Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை சீமான்

Featured Replies

seeman451.jpg

சரியாய் சொன்னீங்கள் சீமான்.

பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடம் பற்றி ..... இப்போ இருந்து கதைப்பதற்கு எந்த நாய்க்கும்...... லாயக்கு இல்லை.

திராவிடத்தின் தேவை இந்தியா எனும் பாழப்போன நாடு உருவாகும் முன் தேவையாய் இருந்தது...அதைத்தான் பெரியார் முன்மொழிந்தார் அது சாத்தியமற்று போகவே தமிழ்நாடு தனி நாடாகவேண்டும் என்றார். இப்போது ஆரியன் திராவிடனை முன்பு பிரித்தது போதாதென்று மேலும் உடைக்கின்றான் ஆந்திராவில்...இதை பார்த்து தமிழ்நாட்டிலும் சிலர் தென் தமிழகம், வட தமிழகம் என்று பிரிக்க முனைகின்றனர்..தமிழர் சிதையவும் ஆரியன் கோல் எடுத்துவிட்டான் இது சீமானுக்கு புரிந்தபடியால்தான் ஆதித்தனார் துவக்கிய “நாம் தமிழர்” இயக்கத்தை மீள் உயிர் கொடுத்து ஒருங்கினைக்கின்றார். தமிழ் உள்ளங்களே தடுமாறாதீர்கள் உங்களால் இயலாததை ஒருவர் தன்னலமற்று செய்கிறார் முடிந்தால் எப்படி செவ்வனே செய்யலாம் என்று கலந்துரையாடுங்கள்...

உங்கள் செவிக்கோ, கண்ணுக்கோ, மனதிற்கோ பிடிக்கவில்லை எனில் சற்று உணரும் வரை விலகி நில்லுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தின் தேவை இந்தியா எனும் பாழப்போன நாடு உருவாகும் முன் தேவையாய் இருந்தது...அதைத்தான் பெரியார் முன்மொழிந்தார் அது சாத்தியமற்று போகவே தமிழ்நாடு தனி நாடாகவேண்டும் என்றார். இப்போது ஆரியன் திராவிடனை முன்பு பிரித்தது போதாதென்று மேலும் உடைக்கின்றான் ஆந்திராவில்...இதை பார்த்து தமிழ்நாட்டிலும் சிலர் தென் தமிழகம், வட தமிழகம் என்று பிரிக்க முனைகின்றனர்..தமிழர் சிதையவும் ஆரியன் கோல் எடுத்துவிட்டான் இது சீமானுக்கு புரிந்தபடியால்தான் ஆதித்தனார் துவக்கிய “நாம் தமிழர்” இயக்கத்தை மீள் உயிர் கொடுத்து ஒருங்கினைக்கின்றார். தமிழ் உள்ளங்களே தடுமாறாதீர்கள் உங்களால் இயலாததை ஒருவர் தன்னலமற்று செய்கிறார் முடிந்தால் எப்படி செவ்வனே செய்யலாம் என்று கலந்துரையாடுங்கள்...

உங்கள் செவிக்கோ, கண்ணுக்கோ, மனதிற்கோ பிடிக்கவில்லை எனில் சற்று உணரும் வரை விலகி நில்லுங்கள்...

ஓகே.... சினைப்பர் .

நாங்களே ..... போக வழியை காணவில்லையாம்.......

மூஞ்சூறுக்கு ஏன் விளக்குமாறு.

தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று இந்த இடத்தில் எழுதவேண்டிய தேவை என்ன சபேசன்?அதற்கான நம்பத் தகுந்த சரியான ஆதாரம் தங்களிடம் இருக்கிறதா?அல்லது சிறிலங்கா கொடுத்த ஆதாரங்களைத் தான் நீங்களும் தருவீர்களா?

"ஓரிரு நாட் களுக்கு முன்பு மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஏதோ ஒரு புதிய குழு அறிவித்திருந்தது. அதனை தமிழ் சார்ந்த இணைய தளங்களெல்லாம் ஏதோ புதிய விடியலுக்கான பூபாளம் போல் விசிலடித்துக் கொண்டாடி யிருந்தது. ஆனால் விசாரித்தால் இச்செய்தியின் பின்னணியில் இருப்பது இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவும், செத்துப்போனதாய் கருதப்பட்ட பழைய ஓர் தமிழ் இயக்கமும் எனத் தெரிய வருகிறது.

இச்செய்தியின் நோக்கம் இதுதான்: ""வவுனியா முகாம்களிலிருந்து மக்கள் விடுதலையான பின் அரசியல் தீர்வு பற்றின அழுத்தங் களை உலகம் இலங்கை மீது ஏற்படுத்தும். அதில் தமிழீழ தாயக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள ராணுவத் தினரை கணிசமாக வெளியேற்றுவதும் உள்ளடங்கும். அந்நிலை வருகையில் ராணுவ ஆக்கிரமிப்பை தொடர வைக்கத் தேவையான வாதிடல்களுக்காகவே இப்படியான புதிய ஆயுதக்குழுக்கள் அறிவிப்புகள்".

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் சாபக்கேடான "தூய்மை மனப்பான்மை"யே இங்கு பல கருத்துக்களில் தென்படுகிறது. நம்மை நாம் முதலில் திருத்திக்கொண்டு அடுத்தவனைத் திருத்த முற்படுவோம் என்பது சாதாரணமாக எமது சமூகத்தில் பாவிக்கப்படும் ஒரு கருதுகோள்..! ஆனால் இக்காலகட்டத்தில் இது எமக்கு சரிப்படுமா? எதிரிகள் நம்மீது குந்தியிருந்து கொண்டு குத்துகிறார்கள். நாங்களோ எங்கள் களுசான்களை மேலே இழுத்துவிட முயன்றுகொண்டு இருக்கிறோம்..! :)

பசும்பொன் பற்றி சுட்டிக் காட்டியதற்கு நன்றி

சீமான் எனக்கு எந்தக் காண்டும் இல்லை. ஆனால் அவர் அண்மைக் காலமாக பல விடயங்களில் குழப்பமாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவது கவலை அளிக்கின்றது.

மக்களை எமக்கு வழி காட்ட அனுமதிக்கக் கூடாது, நாம்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதில் தந்தை பெரியார் கவனமாக இருந்தார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இந்தப் பண்பு இருக்க வேண்டும். சீமான் வாக்கு அரசியலில் இறங்கி பல சமரசங்களை செய்ய ஆரம்பிக்கின்றார்.

எது எப்படியோ ஒவ்வொரு வாரமும் திருந்துகின்ற சீமான் அடுத்த வாரமும் திருந்துவார் என்று நம்புவோம்.

உங்களை விட சீமான் என்ன முன்னுக்கு பின் முரணாக கதைத்து விட்டார்...???

உங்களுக்கு எல்லாம் அரிப்பு எடுத்தால் பெரியாரின் பெயரை பாவித்து யாரை வேண்டுமானாலும் சொறிவீர்கள்... உங்களின் சொறிதலுக்கு உட்படுபவர்களின் அர்ப்பணிப்பின் எத்தினை விகிதம் உங்களிடம் இருக்கிறது எண்று கேட்டு பாருங்கள்...

சீமான் தன்னை பிரபலப்படுத்த சிறைக்கு செண்றார் அல்லது பாடுபடுகிறார் எண்று சொல்ல விளையும் உங்களில் எத்தினை பேர் அதே விடயத்தை உணர்வு பூர்வமாக குடும்பங்களை எல்லாம் ஒதுக்கி செய்ய முடியும்....?? எவ்வளவு ஆழத்துக்கி இறங்கி நிண்று கடினமாக உழைக்க முடியும்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தமிழகத்தில எங்களுக்காக ஓர்மமாய் குரல் கொடுக்கிற ஆட்களில் சீமான் முக்கியமானவர். அவரை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு நட்டமே ஒழிய எந்த இலாபமுமில்லை என்பது சில பகுத்தறிவாளர்கள் என்று தம்மைத்தானே சொல்லிக் கொள்பவர்களின் பகுத்தறிவுக்கு எட்டவில்லைப் போலும்.

ஓகே.... சினைப்பர் .

நாங்களே ..... போக வழியை காணவில்லையாம்.......

மூஞ்சூறுக்கு ஏன் விளக்குமாறு.

வழி எல்லாம் இருக்கு ஒற்றுமைதான் இல்லை!

சீமான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இங்கே யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் விமர்சனம் வைப்பதற்கு தகுதி உண்டா என்கின்ற எதிர்தாக்குதலும், எமது ஆதரவாளரான சீமானை விமர்சிக்க வேண்டாம் என்கின்ற கோரல்களுமே வருகின்றன.

சீமான் ஆரம்பத்தில் மிக நிதானமான தனது அடிகளை வைத்தார். எடுத்தவுடன் அரசியற் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதற்கான நாளாக தமிழினமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட மே 17ஐ தேர்ந்தெடுத்தார். இதன் மூலம் ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கான காலத்தை பெற்றுக் கொண்டார். அத்துடன் அடுத்து வருகின்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார். முதலில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பின்பு சட்டசபைத் தேர்தல் என்று நிதானமாக திட்டமிட்டார்.

ஆனால் இன்றைக்கு தன்னுடைய உரைகளில் பேட்டிகளிலும் தடுமாறுகின்றார். திராவிட அரசியல் என்பதை ஏதோ திமுக, அதிமுக அரசியல் என்று நினைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார். முத்துராமலிங்கத்திற்கு மாலை போடுகிறார். சீமானுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவரோடு பக்க பலமாக நிற்கின்ற தோழர்களை மனம் கோணச் செய்கிறார்.

திராவிட சிந்தனையில் வந்த தேவரின இளைஞர்கள் முத்துராமலிங்கத்திற்கு மாலை போடாது முத்துராமலிங்கத்தின் தூண்டுதலினால் கொலை செய்யப்பட்ட போராளி இமானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் என்கின்ற செய்தியை ஒரு தோழர் பதிவு செய்திருந்தார். சீமான் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொள்கையில் உறுதி கொண்ட, செயற்பாடு மிக்க, வாக்கு அரசியலுக்காக சமரசம் செய்யாத ஒரு போராளியாகவே சீமானைப் பார்க்க விரும்புகிறேன். அப்படி அவரால் இருக்க முடியாது என்றால் எமக்கு சீமான் தேவையில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவளவன், கருணாநிதி என்று நிறையப் பேர் இங்கே இருக்கிறார்கள்.

சீமானின் அண்மைய போக்கினை அடுத்து அவர் மீது அவரின் தோழர்களால் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவைகள் சீமானை சிந்திக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இங்கே யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் விமர்சனம் வைப்பதற்கு தகுதி உண்டா என்கின்ற எதிர்தாக்குதலும், எமது ஆதரவாளரான சீமானை விமர்சிக்க வேண்டாம் என்கின்ற கோரல்களுமே வருகின்றன.

சீமான் ஆரம்பத்தில் மிக நிதானமான தனது அடிகளை வைத்தார். எடுத்தவுடன் அரசியற் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதற்கான நாளாக தமிழினமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட மே 17ஐ தேர்ந்தெடுத்தார். இதன் மூலம் ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கான காலத்தை பெற்றுக் கொண்டார். அத்துடன் அடுத்து வருகின்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார். முதலில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பின்பு சட்டசபைத் தேர்தல் என்று நிதானமாக திட்டமிட்டார்.

ஆனால் இன்றைக்கு தன்னுடைய உரைகளில் பேட்டிகளிலும் தடுமாறுகின்றார். திராவிட அரசியல் என்பதை ஏதோ திமுக, அதிமுக அரசியல் என்று நினைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார். முத்துராமலிங்கத்திற்கு மாலை போடுகிறார். சீமானுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவரோடு பக்க பலமாக நிற்கின்ற தோழர்களை மனம் கோணச் செய்கிறார்.

திராவிட சிந்தனையில் வந்த தேவரின இளைஞர்கள் முத்துராமலிங்கத்திற்கு மாலை போடாது முத்துராமலிங்கத்தின் தூண்டுதலினால் கொலை செய்யப்பட்ட போராளி இமானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் என்கின்ற செய்தியை ஒரு தோழர் பதிவு செய்திருந்தார். சீமான் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொள்கையில் உறுதி கொண்ட, செயற்பாடு மிக்க, வாக்கு அரசியலுக்காக சமரசம் செய்யாத ஒரு போராளியாகவே சீமானைப் பார்க்க விரும்புகிறேன். அப்படி அவரால் இருக்க முடியாது என்றால் எமக்கு சீமான் தேவையில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவளவன், கருணாநிதி என்று நிறையப் பேர் இங்கே இருக்கிறார்கள்.

சீமானின் அண்மைய போக்கினை அடுத்து அவர் மீது அவரின் தோழர்களால் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவைகள் சீமானை சிந்திக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

:lol::D

சீமான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இங்கே யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் விமர்சனம் வைப்பதற்கு தகுதி உண்டா என்கின்ற எதிர்தாக்குதலும், எமது ஆதரவாளரான சீமானை விமர்சிக்க வேண்டாம் என்கின்ற கோரல்களுமே வருகின்றன.

சீமான் ஆரம்பத்தில் மிக நிதானமான தனது அடிகளை வைத்தார். எடுத்தவுடன் அரசியற் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதற்கான நாளாக தமிழினமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட மே 17ஐ தேர்ந்தெடுத்தார். இதன் மூலம் ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கான காலத்தை பெற்றுக் கொண்டார். அத்துடன் அடுத்து வருகின்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார். முதலில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பின்பு சட்டசபைத் தேர்தல் என்று நிதானமாக திட்டமிட்டார்.

ஆனால் இன்றைக்கு தன்னுடைய உரைகளில் பேட்டிகளிலும் தடுமாறுகின்றார். திராவிட அரசியல் என்பதை ஏதோ திமுக, அதிமுக அரசியல் என்று நினைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார். முத்துராமலிங்கத்திற்கு மாலை போடுகிறார். சீமானுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவரோடு பக்க பலமாக நிற்கின்ற தோழர்களை மனம் கோணச் செய்கிறார்.

திராவிட சிந்தனையில் வந்த தேவரின இளைஞர்கள் முத்துராமலிங்கத்திற்கு மாலை போடாது முத்துராமலிங்கத்தின் தூண்டுதலினால் கொலை செய்யப்பட்ட போராளி இமானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் என்கின்ற செய்தியை ஒரு தோழர் பதிவு செய்திருந்தார். சீமான் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொள்கையில் உறுதி கொண்ட, செயற்பாடு மிக்க, வாக்கு அரசியலுக்காக சமரசம் செய்யாத ஒரு போராளியாகவே சீமானைப் பார்க்க விரும்புகிறேன். அப்படி அவரால் இருக்க முடியாது என்றால் எமக்கு சீமான் தேவையில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவளவன், கருணாநிதி என்று நிறையப் பேர் இங்கே இருக்கிறார்கள்.

சீமானின் அண்மைய போக்கினை அடுத்து அவர் மீது அவரின் தோழர்களால் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவைகள் சீமானை சிந்திக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

உங்களால் அவரை தொடர்பு கொண்டு தமிழ் மீதுள்ள அக்கறையை முறையிட்டீரா? இல்லையே! வெறும் யாழ்களத்தில் எழுதுவதால் பலனில்லை மேலும் பொதுவான நம் இலக்குதான் முக்கியம் அதைவிடுத்து தனித்தனியாக பிரச்சனைகளை தீர்த்து நல்லபெயர் வாங்க யாராலும் முடியாது!

கொள்கையில் உறுதி கொண்ட, செயற்பாடு மிக்க, வாக்கு அரசியலுக்காக சமரசம் செய்யாத ஒரு போராளியாகவே சீமானைப் பார்க்க விரும்புகிறேன்...அப்படித்தான் அவர் உள்ளார்.

தமிழன் என்ற பெருமையுடன் இருங்கள் பொறாமையுடன் இருக்காதீர்கள்.

சீமான் நல்லவரா கெட்டவரா என்பது கூட முக்கியம் இல்லை.. அதைவிட சீமானை குற்றம் சாட்டும் அளவுக்கு தகுதி தமிழர்களில் யாருக்கு இருக்கிறது...

ஒருவரிடம் இருக்கும் நல்ல விடயங்களை மட்டும் எடுத்து பாருங்கள் எண்று சொல்வதுதான் சீமானின் மேற்படி பேட்டியின் சுருக்கமே.... ஏதோ ஒரு தவறு செய்தவரின் எதை பின்பற்றினாலும் தீண்டாமை எண்று அலறுவதை எந்த வகையில் பகுத்தறிவு எண்று ஏற்றுக்கொள்கிறார்கள்....??

ஏன் பெரியார் என்பவர் கூட முகம்து ஜினாவின் கூட்டாளிதானே... இண்று இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் நிறைந்த அது பாக்கிஸ்தான் அரசு மட்டும்தானே.... பெரியாரின் பெயரால் இவர்கள் பாக்கிஸ்தானிடம் உதவி வாங்க முடியுமா... அல்லது அதுக்கு தயாராகத்தான் இருக்கிறார்களா...??

இண்டைக்கும் இந்தியா எனும் குண்டு சட்டிக்குள், திராவிடம் எனும் கறண்டியால் வராத ஒண்டுக்காக தோண்டி கொண்டு இருப்பவர்கள் தான் இந்த திராவிட வாதிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.