Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுக்கும் ராஜபக்ஸக்களுக்கும் இடையில் என்ன தான் நடந்தது தவறாக? முனம் திறக்கிறார் அனோமா பொன்சேகா‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ராஜபக்சக்களுக்குமிடையில் என்ன தான் நடந்தது தவறாக? :‐

என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம். போர் முடிவடைந்த பின்னர் அதனை நான் சிறிது உணர்ந்தேன். சில் இடங்களில் புரிந்துணர்வின்மை இருந்தது. போர் முடிவடைந்தவுடன் சில இடங்களில் சரியாக நடாத்தப்படவில்லை. சரத் இராணுவ அதிகாரியாகத் தொடர்ந்திருக்கவே விரும்பினார். தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக அவர் இருக்க விரும்பவில்லை. போர் வீரர்களின் நலன்கள் தொடர்பில் அவர் பணியாற்ற விரும்பினார். ஆவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் கோட்டபாயவைச் சந்தித்து தான் தொடர்ந்து இராணுவத் தளபதியாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அது தான் பிரதான பிரச்சினையாக இருந்தது. அதற்கு அப்பாலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் படைவீரர்கள் மரங்களின் கீழன்றி சொந்தமான வீடுகளில் வசிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அவர் தனது பதவியிலிருந்து கொண்டே சதி முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவது உண்மையா?

அவர் தனது சீருடையைக் களைந்த பின்னரே அரசியலுக்கு வந்தார். அவர் மிக நாகரீகமாகவே அதனைச் செய்தார். அவர் நவம்பரில் ஓய்வு பெற்ற பின்னரே அரசியலுக்கு வந்தார். ஆனால் இப்போது அவரை இராணுவச்சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும் விசாரிக்கப் போவதாகவும் அச்சுறுத்துகின்றனர்.

அவர் ஒரு சதியில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள்?

அவர் அவ்வாறான ஒன்றைச் செய்வதாக இருந்திருந்தால் எப்போதோ அதனைச் செய்திருக்க வேண்டும். பிரபாகரன் கொல்லப்பட்ட உடனே அதனைச் செய்வது அவருக்கு எளிதாக இருந்திருக்கும். அந்நேரம் சரத் தான் ஹீரோவாக இருந்தார். இவை எல்லாமே சோடிக்கப்பட்ட கதைகள். அவர் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தகுந்த மரியாதை அளித்து வந்தார். மற்றவர்களுக்கு அல்ல. அவர்களுக்கு அவர் பணிந்து செயற்பட்டார். நூறு வீதம் அவர் அவர்களை நம்பிச் செயற்பட்டார். பின்னாட்களில் அவர் அவநம்பிக்கையுற்றார்.

அவரை எதிர்த்த ஊடகவியலாளர்களைப் தாக்கியது, படுகொலை செய்தது தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றி என்ன நினைக்கறீர்கள்?

அப்படி எதுவும் நடைபெறவில்லை. அந்நேரம் (லசந்த படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 2009இல்) அவர் போரில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார். வேறு விடயங்களில் ஈடுபட அவருக்கு நேரம் இருக்கவில்லை. நான் அதை உறுதிப்படுத்துகிறேன். அவர் அந்நேரம் இராணுவ நடவடிக்கைகளுள் மூழ்கி இருந்தார். அவர் எப்போதும் வரைபடங்களுள் மூழ்கி இருந்தார். நிலத்தில் வபைடம் விரிக்கப்பட்டிருந்தது. அவர் நடக்கும் போதும் சாப்பிடும் போதும் அந்த வரைபடத்தை அவதானித்தபடியே இருப்பார். அந்நேரம் அவருடைய மூளையில் அந்த வரைபடத்தைத் தவிர வேறேதும் இருக்கவில்லை. போரில் ஈடுபட்டுக் கொண்டு அதேநேரம் சிவிலியன்களைக் கொல்ல சதி செய்ய எவராலும் முடியாது. அவரின் கீழ் பணியாற்றிய இளம் அதிகாரி ஒருவரைக் கைது செய்து வைத்துக் கொண்டு சரத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும்படி அவரை வற்புறுத்தி வருகிறார்கள். இந்த அதிகாரிகள் எனது கணவருடன் இணைந்து போரின் போது சிறப்பாகப் பணியாற்றியவர்கள். சரத் மீதான கொலைக்குற்றச்சாட்டு பொய்யானது என நூறு வீதம் நான் உறுதியாகச் nhசல்வேன்.

இடம் பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த சரத் பொன்சேகா பின்னர் அரசியலில் குதித்தவுடன் உடனடியாக அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என்று தலைகீழ் பல்டி அடித்ததைப் பற்றி என்ன சொல்வீர்கள்?

வடக்கு கண்ணிவெடிகளால் நிரம்பியுள்ளது. அவர் நூறு வீதம் கண்ணிவெடிக்ள் அகற்றப்பட்ட பின்னரே குடியமர்த்தப்பட வேண்டும் என விரும்பினார். அதற்கு அதிக காலம் எடுக்கும். அதனால் தான் அவர்களை முகாம்களிலேயே வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இப்போதும் கூட அவர் சொல்வார் மிக அவசரப்பட்டு இடம்பெயர்ந்தோர் குடியேற்றப்படுவதாக. இது குறித்து இப்போதும் அவர் கவலைப்படுகிறார். தேர்தல் காரணமாக அவர்கள் அவசர அவசரமாகக் குடியேற்றப்படுகிறார்கள். உண்மையில் செய்ய வேண்டியது இப்படியல்ல.

அவர் இப்போது எப்படி இருக்கிறார்?

அவர் மிகுந்த மூளைசாலி. நூறு வீதம் அவர் திடமாக இருக்கிறார். அவர் திடமான மனோபலம் உள்ளவர். அவரிடமிருந்து அவருடைய மனோபலத்தை யாரும் பறித்து விட முடியாது.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை நிலைமைகள் எப்டியிருக்கின்றன?

புதிதாக மணமான இளம் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு குடியிருப்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் சொல்வதுபோல ஆடம்பரக்குடியிருப்பு அல்ல அது. நான் ஒரு இராணுவத்தினரின் மனைவி என்ற வகையில் அது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டு அறைகள் கொண்டது. ஏயர்கொண்டிசன் இல்லை. மின்விசிறி மட்டுமே உண்டு. பொதுவான கழிப்பறையுடன் கூடியது.

அவர் என்ன சாப்பிடுவார்?

சோறும் கறியும் தேங்காய்ச்சம்பலும். அவருக்கு பலாப்பழம் மிகவும் பிடிக்கும். மீன் கறி. கொழுப்பு குறைந்த பாலை நான் எடுத்துச் செல்வேன். அவர் மீதான படுகொலை முயற்சியில் அவர் தப்பிய பின்னர் சாதாரணமாக அவர் அருந்துவதில்லை.

இந்த இடத்தில் சிங்கப்பூருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய உயிரைக் காப்பாற்றியதற்காக. இல்லாவிட்டால் இப்போது அவர் உயிருடன் இருந்திருக்க முடியாது. சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் ஒரு மாதகாலமாக அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. அவருடைய சுவாசப்பையில் ஒரு மோட்டார் குண்டின் துண்டு ஒன்று இருந்தது. இரண்டாவது சிறுநீரகத்திற்கு அருகில் இருந்தது. அவருடைய குடல் பாதிக்கப்பட்டிருந்தது.

ராஜபக்சக்களுக்கும் உங்களுக்குமான இந்த மோதல் ஏதாவது வழியில் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறதா?

அவர் நியாயமான வழியிலேயே வெளியில் வர விரும்புகிறார். சட்டம் சரியான பதிலைத் தரும். அவர் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடவில்லை. அப்படி இருக்கையில் ஏன் ராஜபக்சக்களிடம் அவர் கெஞ்ச வேண்டும். நான் கூட அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டேன். உண்மை ஒரு நாள் வெளிவரும்.

அவர் தமிழர்களை வெறுப்பவரா?

எங்களுக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு கூட தந்திருக்கிறார்கள். சிறு பராயத்தில் அம்பாறையில் இருக்கையில் அவருக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்கள். எனது தகப்பனாருக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். எங்களுடைய இளமைக்காலத்தில் கிறீன்லண்ட், சரஸ்வதி லொஜ்ட் போன்ற சைவ உணவகங்களிலேயே நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம். அப்போது நான் மாணவியாக இருந்தேன். சரத் சிங்க றெஜிமென்ட்டில் லெப்டினன்ட்டாக இருந்தார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டவுடன் நீங்கள் சிராந்தி ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசினீர்களாமே. அது உண்மையா?

ஆம், நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். நான் தொலைபேசியில் அழைத்த நேரம் அவர் மொஸ்கோவில் இருந்தார். இரண்டு மணி நேரத்த்pல் அவர் மீண்டும் என்னுடன் தொலைபேசியில் பேசினார். சரத் கைது செய்யப்படவில்லை. அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று நான் அவருக்கு விளக்கினேன். ஓரு மிருகத்தைப் போல அவரைத் தூக்கி எறிந்தார்கள் என்று நான் சொன்னேன். அவருடைய உயிரைப் பாதுகாக்கும்படி நான் அவருக்குச் சொன்னேன். தான் இது தொடர்பாக ஏதாவது செய்வதாக அவர் சொன்னார். அவர் செய்திருப்பார் என் நான் நினைக்கிறேன். பெண்கள் என்ற வகையில் எங்களுக்குள் இன்னமும் தொடர்புகள் உண்டு. நாங்கள் மனைவியராகவும் தாய்மாராகவும் இருக்கிறோம். என்னுடைய நன்றியை அவருக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.

globaltamilnews

(குறிப்பு: இதன் உண்மையான மூலம் எதுவெனத் தெரியவில்லை. ஜி.ரி.என் தன்னுடைய செய்தி போன்றே போட்டுள்ளது.)

உங்களுக்கும் ராஜபக்சக்களுக்குமிடையில் என்ன தான் நடந்தது தவறாக? :‐

.... அவர் படைவீரர்கள் மரங்களின் கீழன்றி சொந்தமான வீடுகளில் வசிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். ...

இதன் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்பு என்ற போர்வையில் நிரந்திர சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்த முயன்றார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் சிங்கள வரலாற்றில் நிலையான பெயர் பெற்றுவிடுவார் என மகிந்த கூட்டம் நினைத்திருக்கலாம்?

Edited by Aasaan

வடக்கு கண்ணிவெடிகளால் நிரம்பியுள்ளது. அவர் நூறு வீதம் கண்ணிவெடிக்ள் அகற்றப்பட்ட பின்னரே குடியமர்த்தப்பட வேண்டும் என விரும்பினார். அதற்கு அதிக காலம் எடுக்கும். அதனால் தான் அவர்களை முகாம்களிலேயே வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இப்போதும் கூட அவர் சொல்வார் மிக அவசரப்பட்டு இடம்பெயர்ந்தோர் குடியேற்றப்படுவதாக. இது குறித்து இப்போதும் அவர் கவலைப்படுகிறார். தேர்தல் காரணமாக அவர்கள் அவசர அவசரமாகக் குடியேற்றப்படுகிறார்கள். உண்மையில் செய்ய வேண்டியது இப்படியல்ல.

முகாம்களின் மக்கள் அடைபடுவதுக்கு காரணம் மகிந்த குடும்பம் இல்லை...??? இப்படித்தானே ஜனாதிபதி தேர்தலின் போது இங்கை யாழுக்கை சிலர் சொன்னார்கள்...?? :unsure:

உங்களுக்கும் ராஜபக்ஸக்களுக்கும் இடையில் என்ன தான் நடந்தது தவறாக?தலைப்பு இப்படியல்ல,உங்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் என்றால் பொருத்தமாகவிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடவில்லை

அதனை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சரத்தை விட இவ நல்ல அரசியல் தெரிந்தவ போல இருக்கு.(இவரின் பதிலை பார்க்கும் போது)

"அவர் தமிழர்களை வெறுப்பவரா?

எங்களுக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு கூட தந்திருக்கிறார்கள். சிறு பராயத்தில் அம்பாறையில் இருக்கையில் அவருக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்கள். எனது தகப்பனாருக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். எங்களுடைய இளமைக்காலத்தில் கிறீன்லண்ட்இ சரஸ்வதி லொஜ்ட் போன்ற சைவ உணவகங்களிலேயே நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம். அப்போது நான் மாணவியாக இருந்தேன். சரத் சிங்க றெஜிமென்ட்டில் லெப்டினன்ட்டாக இருந்தார்."

கூட்டமைப்பை விட்டுவிட்டார் அனோமா.

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 15, பிப்ரவரி 2010 (15:3 IST)

ராஜபக்சேவிடம் கெஞ்ச மாட்டேன்; பொன்சேகா மனைவி பேட்டி

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ராஜபக்சே குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவில் எப்படி பிரச்சினை ஏற்பட்டது.

என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் பிரச்சினை ஏற்பட்டது. யுத்தத்திற்குப் பின்னர் கவுரவ குறைவாக எம்மை நடத்தினர். சரத் ராணுவ தளபதியாகப் பதவி வகிக்கவே விரும்பினார். அவர் முப்படைகளின் தலைமை அதிகாரியாக விரும்பவில்லை. அவர் யுத்த வீரர்களின் நலன்களில் கவனம் செலுத்த விரும்பினார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

ராணுவ தளபதியாக தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா? என அவர் ராஜபக்சே தம்பியிடம் கேட்டார். அவர்கள் அதற்கும் அனுமதிக்கவில்லை. அதுவே அனைத்து நெருக்கடிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது. மற்றவை பற்றி எனக்கு தெரியாது.

ஆனால் இதுவே முக்கியமானது. படையினர் மரங்களின் கீழ் வாழ்வதை அவர் விரும்ப வில்லை. அவர்களுக்கு வீடு ஒன்று அவசியம் எனக்கருதினார்.

ராணுவத்தில் பணிபுரியும் வேளையே அவர் தனது அரசியல் வாழ்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபட்டார் என்பது உண்மையா?

அவர் தனது சீருடைகளைத் துறந்த பின்னரே அரசியலில் நுழைந்தார். அவர் மிகவும் நாகரீமான முறையில் அரசியலில் நுழைந்தார். கடந்த நவம்பரில் ஓய்வு பெற்ற பின்னர் அவர் சாதாரண பொதுமகன் ஆகி விட்டார். எனினும் அவர்கள் அவரை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்க போகிறார்கள் என மிரட்டுகின்றனர்.

சதிப்புரட்சியை மேற்கொள்ள அவர் திட்ட மிட்டிருந்தார் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

அவர் அதனைச் செய்ய நினைத்திருந்தால் எப்போதோ செய்திருக்கலாம். பிரபாகரன் கொல்லப்பட்ட உடனேயே அவர் இதனைச் செய்திருக்கலாம். அப்போது அனைவருக்கும் அவர் மாவீரனாகத் தென்பட்டார்.

சதிப்புரட்சி என்பது கட்டுக்கதை. அவர் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் முழு மரியாதை கொடுத்தார். நம்பினார். கட்டுப்பட்டார். எனினும் பின்னர் அவர் ஏமாற்றமடைந்தார். ஜனாதி பதியையும் பாதுகாப்புச் செயலாளரையும் சுற்றியிருந்தவர்கள் சரத்தைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தினர்.

சரத் பொன் சேகா தன்னை எதிர்த்த பத்திரிகையாளர்களைக் கொலை செய்தார், காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன தெரிவிக்கிறீர்கள்?

இது எப்போதுமே இடம் பெறவில்லை. லஸந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட வேளை சரத்பொன் சேகா நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு வேறு விஷயங்களுக்கு நேரமிருக்கவில்லை.

சரத்பொன் சேகா மனோநிலை எவ்வாறு உள்ளது?

அவர் மிகுந்த துணிச்சல் உள்ளவர். மனோ ரீதியாகவும் அவர் நூறு வீதம் நல்ல நிலையில் உள்ளார். அவர் மிகவும் உறுதியானவர். தன்னம்பிக்கை உள்ளவர். எவராலும் அதனைக் குறைக்க முடியாது.

- அவரது சிறை நிலைமை எவ்வாறு உள்ளது?

- அதிகாரிகளுக்கான விடுதியிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசு தெரிவிப்பது போன்ற ஆடம்பரமான இடத்தில் அவர் இல்லை.

ராஜபக்சே குடும்பத்தினரும், நீங்களும் சுமூகமாக சமரசமாக வாய்ப்பு உள்ளதா?

அவர் தான் நியாயமான முறையில் விடுதலையாவதையே விரும்புகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் நான் அவர்களிடம் கெஞ்ச வேண்டும்? நான் கூட அதற்கு இணங்க மாட்டேன். உண்மை ஒருநாள் வெளிவரும்.

- பொன்சேகாவின் கைதுக்கு பின்னர் ஜனாதிபதியின் மனைவியுடன் நீங்கள் பேசியது உண்மையா?

ஆம் நாங்கள் நல்ல நண்பர்கள். நான் அவரை தொடர்பு கொண்டபோது ஷிராந்தி ரஷியாவில் இருந்தார். சரத் கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தேன். மிருகத்தைக் கொண்டு செல்வது போல கொண்டு சென்றார்கள் என்றேன்.

அவரது உயிரைக் காப்பாற்றுமாறு கோரினேன். ஷிராந்தி தான் ஏதாவது செய்வார் எனக் கூறினார். அவர் செய்தார் என நினைக்கிறேன். பெண்களுக்கு இடையில் இன்னமும் தொடர்புகள் உள்ளன. நாங்கள் தாய்மார்கள், மனைவியர். நான் ஷிராந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அவர் தமிழர்களை வெறுப்பவரா?

எங்களுக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு கூட தந்திருக்கிறார்கள். சிறு பராயத்தில் அம்பாறையில் இருக்கையில் அவருக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்கள். எனது தகப்பனாருக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். எங்களுடைய இளமைக்காலத்தில் கிறீன்லண்ட்இ சரஸ்வதி லொஜ்ட் போன்ற சைவ உணவகங்களிலேயே நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம். அப்போது நான் மாணவியாக இருந்தேன். சரத் சிங்க றெஜிமென்ட்டில் லெப்டினன்ட்டாக இருந்தார்."

கூட்டமைப்பை விட்டுவிட்டார் அனோமா.

தமிழர்கள் எல்லாரிலும் அன்பாகத்தான் இருப்பார்கள், கேள்வி சரத் தமிழர்களை வெறுப்பவரா எ்ன்பதுதான், பதில் தமிழ் சாப்பாட்டை விருபுபவர். :):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சாவின் மனிசியிற்ற கெஞ்சுவேன். :):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சேவிடம் கெ(கா)ஞ்ச :) !! மாட்டேன்; பொன்சேகா மனைவி பேட்டி

Edited by Puthiyavan_au

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்வதுபோல ஆடம்பரக்குடியிருப்பு அல்ல அது. நான் ஒரு இராணுவத்தினரின் மனைவி என்ற வகையில் அது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டு அறைகள் கொண்டது. ஏயர்கொண்டிசன் இல்லை. மின்விசிறி மட்டுமே உண்டு. பொதுவான கழிப்பறையுடன் கூடியது.

அவர் என்ன சாப்பிடுவார்?

சோறும் கறியும் தேங்காய்ச்சம்பலும். அவருக்கு பலாப்பழம் மிகவும் பிடிக்கும். மீன் கறி. கொழுப்பு குறைந்த பாலை நான் எடுத்துச் செல்வேன்.

எங்கட சனம் இதுவும் இல்லாமல் சித்திரவாதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.