Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்''

திகதி: 07.02.2010 // தமிழீழம்

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார்.

கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர்.

தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு:

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா..

செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குயது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது. ஒவ்வொரு தமிழனும் வெட்க்கித் தலைகுனியவேண்டிய ஒன்று.

ஒரு உணர்ச்சிமிக்க இந்தியன் புலம்பல்:

இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது.

இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப்பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க.

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உமைரியுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு?

யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது பயன் தரும்.

புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல இலட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்''

திகதி: 07.02.2010 // தமிழீழம்

ஒரு உணர்ச்சிமிக்க இந்தியன் புலம்பல்:

ஒரு உணர்ச்சி மிக்க தமிழ் இந்தியன் புலம்பல் எண்டு போடவேணும்.

இனி நாங்களும் குழுக்கள் அமைச்சு இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும். இல்லா விட்டால் இவர்கள் நம்மை இன்னும் ஏறி மிதிப்பார்கள்.

இப்போது தானே புலிகள் இல்லை, போர் இல்லை. ஏன் இந்த மக்களை திருப்பி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப கூடாது? அவர்களது நிலங்கள் சொத்துக்களை சிங்கள/பார்சி கூட்டம் மடக்கி விட்டதே திருப்பி அனுப்பாமல் இருப்பதற்கு காரணம்.

இந்தியாவில் ஒரு அசலுக்கு ஆயிரம் போலிகள் இருப்பார்கள். பார்த்து முதுகை காட்டவேண்டும், இல்லையே கருணாநிதி ஸ்டைலில் ஆயிரம் கத்திகள் பதம் பார்க்கும். அதனால் தான் அவர் திராவிடர் முதுகில் குத்தும் கட்சி நடாத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைச் சொல்லியும் என்ன பிழை இருக்கு? நாடற்றவனின் கதி உலகின் எந்த மூலையிலும் இப்பிடித்தான் இருக்கும் என்கிறதைச் சொல்லாமல் சொல்லியிருக்கினம்..! வடிவேல் கணக்கில் அடிவாங்கிக்கொண்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்..!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது பயன் தரும்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச்சொன்னால் ஏன் கோவிக்க வேண்டும்

அப்படி கோபம் ரோசம் வருவதாக இருந்தால் ...

காக்கவேண்டியதை காத்திருக்கவேண்டும்

அவர்களைச் சொல்லியும் என்ன பிழை இருக்கு? நாடற்றவனின் கதி உலகின் எந்த மூலையிலும் இப்பிடித்தான் இருக்கும் என்கிறதைச் சொல்லாமல் சொல்லியிருக்கினம்..! வடிவேல் கணக்கில் அடிவாங்கிக்கொண்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்..!! :unsure:

நான் சொல்லவந்ததை நீங்கள் சொல்லிட்டிங்க...

சரி நாங்க எங்க போனால் அடிவாங்காமல் இருக்கலாமென்று ஒரு பட்டியல் போடவேணும்.

இண்டைக்கு இல்லாட்டாலும் என்டைக்காவது இது மற்ற இடங்களிலும் நடக்கும்.

யாரிட்ட அடிவாங்குறது என்பது அவரவர் கையில் உள்ள பணம்தான் தீர்மாணிக்கும்.

உண்மையைச்சொன்னால் ஏன் கோவிக்க வேண்டும்

அப்படி கோபம் ரோசம் வருவதாக இருந்தால் ...

காக்கவேண்டியதை காத்திருக்கவேண்டும்

யார் காக்கவேண்டும்?

யாருக்கு அந்த கடமை இருக்கு?

நீங்கள் இந்தியாவை சொல்கிறீர்களா? அல்லது தமிழகத்தையா?

நீங்கள் இரண்டில் எதையாவது சொன்னால் உங்களை நாங்கள் என்ன சொல்லவது?

உண்மையைச்சொன்னால் ஏன் கோவிக்க வேண்டும்

அப்படி கோபம் ரோசம் வருவதாக இருந்தால் ...

காக்கவேண்டியதை காத்திருக்கவேண்டும்

உண்மைதான்.உயிருக்கு பயந்து நாடு நாடாய் அலையும் எங்களுக்கு ஏன் சூடு சுறணை இருக்க வேண்டும். புனித பூமியை விட்டு கப்பலேறும் போதே எல்லாமே போய் தெரு நாய் மாதிரித்தான் தமிழன் நிலமை என்று மறந்தா போயிருக்கும்.

தமிழனின் நிலை இப்பிடியும் கேவலமாகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவந்தவை இவை மட்டும் தான்!!!

செங்கல்ப்பட்டு சிறை எண்றுதான் சொல்ல வேண்டும்... ஒரு கோட்டைக்குள் இருக்கும் சிறை அது... டெல்லி திகார் ஜெயிலை போல நடத்தப்படும் ஒண்று எண்று சொல்கிறார்கள்... ஆனால் அதுக்கு பெயர் புணர்வாழ்வு முகாம்...

அனேகமாக விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தான் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்... கிட்டத்தட்ட அதை ஒரு நரகம் எண்றே சொல்லலாம்... அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை விலங்குகளை விட கேவலமாகவே நடத்துவார்கள்...

எனக்கும் அந்த முகாமில் 2 நாட்கள் இருக்கும் சந்தர்ப்பம் வந்தது... என்னை அடைத்து 2 நாள்களில் IB யினரால் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.. பின்னர் இந்திய பணத்தில் ஆறு லட்ச்சம் ரூபாக்கள் பலதரப்பட்டவர்களுக்கும் லஞ்சமாக எனது உறவினர்களால் கொடுத்து வெளியேறினேன்...

தமிழ்நாட்டவர் பலர் இந்திய உணர்வோடு அகதிநாய்கள் என்றும் என்னும் பலவாகவும் விழிப்பதுண்டு. உலகில் அகதிகளாகச் சென்ற எம்மவர்கள் அதிக நெருக்கடியை தமிழகத்தில் தான் சந்தித்துள்ளனர். தமிழனுக்கென்று ஒரு நாடில்லை. தமிழகத்தில் தமிழன் இந்தியனாக இருக்கின்றான். இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள் எண்ணிலடங்காதவை இந்நிலையில் எம்மவரை அகதி நாயே என்று அடித்து உதைப்பது ஒன்றும் அதிசயமானதில்லை. நாம் துரத்தப்படுகின்றோம் ஆதலால் எங்கு வாழ வழி கிடைக்கின்றதோ அவ்விடம் நோக்கி நாம் செல்கின்றோம் ஒருவகையில் நாம் நாய்களின் ஒப்பீட்டுக்கு தகுதியானவர்கள் தான். பொருளாதார நெருக்கடிகள் அதிகமாக எம்மீது பல நாடுகளில் அடிவிழத்தான் அதிகமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. எமக்கென்று ஒரு நாடு இல்லை இரண்டாவது தெரிவாக கொய்யாமரத்தில் குருவிச்சை ஒட்டி வளர்வது போல் எம்நாடு இலங்கை. நாம் இலங்கையர்கள் என்ற நிலையை ஸ்திரப்படுத்தவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இந்தியக்குடிகளுக்கு அவுஸ்திரேலியாவில் தினமும் நடக்கும் அபிசேகங்களுக்கு நாங்கள்

சந்தோசப்படவேண்டும்.

அங்கு வெள்ளையனும் 'குடியேறிய இந்தியநாய்;க்கு இவ்வளவு திமிரா என்றுதான்' கேட்டுக்கேட்டு

தாக்குகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

யார் காக்கவேண்டும்?

யாருக்கு அந்த கடமை இருக்கு?

நீங்கள் இந்தியாவை சொல்கிறீர்களா? அல்லது தமிழகத்தையா?

நீங்கள் இரண்டில் எதையாவது சொன்னால் உங்களை நாங்கள் என்ன சொல்லவது?

நாம் என்று சொன்னது

என்னையும் தங்களையும்தான்...

இந்தியா

தமிழ்நாடு

அதெல்லாம் பின்னர்..

காக்காமல் விட்டது எதை என்று தங்களுக்கு நான் சொல்லவேண்டுமா....?

நாம் என்று சொன்னது

என்னையும் தங்களையும்தான்...

இந்தியா

தமிழ்நாடு

அதெல்லாம் பின்னர்..

காக்காமல் விட்டது எதை என்று தங்களுக்கு நான் சொல்லவேண்டுமா....?

எங்கே நீங்கள் நாம் என்று சொல்லியிருந்தீர்கள்?

உண்மையைச்சொன்னால் ஏன் கோவிக்க வேண்டும் அப்படி கோபம் ரோசம் வருவதாக இருந்தால்... காக்கவேண்டியதை காத்திருக்கவேண்டும்

சரி அதுபோகட்டும்... நாங்கள் என்ன காக்க முடிந்திருந்தும் காக்காமல் க...க்கா போனோம்?

அல்லது வீதியில் இறங்கினாலும் எதுவும் நடக்காதென்று தெரிந்தும் இறங்க்காமலா இருந்தோம்?

நாங்கள் காத்திருக்கலாமேன்றால் என்ன செய்து காத்திருக்காலாம்?

பெப்ரவரி 08, 2010

கனடா

தமிழ் படைப்பாளிகள் கழகம்

நடிகர் ஜெயராமுக்கு மன்னிப்பு செந்தமிழன் சீமான் மீது வழக்கு - கருணாநிதியின் இந்த இரட்டை அளவுமுறையை நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய ஜெயராமுக்கு மன்னிப்பு அதைக் கண்டித்த சீமான் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்கு. முதல்வர் கருணாநிதியின் இந்த இரட்டை அளவுமுறையை நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

செந்தமிழன் சீமானுக்கு எதிராக வழக்கு, அவரது ஆதரவாளர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது தமிழக காவல்துறை சரமாரித் தாக்கு, கோவையில் நடந்த தமிழர்பாதுகாப்பு மாநாட்டில் தேசியத் தலைவர் பிரபாகரனது படங்களை விற்பனை செய்த தமிழ் உணர்வாளர்கள் கைது என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கிறது.

ஒரு பக்கம் செம்மொழி மாநாடு மறுபுறம் தமிழின உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது, தமிழ் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்துவது முதல்வர் கருணாநிதியின் தமிழின விரோதப் போக்கையும் அவரது இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்துகிறது.

இன்று தமிழைச் சொல்லி தமிழால் ஆட்சியைப் பிடித்த முதல்வர் கருணாநிதி ஏறிய ஏணியை காலால் எட்டி உதைக்கிறார்.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னாலும் அங்கு கற்கால ஆட்சிதான் நடைபெறுகிறது. இம் என்றால் கைது அம் என்றால் சிறைவாசம் என்பதே தமிழ்நாட்டில் பொது விதியாக இருக்கிறது.

முதல்வர் கருணாநிதிக்கு போற்றி பாடும் கவிஞர் வைரமுத்து, சாமரம் வீசும் வீரமணி, பல்லக்குத் தூக்கும் திருமாவளவன், சுப. .வீரபாண்டியன் போன்றோராவது அருள் கூர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு உண்மையை இடித்துச் சொல்ல வேண்டும். இல்லையேல் இடிப்பாரை இல்லாத முதல்வர் கெடுப்பார் இல்லாமல் கெட்டுப் போவார்.

அமைச்சர் பதவிகள் வரலாம் போகலாம். ஆட்சி அதிகாரம் வரலாம் போகலாம். ஆனால் ஒருவன் புகழோடு வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி தனது அரசியல் எதிரிகளையும் தமிழ் உணர்வாளர்களையும் பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும். தன்னைச் சுற்றியிருப்போர் பொழியும் பாராட்டு மழையில் மயங்கி ஏமாந்துவிடக் கூடாது.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, குறிப்பாக செந்தமிழன் சீமான் மீது போடப்ட்ட வழக்குகள் எல்லாவற்றையும் திருப்பிப் பெறுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

-30-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

' நாடுஇல்லாத அகதிநாய்களுக்கு பாவம் என்று இடம்கொடுத்தால் விடுதலையா வேணும்'

இந்த வசனங்களை பெரிதாக எழுதி தினமும் கண்படும் இடத்தில் ஒட்டிவைத்தால் மாவீரர்களின்மேலும் தலைவரின் மீதும் இன்னும் நம்பிக்கையும் மதிப்பும் அதிகரிக்கும். கவலையாக இருந்தாலும் அந்த அதிகாரி உண்மையைத்தான் சொல்லி இருக்கிறான்.

' நாடுஇல்லாத அகதிநாய்களுக்கு பாவம் என்று இடம்கொடுத்தால் விடுதலையா வேணும்'

இந்த வசனங்களை பெரிதாக எழுதி தினமும் கண்படும் இடத்தில் ஒட்டிவைத்தால் மாவீரர்களின்மேலும் தலைவரின் மீதும் இன்னும் நம்பிக்கையும் மதிப்பும் அதிகரிக்கும். கவலையாக இருந்தாலும் அந்த அதிகாரி உண்மையைத்தான் சொல்லி இருக்கிறான்.

உண்மைதான் கிட்லர் இப்படி சொல்லி அடித்ததினால்தான் இண்று இஸ்ரேல் எண்ட நாடு இருக்கிறது... யூதர்கள் என்ன விலை வேன்டுமானாலும் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீங்கள் நாம் என்று சொல்லியிருந்தீர்கள்?

சரி அதுபோகட்டும்... நாங்கள் என்ன காக்க முடிந்திருந்தும் காக்காமல் க...க்கா போனோம்?

அல்லது வீதியில் இறங்கினாலும் எதுவும் நடக்காதென்று தெரிந்தும் இறங்க்காமலா இருந்தோம்?

நாங்கள் காத்திருக்கலாமேன்றால் என்ன செய்து காத்திருக்காலாம்?

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்

தாங்களும் தங்களுக்கு தெரிந்த உறவுகள் நண்பர்கள் அனைவரும் உதவினார்கள்

ஒன்று கூடினார்கள் என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.