Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் வேளையில் யாழ். மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் டக்ளஸ் தேவானந்தா: ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு

Featured Replies

சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. துணைக்குழுவின் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அரசின் ஆதரவுடன் காடையர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

"அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீதிகளில் வலம்வரும் போது காடையர்களில் மேற்கொள்ளும் காடைத்தனங்களால் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் அன்றி, ஏனைய கட்சிகளும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளன" எனவும் குறிப்பிடும் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாணத்தில் இப்போது ஈருளி குழுக்களையும் ஆயுதக்குழுக்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். ஏனைய கட்சியினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இக்குழுவினர் தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தமிழ்ச் சேவையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கும் ஆனந்தசங்கரி, அரசாங்க நிறுவனங்களான மக்கள் வங்கி மற்றும் தேசிய லொத்தர் சபை என்பன தேவானந்தாவை ஆதரித்து முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரச்சாரங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டும் காணாமல் அலட்சியப் போக்குடன் அரசாங்கம் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய ஆனந்தசங்கரி, இந்த நிலை தொடர்ந்தால் யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

ஓகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அதனைவிட, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் போட்டியிடுகின்றன. இதில் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

புதினம்

துரையப்பாவின் வாரிசு ..டக்கிளஸ்..துரையப்பாவின் மரணத்துடன் தொடங்கிய போராட்டம் மீண்டும் 30வருடங்களின் பின்பு துரையப்பாக்களின் ஆட்சி மலர நாம் இழந்தது 30ஆயிரம் மாவீரர்களை

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

எங்கே என்ன நடந்தாலும் பிரபாகரனுக்கு கடிதம் எழுதுபவர் இவர்.....

இப்போ டக்கிளஸ்..க்கு எழுத ஆரம்பிக்கிறார்?????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்கறதுக்கு எல்லாரும் ஒண்டா இருந்தாங்கள். இப்ப தங்களுக்குள்ளேயே அடிபடுறாங்கள்.எல்லாம் பதவி படுத்தும் பாடு.

துரையப்பாவின் வாரிசு ..டக்கிளஸ்..துரையப்பாவின் மரணத்துடன் தொடங்கிய போராட்டம் மீண்டும் 30வருடங்களின் பின்பு துரையப்பாக்களின் ஆட்சி மலர நாம் இழந்தது 30ஆயிரம் மாவீரர்களை

அருமையான ஓர் கருத்து. இதை இன்னமும் சிறிது திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும்.

துரையப்பாவின் வாரிசு ..டக்கிளஸ்..! துரையப்பாவின் மரணத்துடன் தொடங்கிய போராட்டம் மீண்டும் 30வருடங்களின் பின்பு துரையப்பாக்களின் ஆட்சி மலர நாம் இழந்தது 30ஆயிரம் மாவீரர்களையும் ஒன்று அரை இலட்சத்திற்கும் மேற்பட்ட சனங்கள் மற்றும் பல இலட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கையை!

ஒரு புள்ளியில ஆரம்பித்து வட்டமாக சுற்றி திரும்பவும் அதே புள்ளியிலையே நிற்கிறம் போன்ற பிரமை ஏற்படுகிது. இது பிரமையா அல்லது நிஜமா என்று காலம்தான் பதில் சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது அரசியலுக்கு இடைஞ்சலாக அல்பிரட் துரையப்பா உள்ளார் என்பதற்காக அவர்களுக்கு பின்னால் நின்ற (இரத்த பொட்டு வைத்த இளைஞர்கள்) பிரபாகரன் பழிவாங்கினார் என்பது தான் 100% உண்மை. அதே பிரபாகரன் பின்னாளில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் சுட்=யநலங்களை அறிந்தது சிலரே. ஆனால் யாரையும் கொல்லாமல் அரசியல் ரீதியாக மக்களை கொண்டு பழி வாங்கினால் அதுவே அரசியல் சாணக்கியம். யாரை கொன்றோமோ அதனை சிங்கள அரசு எமக்கு எதிராக பயன்படுத்தியது.

. . ஆனால் யாரையும் கொல்லாமல் அரசியல் ரீதியாக மக்களை கொண்டு பழி வாங்கினால் அதுவே அரசியல் சாணக்கியம். யாரை கொன்றோமோ அதனை சிங்கள அரசு எமக்கு எதிராக பயன்படுத்தியது.

ஆம் .உண்மை ஆனால் அதற்கான புறச்சூழல் இல்லை என்றே சொல்லாம்..அன்று ஆயுதத்துடன் ஆதரவான தமிழர்கள் நின்றார்கள்..இன்று ஆயுதத்துடன் எதிரான தமிழர்களுடன் சிங்களவரும் கூட்டுசேர்ந்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் .உண்மை ஆனால் அதற்கான புறச்சூழல் இல்லை என்றே சொல்லாம்..அன்று ஆயுதத்துடன் ஆதரவான தமிழர்கள் நின்றார்கள்..இன்று ஆயுதத்துடன் எதிரான தமிழர்களுடன் சிங்களவரும் கூட்டுசேர்ந்துள்ளார்கள்

முடிவாக தமிழர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று நிருபிக்க முதல் ஒரு சில இனங்கள் அழிந்து விடும் என்பது எனது தூரநோக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் உரிமைக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்து காந்தீய வழியில் போராடி வரும் ஆனந்த சங்கரி ஐயாவும் டக்கிலஸ் தேவாங்கு மன்னிக்கவும் தேவானந்தா ஐயாவும் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.