Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும் ஆனால் இராணுவ முன்னரங்க நிலைகள் பேணப்படும்: இன்று அறிவிக்கிறார் மகிந்த

Featured Replies

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை முன்னிட்டு உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார். வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கிறது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கு முன்னரங்க பாதுகாப்பு வேலிகள் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது. அதாவது உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும். பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் உயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கெல்லாம் இருந்தனவோ அங்கு இராணுவ காவலரண்கள் மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்டுகிறது.

இரண்டு பிரதான அரச தலைவர் வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்பானது குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேதான் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களது வாக்குகளை கவரும் நோக்கில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றி எந்தவொரு வேட்பாளரும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_5390.html :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றி எந்தவொரு வேட்பாளரும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_5390.html :)

தீர்வாவது மண்ணாவது, எங்களுக்கு தேர்தல் கால 'பலகாரம்" லிமிரட் ஒfராக வருகுது. திண்டு போட்டு வோட்டப் போடுவமா? அத விட்டுட்டு நீண்ட கால நோக்கெல்லாம் பாத்துக் கொண்டு! :D

மகிந்தவுக்கு உங்கட வோட்டை போடுங்கோ( தாயக மக்கள் போடவேணும் எண்டு) எண்டு யாழுக்கை இன்னும் ஒருத்தரும் கிளம்பவில்லை எண்டது கொஞ்சம் நிம்மதி... மற்றும் படி சரத் வந்தால் தமிழர்களின் ஒரே பிரச்சினையான மகிந்தவை தண்டித்து தீர்வை கொடுப்பார் எண்டு பலமாக தமிழ் மக்கள் எண்டு சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லுகினம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் படி சரத் வந்தால் தமிழர்களின் ஒரே பிரச்சினையான மகிந்தவை தண்டித்து தீர்வை கொடுப்பார் எண்டு பலமாக தமிழ் மக்கள் எண்டு சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லுகினம்...

அப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை சரத் வெற்றி பெற்று சனாதிபதியாகி வந்தபின்பு, மகிந்தவைவிட மோசமாக செயல்பட்டால், அவர்கள் தாங்கள் அப்படி சொன்னதை மறந்து சரத்துக்கு வாக்குகள் போட்டவர்களைத் திட்டுவார்கள்.

அப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை சரத் வெற்றி பெற்று சனாதிபதியாகி வந்தபின்பு, மகிந்தவைவிட மோசமாக செயல்பட்டால், அவர்கள் தாங்கள் அப்படி சொன்னதை மறந்து சரத்துக்கு வாக்குகள் போட்டவர்களைத் திட்டுவார்கள்.

அப்பிடி திட்டுவதால் அவர்களுக்கு நாக்கும் கூசாது... மற்றதும் கூசாது.

இதைத்தானே காலா காலமா செய்துகொண்டு இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

மறுகரையை பார்த்தால் மக்கள் புறக்கணிக்கிறார்கள் அல்லது விக்கிரமசூரியாவுக்கோ, சிவாஜிலிங்கத்துக்கோ வாக்களிப்பதாலும் இந்த இரு இன வாதிகளும் தான் மீண்டும் அரச கட்டிலில் ஏற போகிறார்கள்.என்ன தான் முடிவு தமிழ் மக்களுக்கு?

இருவரும் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீண்டும் அரச கட்டிலில் ஏறியது மீண்டும் நிச்சயமாக இனகொலையை மட்டுமே செய்வார்களென்பது மட்டும் நிச்சயம்.

முடிவாக இரு சிங்கள தலைவர்களும் தம்மை பாதுகாக்க போடும் முகமூடி தான் இந்த அரசியல் சித்து விளையாட்டு.நிச்சயமாக தெரியும் ஒரு சிங்களவன் மற்றவை காட்டி கொடுக்கவே மாட்டான். மாறாக தமிழரை கொலை செய்தது தான் வரலாறு. இது நிச்சயமாக் தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.