Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பலபிட்டி கடலில் பொலிசாரினால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகுமாரனிற்கு அஞ்சலியும் கண்டன கூட்டத்திற்கும் மனோ கணேசன் அழைப்பு

Featured Replies

பம்பலபிட்டி கடலில் பொலிசாரினால் அடித்து கொலை செய்யப்பட்ட பாலவர்ணம் சிவகுமாரனின் அஞ்சலி கூட்டமும் இந்த காட்டு மிராண்டி தனமான கொலையினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய காட்டு மிராண்டி தனத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.

கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.

எனவே அனைத்து தரப்பினரும் எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் இவ்வாறு திரு மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலசுப்பிரமணியம் சிவகுமாரனா அல்லது பாலவர்ணம் சிவகுமாரனா? எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். காடுமிராண்டிகள். அடித்து கொல்லும் அளவுக்கு அவன் என்ன தப்பு செய்தான்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலசுப்பிரமணியம் சிவகுமாரனா அல்லது பாலவர்ணம் சிவகுமாரனா? எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். காடுமிராண்டிகள். அடித்து கொல்லும் அளவுக்கு அவன் என்ன தப்பு செய்தான்?

சிங்களத்ததில மகே அம்மே என கத்தாம தழிழ்ல என்ர அம்மா என கத்தியதுதான் அவன் செய்த தப்பு

காட்டுமிராண்டி சிங்களவன்களை அணுகுண்டு போட்டு கொல்லோணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையெடுத்துக் கும்பிடுபவனையும், கதறிக்காப்பாற்று என்று கேட்பவனையும் கதறக்கதற அழிப்பதே இன்றைய உலக அரசுகளின் நாகரீகம். தமிழன் கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதியாகி விட்டானா? இவர்கள் தான் பயங்கரவாதத்தை அழிப்பவர்களா? அல்லது பயங்கரவாதம் உலகை ஆளுகின்றதா? இன்று பணபலம், ஆயுதபலம் கொண்ட பயங்கரவாத சக்திகள் கூட்டாக உலகத்தை ஆளுகின்றது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இது யாருக்கும் வெளிப்படையாக விளங்காத உண்மை. உண்மைக்கும், நியாயத்திற்கும் இவ்வுலகில் இனி வேலையில்லை.

நியாயம், உண்மை, உரிமை கேட்பவர்கள் உலகம் எங்கும் கொல்லப்படுவதே உண்மையாகிவிட்டது. பயங்கரவாதம் அழிக்கப்படுகின்றதா? வளர்க்கப்படுகின்றதா? பேச்சு மூலம் தீர்வு காண அவர்களின் பணபலமும், ஆயுதபலமும் இடைய+றாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்பறிக்கப்பட்ட இளைஞன் சிவகுமாரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..! அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

பொன்ட் 7 1/2 மற்றும் மதிவதனன் போன்றோர் ஆவலுடன் எதிர்பார்த்த புலிகளுக்கு முன்னான காலம் விரைவில் வந்துவிட்டது. இனி சிங்களஇராணுவம் தமிழ்மக்களை கடத்தி கொலைசெய்யவேண்டியதில்லை சிங்களவங்களே ஆங்காங்கு அடித்து கொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

------

முதலில் இந்தச்செய்தி யாழில் இணைக்கப் பட்டிருந்த போது ...... நிச்சயம் இவர் ஒரு தமிழனாக இருப்பார் என்று எனது மனம் சந்தேகப்பட்டது , உண்மையாகி விட்டது. சிங்களவன் , தமிழனை அடித்துக் கொல்லும் அளவுக்கு இப்போ நிலமை உள்ள‌து. :wub:

சிவகுமாரனின் ஆத்மா சாந்தியடையவும் , அவர்ன் பிரிவால் வாடும் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமாரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகுமாரனின் ஆத்மா சாந்தியடைய தடியோட் நிண்ட எல்லாரயும் புடிச்சு கமராக்காரனையும் புடிச்சு உண்மையான குற்றவாளிகள கண்டுபிடிக்கவேணும். வீடியோப்படங்கள பார்க்கிறபோது சிவகுமாரன தூண்டிவர்கள் இருக்கலாம் எண்டு தோன்றுது. :D

எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.