Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர்: நிழலி

Featured Replies

நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர்

மீண்டும் உருப்பெறாத

கனவுகள் இரவின் நடு நிசியையும்

தாண்டி வருகின்றன

கைகள் முளைத்த பல கனவுகள்

கழுத்தையும், குரல்வளையும்

நெரித்து கொல்கின்றன

என் கனவுகளுக்கு

மொழிகள் இருப்பதில்லை

நிறங்கள் இருப்பதில்லை

சத்தம் இருப்பதில்லை

மெளனம் நிறைந்த கனவில்

நேற்றைய மனிதர்கள்

வந்துபோயினர்

அவர்களின் கேள்விகள்

அவர்களின் ஏமாற்றங்கள்

அவர்களின் துயரங்கள்

அவர்கள் சொல்லும் உண்மைகள்

எதற்கும் ஒலியிருப்பதில்லை

ஆயினும் உயிர் துளைத்து

ஓராயிரம் யுகங்களைக் கடக்கும்

வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர்

வலிய கனவொன்று இரவு

கடக்கும் ஒவ்வொரு நாளிலும்

நான் அச்சமுறுகின்றேன்

கண்கள் மேல் படர்ந்த

கனவின் சுமையில்

பகலின் பொழுதுகளையும்

பார்க்க அஞ்சுகின்றேன்

இந்த மனிதர்கள் எங்கிருந்து

வருகின்றனர்

எப்படி மீண்டும் மீண்டும்

என்னுள் இறங்கி

இரவு முழுதும் எனக்குள்

நடந்து செல்கின்றனர்

ஏன் ஒரே சீருடையை எப்பவும்

அணிந்து கொள்கின்றனர்

நேற்றோ முந்தநாளோ

அல்லது என்றுமோ

இவர்களை கண்டதாகவும்

ஞாபகம் இல்லை

ஒவ்வொரு இரவிலும்

ஏதோ ஒரு கணத்தில்

கனவுகள் உடைபடுகின்றபோது

வந்தவர்களும் உறைந்து போகின்றனர்

மறுநாளில் மீண்டும் உடைந்த

கனவு மீள் உருவம் கொள்கையில்

உறைந்தவர்கள் மீண்டும்

விட்ட இடத்திலிருந்து

அசைய தொடங்குகின்றனர்

நேற்றும் அந்தக் கனவு வந்தது

நேற்றைய மனிதர்கள் வந்தனர்

இடையிலொரு கணத்தில்

உடைந்து போனது கனவு..

உடைந்த கனவு விரல்

வழியே கசிந்து கவிதையாகியபின்

உறைந்து போனவர்கள்

மீண்டும் என் முன்

எழத் தொடங்கினர்…..

:நிழலி

(நவம்பர் 03/2009)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதை நன்றாய் உள்ளது..எனக்கு இதைவிட வேற என்னத்தை எழுதுவது எண்டு தெரியவில்லை.நன்றி.

மிக மிக அருமையான கவிதை.இது மாத்திரமல்ல இதற்கு முதலும் உமது கவிதைகள் பல படித்திருக்கின்றேன். கவிதை என்பது எல்லாராலேயும் எழுதக்கூடியதோன்றன்று.எவரும் எழுதலாம்,எவரும் பாட‌லாம் ஒரு தடையில்லை.ஆனால் எல்லோரும் ஸ்பி.பி யும் இல்லை,வைரமுத்துவுமில்லை அதைத்தான் விளங்கிக்கொள்ளவேணடும்.இது இங்கு க‌விதை எழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு.(குமார‌சாமி ம‌ன்னிக்க‌வும்)

நீர் மிக‌வும் ஒரு த‌னித்த‌ன்மையான‌ கவிஞ‌ர் என்ப‌தில் எந்த‌வொரு மாற்றுக்க‌ருத்தும் இல்லை. ஆனால் க‌விஞ‌ர்க‌ள் அர‌சிய‌லில் பொற்காசு பெற‌ப்போப‌வ‌ர்க‌ள் போல் க‌விதை எழுதுவ‌தும்,பின்ன‌ர் த‌ங்க‌ள் நிலை த‌டுமாறி சோர‌ம் போவ‌தும்தான் ஏனென்று புரியவில்லை.உதாரணம் தமிழ்நாட்டில் கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை தமிழீழத்தில் புதுவை,சேர,ஜெயபாலர் வரை நீங்களும் ஏறக்குறைய அந்த பட்டியலில் தான். உள்ளத்தை மனம் திற‌ந்து சொன்னதற்கு என்னை மன்னித்தருளும்.‌

.ஆனால் எல்லோரும் ஸ்பி.பி யும் இல்லை,வைரமுத்துவுமில்லை அதைத்தான் விளங்கிக்கொள்ளவேணடும்.இது இங்கு க‌விதை எழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு.(குமார‌சாமி ம‌ன்னிக்க‌வும்)

யார் என்ன சொன்னாலும் நாங்கள் எழுதவமல்ல கவிதை .பாடுவமல்ல பாட்டு

  • தொடங்கியவர்

மிக மிக அருமையான கவிதை.இது மாத்திரமல்ல இதற்கு முதலும் உமது கவிதைகள் பல படித்திருக்கின்றேன். கவிதை என்பது எல்லாராலேயும் எழுதக்கூடியதோன்றன்று.எவரும் எழுதலாம்,எவரும் பாட‌லாம் ஒரு தடையில்லை.ஆனால் எல்லோரும் ஸ்பி.பி யும் இல்லை,வைரமுத்துவுமில்லை அதைத்தான் விளங்கிக்கொள்ளவேணடும்.இது இங்கு க‌விதை எழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு.(குமார‌சாமி ம‌ன்னிக்க‌வும்)

பாராட்டுக்கு நன்றி அர்ஜுன்

அர‌சிய‌லில் பொற்காசு பெற‌ப்போப‌வ‌ர்க‌ள் போல் க‌விதை எழுதுவ‌தும்,பின்ன‌ர் த‌ங்க‌ள் நிலை த‌டுமாறி சோர‌ம் போவ‌தும்தான் ஏனென்று புரியவில்லை.....வரை நீங்களும் ஏறக்குறைய அந்த பட்டியலில் தான். உள்ளத்தை மனம் திற‌ந்து சொன்னதற்கு என்னை மன்னித்தருளும்.‌

நானும் அரசியலில் சோரம் போனதாக எவ்வாறு சொல்கின்றீர்கள்? எந்த விடயத்தை/ விடயங்களை வைத்து இவ்வாறு முடிவு செய்தீட்கள் என்று அறியத்தந்தால் தொடர்ந்து உரையாடலாம் <_<

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர்

....

அவர்களின் கேள்விகள்

அவர்களின் ஏமாற்றங்கள்

அவர்களின் துயரங்கள்

அவர்கள் சொல்லும் உண்மைகள்

எதற்கும் ஒலியிருப்பதில்லை

ஆயினும் உயிர் துளைத்து

ஓராயிரம் யுகங்களைக் கடக்கும்

வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர்

...

:நிழலி

(நவம்பர் 03/2009)

உண்மை நிழலி, கனவு வந்த அன்றைய பொழுது முழுக்க ஒரே வெறுமையான நாளாக‌ இருக்கும்.

கைகள் முளைத்த பல கனவுகள்

கழுத்தையும்இ குரல்வளையும்

நெரித்து கொல்கின்றன

இந்த வரிகள் எமக்கு மிகவும் பொருத்தமானது. வாழ்தல் பற்றிய எண்ணங்களும் அவை சம்மந்தப்பட்ட கனவுகளும் காட்டும் திசையில் பயணிக்கின்றோம். நிஜவாழ்விலும் எமது கைகளால் எமது குரல்வளையை நெரித்துக் கொள்கின்றோம். எம்மிடம்; கைகள் முளைத்த நிஜாயமானதும் வாழ்வின் தேவை குறித்ததுமான பலதுகள் கனவாக இருந்தது. கருவில் கொன்றது போக எஞ்சி பிறந்த மழலைகளை முற்றத்தில் தவழ்ந்த போது கொன்றோம். எமக்கான பெரிய அடயாளமே எமக்கான கைவிலங்கையும் தூக்குக் கயிறையும் எம்முடன் எப்போதும் வைத்திருக்கின்றோம். இரவின் கனவு வடியலில் வாழ்வுடன் கலக்கின்றது. உங்கள் எழுத்துக்கள் கனமானது. தொடருங்கள். கவிதை புரட்சிகளுக்கு காரணமாக இருந்தது வரலாற்றில் உண்டு. எமக்கு அவ்வளவு ஒன்றும் தேவை இல்லை எம்மை மனுசர் ஆக்கினாலே பெரிய விசயம்.

  • தொடங்கியவர்

உண்மை நிழலி, கனவு வந்த அன்றைய பொழுது முழுக்க ஒரே வெறுமையான நாளாக‌ இருக்கும்.

ஓம் தமிழ் சிறி... சில கனவுகள் வெறுமையையும் சூனியத்தையும் தந்துவிட்டு போகின்றன

இந்த வரிகள் எமக்கு மிகவும் பொருத்தமானது. வாழ்தல் பற்றிய எண்ணங்களும் அவை சம்மந்தப்பட்ட கனவுகளும் காட்டும் திசையில் பயணிக்கின்றோம். நிஜவாழ்விலும் எமது கைகளால் எமது குரல்வளையை நெரித்துக் கொள்கின்றோம். எம்மிடம்; கைகள் முளைத்த நிஜாயமானதும் வாழ்வின் தேவை குறித்ததுமான பலதுகள் கனவாக இருந்தது. கருவில் கொன்றது போக எஞ்சி பிறந்த மழலைகளை முற்றத்தில் தவழ்ந்த போது கொன்றோம். எமக்கான பெரிய அடயாளமே எமக்கான கைவிலங்கையும் தூக்குக் கயிறையும் எம்முடன் எப்போதும் வைத்திருக்கின்றோம். இரவின் கனவு வடியலில் வாழ்வுடன் கலக்கின்றது. உங்கள் எழுத்துக்கள் கனமானது. தொடருங்கள். கவிதை புரட்சிகளுக்கு காரணமாக இருந்தது வரலாற்றில் உண்டு. எமக்கு அவ்வளவு ஒன்றும் தேவை இல்லை எம்மை மனுசர் ஆக்கினாலே பெரிய விசயம்.

மிகவும் உண்மையாக எழுதியுள்ளீர்கள் சுகன். எம் வாழ்வு முழுதும் அச்சத்துடன் மட்டுமன்றி எவரையும் எதையும் நம்பமுடியாத வெறுமையயும் கூடச் சேர்த்தே நகருகின்றது. நாள் பொழுதின் எச்சமாக மட்டுமன்றி, எம் நம்பிக்கைத் தோல்விகளினதும் ஏமாற்றங்களினதும் உணர்திறன் மிக்க எச்சங்களாகத் தான் கனவுகள் அமைகின்றன. கனவுகள் இங்கு வெறும் குறியீடுகள் மட்டுமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.