Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடையாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவனின் வீடு மதவிற்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கையினுள் இருந்தது.அந்த மதவடி வீதியில் ஒரு பிலாமரம் அதில் பல பிலாக்காய்கள் காய்த்திருக்கும் இதனால் அந்த இடம் ஆயிரம் காச்சி பிலாவடி என்று ஊரார் அழைத்தனர்.அதற்கு அருகில் வாழும் மக்களையும் ஆயிரம்காய்ச்சி பிலாவடியார் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டபடியால் இவனையும் அந்த அடையாளம் தானாகவே ஓட்டி கொண்டது.

பாடசாலையில் படிக்கும் பொழுது "டே பிலாவடி இங்கே வாடா" என்று வாத்தியார் கூப்பிடுவார் அதை இவன் பெரிதாக கண்டு கொள்வதில்லை,கண்டு கொள்வதிற்கு ஏற்ற மனபக்குவம் அப்போது அவனிற்கு இருக்கவில்லை.

உயர்தர பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது பல பாடசாலைகளிளும் இருந்து மாணவர்கள் வந்து பங்குபற்றினார்கள் இவனுக்கு அருகில் இருந்த யாழகி (யாழ்பாணத்து அழகி) நீங்கள் மானிப்பாயோ என்று கேட்டாள்.ஓம் என்று பதிலளித்தான்.அன்று தான் அவன் தனது அடுத்த அடையாளத்தை உணர்ந்தான்.நான் ஒரு மானிப்பாய்வாசி என்பதை கேட்டவள் என்ற பெயரை கேட்காமல் என்னுடைய ஊரை மட்டும் கேட்கிறாளே!என்று நினைத்தபடியே நீங்கள் எவ்விடம் என்றான் பதிலிற்கு அவள் நான் உடுவில் என்று தன் பெயரை சொல்லாமலே ஊரை சொல்லி அடையாளபடுத்தி கொண்டாள்.

ஊர் அடையாளத்தோடு அறிமுகமான.வர்கள் விடைபெற்றனர் வீடு சென்றவன் அலைகள் ஓய்வதில்லை பட நாயகனாக தன்னையும் நாயகியாக உடுவில் ஆளையும் கற்பனை செய்து கொண்டான்.கற்பனையில் காலங்கள் போனது ஆனால் அவளை மீண்டும் அவன் சந்திக்கவில்லை.

அவனது தந்தை வெளிமாவட்டத்தில் பணி புரிந்து கொண்டிருந்தமையால் விடுமுறைக்கு தந்தையிடம் செல்வான் தந்தை அந்த மாவாட்டவாசியின் வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு இருந்தார்.அந்த வீட்டுகாரருக்கு இவனை ஒத்த வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.இவனுடன் மிகவும் அன்பாக பழக தொடங்கினார்கள் கால போக்கில் இவனை யாழ்பாணத்தார் உங்களை எங்களுக்கு தெரியும் காரியத்தில் கண்ணாய் இருப்பீர்கள் என்று கிண்டலடித்து பேசுவார்கள் இவனது யாழ்பாணத்து பேச்சு வழக்கை சகோதரிகள் இருவரும் பேசி வெறுப்பேற்றுவார்கள்.யாழ்பாண

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ........புத்தன் . தன அடையாளத்தை பற்றி சிந்திக்கும் ஒருவனின் மனப்பதிவாக இருக்கிறது .......

.ஆயிரம் காச்சி பிலாவடியான் ? அவுஸ்தி ரெலி யனாக ...அடையாளங்கள் மாறித்தான் போய் விட்டது .....

..சுயத்தை தொலைத்து விட்டோம்... இனி வரும் சந்ததி என்னவாகும்? ........சிந்திக்க வைக்கிறது .

நன்றி உங்கள் பதிவுக்கு .......

Edited by நிலாமதி

யதார்த்தாமான எழுத்துகள் புத்தன்.

நாங்கள் பலர் இப்படித்தான். ஊர்விட்டு ஊர்வந்தாலும், பிறந்து வளர்ந்த இடம் நம்மோடு ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். புலம்பெயர்ந்த நாங்கள் இங்கும் ஒட்டிக்கொள்ள முடியாமல் ஊருக்கும் திருப்பிப்போக முடியாமல் அகதி வாழ்க்கையிலேயே இறக்கவேண்டியது தான்.

மிகவும் பிடித்திருந்தது புத்தன் கதை சொன்ன விதம். மிகவும் உண்மையான ஒரு விசயத்தை நகைச்சுவையாக

அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ........புத்தன் . தன அடையாளத்தை பற்றி சிந்திக்கும் ஒருவனின் மனப்பதிவாக இருக்கிறது .......

.ஆயிரம் காச்சி பிலாவடியான் ? அவுஸ்தி ரெலி யனாக ...அடையாளங்கள் மாறித்தான் போய் விட்டது .....

..சுயத்தை தொலைத்து விட்டோம்... இனி வரும் சந்ததி என்னவாகும்? ........சிந்திக்க வைக்கிறது .

நன்றி உங்கள் பதிவுக்கு .......

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் இனிவரும் எமது சந்ததி இந்து இந்தியன் என்று பல்கலாச்சார மையத்தில் அடையாளப் படுத்தப்படுவார்கள்

யதார்த்தாமான எழுத்துகள் புத்தன்.

நாங்கள் பலர் இப்படித்தான். ஊர்விட்டு ஊர்வந்தாலும், பிறந்து வளர்ந்த இடம் நம்மோடு ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். புலம்பெயர்ந்த நாங்கள் இங்கும் ஒட்டிக்கொள்ள முடியாமல் ஊருக்கும் திருப்பிப்போக முடியாமல் அகதி வாழ்க்கையிலேயே இறக்கவேண்டியது தான்.

நன்றிகள் இஜாஸ் முள்ளி வாய்க்காலில் இருந்து தப்பினோம் என்று சந்தோசப்படுவோம்

மிகவும் பிடித்திருந்தது புத்தன் கதை சொன்ன விதம். மிகவும் உண்மையான ஒரு விசயத்தை நகைச்சுவையாக

அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

நன்றிகள் அர்ஜுன் படித்து பாராட்டியமைக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தார் உங்களை எங்களுக்கு தெரியும் காரியத்தில் கண்ணாய் இருப்பீர்கள்

என்ன புத்தன் அங்கிள் நீங்களுமா?

  • கருத்துக்கள உறவுகள்

..சுயத்தை தொலைத்து விட்டோம்... இனி வரும் சந்ததி என்னவாகும்? ........சிந்திக்க வைக்கிறது .

நன்றி உங்கள் பதிவுக்கு .......

இனி வரும் சந்ததிகளை வெள்ளைக்காரர்கள் இந்தியர் என்று தான் அழைப்பார்கள். அவுஸ்திரெலியாவில் எம்மவர்களின் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் எல்லாம் இந்திய உணவகம், இந்தியன் கடை என்றே எழுதப்பட்டிருக்கிறது. கடைகளில், விற்பனை நிலையங்களில் விளம்பரங்களில் கூட எமது அடையாளத்தை இழந்து நிக்கிறோம்.

பிரித்தானியாவில் ,அமெரிக்காவில் பல நையீரியா, கானா, தென்னாபிரிக்கா, சம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை ஆபிரிக்கர்கள் என்று தான் அழைப்பார்கள். ஏன் அவுஸ்திரெலியாவில் சீனா, யப்பான்,கொரியா, வியட்னாம் ,மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை சப்பை என்று எங்கட சனம் அழைப்பது வழக்கம். எங்கள் எல்லோருக்கும் அவர்கள் சீனர்கள் போலத் தெரியும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் சந்ததிகளை வெள்ளைக்காரர்கள் இந்தியர் என்று தான் அழைப்பார்கள். அவுஸ்திரெலியாவில் எம்மவர்களின் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் எல்லாம் இந்திய உணவகம், இந்தியன் கடை என்றே எழுதப்பட்டிருக்கிறது. கடைகளில், விற்பனை நிலையங்களில் விளம்பரங்களில் கூட எமது அடையாளத்தை இழந்து நிக்கிறோம்.

பிரித்தானியாவில் ,அமெரிக்காவில் பல நையீரியா, கானா, தென்னாபிரிக்கா, சம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை ஆபிரிக்கர்கள் என்று தான் அழைப்பார்கள். ஏன் அவுஸ்திரெலியாவில் சீனா, யப்பான்,கொரியா, வியட்னாம் ,மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை சப்பை என்று எங்கட சனம் அழைப்பது வழக்கம். எங்கள் எல்லோருக்கும் அவர்கள் சீனர்கள் போலத் தெரியும்.

ஆனபடியால் இனி நாங்கள் எல்லோரையும் மனிதர்கள் என்று அடையாளப்படுத்துவோம்

அல்லது பூலோகத்தார்.என்றும் சொல்லலாம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனபடியால் இனி நாங்கள் எல்லோரையும் மனிதர்கள் என்று அடையாளப்படுத்துவோம்

அல்லது பூலோகத்தார்.என்றும் சொல்லலாம்

இதுதான் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.