Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடல் நலம் காக்கும் தாய்பால்

Featured Replies

உடல் நலம் காக்கும் தாய்பால்

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப் பதால் குழந்தைக்கு ஆரோக்கியம் தாய்க்கும் மிகுந்த நன்மை ஏற்படுகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது. ஆனால்தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த சத்து கிடைத்துவிடுகிறது. பெண்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மி.லி. முதல் 1.5 லிட்டர் வரையில் பால் உற்பத்தி செய்கின்றன. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கல்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தை களுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தரவேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங்குழந்தைக்கு குறைந்தது நான்கு மாதம் வரையில் கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம். ஒரு குழந்தைக்குப் போதுமான பால் தன்னிடம் சுரக்கிறதா என்பதை ஓர் இளம்தாய் எப்படித் தெரிந்துகொள்வது? உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறில் இருந்து ஏழு முறை சிறுநீர் கழிக்கிறதா என்று கவனியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழிக்கிறதா என்பதை பாருங்கள். இப்படிச் செய்தால் அதற்குத் தேவையான போதுமான அளவிற்குப் பால் சுரப்பு இருக் கிறது என்பது பொருள். இவ்வாறு தன் வயிற் றுக்குத் தேவையான பால் குடிக்கும் குழந்தை கள் அசந்து தூங்குவதைப் பார்க்கலாம். அதே சமயத்தில் மாதாமாதம் குழந்தையின் எடை அதிகமாகிறதா என்பதிலும் ஒரு கண் வைத்திருங்கள்.

உடல்நலம் காக்கும் தாய்ப்பால்

குழந்தைகள் குறித்து இலண்டனில் உள்ள மருந்து ஆராய்ச்சிக் கழகம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் தாய்ப் பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த ஓர் இரசாயனப் பொருள் இருப்பதையும் அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக் களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்க வும் பெரிதும் உதவு கிறது என்பதையும் கண் டறிந்தனர். ஆங்கிலத் தில் ககுகூஐ என்ற பெய ரால் அழைக்கப்படும் இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக் கின்ற சீம்பாலில் மிக அதிக அளவில் இருக் கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது என்று அந்த ஆராய்ச்சி மேலும் குறிக்கிறது.

ஆனால் இதை அறி யாத பல பெண்கள் தங் கள் அழகு கெட்டு விடும் என்ற தவறான கண் ணோட்டத்தினால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கின்றனர். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந் தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது. தாய்க் கும் சேய்க்கும் மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகள் தாயின் மார்பில் சப்பி பாலைக் குடிப்பதால் அதன் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கல்சியம் சத்து நிறைந்த தாயின் பால் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் அதிகமாக இருப்பதே இதன் காரணம்.

திறமையுள்ள குழந்தையாக வளர வேண்டுமா?

உங்கள் குழந்தை உலகம் போற்றும் திறமை யோடும் ஆற்றலோடும் வளரவேண்டுமா? உலக சாதனை செய்து பேரும் புகழும் எடுக்கவேண்டுமா? அப்படியென்றால் உங்கள் குழந்தைக்கு இளம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுங்கள். ஏன் என்றால் தாயின் பாசத்தோடு தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல சுறுசுறுப் போடும் புத்திசாலித்தனத்தோடும் இருப்ப தைப் பார்க்கலாம். புட்டிப்பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருப்பதை லண்டன் தேசிய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் 1037குழந்தைகளிடம் நடத் தப்பட்ட ஆய்வில் அவர்களுடைய டி.என்.ஏ. மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் மேற்கண்ட உண்மை உறுதி செய்யப்பட்டது. தாய்ப்பாலில் மட்டுமே பொலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும்பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. எனவே தாய்ப்பால் கொடுப்பதால் இளமை யும் அழகும் குறையும் என்ற சந்தேக மேயில்லாமல் இளம் தாய்மார்கள் குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்னைக்கும் நன்மை உண்டு

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக தள்ளி வைக்கிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவாக பால் கொடுத்தல் என்பது நம்பகமான கருத்தடை முறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கமுடியும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். குழந்தைக்கு ஒரு வருடகாலமாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது. இவ்வாறு செய்தால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தி கணிசமான அளவிற்குக் குறைக்கப் படுகிறது. இதனால் மார்பக செல்களில் டி.என்.ஏ. சேதம் அடைவதைத் தடுக்க முடிகிறது.

பசுப்பாலைவிட தாய்ப்பால் பலவிதங்களில் சிறந்தது. இதைக் காய்ச்சவேண்டிய தேவை யில்லை. எப்போதும் பயன்படுத்தலாம். குழந் தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. புட்டிப்பாலுக்கு ஆகும் செலவைவிட ஒரு தாய் நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு அதன்மூலம் குழந்தைக்குப் பால் கொடுக் கின்றபோது ஆகும் செலவு குறைவானதுதான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகமாகிறது. ஆகவே இளம் தாய்மார்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுங்கள் என்பதை எல்லா மருத்துவர்களும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். குறைப்பிரசவத்தில் பிறந்தவை நோய் பாதிப்பு அடைந்தவை பிறக்கும் போதே தாயை இழந்தவை ஆகிய குழந்தை களுக்கு உதவி செய்வதற்காக தாய்ப்பால் வங்கிகள் பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற காலம் கடந்து போனவர்களுக்கு ஏதாவது விமோசனம்? :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போன்ற காலம் கடந்து போனவர்களுக்கு ஏதாவது விமோசனம்? :)

உங்கள் குழந்தைகளுடன் பங்கு போட்டு உங்களுக்கான பங்கைப் பெறுவதுதான் ஒரே வழி...........

  • தொடங்கியவர்

பிழம்பு எங்கட கு ம அண்ணைக்கு பிழையான பதில் குடுத்திட்டியள் போல

பாவம் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறார்.............

புட்டி போத்திலும் பயன்படுத்தலாம் எண்டு சொல்லுங்கோ!!!!!!!

பாவம் அவரின்ர அவா!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போன்ற காலம் கடந்து போனவர்களுக்கு ஏதாவது விமோசனம்? :unsure:

பனம்பால்.

பனம்பால்.

குமாரசாமி அண்ணெக்கு இதுதான் நல்ல விமோசனம்.

TTS கிடைக்கும். :unsure:

என்னைப்போன்ற காலம் கடந்து போனவர்களுக்கு ஏதாவது விமோசனம்? :unsure:

ஹார்மோன் தெராபி செய்தால் உங்களுக்கும் மார்பினூடாய் பால் சுரக்கும் என்று சொல்கிறார்கள். பசி வரும்போது அப்பப்ப சூப்பிக்கொள்ள வேண்டியதுதான். :unsure:

எனக்கொரு சந்தேகம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள் , சில தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு சிவப்பாக தோலில் பருக்கள் வருகிறது தானே இது தாய் நண்டு ,இறால் ,கணவாய் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் இப்படி வருவதற்க்கான சந்தர்ப்பங்கள் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற காலம் கடந்து போனவர்களுக்கு ஏதாவது விமோசனம்? :unsure:

குமாரசாமியண்ணா தாய்க்குப்பின் தாரம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள் சில தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு சிவப்பாக தோலில் பருக்கள் வருகிறது தானே இது தாய் நண்டு இறால் கணவாய் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் இப்படி வருவதற்க்கான சந்தர்ப்பங்கள் உண்டா?

செவ்வந்தி,

கண்டிப்பாக பால் கொடுக்கும் தாய் மார் நண்டு,றால்,கணவாய்,கத்தரி,தக்க

தகவலுக்கு நன்றி யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.