Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரி விரதாரம்பம், புரட்டாதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

19-09-2009 சனிக்கிழமை நவராத்திரி விரதாரம்பம், புரட்டாதி 1ஆம் சனி

22-09-2009 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்

26-09-2009 சனிக்கிழமை புரட்டாதி 2ஆம் சனி

27-09-2009 ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை, ஆயுத பூசை

28-09-2009 திங்கட்கிழமை விஜயதசமி, வன்னி வாழை வெட்டு, வித்தியாரம்பம், கேதாரகௌரி விரதாரம்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடங்கிட்டாளைவை ............................

இனி சூரன்போர் முடியும் வரைக்கும் மரக்கறி தான் :)

ஏற்கனவே எனக்கு வாயுப்பிரச்சனை. அதுக்குள்ளை தொடர்ந்து மரக்கறியெண்டால்........ :D

28-09-2009 திங்கட்கிழமை விஜயதசமி, வன்னி வாழை வெட்டு, வித்தியாரம்பம், கேதாரகௌரி விரதாரம்பம்

உண்மையில் கேதாரகெளரி விரதம் இந்த மாதமா தொடங்குது வாசா? இல்லை அடுத்த மாதம் 21.10..... சரியான திகதி தெரிந்தவர்கள் போட்டு விடுங்கள்.... :)

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கோதாரிகெளரி விரதம் இந்த மாதமா தொடங்குது வாசா? இல்லை அடுத்த மாதம் 21.10..... சரியான திகதி தெரிந்தவர்கள் போட்டு விடுங்கள்.... :)

என்ன கோதாரி விழுந்த கேள்வி இது.. அது கோதாரிகெளரி விரதம் அல்ல.. கேதாரகெளரி விரதம். பெண்களை பட்டினி போடுற விரதம். அப்படின்னு சொல்லுறதால கோதாரி என்றீங்களோ..??! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் கோதாரிகெளரி விரதம் இந்த மாதமா தொடங்குது வாசா? இல்லை அடுத்த மாதம் 21.10..... சரியான திகதி தெரிந்தவர்கள் போட்டு விடுங்கள்.... :unsure:

வணக்கம் சஐி

நவராத்திரியைத் தொடர்ந்து கேதாரகௌரி விரதம்[28.09.09---17.10.09]வரை தீபாவளி-17.10.09 அன்று இறுதி நாள்.

18.10.09 அன்று ஸ்கந்த சஷ்டி ஆரம்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ் சிறி

நல்ல பாடல்கள் தொடரட்டும்

எனக்கு இதனை எப்படி எடுப்பது என்பதனை சொல்லித் தருவீங்களா- நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிறி

நல்ல பாடல்கள் தொடரட்டும்

எனக்கு இதனை எப்படி எடுப்பது என்பதனை சொல்லித் தருவீங்களா- நன்றி

வணக்கம் வாஷா .

நீங்கள் Google ல்,navaraaththiri songs in youtube என்று ரைப் பண்ணுங்கள் நீங்கள் விரும்பும் ஏராளமான பாடல்கள் கிடைக்கும்.

Edited by தமிழ் சிறி

என்ன கோதாரி விழுந்த கேள்வி இது.. அது கோதாரிகெளரி விரதம் அல்ல.. கேதாரகெளரி விரதம். பெண்களை பட்டினி போடுற விரதம். அப்படின்னு சொல்லுறதால கோதாரி என்றீங்களோ..??! :unsure::lol:

தெரிந்துதான் எழுதினன் என்று பொய் சொல்ல மாட்டன் நெடுக்கு அண்ணா :lol: உண்மையில் நித்திரை கலக்கத்தில் மாறித்தான் எழுதி விட்டன் ஆனால் இப்படி சொன்னாலும் தப்பு இல்லை நெடுக்கு அண்ணா :unsure: ... 21 நாள் பட்டினியோட வேலை செய்வது எவ்வளவு கஸ்ரம்...

வணக்கம் சஐி

நவராத்திரியைத் தொடர்ந்து கேதாரகௌரி விரதம்[28.09.09---17.10.09]வரை தீபாவளி-17.10.09 அன்று இறுதி நாள்.

18.10.09 அன்று ஸ்கந்த சஷ்டி ஆரம்பம்.

நன்றி வாசா... கோவில்கள் பக்கத்தில் இல்லாத படியால் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை... நேற்று கோவிலுக்கு போய் இருந்தன் ஆனால் அங்கேயும் எழுதி போடவில்லை அய்யர் றொம்ப பிசியாக இருந்தார் அப்புறமாக கேட்கலாம் என்று இருந்து விட்டன்.... ஆனால் என்ன இந்த முறை தீபவாளியும் கேதாரகெளரி விரதம் கடசியும் ஒன்றாக வந்து விட்டது.....

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்வி தருவார் சரஸ்வதி.... காசு தருவார் லச்சுமி.... தில் தருவார் துர்க்கை. அகதி மக்களுக்கு யார் வாழ்வு தருவார். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகலகலாவல்லி மாலை MP3 வடிவில் இருந்தால் தாருங்கள்

நன்றி

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்

இயற்றிய

சகலகலாவல்லி மாலை

கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று

காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்

நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்

தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்

கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல

நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்

பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

பதம் பிரித்து எழுதுகையில் கீழ்கண்டவாறு அமையும்:

வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத்

தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று

காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என்

நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து

அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்

கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்

எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால்

கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல

நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்

பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10

பொருளை ஒட்டிப் பிரித்து எழுதுகையில் கீழ்க்கண்டவாறு அமையும்:

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்

தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்

குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து

அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

பொருள் பிரித்து, பதம் பிரித்து உதவிய திரு V.S. அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி.

சகலகலாவல்லிமாலை பிறந்த காதை

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.

அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.

தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.

அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

நன்றி: அகத்தியர் குழுமம்

நவராத்திரி 10ம் நாள் ஏடும் தொடக்குவாங்கள்.

இந்த முறையாவது ஏட்டை தொடக்கிடுங்க.......... :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெல்லாம் அலைகின்றார்...

இதை நான் சொல்லவில்லை. யாரோ ஒரு மகான் சொன்னார்....

நான் பார்த்து இரசித்த ஒரு வீடியோ....

கருத்துள்ளதாக இருந்தது.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?

Edited by akathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்வி தருவார் சரஸ்வதி.... காசு தருவார் லச்சுமி.... தில் தருவார் துர்க்கை. அகதி மக்களுக்கு யார் வாழ்வு தருவார். :unsure:

யாராவது மதங்களின் போதனைகளை பின்பற்றி நடக்கின்றீர்களா?

நரம்பில்லா நாக்கால் எதுவும் கூற முடியும்.

அல்லது?

தற்காலத்தில் தட்டச்சில் எதையும் எழுதமுடியும்.

உன்னை நீயே ஒருமுறை சிந்தித்துப்பார்.

யாராவது மதங்களின் போதனைகளை பின்பற்றி நடக்கின்றீர்களா?

உன்னை நீயே ஒருமுறை சிந்தித்துப்பார்.

இந்த இரண்டையும் தவிர மற்றதுகள் எல்லாம் இலகுவானது

முன்பு பள்ளிக்கூடத்தில் எப்படா சகலகலாவல்லிமாலை முடிந்து பூசை முடிப்பார்கள் என்றாகிவிடும். எல்லாம் பிரசாதம் தின்னும் ஆசையில் தான். பிறகு ஒன்பது நாளும் அதையே தின்று அலுத்துவிடுவதும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகலகலா வல்லி மாலை பத்து நாட்களும் பாடப்பட வேண்டுமா அல்லது கடைசி முன்று நாட்களும் பாட வேண்டுமா? எது சரி தெரிந்தவர்கள் சொல்லவும்.

என்ன சிறி பக்தி மயமாய் இருக்கிறீங்க

யாராவது மதங்களின் போதனைகளை பின்பற்றி நடக்கின்றீர்களா?

குமாரசாமி மாமா கொஞ்ச பேராவது இருக்கினம் என தோன்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.