Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாநகரசபைத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு 13 ஆசனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்கள்

Featured Replies

யாழ்ப்பாணம் மாநகரசபைக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது.

நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 20 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். வாக்காளர்களைக் கவர்வதற்காக இறுதிவேளையில் ஆளும் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிடும் சிறிலங்காப் படையின் துணைப்படையான ஈ.பி.டி.பி.யும் பல்வேறு உபாயங்களைக் கையாண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் 1,00,417 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவுள்ள அதேவேளையில் 22,280 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் 1,358 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெளியான யாழ். மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10,602 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.67 சதவீதமாகும்.

இதற்கு அடுத்ததாதக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8,008 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இது மொத்த வாக்குகளில் 38.27 வீதமாகும்.

சுயேட்சைக்குழு இலக்கம் 1, 1,175 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ள அதேவேளையில் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 1,007 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது.

இங்கு போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியால் 83 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது.

ஆளும் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிட்ட ஈ.பி.டி.பி.யும் இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இறுதிவேளையில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சி தோல்வியடைந்தால் மீன்பிடித் தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாத்துகள்!

இது கள்ள ஓட்டுபோட்ட ஈபிடியா இல்லை, அருகே அரசினால் அவதியுறும் மக்களையும் பொருபடுத்தாமல் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த யாழ்மக்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது கள்ள ஓட்டுபோட்ட ஈபிடியா இல்லை, அருகே அரசினால் அவதியுறும் மக்களையும் பொருபடுத்தாமல் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த யாழ்மக்களா?

யாழ் நகர மக்கள் நாம் எண்ணியதை விட தெளிவாக இருந்திருக்கிறார்கள். 80% மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. போட்டியிட்டதன் மூலம்.. ஒட்டுக்குழுக்கள் 8000 - 10000 வாக்குகளோடு 3 இல் 2 அறுதிப் பெரும்பான்மை பெறுவது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படைகளின் எண்ணிக்கை 40,000 ஆயிரமாகும்..!

செய்தியாளர்கள் தடைசெய்யப்பட்ட சூழ்நிலையில்.. நடந்த ஜனநாயக விரோத தேர்தல் இது என்பதை மக்கள் தெளிவாக இனங்கண்டுள்ளனர். அதுமட்டுமன்றி பிபிசி போன்ற நிறுவனங்களும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால்.. ஒரு தேர்தல் சட்ட வலுவுள்ளதாக இருக்க சுமார் 40 - 50% வாக்குகள் பதிவாக வேண்டும். ஆனால் வெறும் 20% வாக்குகளின் அடிப்படையில் இத்தேர்தல் எப்படி சட்ட அங்கீகாரம் பெறப்படுகிறதோ தெரியாது.

80 வீத மக்களின் எண்ணங்களுக்கு மாறாக.. 20% பேர் தெரிவு செய்தவர்களில் அதிலும் ஒரு தொகுதியினர் மக்களை ஆள்வதென்பது ஜனநாயகமா..??!

இதற்கு வாழ்த்து வேறு. இவர்கள் எப்படிப்பட்ட சன நாய் அக வாதிகள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்..!

அரசாங்கத்தின் கெடுபிடிகள்.. பிரயாண அனுமதி மறுப்புக்கள் மத்தியிலும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு குறிப்பிடத்தக்க அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலை புறக்கணித்த 80% யாழ் நகர மக்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்..! :(

Turnout was only 20%. Monitors said one problem had been that many people did not receive voting cards, for reasons that are unclear. Refugees were also required to apply to vote.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8191031.stm

Edited by nedukkalapoovan

14 வருடமாய் மக்கள அடக்கி ஆண்டும் கிடைத்த வாக்கு வெறும் 10000 தான் , இதில எத்தின வோட்டு ஒழுங்கா போட்டதோ தெரியாது

வவுனியாவில் வெறும் 10% வாக்கு கிடைத்த வெத்திலைக்கு , யாழில் 50 % கிடைத்திருக்கு , எப்படி , எப்படி எப்படி?

மக்கள் எப்போதும் போல் தெளிவாய் தான் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

14 வருடமாய் மக்கள அடக்கி ஆண்டும் கிடைத்த வாக்கு வெறும் 10000 தான் , இதில எத்தின வோட்டு ஒழுங்கா போட்டதோ தெரியாது

வவுனியாவில் வெறும் 10% வாக்கு கிடைத்த வெத்திலைக்கு , யாழில் 50 % கிடைத்திருக்கு , எப்படி , எப்படி எப்படி?

மக்கள் எப்போதும் போல் தெளிவாய் தான் இருக்கினம்

அது தானே பல்லவன் . சந்தேக மில்லாமல் சிங்கள ராணுவத்தின் வாக்குகள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே பல்லவன் . சந்தேக மில்லாமல் சிங்கள ராணுவத்தின் வாக்குகள் தான் .

அப்ப சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தில் வாக்குரிமை பெற்ற குடிமக்கள் ஆகிவிட்டார்களா? அல்லது வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குப் போட்ட மக்கள் உங்களுக்குச் சிங்களவர்களாகத் தெரிகின்றார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தாளும் நல்லது நடந்தா சரி...

Edited by ரவுடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.