Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் நெஞ்சில் நிறைந்த சிவரஞ்சனி அவள்!

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்.

என் நெஞ்சில் நிறைந்த சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை ஒலி/ஒளி வடிவில் தர முயற்சிக்கிறேன்.

சிவரஞ்சனி ராகம் கர்நாடக சங்கீதத்திலே 22வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியா ராகத்தின் ஜன்ய ராகமாகக் கருதப்படுகின்றது. கருணை ரசத்தை வெளிப்படுத்தும் ராகம் இது.

முதலாவதாக 1980 இல் வெளிவந்த "நட்சத்திரம்" படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் "சங்கர் - கணேஷ்" இரட்டையர்களின் இசையில் பாடிய "அவளொரு மேனகை" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ("நட்சத்திரம்" 1978 இல் தெலுங்கு மொழியில் இசையமைப்பளர் "ரமேஷ் நாயுடு" வின் இசையில் வெளிவந்த "சிவரஞ்சனி" என்ற படத்தின் மறுதயாரிப்பு ஆகும்). இந்தப் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் ஆவணி மேகமாகிய அவள் சிங்காரப் பூங்குழலுக்குள்ளே புகுந்துகொள்கிறேன்.

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்

அவளொரு மேனகை என் அபிமான தாரகை

அவளொரு மேனகை

கலையெனும் வானிடை மின்னும் தேவதை

கலையெனும் வானிடை மின்னும் தேவதை

காவிய வடிவோடு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி

சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை

என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை

மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது

மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது

அவள் போல் இங்கே எவரும் இல்லை

அவளொரு மேனகை என் அபிமான தாரகை

அவளொரு மேனகை

சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

காவியப் பாதம் ஆயிரம் வேதம்

அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்

காவியப் பாதம் ஆயிரம் வேதம்

அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்

பார்வையில் குளிரும் மார்கழி மாதம்

பார்வையில் குளிரும் மார்கழி மாதம்

அதிகாலையில் வரும் பூபாள நாதம்

அவளொரு மேனகை என் அபிமான தாரகை

அவளொரு மேனகை

சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

அவள் சிங்காரப் பூங்குழலாவணி மேகம்

தேனுலாவிடம் கல்யாணி ராகம்

அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்

தாமரைப் பூவின் சூரிய தாகம்

காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே

தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே

முடியோ ஆலயச் சங்கொலி

இடையோ அசைந்திடும் கிண்கிணி

என்ன சொல்லி என்ன பாட

கம்பனில்லை கவிதைபாட

என்ன சொல்லி என்ன பாட

கம்பனில்லை கவிதைபாட ஆஆஆஆஆ

அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ

நான் அவளது பக்தனன்றோ

அவளொரு மேனகை என் அபிமான தாரகை

அவளொரு மேனகை

சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்குப் பிடித்த சிவரஞ்சனியை எம்முடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் RasaRaasan .

  • தொடங்கியவர்

சிவரஞ்சனி நம் காதலுக்கு இனம், மதம் மட்டுமல்ல மொழி கூட தடைபோட்டுவிடமுடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசா எனக்கு கல்யானி தான் பிடிக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு.. சண்முகப்பிரியா.. ஹம்சபிரியா.. இதெல்லாம் பிடிக்கும். சிவரஞ்சினி பிடிக்காது..! அப்படியே மோகனமும் பிடிக்கும். ஏன்னா இவை பிடிச்சு கடைசில.. அவை கைவிட கூட இருக்கப் போறது.. மோகனம்.. தானே..! :( :(

அதுசரி.. இது சிவரஞ்சினி தானென்று எப்படி கண்டுபிடிக்கிறது. கழுதைக்கு தெரியுமா சங்கீத வாசனை என்று கேட்கப் போறியள் என்று தெரியும். தெரியாத தால தானே கேட்கிறம்..! என்றதைக் கவனத்தில் கொள்ளவும்..! :lol::D

Edited by nedukkalapoovan

இது இட்லி, இது தோசை, இது புட்டு, இது இடியப்பம் என்று உங்களுக்கு சாப்பிடேக்க பிரித்தறியக்கூடிய மாதிரி இருக்கிறதுமாதிரி.. இதுவும் ஓர் classificationதான். ஆனாலும்... யாராச்சும் சொல்லித்தரவேணும். பிள்ளைக்கு இட்லி, தோசை, புட்டு எண்டு பெயர் சொல்லிக்குடுக்கிறது மாதிரி. அப்பிடி சொல்லித்தராட்டிக்கு.. உங்களுக்கு மனதுக்க ராகங்களை வேறுபாடுகள் தெரிஞ்சு இருந்தாலும் இவதான் அவா என்று பெயர் சொல்லத் தெரியாமல் இருக்கும். :(

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான் வணக்கம்.

ஐயா நான் ஒரு சங்கீத வித்துவான் அல்லன். எனது சகோதரிகளிடமிருந்து இருந்து கற்றுக்கொண்டது கொஞ்சம் (சொல்லுவினம் " நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம்" எண்டு), இணையத்தில கற்றுக்கொண்டது கொஞ்சம்.

நீங்கள் நிச்சயமாக கழுதை அல்லர். அதையும் விட உயர்வானவர். :(

ஒ! மறந்திட்டன்.

பாடலொன்றிலே உள்ள சுரங்களின் வரிசையை வைத்து ரகங்களை அறிந்துகொள்ளலாம்.

சிவரஞ்சனி ராகத்தின் சுர வரிசை

ஆரோகணம்: ஸ - ரி - க - ப - த - ஸ

அவரோகணம்: ஸ - த - ப - க - ரி - ஸ

ராகங்களைக் அடிக்கடிகேட்டு அவற்றைக் கிரகிப்பதன் மூலம் அவற்றை அறிந்துகொள்ளலாம்.

குழந்தை ஒன்று தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டு தமிழ் பேசுவதில்லை. மாறாக பெரியவர்கள் பேசும் மொழியை காதால் கேட்டு கிரகித்து தான் முயற்சி செய்வதனாலேயாகும். இசையும் அவ்வாறே. இதவிட வேண்மெண்டால் நல்ல வித்துவானிட்ட போய் காசு குடுத்துப் படியுங்கோ.

இப்ப இந்தப் பாடல் உங்களுக்காக:

Edited by RasaRaasan

  • தொடங்கியவர்

ராசா எனக்கு கல்யானி தான் பிடிக்கும் :(

பக்கத்து வீட்டில முந்தி இருந்த "கல்யாணி' அவவா? :(

  • தொடங்கியவர்

சிவரஞ்சனி

"வாழ்விலே என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ"

Edited by RasaRaasan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனிருக்குள்ளும் , ஒவ்வொரு வாழ்க்கை இருக்கும் .

எனக்கும் இருந்தது ......

அதை இப்ப சொன்னப் போனால் .....

வேண்டாமப்பா ...... பயமாய்க்கிடக்குது .........

ஒவ்வொரு மனிதனிருக்குள்ளும் , ஒவ்வொரு வாழ்க்கை இருக்கும் .

எனக்கும் இருந்தது ......

அதை இப்ப சொன்னப் போனால் .....

வேண்டாமப்பா ...... பயமாய்க்கிடக்குது .........

சரி நாங்க கேட்க இல்லை சிறி அண்ணா.

உங்களுக்கு ஒன்று தெரியுமோ? ஆட்டா மாவிலையும் பாண் செய்யலாமாம்... :unsure:

  • தொடங்கியவர்

தமிழ் சிறி,

சில சோக(ராக)ங்கள் சுமையானவை மட்டுமல்ல சுகமானவையும் கூட.

உயிர் அடங்கு மட்டும் மறக்க முடியாதவை.

சிவரஞ்சனியும்... அப்படித்தான்...

நான் சிவரஞ்சனி ராகத்தைச் சொன்னேன்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாங்க கேட்க இல்லை சிறி அண்ணா.

உங்களுக்கு ஒன்று தெரியுமோ? ஆட்டா மாவிலையும் பாண் செய்யலாமாம்... :unsure:

ஐயோ ....... ஆட்டாமாவிலை பாணா.....

வேண்டாம் இந்த கொலை வெறி.

இவ்வவளவு நாளும் கோதம்பை மா பாணிலை தான் , வாழ்க்கை கழிஞ்சுதெண்டால் .......

ஆட்டா மா பாண் வாங்கிதரச் சொல்லி கேட்டால் .......... நான் என்ன செய்வது. :(:)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

சில சோக(ராக)ங்கள் சுமையானவை மட்டுமல்ல சுகமானவையும் கூட.

உயிர் அடங்கு மட்டும் மறக்க முடியாதவை.

சிவரஞ்சனியும்... அப்படித்தான்...

நான் சிவரஞ்சனி ராகத்தைச் சொன்னேன்.

:unsure:

உண்மை தான் ராசராசன் .

ஆனாலும் நாங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் .... வாழ்க்கையே சூனியமாகிவிடும் .

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , தன்னுடைய காதலியின் பெயரையே ....

மனைவியின் அனுமதியுடன் தனது மகளுக்கு பெயராக வைத்துக்கொண்டார் .

அவர்கள் வாழ்க்கையில் இன்று , எந்த சஞ்சலமும் இல்லை .

ஐயோ ....... ஆட்டாமாவிலை பாணா.....

வேண்டாம் இந்த கொலை வெறி.

இவ்வவளவு நாளும் கோதம்பை மா பாணிலை தான் , வாழ்க்கை கழிஞ்சுதெண்டால் .......

ஆட்டா மா பாண் வாங்கிதரச் சொல்லி கேட்டால் .......... நான் என்ன செய்வது. :(:unsure:

உங்கட கதையச் சொல்லப் போனால் கடைசியில் உங்களுக்குப் பாணும் ஜாமும் தான் கிடைக்கும் என்று சொல்லப் பயப்பிடுவீங்கள் என்று தான் 'ஆட்டா மாவிலையும் பாண் செய்யலாம்' என்று ஜோசனை சொன்னனான் சிறி அண்ணா... ஹி ஹீ ஹீ 50 kg ஆட்டா மா சாக்கு வாங்கினதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க... வீட்ல இன்னும் ஆட்ட மா இருக்குத் தானே?? :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையச் சொல்லப் போனால் கடைசியில் உங்களுக்குப் பாணும் ஜாமும் தான் கிடைக்கும் என்று சொல்லப் பயப்பிடுவீங்கள் என்று தான் 'ஆட்டா மாவிலையும் பாண் செய்யலாம்' என்று ஜோசனை சொன்னனான் சிறி அண்ணா... ஹி ஹீ ஹீ 50 kg ஆட்டா மா சாக்கு வாங்கினதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க... வீட்ல இன்னும் ஆட்ட மா இருக்குத் தானே?? :unsure:

குட்டி அது .... பெரிய முசுப்ப்பாத்தி கதையப்பா .....

என்ரை வயித்தெரிச்சலை இப்ப கிளறதுக்கெண்டே ஊரிலை சனம் , அலையுது போலை கிடக்குது. :):(

எனக்கும் ஏலெவல் படிக்கும் போது சிவரஞ்சினியை ரொம்போஓஓஒ.. பிடிக்கும், ... ஒரு நாள் மம்மி, கொழும்பிலிருந்து வந்த அப்பருக்கு போட்டுக்கொடுக்க ... அப்பர் போட்ட மேள தாளங்களுடன் ... முருகா, உது வேண்டாம் என்று போச்சு!!! ஆனால் பின் வேறு இராங்களில் .....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஏலெவல் படிக்கும் போது சிவரஞ்சினியை ரொம்போஓஓஒ.. பிடிக்கும், ... ஒரு நாள் மம்மி, கொழும்பிலிருந்து வந்த அப்பருக்கு போட்டுக்கொடுக்க ... அப்பர் போட்ட மேள தாளங்களுடன் ... முருகா, உது வேண்டாம் என்று போச்சு!!! ஆனால் பின் வேறு இராங்களில் .....

அப்பாமார் மகன்களுக்கு மேளதாளம் போட்டதுதான் பிழையாப்போச்சு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிவரஞ்சினி.. சரியான பழையது போல இருக்குதே. எல்லாம் பழைய பாட்டா இருக்குது. பிடிக்கல்ல..! :):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிவரஞ்சினி.. சரியான பழையது போல இருக்குதே. எல்லாம் பழைய பாட்டா இருக்குது. பிடிக்கல்ல..! :):unsure:

உங்களுக்கு பிடிக்காட்டி சும்மா காலை ஆட்டிக்கொண்டு இருங்கோவன்.

சிவரஞ்சனி என்பது எவ்வளவு அழகான ஒரு தமிழ் பெயர்.தெரியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.