியண்ணா பதிலுக்கு

ஓகே அடுத்தது நான் கேக்குறன்

ஒரு மேசைல 17 கொசு இருக்கு அதுல 15 ஐ அடிச்சால் மேசைல எத்தனை கொசு இருக்கும்?

  • தொடங்கியவர்

ஆஅ நான் அதைதான் நினைச்சன் டைப் பண்ணுறதுக்குள்ள ஆன்சர் போட்டுடீங்கள் ? :lol:

அப்படியா ரசிகை.. வெண்ணிலா அழுதாங்களா அதுதான் போட்டன்.:lol:

சரி இனி அடுத்த புதிரில் முயற்சி

செய்யுங்கள். :lol:

ஓகே அடுத்தது நான் கேக்குறன்

ஒரு மேசைல 17 கொசு இருக்கு அதுல 15 ஐ அடிச்சால் மேசைல எத்தனை கொசு இருக்கும்?

15 :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.