Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடம் மாற்றிய வெந்த பன்றியின் கறிச் சுவை!

Featured Replies

தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது.

நாட்டு நடப்பையும், அது சார்ந்த அரசியலையும் செய்தியாக அளிப்பதோடு நிற்காமல், நிகழ்வுகளுக்கான காரணத்தையும், பிரச்சனைகளின் ஆழத்தையும் தெளிவாக எடுத்துரைத்து வாசகர்களை விவரப்படுத்தும் சமூகக் கடமையுள்ள ஊடகங்கள், தடம் புரண்டு, நிகழ்வின் காரணத்தை மறைத்தும், உண்மையைத் திரித்தும் கூறும்போது அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

WDசென்னை தியாகராயர் நகரில் நவம்பர் முதல் தேதி நடந்த அந்நிகழ்வின் மையமாக இருந்தது, நமது நாட்டின் படித்த மக்களிடையே பரவலாக அறியப்பட்டு, மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் ‘தி இந்து’ நாளிதழே. தி இந்துவில் ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அதுதான் உண்மை, அதில் நடந்தது நடந்தபடியே செய்தியாக இருக்கும், அதன் தலையங்கத்தில் நியாயம் இருக்கும், அந்நாளிதழில் வெளிவரும் கட்டுரைகளில் உண்மை இருக்கும் என்றெல்லாம் நீண்ட நெடுங்காலமாக மதிப்பிடப்பட்டுவரும் நிலையில், அது தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய மே 17 இயக்கத்தினர், அன்று ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். ‘பத்திரிக்கை அறமும் இந்து என். ராமும்’ என்ற அப்புத்தகத்தில், ஈழம், நந்திகிராம், லால்கர், திபெத், காஷ்மீர், பலுசிஸ்தான், வசிரிஸ்தான் ஆகிய உலகத்தின் பார்வை பதிந்த இடங்களில் நடந்த நிகழ்வுகளையும், வெகு மக்கள் போராட்டங்களையும் தி இந்து நாளிதழ் எவ்வாறு உண்மைக்கு முரணாக சித்திரித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, அதற்கு ஆதாரமான தகவல்களையும், கட்டுரைகளையும் திரட்டி அளித்துள்ளது.

“கேள்விக்குட்படுத்தப்படாத ஊடக பாசிசம் நம்மை அபாயகரமானதொரு எதிர்காலத்திற்குள் தள்ளிவிடும்” என்ற எச்சரிக்கையுடன் நம்மை உள்ளிழுக்கும் அந்தப் புத்தகத்தில், இலங்கையில் தனது நாட்டு மக்களையே குண்டு வீசிக் கொன்ற ராஜபக்ச அரசை விமர்ச்சித்து எழுதி, அதற்காகத் தனது உயிரையே விலையாகக் கொடுத்த கொழும்புப் பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கடிதத்தை வெளியிட்டு, அதே நேரத்தில் அப்படி ஒரு துணிந்த விமர்சனத்தை முன்வைக்கத் தவறிய இந்து ராம் குறித்து மருதன் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரையும் அப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

“என்.ராமின் பத்திரிக்கை தர்மத்திற்கும், லசந்த விக்கிரமதுங்காவின் பத்திரிக்கைத் தர்மத்திற்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தாவே சொல்லியிருக்கிறார்: ‘உயர் பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி’ என்ற கூறியுள்ள மருதன், “லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை” என்று கூறி முடிக்கிறார்.

http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0912/11/1091211113_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பார்ப்பனிய சமூகதின் மற்றும் ஒரு ஆதிக்கம் தான் "தி இந்து" நாளிதழ்.

உண்மயை மறைப்பது மட்டுமில்லமல் இவர்களுக்கு பிடித்தவாறு கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு இறுக்கிறார்கள்......

மகிந்தாவுக்கு ஆதரவாக எழுதி வாங்கி கட்டி கொன்டார்கள்...

சீனாவுக்கும் இந்த ராம் ஏனொ வால் பிடித்துக்கொன்டி இருக்கிற--... அது என் என்று தெரியவில்லை...

ஒருவேளை சீனாவிலும் இந்து பத்திரிக்கை தொடங்க போகிறதொ என்னவொ???

Edited by நிழலி
அனாகரீகமாக ஒருவரை குறிக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

அவ் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு எனது பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுவவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வாழ்வார்கள்.அதை யாராரும் மாற்ற இயலாது.

அமெரிக்க நாட்டிற்கு வருவதற்கு முன்பு அமெரிக்ர்களை பற்றி நான் அதிகமாக எண்ணியிருந்தேன். ஆனால் உலகிலேயே உலகவிடயங்களை அதிகம் அறியாதவர்கள் அல்லது உண்மை நிலை புரியாதவர்கள் அமெரிக்ளர்களே என்று இங்கு வந்த பின்புதான் தெரிந்து கொண்டேன். காரணம் திட்மிட்ட ஊடகங்களின் பிரச்சாரம். அது நாட்டிற்கு கேடு விளைவிக்குமே தவிர எந்த நன்மையையும் பயக்காது................... ஆனால் காசு பார்த்த சிலரால் அதை எளிதாக விட்டுவடவும் முடியாது. என்னை பொறுத்தவரை அமெரிக்க முன்னிலை ஊடகங்கள் பதவியில் இருக்கும் ஒரு சிலருக்கு நம்பகமாக இருந்து அமெரிக்க நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பெருத்த துரோகம் இழைக்கின்றன. ஆனால் அதை புரியும் நி;லையில் அமெரிக்க மக்களே இல்லாதபோது. தமிழ்நாடும் இந்திய மக்களும் எம்மாத்திரம்?

அமெரிக்க ஊடகங்களை பின்பற்றியதாகவே................ சன் தொலைகாட்சி நகர்கின்றது. சன் தொலைகாட்சியால் தமிழ்நாடு ஒரு நாளில் நடு தெருவில் நிற்கும். இல்லாததை இருப்பதாக காட்டுவதும் பின்பு அதன் தேவை வரும்போது.......... இல்லாதது இல்லாமலே இருக்கும்.

தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி என்பது திட்டமிட்ட சதியே தவிர இதற்கு வேறென்ன காரணத்தை கூறமுடியும்? ஊடகங்களின் ஒத்தாசையுடன் ஒரு சிலரால் நடத்தபட்ட பகல் கொளiளையின் விளைவே. தற்போதைய நெருக்கடி.

அவர்கள் அப்படித்தான் நடப்பார்கள் ஆரம்பத்தில் அதைப்புரியாமல் இருந்ததுதான் பெரிய தவறாகிவிட்டது.ஆரம்பத்தில் அனைத்து இயக்கதலைவர்களுடனும் ராம் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். நான் கூட மூன்று நான்கு தடவை டெல்கியில் சந்தித்திருக்கின்றேன்.அந்த நேரம் எங்களுக்கு உதவி செய்பவர் போல் தான் இருந்தார்.டெல்கியில் இருந்த கிண்டு ஒபிசில் ஜி.கே.ரெட்டி என்றொரு நிருபர் இருந்தார் அவர் மிகவும் நல்லவரும் எமது போராட்டத்தில் மிக நம்பிக்கையும் வைத்திருந்தார்.இந்தியாவுடன் அவதானமாக இருந்துகொள்ளும்படி பல தடவைகள் சொன்னவர்.தன்னை ஜே.ஆர். எத்தனை முறை அழைத்தும் தான் கொழும்பு போகாதற்கு காரணம் தானும் பின் பண்டாரி மாற நேரிட்டுவிடும் என்றார்.

நாம் படிக்கவேண்டிய பாடங்கள் இன்னமும் எத்தனயோ இருக்கு. உண்மை ,நேர்மை எல்லாம் இப்போது பார்த்தால் எழுத்துடனும்,பேச்சுடனும் மட்டுமே.நடைமுறைக்கு சரிவராது.அது தனிப்பட்ட வாழ்வாக இருக்கலாம்,பொது வாழ்வாக இருக்கலாம். கேடு கெட்ட உலகம் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறுக்கு வருந்துகிறென் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பார்ப்பனிய சமூகதின் மற்றும் ஒரு ஆதிக்கம் தான் "தி இந்து" நாளிதழ்.

உண்மயை மறைப்பது மட்டுமில்லமல் இவர்களுக்கு பிடித்தவாறு கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு இறுக்கிறார்கள்......

மகிந்தாவுக்கு ஆதரவாக எழுதி வாங்கி கட்டி கொன்டார்கள்...

சீனாவுக்கும் இந்த ராம் ஏனொ வால் பிடித்துக்கொன்டி இருக்கிற--... அது என் என்று தெரியவில்லை...

ஒருவேளை சீனாவிலும் இந்து பத்திரிக்கை தொடங்க போகிறதொ என்னவொ???

தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது.

"த இந்து" என்பதே பார்ப்பனியத்தின் இன்னொரு முகமே. (இ)கிந்திய மத்திய அரசினது எழுதுகோல் கூலிப்படைகளே இவை. இராணுவம் ஆயுதத்தால் செய்வதை, இவர்போன்றோர் பேனாவால் ஏன் புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள், அதாவது இந்தப் பிறழ்வுத்தனத்தை ஈழத்தில் பிறந்த தமிழர்களும் செய்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஊடகம் என்பது உண்மையான செய்தியைக் கொண்டுவரும்போது ஊடகமாகவும் பொய்யான புணைவுகளைக் கொண்டுவரும்போது "மஞ்சள் " பத்திரிகையாகவும் மாறிவிடுகிறது. இந்து ராம் என்ற புணையரது முகத்திரையை கிழிக்கும் புத்தகத்தை வெளியிட்ட மே 17 இயக்கத்தினர் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.