Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஸ முறியடித்துள்ளார் - மங்கள சமரவீர

Featured Replies

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல் என வரலாற்றில் பதியப்படுவதுடன் அடால்ப் ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஸ முறியடித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன.

1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு நவீன யுகத்தில் நடத்தப்பட்ட மிகவும் முறைகேடான தேர்தலாக இலங்கையில் நடந்துமுடிந்த தேர்தல் அமைந்துள்ளது. தேர்தலில் 96 வீதமான மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். வாக்களிப்புக்களின் போது பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 18 லட்சம் வாக்குகளை மேலதிகமாக பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதாக அரச ஊடகங்கள் தெரிவித்த போதிலும் இதன் உண்மையான நிலை என்னவெனில் மக்களின் விருப்பம் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பத்தை புறந்தள்ளி மிகவும் மோசடியான முறையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அரச வளங்களும் சொத்துக்களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தேர்தல் ஆணையாளரும் கூறியிருப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சட்டத்திற்கு அடிப்பணிந்தவர் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதுநாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய இழுக்கு என்பதை வெளிப்படுத்தியிருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். தன்னைத் தவிர நாட்டில் உள்ள அனைவர்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற ரீதியிலேயே மகிந்த ராஜபக்~ செயற்பட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சட்டத்திற்கு மேலாக செயற்படுகிறார்.

இதுநாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நன்கு வெளிக்காட்டியுள்ளது. சட்டத்திற்கு கட்டுப்பட்டவன் நான் அல்ல என ஜனாதிபதி கூறுகிறார். நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களும் நான் தண்டனை வழங்குவேன்.

எனினும், எனக்கெதிராக உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே அதன் அர்த்தமாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நாட்டிற்கு எவ்வளவு தூரம் பாதிப்பானது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.

இதனால், நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் எம்முடன் இணைய வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=261:2010-01-28-17-21-05&catid=34:ceylonnews&Itemid=71

வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ரணில் பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் குறிப்பிடத்தக்க வன்முறைகள் இன்றி நடைபெற்றதாகவும் 70% ஆனோர் வாக்களித்துள்ளனர் என்றும், சரத் கண்டிப்பாக வெல்வார் என்றும் கூறியிருந்தார்

இதனைப் பார்க்கவும்: மிரர்

வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ரணில் பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் குறிப்பிடத்தக்க வன்முறைகள் இன்றி நடைபெற்றதாகவும் 70% ஆனோர் வாக்களித்துள்ளனர் என்றும், சரத் கண்டிப்பாக வெல்வார் என்றும் கூறியிருந்தார்

இதனைப் பார்க்கவும்: மிரர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...

இந்திய தேர்தலில் தோற்ற சிதம்பரம் வென்றவர் அல்லவா.

அதே மாதிரி இங்கேயும் தோற்ற மஹிந்த வென்றுள்ளார்.

இடம் காலம் வேறு மற்றும்படி விளைவு ஒன்றுதான்.

இந்திய பிரதேச அரசியல் வென்றுள்ளது

ஹிட்லரை முதல் தரம் ஜனாதிபதியாக்க மகிந்த சிந்தனையை உருவாக்கி உழைத்த மங்கள சொல்கிறார் - நம்பலாம்.

ஹிட்லரை முதல் தரம் ஜனாதிபதியாக்க மகிந்த சிந்தனையை உருவாக்கி உழைத்த மங்கள சொல்கிறார் - நம்பலாம்.

சரியான நேரத்தில் மீண்டும் ஒரு ஹிட்லர் உருவாகி உள்ளார் என சிங்கள இனத்தவரால் நிரூபிக்கபட்டுள்ளது. 65 வது உலக இனப்படுகொலை ஞாபகார்த்த நாளான ஜனவரி 27 இல் மஹிந்தவின்(ஹிட்லரின்) வெற்றியை அறிவித்து தாங்கள் தொடர்ந்து தமிழ் மக்களை கொல்வோம் என பிரகடனப்படுத்தியுள்ளனர். இதற்கு இந்தியாவும் , ஐ நாவும் துணைபோயுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தலில் தோற்ற சிதம்பரம் வென்றவர் அல்லவா.

அதே மாதிரி இங்கேயும் தோற்ற மஹிந்த வென்றுள்ளார்.

இடம் காலம் வேறு மற்றும்படி விளைவு ஒன்றுதான்.

இந்திய பிரதேச அரசியல் வென்றுள்ளது

அங்கு பணம் புகுந்து விளையாடியது. சிதம்பரத்தை விட அதிகம் வாக்கு வாங்கிய அதிமுக வேட்பாளருக்கு பெருந்தொகை கொடுக்கப்பட்டது. இங்கு அப்படி இல்லை

எமக்கு பிடிக்காத ஒன்று நடந்துவிட்டதற்காக எந்த ஒரு ஆதாரமற்ற விடயங்களையும் கற்பனைக்கேற்றவாறு கூற வேண்டாம். விருப்பமில்லாத விடயமாயின் உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எமக்கு வேண்டும்

சிங்கள மக்களைப் பற்றி புரிந்தவர்களுக்கு மகிந்தவின் வெற்றி மீது எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் சிங்கள மக்கள் இனவாதமற்றவர்கள் என்று நிரூபிக்க பாடுபடுகின்றீர்கள். சிங்கள மக்களின் சிங்களத்துவ சிந்தனையை புரியாமல் எமக்கான தெளிவான அரசியல் வழியை இனம்காண முடியாது

சரத் வென்ற பகுதி எல்லாம் சிறுபான்மை தேசிய இனங்கள் அதிகமாக வாழும் இடங்கள். மகிந்த வென்ற இடங்கள் எல்லாம் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்கள். தேர்தலில் நீங்கள் சொல்கின்றவாறு களவு செய்திருக்க வேண்டும் என்றால் முதலில் அது கருணா, டக்கிளஸ் போன்றவர்களின் மூலம் கிக இலகுவாக வடக்கு கிழக்கில் நடந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை

மகிந்தவின் வெற்றி, தமிழர்களை அவர் வென்றதற்காக அவரின் ஊழல், விலைவாசி ஏற்றம், பொருளாதார பின்னடைவு போன்றவற்றைக்கூட இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிங்கள மக்களால் வழங்கப்பட்ட மகுடம். அவர்களுக்கு சரத்தை விட அவரை ஏவி விட்டவருக்குத்தான் மகுடம் சூட்ட விரும்பி அதனை சூட்டி விட்டனர்

யதார்த்தத்தை புரிந்து கொண்டு உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள், அது கசப்பாயினும்.

அங்கு பணம் புகுந்து விளையாடியது. சிதம்பரத்தை விட அதிகம் வாக்கு வாங்கிய அதிமுக வேட்பாளருக்கு பெருந்தொகை கொடுக்கப்பட்டது. இங்கு அப்படி இல்லை

எமக்கு பிடிக்காத ஒன்று நடந்துவிட்டதற்காக எந்த ஒரு ஆதாரமற்ற விடயங்களையும் கற்பனைக்கேற்றவாறு கூற வேண்டாம். விருப்பமில்லாத விடயமாயின் உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எமக்கு வேண்டும்

சிங்கள மக்களைப் பற்றி புரிந்தவர்களுக்கு மகிந்தவின் வெற்றி மீது எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் சிங்கள மக்கள் இனவாதமற்றவர்கள் என்று நிரூபிக்க பாடுபடுகின்றீர்கள். சிங்கள மக்களின் சிங்களத்துவ சிந்தனையை புரியாமல் எமக்கான தெளிவான அரசியல் வழியை இனம்காண முடியாது

சரத் வென்ற பகுதி எல்லாம் சிறுபான்மை தேசிய இனங்கள் அதிகமாக வாழும் இடங்கள். மகிந்த வென்ற இடங்கள் எல்லாம் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்கள். தேர்தலில் நீங்கள் சொல்கின்றவாறு களவு செய்திருக்க வேண்டும் என்றால் முதலில் அது கருணா, டக்கிளஸ் போன்றவர்களின் மூலம் கிக இலகுவாக வடக்கு கிழக்கில் நடந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை

மகிந்தவின் வெற்றி, தமிழர்களை அவர் வென்றதற்காக அவரின் ஊழல், விலைவாசி ஏற்றம், பொருளாதார பின்னடைவு போன்றவற்றைக்கூட இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிங்கள மக்களால் வழங்கப்பட்ட மகுடம். அவர்களுக்கு சரத்தை விட அவரை ஏவி விட்டவருக்குத்தான் மகுடம் சூட்ட விரும்பி அதனை சூட்டி விட்டனர்

யதார்த்தத்தை புரிந்து கொண்டு உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள், அது கசப்பாயினும்.

பிழம்பு! உண்மை வெளிவரும்போது புரிந்து கொள்வீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களைப் பற்றி புரிந்தவர்களுக்கு மகிந்தவின் வெற்றி மீது எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் சிங்கள மக்கள் இனவாதமற்றவர்கள் என்று நிரூபிக்க பாடுபடுகின்றீர்கள். சிங்கள மக்களின் சிங்களத்துவ சிந்தனையை புரியாமல் எமக்கான தெளிவான அரசியல் வழியை இனம்காண முடியாதுசரத் வென்ற பகுதி எல்லாம் சிறுபான்மை தேசிய இனங்கள் அதிகமாக வாழும் இடங்கள். மகிந்த வென்ற இடங்கள் எல்லாம் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்கள்.

மகிந்தவின் வெற்றி, தமிழர்களை அவர் வென்றதற்காக அவரின் ஊழல், விலைவாசி ஏற்றம், பொருளாதார பின்னடைவு போன்றவற்றைக்கூட இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிங்கள மக்களால் வழங்கப்பட்ட மகுடம். அவர்களுக்கு சரத்தை விட அவரை ஏவி விட்டவருக்குத்தான் மகுடம் சூட்ட விரும்பி அதனை சூட்டி விட்டனர்

யதார்த்தத்தை புரிந்து கொண்டு உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள், அது கசப்பாயினும்.

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் மோசடி நடந்தது என்பது எனது வாதமல்ல..............

ஆனால் மக்களின் வாக்குகளைதான் எண்ணிணார்கள் என்பதற்கான ஆதரம் யாரிடமும் இல்லை. அமெரிக்காவிலேயே 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில் ப்ளோரிட்டா மாநிலத்தில் போட்ட வாக்கு பெட்டிகள் தூக்கி வீசபட்டது பின்புதான் அறியபட்டாலும். ஆட்சியாளரின் கையில் ஊடகம் இருக்கும்போது...........? சும்மா கதை;துவிட்டு உட்காரவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.