Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் தனித்து போட்டி; முஸ்லிம் காங்கிரசுக்கு தார்மீக ஆதரவு: தமிழர் கூட்டமைப்பு முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sambanthan-%20Hakeem.jpg

தேர்தலில் தனித்து போட்டி; முஸ்லிம் காங்கிரசுக்கு தார்மீக ஆதரவு: தமிழர் கூட்டமைப்பு முடிவு

[ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 23:55 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டும் வகையில் தனித்துப் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தற்போது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சகல இடங்களிலும் தனித்துப் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள போதும் கிழக்கில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குத் தார்மீக ஆதரவு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படிக்கு - முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் தமது வேட்பாளர்களை நிறுத்தாது, முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படக் கூடிய வகையில் பணிகளை முன்னெடுப்போம் என்கிறார் பிரேமச்சந்திர

அதுசரி முஸ்லிம் காங்கிரஸ் உம் உதுபோல கூட்டமைப்புக்கு "தார்மிக" ஆதரவு தருமோ?

அல்லது உது சம்பந்தன் தனது வெற்றியை திருகோணமலையில் உறுதி செய்யும் சுயநலத்தோடு, தமிழரை விற்று செய்யப்பட்ட இன்னொரு அடிமைச் சாசனமோ?

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் மாவட்டத்தில் இருந்து..... இம்முறை இரண்டு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்க்கலாம்.

இந்த அறிவு ஜனாதிபதி தேர்தலின் போதே வந்து இருக்க வேண்டியது...

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளின் படி வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு உட்பட தமிழர்கள் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.ஆகவே கொழும்பில் மனோ கணேசனின் கட்சியையும் மலையக் கட்சிகளையும் இணைத்து முஸ்லிம்கள் உட்பட எல்லோரையும் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வந்து தேர்தலை எதிர் நோக்கின் தமிழரின் பேரம் பேசும்சக்தியை சிறிதளவாவது அதிகரிகப்பதுடன்.சிங்களக் கட்சிகளுடன் இணைந்து நின்று போட்டியிடும் ஒட்டுக் குழக்களுக்கு ஒரு இடமும் கிடைக்க முடியாதபடி செய்யலாம்.தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்படுவார்களா?

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளின் படி வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு உட்பட தமிழர்கள் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.ஆகவே கொழும்பில் மனோ கணேசனின் கட்சியையும் மலையக் கட்சிகளையும் இணைத்து முஸ்லிம்கள் உட்பட எல்லோரையும் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வந்து தேர்தலை எதிர் நோக்கின் தமிழரின் பேரம் பேசும்சக்தியை சிறிதளவாவது அதிகரிகப்பதுடன்.சிங்களக் கட்சிகளுடன் இணைந்து நின்று போட்டியிடும் ஒட்டுக் குழக்களுக்கு ஒரு இடமும் கிடைக்க முடியாதபடி செய்யலாம்.தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்படுவார்களா?

0

ஒன்றுபட்டேயாகவேண்டும்

மக்களிடம் செல்லவேண்டுமெனில்.....

அதுசரி முஸ்லிம் காங்கிரஸ் உம் உதுபோல கூட்டமைப்புக்கு "தார்மிக" ஆதரவு தருமோ?

அல்லது உது சம்பந்தன் தனது வெற்றியை திருகோணமலையில் உறுதி செய்யும் சுயநலத்தோடு, தமிழரை விற்று செய்யப்பட்ட இன்னொரு அடிமைச் சாசனமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது முதலாவது கேள்வியில் இருக்கும் நியாயம்

இரண்டாவது தாக்குதலுடன் கேள்விக்குறியாகிவிடுகிறது

இது முசுலீம்களிடம் கேட்கவேண்டிய கேள்வி

தமிழர்கள் தமது அரவணைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

சம்பந்தர்மேலான தங்களின் தாக்குதல் தமிழர்க்கு எதுவிதமான நன்மையும் தரப்போவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வேட்பாளர்கள் தெரிவு.

பழைய பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் தவிர்க்கப்படுகின்றார்கள்.

முக்கியமாக தமிழ் இன விடுதலை விரும்பிகள் சிலரும் தவிர்க்கப்படுகின்றார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்கள் அரசாங்கத்திடம் சோரம் போகக்கூடாது.

எம்மினத்தின் விடுதலை வேட்கையை எப்போதும் எங்கும் எடுத்துக்கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

விடுதலை வேட்கையும் மொழி ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

முக்கியமாக தனது அதிக நேரத்தை தனது தொகுதி மக்களுடனும்

அவர்களின் பிரச்னைகளுக்காகவும் செலவிடவேண்டும்.

தேர்த்லில் வென்றதும் தனது குடும்பத்தைத் தேடி வெளி நாடு சென்று அவ்ர்களுடன் தனது வேற்றீயைக்

கொண்டாடுபவர்களாக இருக்கக்கூடாது.

மக்களுடன் மக்களாக இருந்து அவர்களுக்கு மேன்மேலும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஊட்டவெண்டும்.

மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டும்.இவற்றை விட இன்னும்

பல தகுதிகள் வேண்டும். இருந்தாலும் இதையாவது செய்வார்களா என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஈழ மக்களின் இன விடுதலை ஈழ மக்களின் கைகளிலே!

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தனித்து போட்டி; முஸ்லிம் காங்கிரசுக்கு தார்மீக ஆதரவு: தமிழர் கூட்டமைப்பு முடிவு

இது மிகச்சிறந்த முடிவு. பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் நன்மையே தவிர தீமைகள் இல்லை. வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் எப்படியோ ஆசனங்கள் கிடைக்கத்தான் போகின்றன. அதனால் ஐதேக, மகிந்தர் கட்சி இவைகளை முதுகில் சுமக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக பக்கம் நின்றிருந்ததால் குறைந்தபட்சம் தமிழர் வேறு சிங்களவர் வேறு என்பதையாவது ஆதாரபூர்வமாக நிறுவ உதவியது. ஆகையால் அதுவும் நல்ல ஒரு முடிவே. :)

250px-2010_Sri_Lankan_Presidential_Election%2C_overall_results.png

இப்போது சில நாட்கள் பின்னோக்கிப் போவோம். :)

மஹிந்தவின் அழைப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் வரவில்லை - கூட்டமைப்பு என்கிற தலைப்பில் நாங்கள் கூட்டமைப்பை விளாசித் தள்ளியதையெல்லாம் இனி ஒவ்வொன்றாக மீளப்பெறுவோம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி முஸ்லிம் காங்கிரஸ் உம் உதுபோல கூட்டமைப்புக்கு "தார்மிக" ஆதரவு தருமோ?

அல்லது உது சம்பந்தன் தனது வெற்றியை திருகோணமலையில் உறுதி செய்யும் சுயநலத்தோடு, தமிழரை விற்று செய்யப்பட்ட இன்னொரு அடிமைச் சாசனமோ?

இன்னொரு சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லிம்களுடன் இணைவது எப்படி தமிழரை விற்று செய்யப்படும் அடிமைச் சாசனமாகும்? உங்களின் எழுத்துகளில் தெரிவது கடைந்தெடுத்த தமிழ் இனவாதமே ஒழிய வேறில்லை

இந்த முறை த.தே.கூ அமைப்பு வடக்கு கிழக்கு மட்டுமல்ல, ஏனை இடங்களிலும் உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களின் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, சிறுபான்மை இனங்களின் ஒருமித்த குரலைக் வெளிக் காட்டவேண்டும். அதற்கான முயற்சிகளை மலையகக் கட்சிகளுடன் சேர்ந்தும் ஆரம்பிக்கவேண்டும். இலங்கையில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை என்று போர் வெற்றி வெறியில் கூக்குரலிடும் தெற்கு சிங்கள அரசியல் சக்திகளுக்கு இதுதான் சரியான பதிலாக இருக்கும்

சனாதிபதித் தேர்தல் கூட்டில் விட்ட பிழையை த.தே.க இதில் திருத்திக் கொண்டால் நன்மைகள் அதிகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.