Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் பணமே எம்மை சீரழிக்க...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசின் பொருளாதாரத்தை

சிதைப்போம்_அவன்...

சிரசுக்கு வைப்போம் ஆப்பு

சிலேடையாய் இணையத்தில் மட்டும்...

சிங்கம் போல சிலிர்ப்போம்

சிந்திய ரத்தம் காயும்முன்னே...

சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம்

நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்.....

நம் உறவுகள் படும் துன்பத்திலும்

நம்மில் சிலர் செய்யும் செயலை..

நான் எப்படிச் சொல்ல.........?

நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்...

நாளைக்கே ஆளைக்காட்டுவனாம்.

இருபதாயிரம் கொடுத்தால்...

இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம்

ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்...

காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால்

சாப்பாடு கொடுக்கலாமாம்....

விடுவோமா நாம்...?

ஆடடிச்சு குழம்பு வச்சு...

பூநகரி மொட்டைக்கறுப்பன்

அரிசி சோறு காச்சி...

எம் குடும்பத்துக்கு கொடுப்போம்

மூன்று நாலு பேரு மட்டும்....

ஆட்டிறைச்சி சாப்பாடு சாப்பிட

மூன்று லட்சம் முகங்களை ....

எப்படி பார்த்து இப்படி...?

எத்தனை லட்சம் கொடுத்தேனும்...

எம் குடும்பத்தை வெளியில் எடுக்கணும்

எப்பாடு பட்டேனும்....

கனடாக்கு கூப்பிடணும்

இருக்கும் நீங்கள் கொடுக்கிறீர்கள்...

இல்லாத அநாதைகளும்,ஏழைகளும்?

யார் கொடுப்பார்? யார் எடுப்பார்??..

யாரிடம் இதைச் சொல்லி அழ...?

நீங்கள் கொடுக்கும் காசில்....

நீங்கள் சார்ந்தவர் நல்லாயிருக்க

உங்கள் காசே சிங்களவன் பொருளதாரத்தை...

சீர்படுத்துவதோடு எஞ்சிய உறவுகளை

சீரழிக்கிறது என்பது தெரியவில்லையா...?

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

லட்சத்தில் லட்சம் மக்களின் வாழ்வு

உங்கள் கவிதை அழகு.

..

எப்படி பார்த்து இப்படி...?

எத்தனை லட்சம் கொடுத்தேனும்...

எம் குடும்பத்தை வெளியில் எடுக்கணும்

எப்பாடு பட்டேனும்....

கனடாக்கு கூப்பிடணும்

இருக்கும் நீங்கள் கொடுக்கிறீர்கள்...

இல்லாத அநாதைகளும்,ஏழைகளும்?

யார் கொடுப்பார்? யார் எடுப்பார்??..

உணமையான வரிகள் ... உணமையை சொன்ன விதம் அழகு... இப்ப இப்படித்தானே நடக்குது... உங்கள் கவிதை வரிகள் அழகு ஜீவா... உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

உண்மை ஐPவா இருக்கிறவன் அள்ளிக் கொடுத்து தன்ர ஆக்களை வெளியில்

எடுக்கிறான்.........ஆனால் இல்லாதவன் வழமை போல் வானத்தை பார்த்து அழுதபடி வாழுகிறான்

உண்மையில் எங்களுக்கு விடிவு வர வேண்டுமென்றால் உலகம் முழுக்க பரந்து வாழும்

அத்தனை தமிழர்களையும் நாட்டுக்கு அனுப்பவேணும் அப்ப தான் எங்கட சனம் கொஞ்சம்

எண்டாலும் பொது நலத்தோடையும் மனிதாபிமானத்தோடையும் நடக்கும்...............

வெளிநாட்டு சனம் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.............

சிறிலங்காவின் பண நெருக்கடியை புலம் பெயர் வாழ் புண்ணிய வான்கள் தான் சீர்

செய்ய தொடங்கி உள்ளார்களாம்............

தான் வாழ்ந்தால் போதும் என்ற தாராள மனம் கொண்ட இனம் எம் இனம்.................

இன்னும் இன்னும் எழைகளே பாதிக்கப்படுகிறார்களே தவிர..............

பாதாளம் வரை பாயும் பணம் பணம் உள்ளவனை காப்பாற்றி வருகிறது..............

உங்கள் உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்!!!!!!

தொடரட்டும் உங்கள் உண்மைக் கவிகைள்.......

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.இது தானையா நடக்கிறது பணம் இருப்பவர்கள் பலவற்றிலும் முந்திவிடுவார்கள்.இல்லாதவர்

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்போ இல்லை ஜீவா. போராட்டம் தொடங்கிய காலம் தொடங்கிய காலம் தொடக்கம் நடந்து கொண்டி தான் இருக்கிறது. வெளிநாடு வந்த எம்மையே பாருங்கள். காசு உள்ளவர்கள் (காணியை விற்றோ , அடகு வைத்தோ) வெளியில் வந்தோம். காசு இல்லாதவனுக்கு ஒரே தேர்வு போராட வேண்டும் (பெரும்பாலானவர்கள்)என்பது. அவர்கள் தான் போராடி மடிந்தார்கள். நாம் இங்கிருந்து அப்படி செய் இப்படி செய் என்று ஒரு 50 தோ 100 றோ அனுப்பி விட்டு அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொன்ன, சொல்லும் சுயநலவாதிகள். போதாதற்கு சரணடைந்த போராளிகளும் துரோகிகளாம். எமது போராட்டத்தின் தோல்விக்கான காரணம் இப்போ விளங்கி இருக்கும்.

நன்றி ஜீவா உங்கள் கவிதைகள் மேலும் மெருகேற நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சார்ந்தவர் நல்லாயிருக்க

உங்கள் காசே சிங்களவன் பொருளதாரத்தை...

சீர்படுத்துவதோடு எஞ்சிய உறவுகளை

சீரழிக்கிறது என்பது தெரியவில்லையா...?

உண்மை ஜீவா .............சிங்களவனை வாழ வைப்பது ..வெளிநாட்டு பணம் தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லட்சத்தில் லட்சம் மக்களின் வாழ்வு

உங்கள் கவிதை அழகு.

நன்றி கறுப்பி. அண்ணா

உங்கள் கருத்தையே தலைப்பா வைத்தால் நல்லா இருக்கும் போல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணமையான வரிகள் ... உணமையை சொன்ன விதம் அழகு... இப்ப இப்படித்தானே நடக்குது... உங்கள் கவிதை வரிகள் அழகு ஜீவா... உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

நன்றி சுஜி(அக்கா).

உண்மையா இது எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் சொன்னதை வச்சு எழுதினது.

அவனுக்கு இவனுக்கு என்று பத்தாயிரம்,இருபதாயிரம் தா ஆளைக் காட்டுறன் என்று காட்டலையாம்.

பிறகு ஆரோ நாற்பதாயிரம் வாங்கிட்டு காட்டினவனாம். பிறகு சாப்பாடு எல்லாம் குடுத்தவையாம்.

இப்ப அவை எவ்வளவு குடுத்து என்றாலும். கனடாக்கு கூப்பிட போகினமாம்.

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இப்போ இல்லை ஜீவா. போராட்டம் தொடங்கிய காலம் தொடங்கிய காலம் தொடக்கம் நடந்து கொண்டி தான் இருக்கிறது. வெளிநாடு வந்த எம்மையே பாருங்கள். காசு உள்ளவர்கள் (காணியை விற்றோ , அடகு வைத்தோ) வெளியில் வந்தோம். காசு இல்லாதவனுக்கு ஒரே தேர்வு போராட வேண்டும் (பெரும்பாலானவர்கள்)என்பது. அவர்கள் தான் போராடி மடிந்தார்கள். நாம் இங்கிருந்து அப்படி செய் இப்படி செய் என்று ஒரு 50 தோ 100 றோ அனுப்பி விட்டு அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொன்ன, சொல்லும் சுயநலவாதிகள். போதாதற்கு சரணடைந்த போராளிகளும் துரோகிகளாம். எமது போராட்டத்தின் தோல்விக்கான காரணம் இப்போ விளங்கி இருக்கும்.

நன்றி ஜீவா உங்கள் கவிதைகள் மேலும் மெருகேற நல்வாழ்த்துக்கள்.

நன்றி நுணாவிலான் அண்ணா.

நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மைகளே இன்று யாரும் யாரை நோக்கியும் சுட்டுவிரல் நீட்ட முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

இன்றைய அவலத்துக்கு காரணம் நானுட்பட எல்லாருமே.

நீங்கள் சார்ந்தவர் நல்லாயிருக்க

உங்கள் காசே சிங்களவன் பொருளதாரத்தை...

சீர்படுத்துவதோடு எஞ்சிய உறவுகளை

சீரழிக்கிறது என்பது தெரியவில்லையா...?

உண்மை ஜீவா .............சிங்களவனை வாழ வைப்பது ..வெளிநாட்டு பணம் தான்.....

நன்றி அக்கா.

உண்மை ஐPவா இருக்கிறவன் அள்ளிக் கொடுத்து தன்ர ஆக்களை வெளியில்

எடுக்கிறான்.........ஆனால் இல்லாதவன் வழமை போல் வானத்தை பார்த்து அழுதபடி வாழுகிறான்

உண்மையில் எங்களுக்கு விடிவு வர வேண்டுமென்றால் உலகம் முழுக்க பரந்து வாழும்

அத்தனை தமிழர்களையும் நாட்டுக்கு அனுப்பவேணும் அப்ப தான் எங்கட சனம் கொஞ்சம்

எண்டாலும் பொது நலத்தோடையும் மனிதாபிமானத்தோடையும் நடக்கும்...............

வெளிநாட்டு சனம் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.............

சிறிலங்காவின் பண நெருக்கடியை புலம் பெயர் வாழ் புண்ணிய வான்கள் தான் சீர்

செய்ய தொடங்கி உள்ளார்களாம்............

தான் வாழ்ந்தால் போதும் என்ற தாராள மனம் கொண்ட இனம் எம் இனம்.................

இன்னும் இன்னும் எழைகளே பாதிக்கப்படுகிறார்களே தவிர..............

பாதாளம் வரை பாயும் பணம் பணம் உள்ளவனை காப்பாற்றி வருகிறது..............

உங்கள் உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்!!!!!!

தொடரட்டும் உங்கள் உண்மைக் கவிகைள்.......

அன்புடன்

தமிழ்மாறன்

நன்றி தமிழ்மாறன் அண்ணா.

உங்கள் கருத்து 100% சரியே. எல்லாம் எம்மாலை தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

உங்களின் ஆதங்கங்கள் புரிகிறது..... கொலை வலயத்தில் மக்கள் அகப்பட்டிருந்த போது கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு வந்த மக்களின் தொகைக்கும் மக்கள் எல்லோரும் வெளியேறி அதன் பிறகு நடந்தேறிய சம்பவங்களுக்கு பிறகு வந்த மக்கள் தொகையுமே மக்களின் மன நிலையை காட்டியது.....

ஒருவிதமான உதவியுமே இல்லாமல் எங்களின் போராட்டமே தங்கள் வாழ்வை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் வாழும் எம் மக்களுக்காக அவர்களின் வாழ்வை மீட்டுத்தர போராடுவதே இன்றய எங்கள் கடமையாகும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

உங்களின் ஆதங்கங்கள் புரிகிறது..... கொலை வலயத்தில் மக்கள் அகப்பட்டிருந்த போது கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு வந்த மக்களின் தொகைக்கும் மக்கள் எல்லோரும் வெளியேறி அதன் பிறகு நடந்தேறிய சம்பவங்களுக்கு பிறகு வந்த மக்கள் தொகையுமே மக்களின் மன நிலையை காட்டியது.....

ஒருவிதமான உதவியுமே இல்லாமல் எங்களின் போராட்டமே தங்கள் வாழ்வை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் வாழும் எம் மக்களுக்காக அவர்களின் வாழ்வை மீட்டுத்தர போராடுவதே இன்றய எங்கள் கடமையாகும்....

நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு... இப்ப இது பற்றி சிந்திப்பதே அருகி போகுது போல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.